22 மே 2023

 எழுத்தாளர் வாதூலன் மறைவு - ஆழ்ந்த இரங்கல். அஞ்சலி. பாத நமஸ்காரங்கள்.

-------------------------------------------------------
எழுத்தாளர் வாதூலன் (83) அவர்கள் 20ம் தேதி சனிக்கிழமை இரவு காலமானார்.
கடைசிவரை ஆக்டிவாக இருந்தார் என்பதற்கு இன்று (22)திங்கள் தினமணியில் வந்திருக்கும் அவரது கட்டுரையே சாட்சி.
எனது ஒவ்வொரு கதையையும் படித்துவிட்டுப் பேசுவார். வாட்ஸப் செய்தி அனுப்புவார். ரமணீ...என்று நீட்டி அழைப்பதில் அவரது அன்பு தெரியும்.
மரபுசாரா தொழிலாளர்கள் பக்கம் உங்கள் மனது சாய்ந்திருக்கிறது. நேர்மை உணர்வு மதிப்பளிக்கிறது. லஞ்சம்...ஊழல்...குறித்த வெறுப்பும்..எதிர்ப்பும்...கோபமும் அதிகம் என்று பாராட்டுவார்.
இசை ரசனை அதிகம். அது குறித்து கட்டுரை நூலும், நிறையக் கதைகளும் எழுதியுள்ளார். அல்லயன்ஸ் பதிப்பகம் இவரது நூல்களை வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒரு அன்பு நெஞ்சம் மறைந்தது. கண்ணீர் அஞ்சலி.
May be an image of text that says 'காலமானார் இ.லட்சுமணன் (83) சென்னை, மே ணன் (83) உடல் 21: எட்்க்கவ இ.லட்சும சனிக்கி மமை காலமானார். சென்னை பெசன்ட் நக ரில் வசித்து வந்த இவர், கனரா வங்கியில் முதுநிலை மேலாளராகப் பணியா்ற்றி யவர். தினமணி ஆசிரியர் உரை பக்கத்தில் பல ஆண் டுகளாக வாதூலன் என்ற பெயரில் கட்டுரைகளை எழுதிவந்தார். அவருக்கு மனைவி லலிதா, மகள் மீனாட்சி, மகன் ஈஸ்வர் உள்ளனர். அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொடர்புக்கு 97909 04627.'
All reactions:
Pachaiyappan Ge, Kanavu Subrabharathimanian Tirupur and 56 others

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...