06 அக்டோபர் 2011


முடிவு
-------------
அப்பா பேச்சைக்
கேட்டுக் கேட்டு
அலுத்துப் போச்சு

அம்மா கையால்
சாப்பிட்டு சாப்பிட்டு
அயர்ந்து போச்சு

தங்கைமாரைத்
திட்டித் திட்டி
தளா்ந்து போச்சு

தம்பியை வாயால்
விரட்டியடித்து
வீணாய் ஆச்சு

எல்லாம் சலித்து
எதிலும் ஒன்றாமல்
புதிதாய் எதைச் செய்ய?

ஆம்!
அதுதான் சரி
சீக்கிரம் ஒரு
கல்யாணம் பண்ணனும்!

--------------------------------------------------------------

15.1.1984 ல் விகடனில் பிரசுரமான என் கவிதை

-------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...