02 அக்டோபர் 2024

 மதுரை மாநகர் மாவட்ட மேனாள் செயலாளரும் மாநிலக்குழு உறுப்பினருமான தோழர் ந.ஸ்ரீதர் உடல்நலக் குறைவால் சற்று முன் (30.09.2024 இரவு ) காலமானார்.

கொடும் துயரமான செய்தி...கால் நூற்றாண்டுக்கும் மேலாக தமுஎகச மதுரை மாநகர் மாவட்டத்தில் தலைமைப் பொறுப்பேற்றுப் பயணம் செய்த சிறந்த தோழர் சிந்திப்பதை நிறுத்திக் கொண்டார். தோழர் ஸ்ரீதருக்கு மதுரை மாநகர் மாவட்டக்குழுவின் செவ்வணக்கம்...ஶ்ரீரசா
-------------------------------
மிகுந்த மன வருத்தம் அளிக்கும் செய்தி.அன்பானவர். அமுந்து பேசக்கூடியவர். இவர் தலைமையிலான மதுரை மாவட்டக் கூட்டங்களில் விடாது கலந்து கொண்டிருக்கிறேன். சிறு சிறு உரையும் உண்டு. இவர் போழ்தில்தான் மதுரை மாவட்ட செயலக உறுப்பினராகவும் இருந்தேன். சங்கப் பணிகள் அநேகம். சிறப்பாய் செயலாற்றும் பண்பாளர்.அவரின் மாறாத புன்னகை பூத்த முகம் என் நெஞ்சில் அழியாமல் அப்படியே பதிந்திருக்கிறது. என் ஆழ்ந்த இரங்கல்கள். குடும்பத்தாருக்கு என் ஆறுதல்கள். மாவட்ட மையத்திற்கு இது பேரிழப்பே.. ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.
உஷாதீபன்

கருத்துகள் இல்லை:

சிறுகதை “உரசல்கள்” தினமணி கதிர் 13.10.2024

                                                                                                        ---------------------------------   ...