31 டிசம்பர் 2022

 2023 ஜனவரி சென்னை புத்தகக் கண்காட்சி வெளியீடுகள் -இலக்கியக் கட்டுரைகள் தொகுப்பு 





27 டிசம்பர் 2022

கட்டுரை உஷாதீபன், தொட்டபின் பாம்பு சுட்டபின் நெருப்பு

 

கட்டுரை                                                                     உஷாதீபன்,                                                                                                                                                                                                                                  தொட்டபின் பாம்பு சுட்டபின் நெருப்பு                                                                                                        ------------------------------------

 

               அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு எத்தனையோ விதிமுறைகள் கட்டுப்படுத்துகின்றன. ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்று அவை வரையறுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பிறழ்ச்சி ஏற்படும்போது சம்பந்தப்பட்ட ஊழியர் அல்லது அதிகாரி மீது இந்த நடவடிக்கைகள் பாய்வது உண்டு. பணியில் சேர்ந்த ஓராண்டுக்குள் இன்னின்ன தேர்வுகளையெல்லாம்; தேர்ச்சி பெற்றாக வேண்டும் என்றும்; பிறகுதான் இரண்டாவது ஆண்டு ஊதிய உயர்வு என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது.

இந்த விதிமுறைகளெல்லாம் அரசுப் பணியாளர் அறிந்திருத்தல் கட்டாயம.;; இவை சட்டமல்ல. விதிமுறைகள். அதாவது ஒழுங்குமுறை நடவடிக்கைகள். அலுவலக நடைமுறை விதிகள். நிர்வாகம் சீராக நடைபெறுவதற்காக வழிவகுக்கப்பட்டவை.

இவை மீறப்பட்டாலே ஒருவர் மீது ஒழுங்குமுறை நடவடிக்கைகள்; என்கிற விதி பாயும். குற்றச் சாட்டுக்கள் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவரின் தன்னிலை விளக்கம் பெறப்பட்டு, இரண்டு சாட்சிகள் விசாரிக்கப்பட்டு, இவற்றின் அடிப்படையிலும், இருக்கும் ஆவணங்களின் அடிப்படையிலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அந்த அரசுப் பணியாளருக்கு ஊதிய உயர்வு தற்காலிக நிறுத்தமோ, தொடர் நிறுத்தமோ, தற்காலிகப் பணி நிறுத்தமோ, கண்டனமோ, அல்லது வெறும் எச்சரிக்கையோ போன்ற தண்டனைகள் வழங்கப்படும்.

ஆக அரசுப் பணியாளராய் இருப்பதில் நிறையக் கட்டுப்பாடுகள் உள்ளன. ஒழுங்கு முறைகள் உள்ளன. போனோம் வந்தோம் என்று இருந்துவிட முடியாது. அலுவலகம் வந்து வருகைப் பதிவேட்டில் கையொப்பம் இட்டுவிட்டு இருக்கையில் அமர்ந்தால், மாலை அலுவலக நேரம் முடிந்து வீடு திரும்பும்வரை அவரவருக்கு என்று ஒதுக்கப்பட்டிருக்கும் பணிகளில் விதிமுறை தவறாமல், இன்னின்னவகைக்கு இவைதான் விதிமுறைகள் என்பதைச் சரியாகக் குறிப்பிட்டு, தெரியவில்லை என்றால் குறிப்பிட்ட நடத்தை விதிமுறைப் புத்தகங்களை எடுத்துப் படித்துப் பார்த்து, பத்திகளையும, விதி; எண்களையும் சொல்லி; வரையறுத்து எழுதுவதில் மிக முக்கியமான பொறுப்பு இருக்கிறது. 

இம்மாதிரிக் குறிப்பிட்டு ஆணி அடித்தாற்போல் சொல்லி, பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்றுகிற அரசுப் பணியாளர்கள் நம்மிடையே இருக்கிறார்கள். 58 வயது வரைக்கும் நான் இதில் இருந்தாக வேண்டும் என்று இருக்கும் நடைமுறை விதிமுறைகள் அனைத்தையும் கரைத்துக் குடித்து, விரல் நுனியில் வைத்துக் கொண்டு, அவரின்றி ஒன்றும் அசையாது என்கிற இடத்தில் தங்களை நிறுத்திக் கொள்ளும் அரசுப் பணியாளர்கள் ஏராளம்.

ஒரு அலுவலகத்தில் பியூன் முதல் அலுவலர் வரை விதிகள் என்பது பொது. யார் தவறு செய்தாலும், தண்டனை உறுதி. இதற்கு பயந்துதான், கட்டுப்பட்டுத்தான் வேலை செய்தாக வேண்டும். அன்றாட வேலைகளைச் செய்வதில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆனால் பொறுப்பு என்கிற கட்டுப்பாட்டு வளையத்திற்குள்தான் வலம் வந்தாக வேண்டும்.. இது மீறப்படும்போதுதான் எக்கச்சக்கமாக விஷயம் மாட்டிக் கொள்கிறது.

ஆசையே துன்பத்திற்குக் காரணம். ஒரே வரி. வேறு எதுவொன்றாலும் இதை வரையறுக்க முடியாது. இன்றைய விலைவாசி ஏற்றத்திற்கும், கல்வி வியாபாரத்திற்கும், வாழ்நிலை உச்சங்களுக்கும் ஒரு சாதாரண அரசு ஊழியர் தன் ஒரே சம்பளத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும்? என்றெல்லாம் கேள்விகள் கேட்கக் கூடாது. சமயத்திற்குத் தகுந்தாற்போல்; என்னை மாற்றிக் கொள்ளத்தான் செய்வேன் என்று சொல்லிக் கொண்டு இந்த வேலைக்கு வரவில்லை. நன்னடத்தை விதிகளுக்குக் கட்டுப்படாமல் தவறுகள் செய்ய முனைந்தால் கஷ்டப்பட வேண்டியதுதான். தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியதுதான்.

இப்படியான தவறுகளைச் செய்து, மாட்டிக் கொண்ட அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் உண்டு. ஓய்வு பெற முடியாமல் கண்டனப் பணி நீக்கம் செய்யப்பட்டு, ஓய்வுப் பலன்கள் எதையுமே பெற முடியாமல் போனவர்கள் இருக்கிறார்கள். பத்தாண்டுகள் கூடக் கடந்து, இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு, பிறகு தனது ஓய்வூதியப்பலன்களைப் பெற்று, பெண்டு பிள்ளைகளுக்குக் கல்யாணம் பார்த்தவர்கள், தண்டனையில் இருக்கையிலேயே மண்டையைப் போட்டவர்கள், வரும்போது வரட்டும் என்று; விதிகளுக்குப் புறம்பாகச் சம்பாதித்த காசை வைத்துக்கொண்டு கொடிகட்டிப் பறந்தவர்கள், வியாதியில் விழுந்து இருதய ஆப்பரேஷன், பக்க வாதம், கிட்னி ஃபெயிலியூர், நோய் நொடி என்று நசிந்து காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள்.

எல்லாமும் உண்டுதான். அரசுப் பணியாளர் நடத்தை விதிகளை நாம் எவ்வளவு மரியாதையோடு கடந்து செல்கிறோம் என்பதைப் பொறுத்து அது நம்மை வாழ வைக்கிறது. அல்லது வீழ்த்தி விடுகிறது.

லஞ்சம் வாங்கிய வி... கைது. பிறந்த நாள் சான்று வழங்க லஞ்சம்பெற்ற எழுத்தர் கைது. மின் இணைப்பு வழங்க கையூட்டுப் பெற்ற பொறியாளர் கைது.வண்டி லைசன்ஸ் வழங்க லஞ்சம். ஓட்டுநர் தகுதிக்கு லஞ்சம்.  இப்படி எத்தனையோ லாவண்யச் செய்திகளை நாளிதழ்களில் நாம் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

கையும் களவுமாகப் பிடிபட்டார் என்று வெறும் செய்தியாகத்தான் பலர் அறிந்திருக்கக் கூடும். ஆனால் லஞ்ச ஒழிப்புத்துறையைச் சேர்ந்தவர்கள் மறைந்து நின்று பவுடர் தடவிய ரூபாய் நோட்டுத் தாள்களைக் குறிப்பிட்ட அந்த அரசு ஊழியர் அல்லது அலுவலர் பெறும்போது பாய்ந்து சென்று மறைவிலிருந்து திடீரென வெளிப்பட்டுப்; பிடிக்கிறார்களே அந்தக் காட்சியைக் கண்ணாரக் கண்டவர்கள் நிச்சயம் வாழ்க்கையில் அந்தத் தவறைச் செய்யத் துணியவே மாட்டார்கள். பவுடர் பட்ட கை விரல்களை டம்ளரில் நனைக்கச் சொல்லி அது சாட்சியாவதும்,; பிடிபட்டவiர் எல்லோர் முன்னிலையில் சட்டையைக் கழற்றி அமர்த்துவதும், சட்டென்று மாறிய மானக்கேடில,;  வியர்த்து விறு விறுத்து நனைந்து கிடப்பதும், கைகளும் உடம்பும் நடுக்கம் கொள்வதும், வாய் குழறுவதும், கண்றாவிக்; காட்சிகள். அய்யோ பாவமே!; சற்று ஈரம் சுரக்கத்தான் செய்யும். என்ன பெரிய இது! என்று இருக்கும் கடுவன்களும்; உண்டுதான்.

வாழ்க்கை பூராவும் படு நேர்மையாக இருந்து, அலுவலருக்குக் கொடுத்த சொந்தப் பணம்   திரும்ப வரவில்லையே என்கிற ஆதங்கத்தில் அதை இப்படித்தான் நேர் செய்தாக வேண்டும் என்ற முடிவில்; ஒரே ஒரு முறை தவறு செய்து மாட்டிக் கொண்ட பரிதாபமான அரசு ஊழியரைக் கூட பலர்; அறிவர்.

யார் தவறு செய்தாலும் தவறு தவறுதான். தண்டனை தண்டனைதான்.

இதெல்லாம் இப்படியிருக்கையில் வெறும் ஐந்தாண்டுகளுக்கு மட்டுமே என்று பொது ஜனத்தால் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு, எம்.எல். ஆகி, எம்.பி. ஆகி, அமைச்சரும் ஆனவர்கள் அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல் செயல்படுவேன், சுயநல மன மாச்சரியங்களுக்கு இடம் கொடேன் என்று கூறிப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டு விட்டு, எப்படியெல்லாம் மாறிப் போகிறார்கள். எப்படியெல்லாம் இஷ்டப்படி செயல்படுகிறார்கள்.  இந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில்தான் எப்படி எப்படியெல்லாம் செய்திகள் அவ்வப்போது நம்மை வந்து தாக்கின. புதிது புதிதாக வரும் செய்திகள், இது இன்னும் எங்கெங்கு நீளுமோ, யார் யார் மீது பாயுமோ, என்றெல்லாம் நாளும் எதிர்பார்க்க வைக்கின்றனவே? 

மக்களுக்கு என்ன தெரியும், என்கிற கதையாகவல்லவா இருக்கிறது இந்தத் துணிந்த செயல்பாடு.

பதவிப் பிரமாணம் செய்து கொண்ட போது எடுத்த உறுதிமொழிகள் என்னவாயிற்று? இனி எல்லாமே நம்மளதுதான் என்பதுபோலும், இனி; எப்பொழுதும், நாம்தான் என்பதுபோலவும் அல்லவா செயல்படு;கிறார்கள். வாய் நீண்டு, கை நீண்டு, செயல் நீண்டு.

மக்கள் வியந்து, விக்கித்துப் போய்த்தான் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியாததா?; அறியப்படாததா?; மச்சான்....எல்லாத்தையும் நாங்க பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்...

இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது.        அவர்கள் நினைத்தால் யாரையும், எவரையும் இழிவுபடுத்திவிட முடியும்.              எந்தப் பொய்களையும் உண்மையென்பதுபோல் சித்தரிக்கமுடியும். நடக்காததையெல்லாம் நடந்ததுபோல்           காட்டிவிட முடியும். இதற்கு யாரும் விதிவிலக்கல்ல....               இதுதான் இன்றைய உண்மை.

ஆஉறாஉறா...இந்தப் பாமர மக்களின் மீதுதான் எவ்வளவு நம்பிக்கை?;

என்றாவது சந்தேகம் வர ஆரம்பிக்காதா? கண்டிப்பாக வருமய்யா...வரும். அப்படித்தானே இத்தனை ஆண்டு கால அரசியல் நகர்ந்திருக்கிறது. அரசியல் என்றாலே இதுதான் என்கிற அளவுக்குக் கொண்டு வந்தாயிற்றே? மக்களின் நம்பிக்கைதான் ஆதாரம். மறதிதான் ஆதார ஸ்ருதி.

திருவாளர் பொதுஜனம் அவர்களே...

இந்தளவுக்கு, இத்தனை ஆண்டு காலமாக வளர்த்து விட்டது யார்? நன்றாக யோசித்துப் பாருங்கள் நீங்கள்தானே...படுங்கள்...!! நன்றாகப் படுங்கள். அல்லது இப்பொழுதாவது திருந்துங்கள். இன்னும் சில நாட்களே!

                                             -------------------------------                                                                                           --------------------------------

19 டிசம்பர் 2022

கட்டுரை “அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே…வந்ததே…..! கல்கி இணைய இதழ் 19.12.2022

 கட்டுரை

“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே…வந்ததே…..!

உஷாதீபன் ------------------------




சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி நிறுவனம் அதன் ஒரு நிகழ்ச்சியில்  சிவாஜி ரசிகர்களை அழைத்து நடிகர்திலகத்தை அவர்கள் எப்படியெல்லாம் ரசித்தார்கள் என்ற விஷயத்தைப் பரவலாக மிகுந்த ரசனையோடு விவாதத்திற்குள்ளாக்கியது. அருமையான நிகழ்ச்சியாக அது அமைந்தது. 

மூத்த தலைமுறையைச் சார்ந்த, ஐம்பதுகள், அறுபதுகளைத் தாண்டிய பெரியவர்கள், பெண்மணிகள் பலரும் தாங்கள் பார்த்து ரசித்த சிவாஜி படங்களையும், காட்சிகளையும் சொல்லிச் சொல்லி மனம் பூரித்துப் போனார்கள். கண் கலங்கினார்கள். வார்த்தைகள் வராமல் தடுமாறினார்கள். வெறும் ரசிக மனங்களாய் இல்லாமல் பாச மனங்களாய்த் தோன்றின அவை. பெரும்பாலும் எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போய் படம் பார்த்தோம் என்பதைச் சொல்லி சிவாஜி மேல் உள்ள பிரியத்தை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதைச் சொல்வதற்கு ஒரு மேடை கிடைத்ததே என்று காத்துக் கொண்டிருந்தது போல் தங்கள் வயதையும் தள்ளாமையையும் பார்க்காது அவர்கள் இந்த நிகழ்ச்சிக்குக் குழுமியிருந்ததுதான் அதிசயம். 

1952 ல் சிவாஜி பராசக்தி மூலம் தமிழ்த் திரையுலகில் நுழைந்த பிறகு அவரளவுக்கான தெளிவு வேறு எவரிடமுமில்லை என்ற கணிப்பில் ஒரு திடீர் திருப்பம் ஏற்பட்டுப் போக, அடுத்தடுத்து அவருக்குப் படங்கள் சேர்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில், ஒரு என்.டி.ஆரும், நாகேஷ்வரராவும், பிரேம் நசீரும் தங்கள் தங்கள் மாநிலத்தை நோக்கி நகர்ந்து, தங்களை அவரவர் சொந்த இடத்தில் தக்க வைத்துக் கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள். அந்த அளவுக்கான ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தி, திரையுலகைத் தன்னை நோக்கித் திருப்பி, தீவிர கவனம் கொள்ள வைத்தவர் நடிகர்திலகம் அவர்கள். 

படிப்படியாக வெகு சீக்கிரத்திலேயே சிவாஜியின் நடிப்புக்கும், அர்த்தபூர்வமான காட்சிகளுக்கேற்ற பார்வை, சிரிப்பு, உடல்மொழி மற்றும் பாவங்களுக்கும்,, வசனம் பேசும் திறமைக்கும், அதுவரை யாரும் நினைத்துக் கூடப் பார்த்திராத ஸ்டைலுக்கும், அவருக்கு மட்டுமே எது செய்தாலும் அழகுதான் என்று  அடிமையாகிப் போன தமிழ் ரசிக மனங்கள், சிவாஜியின் மேல் உயிரையே வைத்த பாசச் சொந்தங்களாகத் தங்களையே வரித்துக் கொண்டன. 

அப்படியான திறமை மிகுந்த ஒருவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து நிலைத்ததும், அற்புதமான கதாசிரியர்களும், வசனகர்த்தாக்களும், இயக்குநர்களும் அவர் மூலமாகப் படிப்படியாக வெளியே தெரிய ஆரம்பித்தார்கள். இவருக்கு இப்படிக் காட்சிகள் அமைத்தால் காட்சியும் சோபிக்கும், கதையும் சோபிக்கும், அவரும் சோபிப்பார், நாமும் சோபிப்போம் என்று வரிந்து கட்டிக் கொண்டு திறமையான பல இயக்குநர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொண்டார்கள். அவரால் இவர்களுக்குப் பெருமையா அல்லது இவர்களால் அவருக்குப் பெருமையா? என்று சொல்ல முடியாத அளவுக்கு மொத்தத் திரைப்படமும் கன கச்சிதமாக அமைந்து வெற்றி கண்டன. உடன் அமைந்த அனுபவமிக்க குணச்சித்திர நடிகர்களும், நகைச் சுவை நடிகர்களும், துணை நடிகர்களும் எல்லோருமாகச் சேர்ந்து மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்தும்போது, கதையின் நாயகனை மையமாக வைத்துப் படம் அடியெடுத்து வைத்து நகர்ந்து, அத்தனையிலும் விஞ்சி நிற்பது அவரது நடிப்பே என்னும் தவிர்க்க முடியாத முடிவுக்கு ரசிகர்களைக் கொண்டு வந்து நிறுத்தியது. 

ஆனால் நடிகர்திலகத்தின் மனம் உடன் நடிக்கும் மேடை நாடக அனுபவமிக்க பழுத்த ஜாம்பவான்களின் நடிப்பில் மதிப்பு வைத்ததும், சிறந்த இயக்குநர்களின் திறமையைக் கணக்கிட்டுக் கொண்டதும், இவர்களெல்லாம்தான் தனது சொத்து என்று அவர்கள் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டதும், அவர்களிலிருந்து தன்னை உயர்த்திக் கொண்டுபோய் உச்சத்தில் வைத்துக் கொள்வதே தன்னை நிலை நிறுத்தும் என்று உணரச்செய்து, அதிலேயே அவரது மனம் அதீதக் கவனமாய் இருந்தது. ஒரு சிறந்த மாணவனுக்கு இவைகளெல்லாம்தானே கல்யாண குணங்களாகவும், லட்சணங்களாகவும் இருக்க முடியும்?  

ஒவ்வொரு படத்தையும் இதுதான் தன் முதல் படம் என்று கருதியே செயல்பட்டால்தான் அந்த வெற்றி நின்று நிலைக்கும் என்பதில் அவர் மிகவும் தீர்மானமாய் இருந்தார். அதுபோல் அவருக்குப் படங்களும் அமைந்தன. அப்படித்தான் ஒவ்வொரு படமும் அவருக்கு வெவ்வேறு பரிமாணங்களில் அவரின் திறமையைப் பளிச்சிட வைத்தது. ஒரு படத்திற்கும் மற்றொரு படத்திற்கும் முற்றிலும் வித்தியாசமாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டார்  அவர். அடுத்தடுத்த காட்சிகளில் புதுமையாய், காட்சிக்குப் பொருத்தமாய், தன்னை ஸ்தாபித்துக் கொள்ளப் பிரயத்தனப்பட்டார். 

இந்த சீனைப் பாருங்க…பிரமாதமா இருக்கும்…

இந்த ஒரு காட்சி போதும் இந்தப் படத்துக்கு….

இப்டியே ஒவ்வொரு சீன்லயும் பிரமாதப் படுத்தியிருப்பார் பாருங்க….

என்று குறிப்பிட்ட காட்சிகளை எதிர்பார்த்து, எதிர்பார்த்து, ஆவலாய் வந்து காத்துக் கிடந்து மறுபடி மறுபடி பார்த்து விக்கித்துப் போனார்கள் ரசிகர்கள். தாமதமாய்ப் படத்திற்கு வந்தால்கூட, அந்த சீன் போயிருக்காதுல்ல…என்ற மனச் சமாதானத்தில் உள்ளே நுழைந்தார்கள். படம் முடிந்து வெள்ளைத் திரை ஆனபோது மனம் கனத்து வெளியேறினார்கள். அடுத்த காட்சிக்கே அவரோடு மீண்டும் உறவாட யத்தனித்தார்கள். மனதைப் பறிகொடுத்து பைத்தியமாய் அலைந்தார்கள். இப்படியா ஒரு மனிதன் ஈர்க்க முடியும்? என்ன ஒரு ஆகர்ஷன சக்தி? வெறும் நடிப்பாய் மட்டும் இல்லாமல், அந்தந்தக் கதாபாத்திரமாகவே எப்படி வாழ்கிறான் இந்த மனிதன்? இவருக்கென்று கதைகள் அமைகிறதா? அல்லது அந்தந்தக் கதைகளுக்கென்று இவரைத் தேர்ந்தெடுக்கிறார்களா? யாரால் எது பெருமை பெருகிறது? 

இதை இன்றைக்குச் சொல்வதானால் “அசத்திட்டாருங்க…” “பின்னிட்டாருங்க….” என்றுதான் சொல்ல வேண்டும். பேச்சு வழக்கில் புகுந்துவிட்ட இந்த வார்த்தைகள் இன்றைக்குத்தான் பொருந்தும். அன்றைய காலகட்டத்திற்கு சுட்டுப் போட்டாலும் பொருந்தி நிற்காது. அவை கலைஞர்களை, அவர்களது திறமையை மதித்த மதிப்புமிக்க ரசிக நெஞ்சங்களால் உருவானது.

அன்றைய ரசிகர்களின் தராதரம் என்பதே வேறு. அவர்கள் அந்தந்தத் திரைப்படங்களின் மூலமாய்த் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பார்த்தார்கள். அதன் தாக்கங்களைக் கணக்கிட்டுக் கொண்டு, தங்களை அர்த்தப்படுத்திக் கொண்டார்கள். அன்றைய திரைப்படங்களும் அப்படித்தானே இருந்தன. மனித வாழ்க்கையை மேம்படுத்தும் முக்கிய பங்கு ஊடகங்களுக்கு உண்டுதானே…! அதிலும் சினிமா என்கிற காட்சி ஊடகம் அதீத சக்தி வாய்ந்ததாயிற்றே…! 

இப்பத்தான அந்தப் படத்தைப் பார்த்திட்டு வர்றே…அப்புறம் இப்டி நடந்துக்கிட்டேன்னா எப்டி? உன்னோட அபிமான நடிகர் அப்டியா சொல்லியிருக்கார்? என்று கண்டித்த பெரியவர்களும் உண்டு. 

அப்படியெல்லாம் ரசித்து, ரசித்துப் பார்த்து தங்களையே இழந்து நின்று, உடல், பொருள், ஆவி அனைத்தும் சிவாஜிக்குத்தான் என்று காலங்களைக் கடந்து வந்த  தீவிர ரசிகர்களாகிய இன்றைய பெரியவர்கள், அன்று நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தாங்கள் ரசித்த அந்த நடிகர்திலகத்தின் ஆத்மார்த்தமான நடிப்பை, அந்தக் காட்சிகளின் அருமை பெருமையை அத்தனை ஆழமாய் வெளிப்படுத்தவில்லையோ என்றும் தோன்றியதுதான். 

ஒருவேளை அது காலங்கள் கடந்து போய்விட்ட நிலையினாலும், காட்சிகளின் தாக்கம் மனதில் தேய்ந்து மறைந்து விட்ட நிலையினாலும், யதார்த்த வாழ்க்கையின் தவிர்க்க முடியாத  நிகழ்வுகளாலும் ஏற்பட்ட சோர்வாகவும் கூட இருக்கலாமோ என்றுதான் எனக்குத் தோன்றியது. 

ஒரு ரசிகன் சிந்தித்ததைவிட, ஒரு வசனகர்த்தா சிந்தித்ததை விட, ஒரு இயக்குநர் சிந்தித்ததைவிட, மிகவும் மேலேதான் தன் நடிப்பை உயரத்திற்குக் கொண்டு போனார் சிவாஜி. அதனால்தான் ஓடிக் கொண்டிருக்கும் காமிராவை நிறுத்தக் கூட மனமின்றி, மறந்துவிட்ட நிலையில் காட்சியோடு ஒன்றிப் போனார்கள்  இயக்குநரும் மற்றவரும். அருமை, அருமை என்று ஓடி வந்து ஆவியைச் சேர்த்துக் கட்டிக் கொண்டார்கள். பிரமாதம், பிரமாதம் என்று சொல்லியவாறே வந்து கை குலுக்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டார்கள். அப்படிச் சிவாஜி செய்த காட்சிகள் எத்தனை எத்தனையோ…! சொல்லி மாளாது அவைகள். அதை அப்படியே முன்னிறுத்த அன்று அந்த நிகழ்வில் நான் இல்லாமல் போனேனே என்றுதான் என் மனம் ஆதங்கப்பட்டது. 

அப்படியே இருந்திருந்தாலும் வெறும் வாய் வார்த்தையாய் ரசித்து எடுத்துச் சொன்னால் மட்டும் போதுமானதாக அவை இருந்திருக்காது. ஒவ்வொன்றையும்பற்றி எடுத்துச் சொல்லச் சொல்ல, அதற்கான காட்சிகள் (கிளிப்பிங்க்ஸ்) திரையில் விரிய வேண்டும் எனக்கு. அப்படி விரிய விரிய நான் சொன்னது சரிதான் என்றும், இவன் ரொம்பவும் ஆழமாகத்தான், நம்மை விட அழகாகத்தான்  ரசித்திருக்கிறான் என்றும் எல்லோரும் நினைக்க வேண்டும் எனக்கு. அப்போதுதான் என் மனம் திருப்திப்படும். எதற்காக திருப்திப்படும்? என்று ஒரு கேள்வி வருகிறது இங்கே. நடிகர்திலகத்தின் பெருமை, அவரின் சாதனை, இனி எவராலும் முறியடிக்கப்பட முடியாதது என்பதை ஊர் உலகம் அறிய வேண்டும் எனக்கு. இன்றுவரை அப்படி அறிந்திருக்கிறதா என்பதில் எனக்கு எப்போதும் ஒரு சந்தேகம் உண்டு. 

திரைப்படக் கல்லூரிகளில் நடிப்பு பற்றி அணு அணுவாக உணர்ந்து கொள்வதற்கு  அவரை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்? எத்தனையோ குணச்சித்திர நடிகர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இல்லை என்று மறுப்பதற்கில்லை. ஆனால் அத்தனை குணச்சித்திரங்களையும்தான் தன் நடிப்பு வாழ்க்கையில் பல படங்களில் பற்பல கதாபாத்திரங்களில் இவர் செய்து காண்பித்து இருக்கிறாரே…! மாணவர்களுக்கு இவரது திரைப்படங்களைத் தினசரி போட்டுக் காண்பித்து, விளக்கினாலே போதுமே…! ஒன்று யோசித்துப் பாருங்கள். அந்த அளவுக்கான உயர்ந்த பீடத்தில் நடிகர்திலகத்தை வைத்து நாம் இன்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோமா? நுழையும்போதே நடிப்புப்  பல்கலைக் கழகமாக நுழைந்தவரல்லவா அவர்! 

பிற்காலத்தில் எத்தனையோ சாதாரணப் படங்களில் நடித்தவர்தான் அவர். அது அவர் தொழில். வருமானத்திற்காகச் செய்தது. அது அவர் பாடு. அதைக் குறை சொல்வதற்கில்லை. ஆனால் அந்த அத்தனை சுமார் படங்களையும் மறக்கடிக்கும் விதமாய் கொட்டிக் கொடுத்திருக்கிறாரே நமக்கு. ஐம்பதுகளில் ஆரம்பித்து எழுபதுகளின் ஆரம்பம் வரைக்குமான எத்தனையெத்தனை நல்ல படங்கள், நடிப்பை உயர்த்திப் பிடித்த படங்கள் வந்து சென்றிருக்கின்றன? மறுக்க முடியுமா? கலர் படங்கள் வர ஆரம்பித்தன…அவரது படங்களும் சிலவற்றைத்த் தவிர எல்லாமும் சுமார் ரகம் ஆக ஆரம்பித்தன என்று வேண்டுமானால் சொல்லலாம். 

என்ன இவன் இப்படிச் சொல்கிறானே…தீவிர ரசிகன் என்று வேறு சொல்லிக் கொள்கிறான்….என்று தோன்றலாம்தான். தீவிர, தரமான ரசிகனாய் இருப்பவனுக்குத்தான், இது தவறு என்று சொல்வதற்குமான உரிமை கிடைக்கிறது. அவனால்தான் அத்தனையையும் மீறி நல்லதைத் தூக்கிப் பிடிக்க முடியும். அந்தத் திறமை உயர்ந்த ரசிகனுக்கு மட்டுமே உரியது. 

மனைவி இறந்த வேதனையில் அவன் இருக்கிறான். அந்த வேதனை தாளாது தந்தையையும் இழந்த துக்கம். எங்கே நிம்மதி தேடுவது என்று அலைந்த அவன், அந்த இரவு விடுதியில் பொழுதைப் போக்குவதற்காக வந்து அமர்கிறான்., மேடையில் ஆடும் பெண்ணின் அழகிலும், அவளின் மென்மையான அசைவுகளிலும் தன் மனதைப் பறி கொடுக்கிறான். துக்க மனதுக்கு ஒத்தடம் கொடுத்தது போல் அமைகிறது அந்த நிகழ்வு. அவள் மீது அவனுக்கு ஆசை ஏற்படுகிறது. அந்த ஆசையை வெளிப்படுத்தும் விதமாய் இரண்டு விரல்களுக்கு இடையே புகையும் சிகரெட்டை மென்மையாய் உள்ளிழுத்து, உதடுகளின் நடுவே சற்றே உள் நுழைந்த சிகரெட்டின் இழுப்போடு மனம் கனிந்த மகிழ்ச்சியின் அடையாளமாய்  புகையை அவர் வெளியேற்றும் அந்தக் காட்சி பார்வையாளர்களுக்கு அதன் முழு அர்த்தத்தைக் கொண்டு வந்து நிறுத்தும். பொருந்தியிருக்கும் உதடுகள் எப்படி அந்த சிகரெட்டை உள்ளே மென்மையாக, லேசாக உள் இழுத்து அவள் மீதான தன் ஆசையை வெளிப்படுத்தும் காட்சி, நடிகர்திலகத்தைத் தவிர வேறு யாருக்கு அத்தனை அழகாக அமையும்? இந்தக் காட்சியை இயக்குநர் விளக்கி அவர் செய்தார் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த அழகு கொஞ்சும் அந்தக் காட்சியை அவரைத் தவிர யார் அத்தனை துல்லியமாக நடித்துக்காட்ட முடியும். அவரது கோட்டும், சூட்டும், Nஉறர் ஸ்டைலும், இடக்கையில் கட்டியிருக்கும் வாட்சும், பக்கவாட்டிலான முக அமைப்பும், அளவான நெற்றி, அதற்குக் கீழே அமைந்த அழகான மூக்கு, அதன் கீழான சரியான இடைவெளியில் அமைந்த மீசைப் பகுதி, வரைந்த சித்திரமாய் அமைந்த உதடுகள், அதன் கீழே இவையெல்லாவற்றிற்கும் அழகு சேர்ப்பதுபோலான பரந்த ஒற்றை நாடி…உப்பிய கன்னங்கள், யாருக்கய்யா அமைந்தது இந்த அழகு? வேறு யாரேனும் ஒருவரைச் சொல்லுங்கள் பார்ப்போம்? 

யாருய்யா இந்த ஆளு, மீன் மாதிரி வாயசைச்சு, வாயசைச்சுப் பேசுறாரு? ஆள மாத்துங்கய்யா…..என்று பராசக்திக்காகச் சொல்லப்பட்டவர்தான் சிவாஜி. அன்று அந்தப் பெரியவர் பி.ஏ.பெருமாள் அய்யா மட்டும் அவரை மறுத்திருந்தால்?  இப்படி ஒரு பொக்கிஷம் நமக்குக் கிடைத்திருக்குமா? அந்த நன்றிக்கு எத்தனை பெருமை சேர்த்தார் நடிகர்திலகம்? கால காலத்திற்கும் நினைத்து நினைத்துப் பெருமிதம் கொள்ளலாம் போலத்தானே தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்? 

புதிய பறவை படத்தின் மூக்குச் சிந்தும் காட்சியைப் பற்றிச் சொன்னார்கள் ஒரு பெண்மணி. அது என்ன சாதாரணக் காட்சியா என்ன? அப்படி ஒரு காட்சியை அங்கே வைக்க வேண்டும் என்று தோன்றிய வசனகர்த்தாவோ, இயக்குநரோ, அவருக்கு என்னவொரு கற்பனை இருந்திருக்க வேண்டும்? அந்தப் படத்தின் அதுவரையிலான காட்சிகள் எப்படியெப்படி அமைந்திருந்தால் அங்கே அந்தக் காட்சியை வைத்தால் படு பொருத்தமாய் இருக்கும் என்று இயக்குநர் முடிவு செய்திருக்க முடியும்? 

இனி வேறு வழியே இல்லை என்கிற ஒரு இக்கட்டான கட்டத்தில், தான் செய்த கொலையை ஒப்புக் கொள்வது என்கிற முடிவுக்கு வருகிறான் கதாநாயகன். அப்படி வந்து தனக்குத்தானே ஒரு தீர்மானத்திற்கு வந்த வேளையில் அந்த முடிவிற்கான முழு மனநிலையோடு அந்த நாற்காலியில் அமரும் காட்சிதான் அது. அப்படி அமருவதும் ஒரு நடிப்புதான் என்பேன் நான். இப்படியான ஒரு முடிவுக்கு இறுதியாக வந்தவன், அப்படித்தான் அமர வேண்டும். அதுதான் அழகு. இதற்குத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன், நான் காட்சியை விளக்க விளக்க எனக்குக் க்ளிப்பிங்ஸ் வேண்டும் என்று. நான் சொல்லி முடித்ததும் அந்தக் காட்சியை நீங்கள் கண்டீர்களென்றால் உங்களுக்குப் புரியும்….அருமை…அருமை…என்று.  அந்த முடிவோடு அந்தச் சாய்வு நாற்காலியில் நடிகர் திலகம் வந்து பிரம்மாண்டமாக அமரும் அந்தக் காட்சியும் அவரது காலடியில் இருந்து உத்திரத்தை நோக்கிய காமிரா கோணமும்,  அத்தனை சீக்கிரத்தில் யாருக்கும் மறந்து விடாது. மறக்கக் கூடாது. இத்தனை இன்வால்வ்மென்டோடு…, இங்கே ஆங்கிலத்தில்தான் இந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது எனக்கு. அர்ப்பணிப்பு உணர்வோடு என்று சொன்னால் கூட அது முழுமையாய்ப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. இத்தனை இன்வால்வ்மென்டோடு…உயிரைக் கொடுத்து, தன் உணர்வுகளை அர்ப்பணித்து யாரேனும் நடிப்பிற்காகத் தன்னை இழந்திருக்கிறார்களா? சொல்லுங்களேன்…கேட்டுக் கொள்கிறேன்….ஒரு படம் ஆரம்பித்து, அது முடியும்வரை அந்தக் கேரக்டரின் ஞாபகங்களோடேயே, அந்தக் கதாபாத்திரமாகவே வீட்டிலும் வலம் வருவாராம் நடிகர்திலகம். 

பிரஸ்டீஜ் பத்மனாபய்யர்னு ஒரு கேரக்டர் பண்ணியிருக்கேன் வியட்நாம் வீடுங்கிற படத்துக்காக….பார்த்துட்டு எப்டியிருக்குன்னு சொல்லுங்கோ…..நன்னாப் பண்ணியிருக்கேன்னு நீங்கள்லாம் சொன்னாத்தான் எனக்குத் திருப்தி….. – மனதிற்குள் குழந்தையாய் இருக்கும் கலைஞனுக்குத்தான் இப்படி வார்த்தைகள் வரும். ஒரு நல்ல கலைஞன் மனதிற்குள் பச்சைக் குழந்தையாய்த்தான் இருப்பான். அதுதான் சத்தியம். அவன் நூற்றுக்கு நூறு  கலைஞனாக மட்டுமே இருந்தால்தான் வெற்றி. அப்படிப்பட்டவர்தான் நடிகர்திலகம். 

மனைவியை விபசாரி என்று சொன்ன வாயைக் கிழித்து எறிகிறேன் என்று, மாசு மருவற்ற என் அக்காளை எப்படி நீ அவ்வாறு சொல்லலாம் என்று சிவாஜியின் சட்டையைப் பிடித்து, சுற்றி இறுக்கி அக்காளின் ஒழுக்கத்தைப்பற்றிப் பிரலாபித்து,  அவரை வார்த்தைகளால் பிளந்தெடுத்து, எஸ்.எஸ்.ஆர்  கொதித்துப் போய்  நிற்கையில், டேய்…டேய்….என்னடா….ஒழுக்கத்தைப்பத்தி என்கிட்டயே பேசுறியா…? என்று அலட்சிய பாவத்தோடு கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு ஒரே ஒரு வார்த்தை கேட்பார். அதுவரை வரிவரியாக எஸ்.எஸ்.ஆர்.  பேசிய அத்தனை வசனங்களும் அங்கே கணத்தில் அடிபட்டுப் போகும்…சிவாஜி பேசியதற்குத்தான் கைதட்டு விழுந்து கொண்டேயிருக்கும். இத்தனைக்கும் அந்த இடத்தில் சிவாஜியின் பேச்சுதான் மோசம். மனைவி மீது அநாவசியமாய் சந்தேகப்பட்டு, பேசக் கூடாதவார்த்தைகளைத் தெறிக்கவிடும் காட்சி அது.  கதைப்படி அந்த இடம் அவரை இறக்கி நிறுத்தும் காட்சி. தன் அன்பிற்குரிய மனைவி மீதே சந்தேகப் பிசாசு பிடித்துக் கொண்ட வேளையில், தவறாகப் பேசும் ஒரு காட்சி. எஸ்.எஸ்.ஆரின் மனக்கொதிப்பு மிகவும் உன்னதமானதும், காட்சியை உயர்த்திப் பிடிக்கும் லாவகமானதும் ஆகும். உணர்ச்சிப் பிழம்பான இந்தக் காட்சியைப் போல் இன்றுவரை அப்படி ஒரு காட்சி எந்தத் திரைப்படத்திலும் அமையவில்லை என்று சொல்வேன் நான்.  ஆனால் அந்த இடத்தில் கூட ஓரிரு சொல் வசனத்தினால், அதை உச்சரிக்கும் முறையினால், தன்னை முன்னிறுத்திக் கொண்டவர் சிவாஜி. தெய்வப்பிறவி படத்தின் இந்தக் காட்சியை யாரேனும் அவ்வளவு எளிதாக, சினிமாதானே என்று மறந்து விட முடியுமா என்ன? 

பதினைந்து நிமிடத்திற்கு, சோழ மன்னனாக மிக நீண்ட கலைஞரின் வசனத்தைப் பேசுவார் நடிகர்திலகம் என்று சொல்லப்பட்ட போதே இன்னொன்றையும் சொல்லியிருக்க வேண்டும் அங்கே. அந்த மொத்த வசனமும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்பதும், ஒரே மூச்சில் பேசப்பட்டது என்பதும், காமிரா நடிகர்திலகத்தை விட்டு நகராது அரைவட்டமாக அவரை நோக்கியே பயணிக்கும் என்பதையும் ரசிக மனங்கள் கண்டிப்பாக மனதில் நிறுத்தியிருக்க வேண்டும். அதுதான் இந்தக் காட்சியின் வெற்றி. 

எப்படி எப்படியெல்லாம் கஷ்டப்பட்டுப் போய் படம் பார்த்தோம், ரிலீஸ் காட்சிக்கு டிக்கெட் கிடைக்காமல் அப்படியே நின்று அடுத்த காட்சிக்குக் கால் கடுக்கக் காத்துக் கிடந்து அங்கே வரும் கடலைப் பருப்பை வாங்கித் தின்று கொண்டு கால் வலிக்க வலிக்க நின்று அடுத்த காட்சிக்கு முதல் ஆளாய் டிக்கெட் எடுத்துப் போய் படம் பார்த்த சிலிர்ப்பை முதிர்ந்த ரசிகர்கள் வெளிப்படுத்தியபோது நமக்கும் மெய் சிலிர்த்துத்தான் போனது. அதிலும் சைக்கிள் வைத்திருந்தால் தனி டிக்கெட் என்று சைக்கிளை வாடகைக்கு எடுத்துக் கொண்டு போய் அதற்கும் காசு கொடுத்து நிறுத்தி,  ஸ்பெஷல் டிக்கெட் பெற்றுப் படம் பார்த்த பெருமை மறக்க முடியாதது என்று ஒருவர் சொன்னபோது, இப்படி இப்படியெல்லாம் இருந்த சின்னச் சின்னச் சந்தோஷங்கள் எல்லாம் இன்று அழிந்துபட்டனவே என்று மனம் வேகத்தான் செய்தது. வெறும் நாலணாவுக்கும், பெஞ்சு டிக்கெட்டிற்கு எட்டணாவும், மாடிக்கு ஒரு ரூபாயிலும்,  இரண்டு ரூபாயிலும் படம் பார்த்த சந்தோஷமும் குதூகலமும் யாராலும் மறக்க இயலாதுதான். 

அப்படியான ஒரு சந்தோஷத்தை அன்றைய நிகழ்ச்சி நமக்கு நடத்திக் காட்டியது. நடிகர்திலகத்தைப் பற்றிச் சொல்வதானால் படம் படமாய் எழுதிக் குவிக்க ஏராளமாய் விஷயங்கள் உண்டுதான். அந்த மா மேரு மலையின் சாதனைகள் அளவிடற்கரியது. அணுவைப் பிளந்து எழுகடலைத் தன் நடிப்பில் புகுத்தியவர் அவர்.  அவரைப் போல் ஒருவர் இனி எந்த ஜென்மத்திலும் வரப்போவதில்லை. அவர் வாழ்ந்த காலகட்டத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதுதான் இங்கே நினைக்கப்பட வேண்டிய பெருமை…! 

---------------------------------------------------------------

“கொக்கி“-சிறுகதை - வாசகசாலை இணைய இதழ் (1.12.2022)

 

சிறுகதை                                                                “கொக்கி”  


 

       விஜயாதான் இவனை வளைத்துப் போட்டாள். இவனுக்கு அந்த எண்ணமெல்லாம் இல்லை. பாடத்துல கொஞ்சம் சந்தேகம்…நாகுட்டக் கேட்டுக்கட்டுமா? என்று அம்மாவிடம் கேட்டிருக்கிறாள்.

நாகராஜன் என்ற என் பெயரை எல்லோரும் அப்படித்தான் சுருக்கிக் கூப்பிடுவார்கள். நாகு, நாகு என்று அழைப்பது எனக்குப் பிடிப்பதில்லைதான். இனி நானே நினைத்தாலும் மாற்ற முடியாத அளவுக்கு அந்தப் பெயர் பழகி நிலைத்து விட்டது. நாகராஜன் வேண்டாம் நாகராஜ் என்று அழைத்திருக்கலாமே? அதில் ஒரு கம்பீரம் இருப்பதைப் பாருங்கள். அதெல்லாம் இந்தப் பழம் பெருச்சாளிகளுக்கு எங்கே தெரியப் போகிறது. நாகு…பீகு என்று என்னத்தையோ கூப்பிட்டார்கள். தெருவில். இளம் பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் முதற்கொண்டு எல்லாரிடமும் நிலைத்து விட்டது இந்த அசட்டு அழைப்பு.  இந்த எரிச்சலினால் பல சமயங்களில் காதில் விழாதது போல் கூட நான் இருந்திருக்கிறேன். அம்மாவிடம் மனம் விட்டுச் சொல்லியிருக்கிறேன்.

எதுக்கும்மா இப்படி நாகு நாகுன்னு கூப்பிட்டுப் பழக்கினீங்க…? சுந்தரம்னா சுந்து சுந்துன்னு கூப்பிடுறீங்க…சேகர்ன்னா சேகு சேகுங்கிறீங்க…ரமேஷ்னா மட்டும் ரமேஷ்…டேய் ரமேஷ்னு எவ்வளவு அழுத்தம் திருத்தமாக் கூப்பிடறீங்க…அந்தப் பெயரை உங்களால சுருக்க முடிஞ்சிதா…அது போல ஒரு பெயரை வச்சிருக்க வேண்டிதானே? சே! நாகுவாம் நாகு…இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாரும் என்னை நாகு…பேகு…பேக்குன்னு கூப்பிடப் போறாங்க…அப்புறம் நீங்களே வருத்தப் படப் போறீங்க …

உங்க தாத்தாவுக்குத் தாத்தா பேருடா அது…கொள்ளுத் தாத்தா பேராக்கும்…

கொள்ளுத் தாத்தாவோ எள்ளுத் தாத்தாவோ…எனக்குப் பிடிக்கலே…

விஜயாவுக்குப் பிடித்திருந்தது என் பெயர். இல்லையென்றால் நாகுட்ட ஒண்ணு கேட்கணும்…நாகுட்ட ஒரு சந்தேகம்…என்று அடிக்கடி ஓடி வருவாளா? அவளுக்குப் பெயர் பிடித்திருந்ததா அல்லது என்னையா?

 அம்மா சரி என்று விஜயாவுக்குச் சொல்லிவிட அவள் கடைக்குப் போன நேரம் பார்த்து வந்தாள் அன்று.  அங்கேதான் அவளுக்கு உள் நோக்கம் இருந்திருக்கிறது. உண்மையில் பாடத்தில் சந்தேகம்தான். ஆனால் மனதுக்குள் வேறு ஒன்றும் இருந்திருக்கிறது அவளுக்கு. நான் தனியே இருப்பேன் என்றுதான் வந்தாள். என்னிடம் தனிமையில் அவளின் சுதந்திரம் எப்போதும் அதீதம்தான்.  உறாலில் உட்காருவதை விட ஏதேனும் அறைக்குள் சென்றால் தேவலாம் என்று அவளுக்குள் தோன்றியிருக்க வேண்டும். உன் கணக்கு நோட்டு எங்கே? என்றாள். என் புத்தக ஷெல்ப் கூடத்தின் ஓரமாய் இருக்கும் அறையில்தான் இருக்கிறது என்பது அவளுக்குத் தெரியும். அப்படிக் கேட்டால்தான் நான் அந்த அறைக்குள் போவேன். அவளும் வரலாம். அப்படித் தனிமையை வலிய இழுத்துப் பிடிக்கும் தைரியம் எல்லோருக்கும் வருமா என்ன? நேரம் வீணாகக் கூடாது என்பதில்தான் என்ன ஒரு கவனமும் அவசரமும்! அவள் கண்கள்தான் எல்லாவற்றையும் காட்டிக் கொடுத்து விடுகிறதே! 

     

எத்தனையோ முறை அவள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறாள். என் அம்மாவிடம் ஏதாச்சும் நச்சு நச்சென்று பேசிக் கொண்டிருப்பாள். அவள் தோசை வார்த்துக் கொண்டிருந்தால் உதவி செய்வாள். அந்த நேரம் அம்மா டிபனுக்குக் கூப்பிட்டால் அவள்தான் எனக்கு தட்டு எடுத்து வைத்துப் பறிமாறுவாள். இன்னொன்ணு போட்டுக்கோ என்று ஏதோ இவள் வீடு மாதிரி தாராளமாக அவள் என் தட்டில் தோசையை வைப்பதைப் பார்த்து அம்மா சிரித்துக் கொள்வாள். அம்மாவுக்கு எதுவுமே வித்தியாசமாக மனதில் தோன்றாதோ என்றிருந்தது எனக்கு. அதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் விஜயா. அம்மா பாவம். விகல்பமில்லாதவள். சே! அவளை ஏமாற்றக் கூடாது. அப்படிச் செய்தால் அது பாவம் என்று எனக்குத் தோன்றும். ஆனால் அம்மாவின் அந்த இருப்புதான் விஜயாவுக்கு சாதகமாக இருந்தது.

அவள் சமைத்துக் கொண்டிருந்தால் காய்களை நறுக்கிக் கொடுப்பாள். கிணற்றடியில் துவைத்துக் கொண்டிருந்தால் தண்ணீர் இறைத்து விடுவாள். ஒன்றுமே இல்லாவிட்டால் அம்மா கொல்லைப் புறம் இருக்கும் நேரம், அவள் பார்க்க பூச் செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றுவாள். ஏதோ சகஜமா இருக்கா என்று அம்மா விட்டிருக்கலாம். ஆனால் அவளின் எல்லா செய்கைகளுக்கும் நடு நடுவே என் மீதான பார்வை ஒன்று எப்போதும் இருந்து கொண்டேயிருக்கும்.

அந்த நீண்ட வீட்டை அம்மா பெருக்கும்போது எத்தனை முறை வலியப் பிடுங்கியிருக்கிறாள் தெரியுமா? இதெல்லாம் உனக்கு எதுக்கு? என்றால் அவள் கேட்டால்தானே? பெருக்கிக் கொண்டே அப்படியே உள்ளே படித்துக் கொண்டிருக்கும் என் அறைக்கு அவள் வரலாம்தானே!

      இது எப்படி உனக்குத் தெரிந்தது என்று கேட்கலாம். என்னவோ மாறுபாடாய் ஒரு முறை அவள் பார்வையை நான் உணர, ஆரம்பத்திலேயே நோட்டமிட ஆரம்பித்து விட்டேன் நான். . அவளும் அதை உணர்ந்து உஷாராகிக் கொண்டாள்.

      முதல் முதலாக அவள் கை பட்டு நான் வித்தியாசமாய் உணர்ந்தது ஒரு ஞாயிற்றுக்கிழமை.  இந்த லைனைப் படி என்று நான் குறிப்பிட்டு ஒரு வரியைக் காண்பிக்க, இதுவா இல்ல இதுவா என்று அவள் கணமும் தாமதிக்காமல் புத்தகத்தின் மேலிருந்த என் கை மேல் தன் கையை வைத்து தெரியாததுபோல் கேட்ட போது என் முகம் மாறுவதைக் கண்டு கெட்டியாக என் கைகளை அவள் பிடித்துக் கொண்டாள். அப்போது ஒரு பார்வை பார்த்தாள்என்னை. அது காலத்துக்கும் மறக்காது. அதில்தான் அந்தக் காதல் நிரம்பி வழிந்தது.

ஏன்? என்னாச்சு…! ஒண்ணுமில்ல…எதுக்கு இப்படி உன் கை நடுங்குறது? ஏ…னாம்?

அப்படியே என் கையை இழுத்து அவள் தன் மார்பில் வைத்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டபோது அந்த நடுக்கம் படிப்படியாகக் குறைந்து வேறு எதையோ உணர ஆரம்பித்தேன் நான்.  

அந்த இடத்தின் மென்மையையும், குளிர்ச்சியையும், விட்டு அகல மனமில்லாமல் என்னவோ ஒரு புத்துணர்ச்சியில் அப்படியே நின்றேன். அவள் நெஞ்சு ஏனிப்படிப் படபடவென்று அடித்துக் கொள்கிறது? எதைக் கண்டு பயப்படுகிறாள் அவள்? என்னாயிற்று அவளுக்கு? என் நடுக்கத்தைக் குறைத்துவிட்டு இப்போது அவள் ஏன் இப்படிப் படபடக்கிறாள்?

      வாசலில் வேலைக்காரி தங்கத்தின் குரல் கேட்டு, ”அம்மா கடைக்குப் போயிருக்காங்க..”என்று நானே அறையிலிருந்து குரல் கொடுக்க அன்று நான் தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.

உள்ளே வரச்சொல்லாமல் உறாலுக்குள் யாரும் நுழைய மாட்டார்கள் என்பதால் தங்கம் அன்று எங்கள் இருவரின் தனிமையைக் கண்டு பிடித்திருக்க வாய்ப்பில்லைதான். ஆனாலும் அன்று தங்கம் தேடி வந்தது விஜயாவைத்தான் என்பது கொஞ்சம் கழித்து எனக்குத் தெரிய வந்த போது, அவள் இங்குதான் வந்திருக்கிறாள் என்று தெரிந்துதான் எங்கள் வீட்டிற்கு வந்திருக்க வேண்டும் என்பது உறுதியானது எனக்கு. பின் ஏன் அவள் அம்மாவைப் பற்றிக் கூறியதும் பேசாமல் புறப்பட்டுப் போக வேண்டும். வந்தவள் விஜயா என்றுதானே சத்தம் கொடுத்திருக்க வேண்டும். எங்கள் அறையில் எரிந்த விளக்கு வெளிச்சத்தின் கதவு அளவிலான பகுதிக்குரிய  வெளிச்சம் உறாலில் வலது சாய்வாக விழுமிடத்தில் நானும் விஜயாவும் நெருங்கி நின்று கொண்டிருந்த நிழலை அவள் கண்டிருப்பாளோ?

      அடிப்பாவீ!, தங்கம் இப்பொழுதுதான் படியிறங்கிப் போகிறாள். அதற்குள் இவள் ஓடுகிறாளே? இவளே காட்டிக் கொடுத்து விடுவாள் போலிருக்கிறதே! தெரிந்தாலும் பரவாயில்லை என்று துணிந்து விட்டாளோ? படு துணிச்சல்காரியப்பா!

      என் மன ஒருமைப்பாடு அவளால்தான் சிதறிப் போனது. நெஞ்சில் பட்ட அந்தக் கையை மீண்டும் அங்கே வைத்துக் கொள்ள வேண்டும் என்று மனம் அவாவியது. சதைப் பிடிப்பான அவள் கையில் சதைக்குள் பதிந்திருக்கும் விரல் நகங்கள் என் மனக்கண்ணில் ஆடின. ஒரு பெண்ணின் ஸ்பரிசத்திற்கு இவ்வளவு சக்தியா?

 

அன்புள்ள நாகுவுக்கு,

சரிதா எழுதிக் கொள்வது. நீ நன்றாகப் படித்து வருவாய் என்று நினைக்கிறேன். உன் அப்பா உன்னைக் கஷ்டப்பட்டுப் படிக்க வைத்து வருகிறார். நீ வேலைக்குப் போனால்தான் உங்கள் குடும்பம் கஷ்டத்திலிருந்து விடியும். என் அப்பாவும் உன் அப்பாவும் சேர்ந்து உணவகம், , ஸ்வீட் ஸ்டால், விறகுக் கடை, கரிக்கடை, ஜவுளிக்கடை என்று என்னென்னவோ வியாபாரமெல்லாம் நடத்திப் பார்த்து எல்லாமும் நஷ்டத்திலேயே விடிந்ததில் பிரிந்து போனவர்கள் என்பதை நீ அறிவாய். உன் குடும்பமும், எங்கள் குடும்பமும் நம் குடும்பம் என்னும் அளவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள். நமக்குள் வித்தியாசம் என்பது கிடையவே கிடையாது. அப்படியான நெருக்கத்தில்தான் என்னை உனக்கே தருவது என்று  நமது சிறு பிராயம் முதல் அவர்கள் முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். இதை ஏன் இங்கே சொல்கிறேன் என்று உனக்குத் தோன்றலாம். நான் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். என் படிப்பு முடிந்து விட்டதை நீ அறிவாய். அதற்கு மேல் வீட்டில் வசதியில்லை என்பதை நீ அறிவாய். நம் குடும்பங்கள் இரண்டும் செழிப்பாக இருந்த காலத்தில் நம் அப்பாக்கள் அன்றே முடி போட்டு விட்டார்கள் நமக்கு. எனவே என்னை நீ மறந்து விடாதே. இன்னும் கல்லூரிப் படிப்பு உள்ளதே என்று நீ கேட்பது எனக்குத் தெரிகிறது. பிஞ்சில் பழுத்த பழம்போல் இப்படி எழுதுகிறாளே என்று கூட உனக்குத் தோன்றலாம். இந்தக் கடிதங்கள் மூலமாக நமது அன்பினை நான் புதுப்பித்துக் கொள்கிறேன். அவ்வளவே!                                                                                                                                                                                    அன்புடன்,                                                                                             என்றும் உனது                                                                                        சரிதா

 

      இதுநாள் வரை கிடைக்காமல் இப்போது வந்து என் படிப்பைக் கெடுக்கிறாளே என்று இருந்தது. இப்போது நான் ப்ளஸ் டூ.  எனக்கு இரவெல்லாம் தூக்கமில்லை. விஜயாவின் நினைவாகவே இருந்தது. எங்கே என் அம்மாவுடன் எங்கள் வீட்டில் படுத்துக் கொள்கிறேன் என்று வந்துவிடுவாளோ என பயமாக இருந்தது எனக்கு. அப்படி வந்தாலும் வந்ததுதான். நடக்காது என்றும் சொல்ல முடியாது.

என் அம்மாவும், அவள் அம்மாவும் அத்தனை நெருங்கின சிநேகிதிகள். ஒவ்வொருவரும் அன்றாடம் அவரவர் வீட்டில் செய்த சமையல் வகைகளைச் சொல்லிச் சொல்லி மாற்றிக் கொள்வார்கள். விஜயாவின் அம்மா வந்து ஒரு கரண்டி காபிப் பொடி என்று கடன் கேட்டால் என் அம்மா அங்கே போய் ஒரு கரண்டி பருப்பு என்று வாங்கி வருவாள். ஒருவருக்கொருவர் கொடுத்ததை, வாங்கியதைத் திருப்பித் தந்து கொள்வார்களோ மாட்டார்களோ? நடுக்கூடத்தில் உட்கார்ந்து கொண்டு ஊர்க் கதைகளையெல்லாம் அவ்வளவு பேசுவார்கள். மணிக் கணக்காகப் போய்க் கொண்டிருக்கும் அவர்களின் பேச்சு.

      காலையில் கையில் புத்தகத்தை எடுத்துக் கொண்டு நான் மாடிக்குப் போனேன். எங்கள் தெருவில் மொட்டை மாடியில் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டிற்கு தாண்டித் தாண்டி சென்று விடலாம். இரண்டு வீடுகளுக்குப் பொதுவாக ஒரு சுவர்தான் இருக்கும். எனவே ஒரு வீட்டிற்கும் இன்னொரு வீட்டிற்கும் இடைவெளி என்பதே கிடையாது.

      இதனால்தான் திருடர்கள் சர்வ சாதாரணமாய் வந்து திருடிக் கொண்டு மாடி வழி தப்பித்துச் சென்று விடுகிறார்கள் என்ற பேச்சிருந்தது எங்கள் தெருவில். மாடி வழி தப்பி, பஜாரில் போய் கூட இறங்கி விடலாம் என்றார்கள். ராத்திரி குரூப் குரூப்பாகப் பாரா போட்டார்கள். ராத்திரி ஒரு மணிவரை ஒரு செட். பின்பு வேறொரு செட் என்று கையில் தடி கம்புகளோடு அலைந்தார்கள்.

      உலகில் பல வகையான திருடர்கள். பொருளைத் திருடுபவர்கள். மனதைத் திருடுபவர்கள். வெறும் உடம்பைத் திருடுபவர்கள் என்று.

      உடம்பைத் திருடுபவர்களா? அதெப்படி உனக்குத் தெரியும்? என்று கேட்பது புரிகிறது எனக்கு. எங்கள் தெருக் கோவிலில் வைத்து அதெல்லாமும் நடக்கிறது என்கிற செய்தி என் நண்பர்கள் மூலமாக வந்தது எனக்கு. பிராகாரத்தைச் சுற்றி வருகையில் இருட்டுப் பகுதியில் மாமாக்கள் பிற மாமிகளோடு அந்த வேலையைச் செய்கிறார்கள் என்று தெரிந்தது. வாழ்க்கையில் எல்லாரும் ஏதேனும் ஒரு தப்பை அந்தந்தக் கால கட்டங்களில் செய்து கொண்டேயிருப்பார்களோ? எல்லாருக்கும் காமம் என்பது கூடவே வந்து கொண்டிருக்கிறதோ? என்னென்னவோ நினைத்துப் பார்க்கக் கற்றுக் கொண்டிருந்தேன் நான். பள்ளிப் படிப்போடு உள்ளுர் வாசக சாலை படிப்பு அனுபவமும் எனக்கு இப்படியெல்லாம் நினைக்கக் கற்றுக் கொடுத்திருந்தன.

      அன்று நான் மாடிக்குப் போனபோது அப்படியே தாண்டிச் சென்று விஜயா அவள் வீட்டின் கொல்லைப் புறத்தில் தென்படுகிறாளா பார்க்கலாமே என்று தோன்றியது எனக்கு. இது வேண்டாத வேலைதான். இந்த மாதிரி ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்ததற்கு அவளே பொறுப்பு. உன்னை யார் அங்கே போகச் சொன்னார்கள்? நீயாக அடக்கிக் கொண்டு இருந்து கொள்ள வேண்டியதுதானே? என்று கேட்பது தெரிகிறது. என்னவோ தெரியவில்லை. அவளைப் பார்க்க வேண்டும் என்று ஒரு அரிப்பு. இதுநாள் வரையில் மாடிப் பகுதியில் நான் இப்படியெல்லாம் தாண்டும் வேலைகளைச் செய்ததில்லை. என் வீட்டுப் பகுதி உண்டு நான் உண்டு அவ்வளவுதான். இப்பொழுதுதான் முதன் முதலாய்த் தாண்டுகிறேன். எதைத் தாண்டுகிறேன். என் மனது இந்தக் கேள்வியைக் கேட்கத்தான் செய்கிறது.

     

அடச்சே! என்று என் தலையைத் திருப்பிக் கொள்ளப் பார்த்தவன் என்னையறியாமல் என் பார்வையை மீண்டும் அங்கே செலுத்தினேன். இரு கைகளாலும் விரித்துப் பிடித்த பாவாடையைத் தூக்கிக் கொண்டு கொல்லைப் புற மடைப் பகுதியில் அவள் அமர, அந்த நேரம் பார்த்து கரெக்டாக நான் எட்டிப் பார்க்க, அவள் திரும்பிப் பார்த்துவிட்டால் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பாள்? பார்க்கவில்லையே…பார்த்தால்தானே…. மெல்ல அப்படியே குனிந்து என் உயரத்தைக் குறைத்துக் கொண்டு என்னை மறைக்க முயன்றேன். சட்டென்று எழுந்த அவள் வீட்டுக்குள் திரும்ப முயன்றபோது என்னைக் கவனித்து விட்டது போல்தான் தோன்றியது. எழுந்து நான்தான் என்று என்னை முழுதுமாகக் காண்பிக்க எனக்குத் தெம்பில்லை.

      விடுவிடுவென்று என் வீட்டுப் பகுதிக்கு வந்து புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன். வாய்தான் வரிகளை முனகியதே தவிர என் கவனம் முழுவதும் நான் பார்த்த காட்சியிலேயே இருந்தது. கொஞ்சங் கொஞ்சமாக நான் எதுவாகவோ ஆகிக் கொண்டிருக்கிறேனோ என்று தோன்ற ஆரம்பித்து விட்டது எனக்கு.

      சற்று நேரத்தில் ஒரு கை என் பின்புறமாக இருந்து  என் கண்களை மூடியது. அதன் ஜிலுஜிலுப்பு என்னை அதை எடுக்காதே என்றது. ஒருசில கணங்களில் அது நிச்சயமாக விஜயாவாகத்தான் இருக்க வேண்டும் என்று மனது சொல்லிவிட்டது.

      ”இங்க வேண்டாம்…அப்டியே குனிஞ்ச மேனிக்கே தவழ்ந்து அந்தப் புகைக் கூண்டுக்குப் பின்புறமா வா…” என்றது அவள் குரல்.

      சொல்லிவிட்டு கணத்தில் மறைந்து விட்டாள்.. மனது படபடக்க சுற்று முற்றும் பார்த்தேன். நேர் எதிர் வீட்டு மாடிகளில் ஆட்கள் யாரும் தென்படவில்லை. பத்துப் பதினைந்து வீடுகள் தள்ளி ஒருவர் சூரியனைப் பார்த்துக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். எதிர்த்த தெரு மாடிகள் எல்லாமும் காலியாகத்தான் இருந்தன. விஜயாவின் வீட்டுக்குப் பத்து வீடுகள் தள்ளி தெரு முடிகிறது. அதற்குப் பின் கோவில். உயரமான கோபுரத்தின் உச்சியில் மைக் செட் குழாய் கட்டப்பட்டிருந்தது. விடிகாலையில் பக்திப் பாடல்களும், ஸ்லோகங்களும் ஒலிக்கும் அங்கே. அதைக் கேட்டுக் கொண்டே அம்மா வாசலில் கோலம் போடுவாள். நாலு வீடுதள்ளி விஜயாவின் அம்மாவும் கோலமிட்டுக் கொண்டிருப்பார்கள். நான் பெரிசா, நீ பெரிசா என்பது போல் பெரிய கோலமாகப் போடுவதில் இருவருக்குள்ளும் போட்டியிருக்கும்.

      பெரும்பாலும் அம்மா போடும் புள்ளிக் கோலங்களும் அதன் அநாயாசமான வளைவுகளும் என்னை ரொம்பவும் ஈர்க்கும். இப்போது லேசாய் வாசலை எட்டிப் பார்த்த என் பார்வையில் அம்மா போட்ட அன்றைய கோலம் என் கண்ணில் பட்டது. புள்ளிகளும் அதன் நடுவே வளைந்து வளைந்து செல்லும் கோடுகளும் எதிலிருந்து துவங்கியது, எங்கே முடிகிறது என்று கண்டுபிடிக்க முடியாத நிலையில் நான் அந்தச் சிக்கலுக்குள் சென்று மாட்டிக் கொண்டது போல் என்னை உணர வைத்தது. ஏன் இந்த நேரத்தில் இப்படியெல்லாம் தோன்றுகிறது?

      எனக்கு விஜயா கூப்பிட்டது மனசை அவசரப்படுத்தியது. கைகளை ஊன்றிக் கொண்டு முட்டியால் நகர்ந்தபடியே எப்படியோ ஒரு வீடு தாண்டி ஒரு வீடாக அவள் சொன்ன அந்தப் புகைக் கூண்டிற்கு அருகில் போய்ச் சேர்ந்தேன். ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்கக் கூடாது. வீட்டினுள் சுவற்றில் நிழல் தெரிந்து விடும். யாரோ ஆள் மாடியில் என்று கண்டு பிடித்து விடுவார்கள். ஏற்கனவே திருட்டு பயத்தில் ஊர் உஷாராக இருந்தது. தவழ்ந்து வந்த வேகத்தில் எந்த வீட்டிலாவது அதிர்வை உணர்ந்திருப்பார்களோ என்ற பயமும் இருந்தது.

      என்ன? எதுக்கு பயப்படுறே? நா ஒன்னை ஒண்ணும் நினைச்சிக்க மாட்டேன்…வா இப்டி…பக்கத்துல வா…இழுத்து வைத்து இவனை மடியில் அமர்த்தாத குறையாக அவள் இவன் கையைப் பிடுங்கிக் கொண்டாள்.

      இதுதானே வேணும்….நீ பார்த்தது இதுதானே…இந்தா எடுத்துக்கோ…என்றவள் சட்டென்று அவன் கையை இழுத்து உள்ளே திணித்துக் கொண்டாள்.

      உடம்பெல்லாம் குப்பென்று வியர்த்து  ஊத்த, நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொள்ள, மயக்கமே வந்துவிடுமோ என்பது போல உணர ஆரம்பித்தேன். எங்கே கையை எடுத்துவிடுவேனோ என்பதுபோல் கெட்டியாக அவள் பிடித்துக் கொண்டு கண்களை மூடித் தலையை என் மேல் சாய்த்து, நாகு…நாகு… என்று பிதற்ற ஆரம்பித்தாள்.

      சத்தம் கேட்டு யாரேனும் வந்து விடுவார்களோ என்று பயம் வேறு. ஆனாலும் விடுவித்துக் கொள்ள மனமில்லை.. கைகள் அவள் வைத்த இடத்திலிருந்து சுற்றுப் புறங்களில் விளையாட ஆரம்பித்தன. அந்தச் செழுமையும், மென்மையும், குளிர்ச்சியும், வழமையும், என்னைக் கிறங்கடித்தன. இவ்வளவு சீக்கிரம் விஜயாவோடு இப்படியெல்லாம் நடக்கும் என்று கிஞ்சித்தும் எதிர்பார்க்கவில்லை. கருப்பீ…ஏ கருப்பீ….

      ரெண்டு பேர் மனங்களுமே இந்த எண்ணங்களிலேயே வட்டமிட்டுக் கொண்டிருந்ததனால்தானோ இவ்வளவு சீக்கிரம் ஆகிப் போனது என்று தோன்றியது. இருந்தாலும் அவளின் வேகம் ரொம்ப அதிகம். தானும் இணக்கமாகவே இருப்பதுபோல் அவளாகவே நினைத்துக் கொண்டு இப்படி என்னைப் படுகுழியில் தள்ளுகிறாளே!  அவள் தள்ள நீயும்தானே விழுந்தாய்.

      உன்னை யார் மாடிக்கு வரச் சொன்னது? நீயாகத்தானே வந்தாய். நீயாகத்தானே போய் எட்டிப் பார்த்தாய். இப்போது அவளைக் குறை சொல்கிறாய்?

      விஜயா, ஆனாலும் நீ ரொம்ப அழகு…

      இப்பத்தான் தெரிஞ்சிதா….

      ஆமா…இதுநாள் வரைக்கும் உன்னை வெறுமே பார்த்திட்டுதானே இருந்தேன்…

      இப்ப என்னவாம்?

      இப்பத்தானே உன் அழகை உணர முடிஞ்சிது…

      போதுமா….

      போதும்…

      என்னது? போதுமா?

      இன்னைக்குப் போதும்னேன்…

எப்படி அங்கிருந்து விடுபட்டான் என்று தெரியவில்லை. ஆள விடு சாமி…!

அன்றைக்கு அகன்று விட்டாலும் அவள் நினைவாகவே இருந்தது. அந்த அது மனதில் வந்து வந்து முட்டியது. திரும்பவும் அப்படி ஒரு தனிமை எப்பொழுது கிடைக்கும்? சர்தான்…நம்ம கதை அவ்வளவுதானா…

சே! கொஞ்சங்கூடப் பயமில்லையே அவளுக்கு. இப்படி நினைப்பு உள்ளவளை எதற்குப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள்? இவள் அங்கு சென்று என்னத்தைப் படிக்கப் போகிறாள்? அம்மாடி இவள் என் வகுப்பில் இருந்தால் முடிந்தது கதை. இப்போதே இந்த நினைப்பு இப்படிப் போட்டுப் புரட்டுகிறதே! க்வார்டர்லி எக்ஸாம் வேறு வருகிறது. ஒன்றுமே படிக்கவில்லையே! என்னத்தை எழுதப்போகிறேன். படிக்க என்று உட்கார்ந்தால் எதாவது சந்தேகம் என்று வந்து விடுகிறாளே! அப்படியானால் அவள் பள்ளியில் பாடம் நடத்தும்போது கவனிப்பதேயில்லை என்றுதானே பொருள். நான்தானா கிடைத்தேன் எடுத்ததற்கெல்லாம்?

விஜயாவின் பிடியிலிருந்து எப்படியாவது விடுபட வேண்டும் என்றுதான் நினைத்தேன். அம்மாவிடம் சொன்னேன். இனிமே அவ வந்தா எங்கிட்ட அனுப்பாதே! எனக்கு படிப்பு டிஸ்டர்ப் ஆகுது…எதையாவது சொல்லி அனுப்பிச்சிடு. என்ன, அடிக்கடி வந்து தொந்தரவு செய்றேன்னு கூடச் சொல்லிடு…எனக்குப் படிக்கணும்….

அம்மா ஆச்சரியமாகப் பார்த்தாள் என்னை. என்ன வந்தது இவனுக்கு என்பதுபோல் இருந்தது அந்தப் பார்வை.

ஏண்டீ கமலம், உன் பிள்ளை நாகு என் பொண்ணை வராதேன்னுட்டானாமே! ஏன் அப்டிச் சொன்னான். என்னவோ பாடத்துல சந்தேகம் சந்தேகம்ங்கிறா…சரி போன்னேன்…சொல்லித் தரப்படாதா? பள்ளிக்கூடத்துல வாத்தியார் நடத்துறது புரியலேங்கிறாடி…எதுவோ அவளையும் ஸ்கூல் ஃபைனல் வரைக்கும் படிக்க வச்சு எவனாவது ஒருத்தன் கைல பிடிச்சுக் கொடுத்திறலாம்னு பார்க்கிறேன். அந்தத் தடிச்சி என்னடான்னா இப்பவே அலையறா. அதுதான் படிப்பு ஓடலை அவளுக்கு…எனக்கென்ன தெரியாமயா இருக்கு…என்னவோ இழுத்துப் பறிச்சு முடிச்சுறட்டுமேன்னு காத்திருக்கேன்…

அதுக்கென்ன மாமி…சொல்றேன்…. – அம்மாவின் பதில் இத்தனை சுருக்கமாக முடியும் என்று நான் நினைக்கவேயில்லை.

ஆனால் ஒன்று அதற்குப் பிறகு விஜயா வரவேயில்லை. எனக்கா ஆச்சரியமான ஆச்சரியம். அன்று மாடியில் என் கையை இழுத்துப் பிடித்துக் கொண்டு என் மேல் மொத்தமாய்ச் சாய்ந்து கொண்டு, என்னால முடிலடா நாகு, … என்று அர்த்தமில்லாமல் (அவளுக்குள் என்ன அர்த்தம் இருந்ததோ?)  பிதற்றியவளா இன்று, இவ்வளவு சீக்கிரம் இப்படியிருக்கிறாள். நம்ப முடியவில்லைதான். இப்போது எனக்குத்தான் அவள் நினைப்பு அதிகமானது. ருசி கண்ட பூனையாகிப் போனேன் நான். இதற்குப் பெயர் காதலா காமமா?

அடிப்பாவீ…நான்பாட்டுக்கு இருந்தேனே…வந்து வந்து என் மனதைக் கலைத்துவிட்டு இன்று நாடகமா ஆடுகிறாய்…என்ன ஏது என்று தெரியாத அப்பாவியாயிருந்த என்னை இதுதான் அது, அதுதான் இது  என்றெல்லாம் காண்பித்துக் கொடுத்துவிட்டு இன்று ஓடியா ஒளிகிறாய்…என் மனசு அவளை எதிர்பார்க்க ஆரம்பித்தது.

 

அன்புள்ள நாகு,

 

எனது முந்தைய கடிதம் உனக்குக் கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன். கடிதம் கொண்டு வந்து உன்னிடம் ரகசியமாய்ச் சேர்த்த நமது ஆரம்பப்பள்ளி நண்பன் விச்சுவின் மூலம்தான் இந்த இரண்டாவது கடிதமும் வருகிறது. அவன் மாதத்தில் ஒரு முறை உங்கள் ஊருக்கு வந்துகொண்டுதான் இருக்கிறான். சென்ற கடிதத்திற்குப் பிறகான இந்த மூன்று மாதங்களிலும் பிரதி மாதமும் அவன் உங்கள் ஊருக்கு வந்தான். ஆனால் உன்னைச் சந்தித்தானா தெரியாது. உங்கள் தெருவில் அவனுக்கும் ஏதோ உறவினர்கள் இருப்பதாகச் சொன்னான். இதெல்லாம் உனக்குத் தெரியுமோ தெரியாதோ? எனக்கு வசதியாக இருக்கிறது அவனின் உங்கள் ஊருக்கான வருகை.  அவன் ரொம்பவும் நம்பிக்கையானவன். நம்மைப் பள்ளியில் ஒன்றாய் இருந்த காலத்திலிருந்தே அறிந்தவன். நம் இருவரின் குடும்ப ஒற்றுமையும், விவகாரங்களும் எல்லாமும் அவனுக்குத் தெரியும். இன்று எனக்கிருக்கும் ஒரே உதவி அவன்தான். எனக்கென்னவோ உன் நினைவாகவே இருக்கிறது. நீ என்னைவிட்டு விலகி விடுவாயோ என்று என் மனது அடித்துக் கொள்கிறது. நாம் இருவரும் உள்ளுரிலேயே இருந்து சேர்ந்து இருந்தால் கூட யாரும் ஒன்றும் சொல்லப் போவதில்லை. நம்மை இணைப்பதாகத்தான் முடிவு செய்து விட்டார்களே! ஆனால் காலம்தான் நம்மைப் பிரித்து வைத்து விட்டது. இந்த வயதிலேயே இவளென்ன இப்படியெல்லாம் எழுதுகிறாள் என்று கூட உனக்குத் தோன்றலாம்.  என் அம்மா உன் மீது அப்படி நம்பிக்கையோடிருக்கிறாள். உங்களை விட நாங்கள் ரொம்பவும் நொடித்துத்தான் போனோம். அப்பா உன் அப்பாவிடமிருந்து பிரிந்து தனியே வியாபாரம் செய்து அதிலும் பலத்த நஷ்டத்தை எதிர் கொண்டார் என்பதை நீ அறிவாய்தானே! அதெல்லாமும் உன் அப்பாவிற்கு அவர் செய்த துரோகம் என்று இன்று மனம் புழுங்குகிறார். அன்று உன் அப்பாவிற்குத் தெரியாமல் வியாபாரப் பணத்தைச் சுருட்டியவர் என் அப்பா. லாபத்தை மறைத்தவர். பல நாள் திருடன் ஒரு நாள் பிடிபடுவான். பிடிபட்டார். ஆனால் அந்த நாளில் உன் அப்பாதான் எத்தனை கௌரவமாக நடந்து கொண்டார் என்று இன்றும் சொல்லிச் சொல்லிப் புலம்புகிறார் என் தந்தை.

அந்த நன்நம்பிக்கைதான் இன்றுவரை உன்னையே என்னை நினைத்துக் கொண்டிருக்கச் செய்கிறது. வீட்டில் அந்த எண்ணங்களெல்லாம் கலைந்து கரைந்து போய்விட்டதாகத்தான் தோன்றுகிறது. காலம்தான பதில் சொல்ல வேண்டும். இன்று எனக்கிருக்கும் ஒரே பிடி நீதான். எனக்கு சரிதாதான் வேண்டும் என்று நீ நிற்பதில்தான் இருக்கிறது என் எதிர்காலம். உன் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.                                                                                                                                   என்றும் அன்புடன்                                                                           உன் சரிதா

 

ஒரு பக்கம் விஜயா. மறுபக்கம் சரிதா. இரண்டு பேரும் என்னைப் போட்டுப் பாடாய்ப் படுத்தினார்கள். இந்த வருடம் என் படிப்பு அவ்வளவுதானோ என்று எனக்கு அப்பொழுதே தோன்ற ஆரம்பித்து விட்டது.

பள்ளியிறுதிக் காலத்திலேயே இப்படியெல்லாம் வரும் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை. ஒழுங்காக நான்பாட்டுக்கு என் படிப்பு உண்டு நான் உண்டு என்று இருந்தேன். சந்தேகம் சந்தேகம் என்று வந்து என் கழுத்தை அறுத்து, இன்று என்னை நானே  சந்தேகப்படும்படி ஆக்கி விட்டுவிட்டுப் போய்விட்டாள். போதாக் குறைக்கு இந்த சரிதா வேறு.

என்ன ஒரு தைரியம் இந்தப் பெண்டுகளுக்கு. இருநூறு மைல் தொலைவிலுள்ள ஊரிலிருந்து படு தில்லுடன் ஒரு மூன்றாமவனிடம் இப்படி ஒரு கடிதத்தைக் கொடுத்து விடுகிறாளே! அவன் ஏதாவது விளையாடிப் பார்ப்போம் என்று நினைத்தால்? அவன் நல்லவனாய் இருக்கக் கண்டு சரியாய்ப் போயிற்று. ஒரு பிரச்னையான ஆளாய் இருந்தால்? நேரில் வரவும் பயம். போன் பேசவும் அதைவிட பயம். எங்கே காரியம் கலைந்து விடுமோ? என்னமாவது விபரீதமாகிவிடுமோ என்கிற அசாத்தியமான ஜாக்கிரதை உணர்வு! இது எல்லாவற்றையும் மீறிய ஒரு மூன்றாவது நண்பனிடம் நம்பிக்கை! அடேயப்பா! இந்த ஒரு காரியத்தை எவ்வளவு  உருப்படியாகப் பார்க்கிறார்களய்யா இந்தப் பெண்கள்! மனதில் நினைத்து விட்டால் அதற்கு என்னென்ன பாதுகாப்பான வழி முறைகள் உண்டு என்று யோசித்துக் கொண்டேயிருப்பார்களோ! பிடிப்பு விட்டுவிடக் கூடாது என்று தொடர்ந்து முயலுகிறார்களே!! சரியான கட்டைகள்தான்! நினைத்துக் கொண்டேன். மனது ரொம்பவும் குழம்பிப் போயிருந்தது.

காலாண்டுத் தேர்வுக்கு இன்னும் பத்து நாட்களேயிருந்தன. ஒரு தம் கட்டினால் அத்தனையையும் முடித்துவிடும் தைரியம் உண்டுதான். முடியும்தான். அதற்குப் பாதகமான அளவு ஒன்றும் நான் என்னை இழந்து விடவில்லைதானே! அந்தத் தன்னம்பிக்கை கொடுத்த தைரியம்தானோ என்னவோ,  அத்தோடு மட்டுமல்லாது அன்று என் மனதிருந்த குழப்ப நிலைக்கு அது ஒன்றுதான் வழி. அம்மாவிடம் சொல்லலாம்தான். சொன்னால் சரி, வா…கோவிலுக்குப் போய்விட்டு வருவோம்…எல்லாம் சரியாய்ப் போயிடும்…என்று அழைத்துக் கொண்டு போவாள். ஆனால் என் மனது வேறு வழி தேடியது.

என்னடா சொல்ற? ஆச்சரியமா இருக்கு!! என்றான் நண்பன் மனோகரன். என் ஃபிரண்டு நாகராஜனா இப்படிப் பேசுறது? என்று விழித்தான். அவனுக்கு ஒரே சந்தோஷம். கூடவே . யாராச்சும் பார்த்துட்டா என்னடா பண்றது? என்று வேறு கொக்கியைப் போட்டான்.

பரவால்லடா… கொஞ்சம் லேட்டானாலும் பரவால்ல…நல்லா இருட்டட்டும்…என்றேன் நான். அன்று டியூஷன் சார் வைத்திருந்த ரிவிஷன் டெஸ்ட்டுக்கு டிமிக்கி கொடுத்தோம். பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம். மறுநாள் எழுதுகிறோம் என்றால் எங்கள் ரெண்டு பேருக்கு மட்டும் மாட்டேன்  என்றா சொல்லப் போகிறார் என்கிற அசட்டு தைரியம். தொலைஞ்சு போங்க…என்றவாறே க்வெஸ்டின் பேப்பரை வீசி எங்கள் மூஞ்சியில் எறிவார். அவ்வளவே!

சொன்ன பிரகாரம் கொஞ்சம் தாமதமாக, சரியாகச் சொல்லப் போனால் அரைமணி தாமதமாக உள்ளே சென்றோம்.

நியூஸ் முடிந்து படம் போட்டு பத்து நிமிஷந்தான் ஆச்சு என்றார்கள். எங்களுரிலெல்லாம் ஒன்றொன்றுக்கும்  இப்படிச் சில வசதிகள் உள்ளன என்பதுதான் எங்களுக்குப் பெரிய வசதி. .

கடைசி மேல் வரிசையின் இருட்டான அந்தப் பகுதியில் எங்களுக்கென்றே இரண்டு சீட்கள் தயாராய் ஒதுக்கி வைத்தாற்போன்று காலியாகக் கிடக்க, அந்த இருக்கைகளில் போய் கமுக்கமாய் நாங்கள் அமர்ந்து கொள்ள, தலைக்கு மேலிருந்து வந்த குளிர்ச்சியான காற்று எங்கள் பயத்தைச் சற்று விலக்கி ஆசுவாசப்படுத்த, உள்ளே கவ்வியிருந்த இருட்டு மெல்ல மெல்ல விலகி கண்கள் சற்றே தெளிவான  பார்வைக்குட்பட்டபோது, எனக்கு நேர் இரண்டாவது கீழ் வரிசையில் ஓரமாய்  அமர்ந்திருந்தவர்களை சற்றே தலையைச் சாய்த்து நான் பார்க்க நேரிட்ட போது, டே…! அங்கே பார்த்தியா….!! என்றான் என் முன் கதை தெரிந்த ஆப்த நண்பன் மனோகரன்.

“நாந்தான் சொன்னல்லடா… அவ பெரிய கொக்கின்னு…கேட்டியா…” என்றவாறே இருட்டுக்குள் என்னை நோக்கிக் கையை ஓங்கினான். பூர்வ கதை அறியும் புண்ணியவாளன் இன்னும் ஏதேனும் அவளைப்பற்றி வைத்திருப்பானோ? 

அங்கே அவள் தோளில் கைபோட்டு, முன் பக்கம் கால் மேல் கால் போட்டு படு சொகுசாக, ரொம்பவும் அநாயாசமாக அமர்ந்திருந்தது எனக்கு வழக்கமாகக்  கடிதம் கொண்டு வந்த அந்த ஆண் மகன்.

அது விச்சு….. அவள் விஜயா….!!!  அன்று ஒரு நாள் என் மனதில் தோன்றியதே…கேள்வி….காதலா…காமமா…?  இப்போது எனக்கு ஏதோவொரு விடை கிடைத்தமாதிரியிருந்தது.                                                      -----------------------------------------------

 

 

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...