![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg2ojYfa8Zra66w25WM2J6ZOUiAS09dVAcPewYVrxLF5e0SD47ATRH3WIP5ZqAXr0diCK9p7isMI60eD-9ch1sh3xG2GkCfJASY_eZp7xgvbZD9V9uC0GnshDF93Za1eL3r8vDx_UWiLDM1/s200/Bharathi.jpg)
இலக்கியப் போர்
-------------------------
இங்கே
எழுத்துத் துச்சாதனர்கள்
பெருகி விட்டார்கள்
இந்தத் திருப்பணிக்கு
ஓவியத் துச்சாதனர்கள்
துணை போகின்றார்கள்
அந்தோ
வாசகக் கண்ணபிரான்களே
இலக்கியப் பாஞ்சாலியின்
மானம் பறிபோவதற்குள்
காப்பாற்றுங்கள் அவளை
வேண்டுமானால்
நல்லிலக்கியம் படைக்கிற
பாண்டவர்களோடு சேர்ந்து
ஆரம்பிப்போம் ஒரு
குருச்சேத்திரப்போரை...!
------------------------------------
இந்த என் கவிதை 10.1.1982 மயன் இதழில் பிரசுரமானது. இன்றும்
பொருந்துவது போலிருப்பதுதான் இதன் அழகு! பாரதி படத்தைச் சேர்த்தது பொருத்தம் தேடிய என் உரிமை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக