23 மார்ச் 2024

 சொந்த வீடும் சமையல் மாமியும்..(குங்குமம் இதழில் வந்த கதை)

--------- லோகநாதன் பாலமுருகன் விமர்சனம்
†***************÷************÷**********
சிறுகதையை இயற்றியது திரு உஷாதீபன் அவர்கள். ஆசிரியர் ஏதோ பெரிய சமையல் குறிப்பை இங்கு நமக்குத் தரப்போகிறார் என்று நினைத்துப் படிக்க முற்பட்டேன். ஆனால் அவர் அதைவிட ஒரு முக்கியமான ஒன்றை அனைவருடனும் பகிர்ந்திருக்கிறர். எப்படி ஒரு மனிதனுக்கு உணவு முக்கியமோ, அத்தியாவசிய ஒன்றாக அமைந்ததோ அதேபோல், நாம் அனைவரும் புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டுமென்பதை ஆணித்தரமாக எடுத்துரைத்திருப்பார்.
புத்தகங்கள் படிக்கும் போது ஏற்படும் அனுபவத்தால் உண்டாம் மாற்றம் எப்படிப்பட்டவையாக இருக்கக் கூடும் என்பதை அழகாக தன் எழுத்தின் மூலம் தந்திருப்பார். இந்த கதையில் சில எழுத்துலக ஜாம்பவான்களைப் பற்றி மக்கள் என்ன நினைந்திருந்தார்கள் என்பதைப் பிட்டுப்பிட்டு வைத்திருப்பார். ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் அல்லாமல் நாம் அனைத்து எழுத்துலக ஜாம்பவான்களுடைய எழுத்துக்களையும் மக்களாகிய நாம் வாசித்தோமேயானால்! கட்டாயம் இங்கு ஆசிரியர் கூறியமாதிரி மனிதர்களின் மனம் மென்மை படுத்துவது மட்டும் அல்லாமல் மேன்மை படுத்துகிறது அதில் எந்த ஐயப்பாடும் இல்லை. எழுத்தாளருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும். 💐💐💐👍👍👍👍
-பாலமுருகன்.லோ

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...