16 நவம்பர் 2014

க.நா.சு.வின் “விலங்குப்பண்ணை” –ஜார்ஜ் ஆர்வெல் நாவல் (மொழிபெயர்ப்பு நாவல்)

வாசிப்புப் பயணத்தில்
--------------------------------------------

13149 download

 

 

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.

ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.

1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.

2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.

3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.

4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.

5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.

6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.

7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.

12.11.2014 அன்று வைகையில் சென்னைக்குப் பயணித்தபோது ஆசையாய் எடுத்துப் படித்த மொழி பெயர்ப்பு நாவல். நாவலின் ஒட்டு மொத்த நோக்கத்தையும் மனதிற்குள் ஆழமாய் வாங்கி, வரிக்கு வரி அதன் தன்மை பிசகாது, ஒரு மொழி பெயர்ப்பைப் படிப்பது போன்ற உணர்வே இல்லாது, அழுத்தமாகக் கதை சொல்லிச் செல்லும் அழகு. ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு நடை படிவதுண்டு. ஆனால் மொழி பெயர்ப்புக்கு என்ன நடை? படைத்த ஆசிரியன் எந்த நடையில் கதைசொன்னானோ, அதே நடையில், அதே உணர்வின் ஆழத்தில் பயணித்து, , தடங்கலில்லாத தெளிந்த மொழியில், நெருடலின்றி, அந்தந்த மொழியாளர்கள் சுலபமாக உள்வாங்குவதுபோல் பக்கங்களை நகர்த்திய இந்த நாவலைப் படித்து முடித்த அனுபவம் நிறைவானது.

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...