26 மார்ச் 2024

 






நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து.




இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த ஆணின் கைபேசியிலும் ஒரு சசிகலாவின் அழைப்போ...எஸ்.எம்.எஸ்ஸோ இருக்கக்கூடும்...அதுபோல் எந்தப் பெண்ணின் கைபேசியிலும் ஒரு சீரங்கப் பெருமாளின் அழைப்போ...எஸ்.எம்.எஸ்ஸோ இருக்கக்கூடும்...என்ற கருத்தே. சபலம் உள்ளவர்கள் இப்படி மாட்டிக் கொண்டு நிம்மதியில்லாமல் அலைய வேண்டியதுதான். எடுத்த எடுப்பில் முறித்துப் பேசி விட்டால் எந்தப் பொம்பளை தொடருவாள்...இந்தக் கைபேசி காலத்தில் மாணவர்கள்தான் நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றால் ஆசிரியப் பெரு (சிறு) மக்களும் நாங்களும்தான் என்று நிற்கிறார்கள் என்பதை இந்நாவல் நேரடியாகவோ மறைமுகமாகவோ உணர்த்துகிறது எனக் கொள்ளலாமா? இருப்புதான் பொழப்பக் கெடுக்குதும்பாங்க..அது எத்தனை உண்மை? இந்த நாவலிலும் இதற்கு முந்தைய நாவலான "இப்போது உயிரோடிருக்கிறேன்" நாவலிலும் ஒரே விஷயத்தை இன்னும் எத்தனை பக்கத்திற்குத்தான் நீட்டிப்பார் என்கிற அலுப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...