05 அக்டோபர் 2011


இலக்கியப் போர்
-------------------------
இங்கே
எழுத்துத் துச்சாதனர்கள்
பெருகி விட்டார்கள்
இந்தத் திருப்பணிக்கு
ஓவியத் துச்சாதனர்கள்
துணை போகின்றார்கள்
அந்தோ
வாசகக் கண்ணபிரான்களே
இலக்கியப் பாஞ்சாலியின்
மானம் பறிபோவதற்குள்
காப்பாற்றுங்கள் அவளை
வேண்டுமானால்
நல்லிலக்கியம் படைக்கிற
பாண்டவர்களோடு சேர்ந்து
ஆரம்பிப்போம் ஒரு
குருச்சேத்திரப்போரை...!

------------------------------------
இந்த என் கவிதை 10.1.1982 மயன் இதழில் பிரசுரமானது. இன்றும்
பொருந்துவது போலிருப்பதுதான் இதன் அழகு! பாரதி படத்தைச் சேர்த்தது பொருத்தம் தேடிய என் உரிமை

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...