30 செப்டம்பர் 2018

வண்ணநிலவனின் "எம்.எல்" நாவல் படித்து முடித்த கையோடு கணையாழிக்கு ஒரு வாசிப்பு அனுபவம் கட்டுரை...சூட்டோடு சூடாக...காரணம் அந்த நாவலின் வழி எனக்கு ஏற்பட்ட அனுபவம்....

நண்பர் ராஜராஜன் வடிவமைத்த படம்

Ushadeepan Sruthi Ramani updated his profile picture.
படித்து முடித்தது எம்.வி.வெங்கட்ராமின் "உயிரின் யாத்திரை" நாவல். சிறிய நாவல்தான். திருமூலரின் பாடல்களில் மூழ்கி மனசு விட்டுப்போய் அதற்கேற்ப இந்த நாவலைஎழுதினாரோ என்று தோன்றுகிறது. நல்லவேளை...60 பக்கங்களிலேயே முடிந்து போகிறது. இதுக்குத்தானா...இவ்வளவுதானா என்று ஒரு அலுப்பும் தோன்றி விடுகிறது. கொஞ்சம் பக்குவப்பட்டவனுக்கு திருமூலர் பாடல்களே போதும். இந்த நாவல் என்று ஒன்று தனியே வேண்டியதில்லை...இன்னமும் சொல்லப்போனால் இந்த சமூக வாழ்க்கையே ஒருவனுக்கு நிறையக் கற்றுக் கொடுத்துவிடும்...ஐநூறு பக்கங்களுக்கு மேல் கற்பனை செய்தேன் என்கிறார்.. இதுவே அதிகம்....என்றுதான் எனக்குத் தோன்றுகிறது....
மதுரை புத்தகத் திருவிழாவில் இன்றைய வெளியீடு (09.09.2018) காவ்யா பதிப்பகத்தின் "வைகைக் கதைகள்"
நா.பா.விற்கு அருகில் நான். அதில் ஒரு சந்தோஷம். என் கதையும் அதே குண நலன்களோடு..."அவர் அப்படித்தான்"
தலைப்பே இதைச் சொல்லும்...
கவிதா பப்ளிகேஷனின் 40 ம் ஆண்டு விழா நேற்று (24.9.2016) கோடம்பாக்கம் அருகிலுள்ள மஉறாலிங்கபுரம் எம்.எல்.எம். கல்யாண மண்டபத்தில் சிறப்புற நடந்தேறியது. மிகப் பிரம்ம...
See Moreஎனது நின்று ஒளிரும் சுடர்கள் மற்றும் லட்சியப் பறவைகள் நாவல் இரண்டு புத்தகங்களும் இதில் அடக்கம்.

LikeShow more reactions
Commen
106வது இதழ் நவீன விருட்சம் செப்டம்பரில் வந்துவிட்டது....
அழகியசிங்கர்
ஒவ்வொரு காலாண்டு போதும் விருட்சம் குறிப்பிட்ட காலத்திற்குள் வந்துவிட வேண்டுமென்ற உறுதியாக இருப்பேன். ஆனால் என் முயற்சியில் பெரிய தோல்வியே ஏற்படும். 
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நான் விருட்சம் என்ற பத்திரிகையைக் கொண்டு வருகிறேன். அதன் பக்கங்கள் 80 ஆகவும், விலை ரூ.20தான் வைத்திருக்கிறேன்.
இந்த 30 ஆண்டுகளில் நான் 120 இதழ்கள் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் என்னால் 106 இதழ்கள் மட்டும்தான் கொண்டு வர முடிந்தது.
இதுவே பெரிய விஷயமாக எனக்குத் தோன்றுகிறது. இதழ் கொண்டு வருவதோடல்லாமல் இந்தப் பத்திரிகையை அனுப்புவதற்கு நான் பெரும் முயற்சி செய்ய வேண்டும். அவ்வளவு லேசில் அனுப்பி விட முடியாது.
இந்தப் பத்திரிகை விற்று எனக்குப் பணம் கிடைக்கப் போவதில்லை. அதனால் பணத்தைத் தயார் செய்துகொண்டு பத்திரிகையைக் கொண்டு வந்துள்ளேன்.
அதிகப் படைப்பாளிகளை இதில் ஈடுபட வைக்கவேண்டுமென்ற நோக்கத்துடன் சில முடிவுகளை எடுத்திருக்கிறேன்.
கவிதைகள் எழுதுபவர்கள் ஒரு கவிதை மட்டும் அனுப்ப வேண்டும். கதை, கட்டுரை எழுதுபவர்கள் நாலைந்து பக்கங்களுக்குள் அனுப்ப வேண்டும்.
புத்தக மதிப்புரையும் வெளியிடப்படும். ஆனால் ஒன்று அல்லது ஒன்றரைப் பக்கங்களுக்குள் முடித்து விடவேண்டும். வாசகர்களைப் படிக்கத் தூண்டும்படி புத்தக மதிப்புரை இருக்க வேண்டும்.
கீழ்க்கண்ட படைப்பாளிகளின் படைப்புகள் நவீன விருட்சம் 106வது இதழில் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
1. விஸ்வநாத் கவிதை 
2. கணக்குத் தீர்த்தல் - வளவ துரையன் 
3. வசப்படா விடை பெறுதலின் மௌனத் துளிகள் - தேனு-கவிதை
4. கடிதம் - வண்ணதாசன் 5. ஒரே ஒரு நிலக்கரித்துண்டு - கல்யாண்ஜி 
6. புத்தக விமர்சனம் - வைதீஸ்வரன் 
7. செப்டம்பர் மூன்றாம் தேதி - அழகியசிங்கர் 
8. பெண்கள் - சிறுகதை - தாஜ் 
9. முகநூல் மூலம் வெளிவந்த புத்தகங்கள் 
10. ஆற்றாமை - சிறுகதை - உஷாதீபன் 
11. புத்தக விமர்சனம் 
12. மிரட்டல் கதை - அழகியசிங்கர் 
13. வாழ்க்கையெனும் ஓடம் - டாக்டர் பாஸ்கரன் 
14. இவர்களும் அவர்களும் - கவிதை - உமா பாலு 
15. டோரியன் சீமாட்டி - சிறுகதை - பிரேமா பிரபா 
16. தமிழ் மணவாளன் கவிதை 
17. பைரவம் - கவிதை - அன்பாதவன் 
18. பனித்துளி - அடல் பிஹாரி வாஜ்பேயி 
19. விரக்தி - கவிதை - டோரத்தி பார்க்கர் 
20. ஸிந்துஜா கவிதை 
21. புத்தகம் விமர்சனம் - டாக்டர் ஜெ பாஸ்கரன் 
21. புத்தக விமர்சனம் - மணிகண்டன் 
22. புத்தக அறிவிப்பு 
22. உரையாடல்