04 அக்டோபர் 2015

அக்டோபர் 2, 2015 காந்தி ஜெயந்தி விழா – மதுரை காந்தி மியூசியம் யோகா பயிற்சிக் குழு.

 

 

KVR 5 KVR 1

 

 

KVR 2 KVR 3

 

KVR 4

 

 

கடந்த ஆறு ஆண்டுகளாக மதுரை காந்தி மியூசியத்தின் யோகா வகுப்பிற்குத் தவறாமல் நான் சென்று வருகிறேன். காலை 4.30 மணிக்கு நடக்க ஆரம்பிப்போம். 5.40 வரை நடை. பிறகு 15 நிமிடம் ஓய்வு. சரியாகக் காலை 6.00 மணிக்கு யோகா வகுப்புகள் ஆரம்பிக்கும். ஏழு மணிவரை. பிறகு பத்து நிமிடங்கள் பிராணாயாமம். இந்த நியமங்கள் இன்று வரைசெம்மையாய் நடந்தேறி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி காந்திஜெயந்தி நாளன்று தவறாமல் எல்லோரும் கூடி அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி, சமாதியில் மௌனம் அனுஷ்டித்து, பிறகு பிரிவது வழக்கம். அப்போது ஒரு பத்து நிமிடம் நான் உரையாற்றுவேன். இன்றுவரை என் மனதிற்குகந்த ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கிறது. மனம் தனிமையையும், அமைதியையும், விடுபடுதலையும் நோக்கி சதா பயணித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலிலும், விடுபடுதலிலும் இருக்கும் ஆனந்தம் உணர்ந்து அனுபவிக்க வேண்டியவை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
இந்த ஆண்டு 2015 அக்.2 வெள்ளியன்று காந்தி ஜெயந்திக்குக் கலந்து கொண்ட நிகழ்வு மேலே…

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...