26 டிசம்பர் 2014

“மேகலா”- மாத நாவலில் என் குறுநாவல் “சொல்லாதே யாரும் கேட்டால்”

 

 

2014-12-26 18.36.56 2014-12-26 18.37.48

 

 

 

 

எனக்கு எதுவும் விலக்கல்ல. எழுத்துப் பயிற்சிக்காக நான் மாத நாவல்களும் எழுதுவதுண்டு. விறுவிறுவென்று கதை சொல்ல முடிகிறதா என்கிற பரீட்சார்த்தம். எதிர்பாராத (நானே எதிர்பாராத) முடிச்சுகளை நானே போட்டுவிட்டு அதிர்ந்து கிடப்பேன். பின்பு எந்தவொரு அத்தியாயத்திலாவது அதை அவிழ்க்க முனைவேன். சாமர்த்தியமாக, கதைக்கு முற்றிலும் பொருத்தமாக, இயல்பு மாறாமல், சிடுக்கு அவிழ்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வேன். புதிய புதிய கதா பாத்திரங்களை அங்கங்கே பொருத்தி, உறவு முறைகளை நீட்டித்து, கதை கச்சிதமாய் வளர்ந்து செல்வதை நானே ரசிப்பேன். நான் ரசிப்பதை மற்றவர்களாலும் ரசிக்க முடியுமா என்பதை அவர்கள் நிலையில் நின்று கவனமாய்ப் பார்ப்பேன். இப்படியே பதின்மூன்று அத்தியாயங்கள் கடந்து செல்ல, ஒரு நூறு பக்கங்கள் தாண்டும் போது கதை தானே தன் முடிவைத் தேடிக் கொண்டு நிற்கும். அங்கே தன்னையறியாமல் அதுவே நின்று போதும் என்று சொல்லும்.  

இப்படி என் எழுத்துப் பயிற்சியில் வளர்ந்ததுதான் இந்த நாவல்…குறுநாவல்….சொல்லாதே யாரும் கேட்டால்…

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...