04 அக்டோபர் 2015

அக்டோபர் 2, 2015 காந்தி ஜெயந்தி விழா – மதுரை காந்தி மியூசியம் யோகா பயிற்சிக் குழு.

 

 

KVR 5 KVR 1

 

 

KVR 2 KVR 3

 

KVR 4

 

 

கடந்த ஆறு ஆண்டுகளாக மதுரை காந்தி மியூசியத்தின் யோகா வகுப்பிற்குத் தவறாமல் நான் சென்று வருகிறேன். காலை 4.30 மணிக்கு நடக்க ஆரம்பிப்போம். 5.40 வரை நடை. பிறகு 15 நிமிடம் ஓய்வு. சரியாகக் காலை 6.00 மணிக்கு யோகா வகுப்புகள் ஆரம்பிக்கும். ஏழு மணிவரை. பிறகு பத்து நிமிடங்கள் பிராணாயாமம். இந்த நியமங்கள் இன்று வரைசெம்மையாய் நடந்தேறி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ம் தேதி காந்திஜெயந்தி நாளன்று தவறாமல் எல்லோரும் கூடி அண்ணலின் சிலைக்கு மாலை அணிவித்து, வணங்கி, சமாதியில் மௌனம் அனுஷ்டித்து, பிறகு பிரிவது வழக்கம். அப்போது ஒரு பத்து நிமிடம் நான் உரையாற்றுவேன். இன்றுவரை என் மனதிற்குகந்த ஒரே விஷயம் இதுவாகத்தான் இருக்கிறது. மனம் தனிமையையும், அமைதியையும், விடுபடுதலையும் நோக்கி சதா பயணித்துக் கொண்டே இருக்கிறது. விடுதலிலும், விடுபடுதலிலும் இருக்கும் ஆனந்தம் உணர்ந்து அனுபவிக்க வேண்டியவை. வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டவை.
இந்த ஆண்டு 2015 அக்.2 வெள்ளியன்று காந்தி ஜெயந்திக்குக் கலந்து கொண்ட நிகழ்வு மேலே…

30 செப்டம்பர் 2015

”சிவாஜி ஒரு சகாப்தம்”-1.10.2015 அவரது பிறந்த நாள்

 
 
கட்டுரை
நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.
வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.
மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.
யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.
மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை. அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.
மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.
விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.
நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.
இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.
பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.
நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.
இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.
உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.
திரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.
அத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.
இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.
திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.
போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.
மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.
----------------------------------------------------
இணைப்புப் படம் – கீழே.
----------------------------- clip_image001----------------------------













clip_image003

























16 ஆகஸ்ட் 2015

முதுபெரும் எழுத்தாளர் கர்ணன்,இவரைக் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் –

 

------------------------------------------------------------------------------------

உஷாதீபன், மதுரை-14.

20150815_225926 20150815_225949

 

20150815_225904 20150815_230017

 

 

ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் எழுத்தை அவர்களே கொண்டுசெல்லுதல், மேடை போட்டு முழங்கி (எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பது வேறு) விற்பனை செய்து கொள்ளுதல்…இம்மாதிரி பலவும் இன்றைய தமிழ் எழுத்துச் சூழலாகப் பரவி நிற்கின்றன.

இத்தனைக்கும் நடுவில்தான் “கர்ணன்“ என்கிற மாபெரும் எழுத்தாளர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். தானுண்டு தன் எழுத்துண்டு என்று வறுமையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு….அவ்வப்போது அவரைத் தேடி வருபவர்களை மதித்து, செல்லும் இடங்களில் கருத்தான சொற்பொழிவாற்றி திருப்தி காண்கிறார்.

மணிக்கொடிக் காலத்து எழுத்தாளர்களிலிருந்து இன்றைய எஸ்.ரா.,ஜெயமோகன் வரை அறிவார். எந்தப் பொருளில் எப்பொழுது பேசச் சொன்னாலும் சொல்லுவதற்கு நிறைய விஷயம் இருக்கும் இவரிடம். வாய் ஓயாது நாள் முழுதும் பேசச் சொன்னாலும் எதைப்பற்றியும் இவரால் வானளாவப் முடியும். அவ்வளவு பொக்கிஷம் இவரிடம் அடைந்து கிடக்கிறது.

பிரபலமான எழுத்தாளர்களின் கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு கௌரவம் பார்க்காமல் போய் அமர்ந்து விடுவார். அவர்களும் இவரை மதித்து ஒரு புத்தகத்தை வழங்கி இவரைப் போற்றி அனுப்பி விடுவார்கள். ஆனால் யாரும் பின்னர் அவரைப்பற்றி எங்கும் எப்போதும் சொன்னதில்லை. அது ஏன்? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள்?

இந்தத் தலைப்பில் எழுதச் சொன்னால் கூட இவரால் ஒரு புத்தகம் உடனே எழுதிவிட முடியும். இவரைத் தெரிந்து கொள்வதும், ஆதரிப்பதும் நம் கடமை.

மதிக்கத்தக்க சிறந்த படைப்பாளி திரு “கர்ணன்“ அவர்களின் புத்தகங்களை அறிவோமா?

நாவல்

1) உள்ளங்கள் 1980 (2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978 (3) மயங்காத மனசுகள் 2003 (4) ஊமை இரவு 2009 (5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008 (6) மறுபடியும் விடியும் 2008 (7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள் –

(1) கனவுப்பறவை 1964 (2) கல்மனம் 1965 (3) மோகமுக்தி 1967 (4) மறுபடியும் விடியும் 1968 (5) புலரும் முன்… 1974 (6) வசந்தகால வைகறை 1977 (7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (8) இந்த மண்ணின் உருவம் 1999 (9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002 (10) இசைக்க மறந்த பாடல் 2004 (11) முகமற்ற மனிதர்கள் 2004 (12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009 (13) பொழுது புலர்ந்தது 2013 (14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

(1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011 (2) அகம் பொதிந்தவர்கள் 2012 (3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014 (4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015

வரலாறு

(1) அவர்கள் எங்கே போனார்கள் 2005 (2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011 (3) இன்று இவர்கள் 2013 (4) இந்தியாவின் எரிமலை 1979 (5) விடிவை நோக்கி 1980 (6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981 (7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

ஆன்மீகம்

ஆத்ம நிவேதனம் 2008

கவிதை

நினைவின் திரைக்குள்ளே 2014

முகவரி

திரு கர்ணன்,

37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு,

செல்லூர்,

மதுரை – 2 .

செல் – 9487950844.

----------------------------------------------------------------------------------------------------------

21 ஜூலை 2015

‘சிவாஜிஒருசகாப்தம்”

கட்டுரை உஷாதீபன், 8-10-6 ஸ்ருதி இல்லம், சிந்து நதித் தெரு,   மகாத்மாகாந்தி நகர், மதுரை-625 014.

----------------------------------------

நீங்கள் இன்னும் ஏற்காத எந்தப் பாத்திரத்தில் நடிக்க விரும்புகிறீர்கள் என்று ஒரு முறை நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்களிடம் கேட்டபோது அவர் தந்தை பெரியார் என்று சொன்னார்.

வேறு எத்தனையோ பாத்திரங்கள் இருக்கின்றனதான். அவருக்குப் பிடித்ததை அவர் சொல்லியிருக்கிறார் அவ்வளவே. பிற எத்தனையோ கதாபாத்திரங்களையெல்லாம் இவரை வைத்துக் கற்பனை செய்து அலங்கரித்துப் பார்க்கலாம்தான். திறமையான இயக்குநராயிருந்தால் அவரின் முழுமையான ரசனைத் திறனுக்கு உகந்த, அதற்கும் மேலுமான வடிவத்தை வழங்கத் தகுதியான ஒரு கலைஞர்தான் நடிகர்திலகம் அவர்கள்.

மிகச் சரியாகச் சொல்லப்போனால் இயக்குநர்களின் நடிகர் அவர். அவரே அப்படித்தான் சொல்வார் என்றுதான் அறியப்படுகிறது.

யப்பா, எப்டிச் செய்யணும்னு சொல்லு …செய்துடறேன்…இதுதான் அவரின் வார்த்தைகள். இயக்குநர்கள் தங்கள் மனதில் எப்படியெல்லாம் ஒரு கதாபாத்திரத்தை நிறுத்தியிருந்தார்களோ அதற்கு முழுமையான, திருப்திகரமான, நிறைவான, அழகான, அற்புதமான, கலைவடிவம் கொடுத்தவர் நடிகர்திலகம். அந்தக் காலகட்டத்திற்கு எது பொருத்தமானதாய் இருந்ததோ அதை அவர் செய்தார். அவர் செய்ததை மற்றவர் செய்தபோது, அல்லது செய்ய முயன்றபோது காப்பி அடிக்கிறான்யா…இதெல்லாம் அவரு ஏற்கனவே செய்துட்டாரு… என்றுதான் கமென்ட் விழுந்தது. ஆக அவர் செய்தது முழுக்க முழுக்க அவருக்கு மட்டுமே பொருத்தமாய் இருந்தது என்பதுதான் உண்மை.

மிகை நடிப்பு, மெலோ ட்ராமா என்று சொன்னவர்களும் உண்டு. ஆனால் அந்தக் காலகட்டத்திற்கு (ஐம்பது அறுபதுகள் எழுபதுகளின் ஆரம்பம்) அதுதான் பொருந்தி வந்தது. அதுவும் அவருக்கு மட்டும்தான் பொருந்தி, பொருத்தமாய் அமைந்தது என்பதுவே சத்தியமான உண்மை. ஒரு கதாபாத்திரத்தை அதன் உச்சபட்ச மேன்மைக்குக் கொண்டு நிறுத்திவிட்டு, இனி இந்தக் கதாபாத்திரம் என்றால் அவரின் நினைப்பு மட்டுமே வருவதுபோல் செய்தது நடிகர்திலகம் மட்டும்தான் என்றால் அது மிகைக் கூற்று என்று யாராலும் சொல்ல இயலாது. அவரின் திரைப்படங்களுக்கான போஸ்டர்களே அதற்குச் சான்று. அந்தந்தப் போஸ்டர்களில் அவரின் முகத்தை மட்டுமே பார்த்துவிட்டு, அது எந்தப் படம் என்று சொல்லிவிடலாம். இந்தப் பெருமை வேறு யாருக்கும் உகந்ததாகாது.வேறு எந்த வகையிலும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு அவரின் நடிப்பில் இயக்குநர்களும், தயாரிப்பாளர்களும், ரசிகர்களும், பொதுமக்களும் சிறைப்பட்டுப் போனார்கள் என்பதுதான் இங்கே உணர வேண்டிய உண்மை. அவரை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனையை வளர்த்துக் கொண்டார்கள். தங்கள் திறமையை முன்னிறுத்திக் கொண்டார்கள். கலைநயம்மிக்க, கற்பனா சக்தி மிகுந்த, திரைவடிவத்தை அந்தக் காலத்திற்கேற்றாற்போல் வடிவமைக்கத் தெரிந்த திறமையான இயக்குநர்கள் அவருக்கு அமைந்தார்கள். அதனால் அவர் மேலும் மேலும் தன்னின் நடிப்புத் திறனை மெருகேற்றிக் கொள்ளவும், வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கவும், அவற்றின் மூலம் தன்னை ரசிகர்கள், பொதுமக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்ளவும் முடிந்தது.

மிகை நடிப்பு என்பதற்கான ஒரு நிகழ்வு இங்கே முன் வைக்கப்படுகிறது. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் தன் மனைவி இறந்துவிட்ட செய்தி அறிந்து எஸ்.பி., சௌத்ரி அவர்கள் வீட்டிற்கு வருவார். தள்ளாடியபடியே மாடிப்படியேறி மனைவியின் சடலத்தின் முன் நின்று கதறுவார். சில வரிகள் அவர் பேசும் அந்த நேர வசனம் பார்ப்பவர் மனதைப் பிழிந்தெடுக்கும். ஒரு சின்சியரான, நேர்மையான உயர்ந்த நோக்கங்களுள்ள ஒரு போலீஸ் அதிகாரிக்கு இப்படியான ஒரு சோகம் நிகழ்ந்துவிட்டதே என்று பார்வையாளர்கள் மனதை அந்தக் காட்சி கலங்கடித்து விடும். அந்த நேரத்தில் மனைவியின் சடலத்தின் முன் நின்று அவர் சோகமே உருவாய்க் கதறிப் பேசும் அந்த வசனங்களும், அப்படியே ஓகோகோ என்று கதறிக்கொண்டே மனைவியின் முன் விழுந்து அவர் அழும் அந்தக் காட்சியும் யாராலும் மறக்க இயலாது. ஆனால் இந்தக் காட்சி படு செயற்கை, எந்த மனிதன் இப்படி மனைவியின் சடலத்தின் முன் நின்று வசனம் பேசுகிறான், எவன் இப்படிக் கதறி அழுகின்றான், கொஞ்சங்கூட யதார்த்தமில்லாத காட்சி இது…சுத்த மெலோ ட்ராமா என்பதாக விமர்சனம் செய்யப்பட்டது.

விமர்சனம் செய்தவர் பத்திரிகையாளரும், நடிகருமான மதிப்பிற்குரிய திரு சோ அவர்கள். இப்படி அவர் சொன்னபோது, நீ எப்டி செய்யணும்ங்கிறே…இப்டித்தானே…என்று சொல்லியவாறே அந்தக் காட்சிக்கான யதார்த்த நடிப்பை உடனே நடிகர்திலகம் அவர்கள் செய்து காட்ட அந்த அமைதியான, கொஞ்சங்கூடச் செயற்கையில்லாத, படு யதார்த்தமான நடிப்பைப் பார்த்துவிட்டு அசந்து நின்று விட்டாராம் திரு சோ அவர்கள். உடனேவா ஒரு நடிகரால இப்படிச்செய்து காட்ட முடியும் என்று நான் அசந்து போனேன் என்கிறார் அவர்.

நம்ம ஜனங்களுக்கு இப்டிச் செய்தாத்தான் புரியும்யா…மனசுல பதியும்…அவுங்களுக்கு இப்டித்தான் பிடிக்கும்…அதத் தெரிஞ்சிக்கோ…என்றாராம் தன்னின் வழக்கமான நடிப்பு குறித்து.

இன்று பல நடிகர்கள் காமிராவின் க்ளோஸப் காட்சிகளில் எந்த உணர்ச்சியையும் காண்பிக்க முடியாமல், காங்க்ரீட் போல முகத்தை வைத்துக் கொண்டிருப்பதும், அல்லது சட்டென்று தலையைத் திருப்பி முகத்தை மறைத்துக் கொண்டு அழுவதுபோல செய்வதுவும், அல்லது எதற்கு வம்பு என்று காமிரா அதுவே அவர்கள் முகத்திலிருந்து நகர்ந்து விடுவதும், நாம் காணும் நடிப்புத்திறன்கள். இந்த மாதிரி எதையுமே செய்யாமல் எந்த பாவத்தையுமே வெளிப்படுத்தாமல் வந்து போகும் காட்சிகள்தான், அல்லது நின்று போகும் காட்சிகள்தான், சிறந்த நடிப்பு என்பதாக இன்று பார்க்கப்படுகிறது. படுயதார்த்தமான நடிப்பு என்பதாகவும் விமர்சிக்கப்பட்டு, கேடயங்களும் பரிசுகளும் வேறு கொடுக்கப்பட்டு விடுகிறது.

ஆனால் மாய்ந்து மாய்ந்து நடித்த, சரித்திரம் படைத்த அந்த மாபெரும் நடிகனை ஆத்மார்த்தமாக அடையாளம் கண்டு கொண்ட பொது ஜனம் தவிர வேறு எந்தப் பரிசுகள் அவர் வாழ்ந்த காலத்தில் அவரைத் தேடி வந்தன. மக்களின் அங்கீகாரம்தான் கடைசிவரை நிமிர்ந்து நின்றது அந்தப் பெரும் கலைஞனுக்கு.

பழைய திரைப்படமான பெற்றமனம் என்ற படத்தில் நடிகர்திலகம் ஏறக்குறைய அந்த வேடத்திலேதான் இருப்பார். அதாவது பெரியாரை அடையாளப்படுத்தும் விதமாக. அந்தத் திரைப்படத்திற்கான ஒரு கதாபாத்திரத்திற்குரிய வேடத்தில் தொண்டு கிழவனாகத் தோற்றம் தருவார். அதில் அவர் அமர்ந்தமேனிக்கு வாயை மூடிக்கொண்டு தாடையும் வாயும் அசைய அசையப் பேசுவதும், உடல் மெல்லக் குலுங்கச் சிரிப்பதுவும், அசலாகப் பெரியார் அவர்களை நமக்கு நினைவு படுத்தும்.

நடிகர்திலகத்தை வைத்து இயக்குநர்கள் தங்கள் கற்பனைக்கு வளம் சேர்த்து அவருக்கு ஏற்ற கதாபாத்திரங்களை உருவாக்கி அவர் திறமையை படத்துக்குப் படம் மெருகேற்றி வெளிக்கொணர்ந்தார்கள்.

இந்த அளவுக்கா ஒரு கலைஞனுக்கு நடிப்பதில் ஆசை இருக்கும் என்று நினைத்து பிரமிக்கும் அளவுக்கு அந்த இயக்குநர்களின் திறமைக்கு சான்றாக அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கும் அதி மேலாக அந்தக் கதாபாத்திரத்தை தன் மேம்பட்ட நடிப்புத் திறனால் பார்வையாளர்களின் கண்முன்னே கொண்டு நிறுத்தி தன்னை மேலும் மேலும் அக்கறையாக வளர்த்துக் கொண்டார் திரு சிவாஜி அவர்கள்.

உடன் நடிப்பவர்கள் நன்றாக நடித்தால்தான் தனக்கும் தடையின்றி நடிப்பு வரும் என்று வெளிப்படையாகச் சொன்ன நடிகர்திலகத்துடன் ஐம்பது, அறுபதுகளில் கைகோர்த்த ஜாம்பவான்கள் அநேகம்.

திரு எஸ்.வி.ரங்காராவ், திரு நாகையா, திரு எஸ்.வி.சுப்பையா, திரு எம்.என் நம்பியார், திரு பாலையா, திரு சகஸ்ரநாமம்,திரு டி.ஆர்.இராமச்சந்திரன், நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்கள், திரு சாரங்கபாணி, திரு வி.எஸ்.ராகவன், திரு பூர்ணம் விஸ்வநாதன் என்று இன்னும் பல முக்கியஸ்தர்களோடு இணைந்து அவர் பணியாற்றிய காலம் தமிழ்த்திரைப்படத்தின் பொற்காலம் என்று சொல்லலாம்.

அத்துடன் அவரோடு இணைந்து நடித்த கதாநாயகிகள், பத்மினி, வைஜயந்திமாலா, சரோஜாதேவி, சாவித்திரி, தேவிகா மற்றும் அம்மா நடிகைகளான எம்.வி.ராஜம்மா, கண்ணாம்பா, சி.கே.சரஸ்வதி, பண்டரிபாய், என்று இந்தப் பட்டியலும் நீளும்தான்.

இந்த நடிகர்களின் கூட்டணியில் வந்த பல தமிழ்த் திரைப்படங்கள் இன்றும் மறக்க இயலாதவை. ஒவ்வொருவரும் அந்தந்தத் திரைப்படங்களில் அந்தந்தப் பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள் என்பதுதான் உண்மை. தேர்ந்த அனுபவமும், முதிர்ச்சியான நடிப்பும், அழுத்தமான வசன உச்சரிப்பும், ஏற்ற இறக்கங்களுடே வெளிப்பட்ட கச்சிதமான பாவங்களும், பார்ப்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும் விதமாகத்தான் அமைந்தன. அய்யோ, இந்தக் காட்சி முடிந்து விட்டதே என்ற ஏக்கத்தைப் பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தி படம் முடிந்து வெளி வருகையில் இன்னொரு முறை எப்பொழுது பார்ப்போம் என்ற ஏக்கத்தை ஏற்படுத்தின. அதனால்தான் ஐம்பது, அறுபதுகளில் வந்த படங்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதிய மெருகுகுலையாத காப்பி என்று திரும்பத் திரும்ப வெளியிடப்பட்டபோது ரசிகர்களால் மீண்டும் மீண்டும் பார்த்து அனுபவிக்கப்பட்டது. சிவாஜி வாரம், என்று போட்டு தினசரி ஒரு படம் என்று வசூலை அள்ளிக் குவித்த காலங்கள் அவை. ஊருக்கு வெளியே டூரிங் டாக்கீசில் சிவாஜி படமா என்று அறிந்து ஓடி ஓடிப் போய்ப் பார்த்தார்கள். ஒரே காட்சியில் ஒரே டிக்கட்டில் மூன்று திரைப்படங்கள் என்று அந்தக் காலத்தில் போஸ்டர் ஒட்டினால் கையில் சப்பாத்தி, தோசை, சட்னி, சாம்பார் என்று அடுக்கிக் கொண்டு போய் உட்கார்ந்த தாய்மார்கள் கூட்டம். சொல்லப்போனால் ஐம்பது, அறுபதுகளில் வந்த திரைப்படங்களோடே அந்தக் காலகட்டத்தைச் சார்ந்தவர்களின் ஆழமான ரசனை ஐக்கியமாகிப்போனது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்களால் இன்றைய திரைப்படங்களைப் பார்க்கவே முடியவில்லை என்பதுதான் சத்தியமான உண்மை. வேறு வழியில்லாமல் ஒன்றிரண்டைப் பார்த்து வைக்கிறார்கள் என்பது வேறு. பொழுது போவதற்கான முக்கியமான சாதனமாயிற்றே அது. ஆனால் அந்த சக்தி வாய்ந்த ஆயுதம், சினிமா என்கிற ஊடகம் ஒரு காலத்தில் எத்தனை செம்மையாகச் செயல்பட்டது. சரியாகச் சொல்வதானால் இனி எல்லாமே வண்ணப்படங்கள்தான் என்று வர ஆரம்பித்த கால கட்டத்தில்தான் திரைப் படங்கள் படிப்படியாக மோசமாக ஆரம்பித்தன எனலாம். நடிகர்திலகத்தின் பல படங்களும் இந்த வரிசையில் சேரும்தான். அவரது படங்கள் பாதிக்குப் பாதி பாடாவதி என்கிற ரகம்தான். அவருக்கு அது தொழில். அதைச் செய்தார் அவர். நாம் அதில் குறைகாண முடியாது. ஆனால் அந்தக் காலகட்டத்திலும் தன்னைக் கடுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று அவர் ஒதுங்கவில்லையே! எந்த வேஷத்தையும் என்னால் செய்ய முடியும், மற்றவரைவிட முதல்தரமாய்ச் செய்து நிலை நிறுத்த முடியும் என்கிற நிலையில்தான் அவர் இருந்தார். கடைசிவரைத் தன் முதல்நிலையை விட்டு அவர் கீழே இறங்கவில்லை என்பதுதான் அவரது பெருமை. விட்டது தொட்டது என்று அவரைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறியது திரையுலகம்தான்.

திரைப்படங்கள் மனித வாழ்க்கையின் மேன்மைக்குப் பயன்பட்டது ஒரு காலம். ஒரு மனிதன் எப்படியெல்லாம் இருக்க வேண்டும், என்னென்ன சிறந்த குணங்களை உடையவனாக மிளிர வேண்டும், எப்படித் தன் வாழ்க்கையைச் சீர்பட அமைத்துக் கொள்ள வேண்டும், மேம்பட்டு உயர என்னெல்லாம் செய்ய வேண்டும், என்று கற்றுக் கொடுத்தன எழுபது வரையிலான (ஆரம்பம் வரை) திரைப்படங்கள். பிறகு அவைகள் படிப்படியாக மாறிப்போயின.

போதும் என்பதான மனநிலையை மெல்ல மெல்ல அந்த மூத்த தலைமுறையினரிடம் ஏற்படுத்திவிட்டன உண்மையும், நேர்மையும், ஒழுக்கமும், கட்டுப்பாடும் மிக்க வாழ்க்கை நெறி முறைகளை வரைமுறைப்படுத்தும் அந்தக் கால கறுப்பு, வெள்ளைத் திரைப்படங்கள் இன்றைய இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாய் அமைபவை. மதிப்பு மிக்க, காலத்தால் அழிந்து விடக் கூடாத விழுமியங்களை, நாம் எப்படிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று சொல்லித் தருபவை பழைய திரைப்படங்கள். அம்மாதிரித் திரைப்படங்களில் பல நடிகர்திலகத்தின் பெயர் சொல்லும் அழியாத காவியங்கள் ஆகும். அவர் ஏற்றுக்கொண்டு நடித்த பல கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனதில் நின்று நிலைப்பவை.

மொத்தம் 282 தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் நடிகர்திலகம் அவர்கள். இதுபோக உறிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்றும் நடித்திருக்கிறார். கௌரவப் பாத்திரங்களும் ஒன்றிரண்டு என்று ஏற்றிருக்கிறார். ஆனால் அவர் தமிழில் நடித்த பல திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை. நடிப்பு என்கிற கலைக்குள் நுழைபவர்கள் அவசியம் கற்றுக் கொள்ள அவரிடம் ஏராளமான பாடங்கள் உள்ளன. அந்த மாபெரும் கலைஞன் வேஷமிட்டு நடிக்காமல் போன சில பாத்திரங்களும் உள்ளனதான். சமீபத்தில் தினமணிக் கதிர் அந்தப் படங்களை வெளியிட்டிருந்தது. அதை இங்கே தருவதில் மனம் இங்கே மகிழ்ச்சி கொள்கிறது. யதார்த்த நடிப்பிலும் திலகமாகத் திகழ முடியும் என்பதற்கு தேவர் மகனில் அவர் ஏற்றுக் கொண்ட தேவர் பாத்திரம் ஒரு சான்று. முதல் மரியாதையிலும் அதை நிரூபித்த அவருக்கு என்றுமே முதல் மரியாதைதான். இந்தக் கட்டுரையை இத்தோடு முடிப்பதில் எனக்கு நிறைவில்லைதான். அவர் ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு காட்சியிலும் தன்னைத் திறம்பட ஸ்தாபித்த எத்தனையோ கதாபாத்திரங் களை அங்கம் அங்கமாக விஸ்தரித்து, அனுபவித்து எழுதி என் உயிரோடு ஒன்றிவிட்ட அந்த மாபெரும் கலைஞனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்பதே என் தீராத அவா. அது இத்தோடு நிற்காது. இன்னொரு சந்தர்ப்பத்தில் தொடரும்.

----------------------------------------------------

இணைப்புப் படம் – கீழே.

----------------------------- clip_image001----------------------------

clip_image003

22 ஜூன் 2015

இமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை

 

 

 

 

download 2015-06-22 11.21.46

 

உண்மையிலேயே ஒரு பொண்ணோட இருந்து அனுபவிச்சிருந்தாத்தான் இப்டி எழுத முடியும்னு சொல்றமாதிரி அத்தனை தத்ரூபமா எழுதியிருக்காரு இமையம் இந்த நெடுங்கதையை. அவர நேர்ல பார்க்கைல கூடக் கேட்கலாம்....இந்த அனுபவம் உண்மைச் சம்பவமா?ன்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க...? பார்த்தா தேவலையே...! ன்னு கேட்கணும்....

நெடுங்கதைல ஒரே ஒரு நெருடல்....கூடவே விநாயகம் இருக்கானே ஒழிய அவனை அவ நெருங்கவே விட்டதில்லன்னு ஆரம்பத்துலேர்ந்து முக்கால்வாசிக் கதைவரைக்கும் சொல்லப்படுது....கடைசிக் கொஞ்சப் பக்கங்கள்ல அவள அனுபவிச்ச நிலையை விநாயகம் நினைச்சு நினைச்சுப் பார்த்து வெறி கொள்ற மாதிரி கொண்டு போயிருக்கிறது..ஆழமாப் படிச்ச நம்மளைத் திகைக்க வைக்குது...தப்பாப் படிச்சிட்டமோ?..... இந்தச் சந்தேகத்தை இமையம்தான் தீர்த்து வைக்கணும்..

.“எங் கதெ” - நூறு பக்க அளவிலான அருமையான படைப்பு. ஆண் பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது இந் நெடுங்கதையில் என்று சொல்லப்படுது....ஒரு பரிமாணம்னு சொல்கைலயே அது சில காரெக்டர்கள் சார்ந்த விஷயம்ங்கிறது தெரியுதில்லியா? எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே? எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டயும் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே...! யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் அப்படியிருந்திருக்கலாம்னுதான் நினைக்கணும்...அப்படித்தான் நினைக்க முடியும்....அந்த வகைல இது உணர்ச்சிகரமான, படு அழுத்தமான படைப்புதான்...!

10 ஜூன் 2015

“‘எனக்கு நல்லா வேணும்”-சிறுகதை. 7.6.2015 தினமணிகதிர்.

 

 

11415341_10203081019224989_8235153776526115830_n

அநேகமாகக் கார் வாங்கும் என்னுடைய ஆசை வெறும் கேட்டோடு முடிந்து போனது என்று சொல்லலாம். யானை வாங்குவதற்கு முன் அங்குசம் வாங்கிய முதல் ஆள் நான்தான். அந்த அளவு ஆசை இருந்திச்சு அப்போ…! அதுல வந்த வினை…இப்போ…!

கேட்டின் இருபக்கமும் சுவற்றோடு தாங்கி நிற்கும் பக்கத்திற்கு இரண்டான கொண்டிகள் சிமின்ட் கான்கிரீட்டோடு நன்றாக இறுக வேண்டும் என்று, அடைத்து வைத்த முதல் நாளிலிருந்து இன்றுவரை அந்த கேட் திறக்கப்படவேயில்லை. தேவையிருந்தால்தானே? இப்பொழுது திறந்தால் நிற்குமா அல்லது பிடுங்கிக் கொண்டு வருமா என்பதைத் திறந்து பார்த்துத்தான் உறுதி செய்ய வேண்டும். கர்ர்ர்ர்…..ட்ட்ட்ட்டடடடட……என்று பழைய சினிமாவில் மலைக்குகை வாசல் திறப்பது போல் எனக்குள் பிரமை.

சரியாகப் பதின்மூன்றடி இடத்துக்குள் ஒரு சிறு மாருதியாவது வாங்கி நிப்பாட்டிவிட வேண்டும் என்பது என் லட்சியம். அவ்வளவுதான் இடமும் என்பதால் அதற்கேற்றாற்போல் மனதில் ஆசை உதித்தது.

இன்று அந்த ஆசை இரும்பு கேட்டோடு நின்றுவிட்டது. கேட் போட்டு வருஷம் நாலாச்சு. ஆறின கஞ்சி பழங்கஞ்சி. விருப்பம் வடிந்து போனது. என்னத்த கார…என்னத்த வாங்கி…. கெடக்கட்டும்…பார்க்கலாம்….

சேர்ந்து போலாம் சார்…நானும் வரேன்….என்ற நண்பர் ராமசாமியும் என்ன காரணத்தினாலோ நா வரலை சார்…நீங்க வேண்னா போயிட்டு வாங்க…என்றுவிட்டார் ஒருநாள். மனைவியின் நச்சரிப்புத் தாங்காமல்தான் டிரைவிங் போவோம் என்றார். சரி, ஒரு துணை கிடைத்ததே என்று நானும் இருந்தேன். நாள் தள்ளுகிறதே, மனதில் பயமிருக்குமோ என்று எண்ணி நானும் சும்மாக் கிடக்க, இப்போது எனக்கும் பயம் தொற்றிக் கொண்டது. இதுநாள் வரை தயக்கமாய் இருந்தது, பயம்தான் என்று இப்போது உறுதிப்படுகிறது.

இனிமே டிரைவிங் பழகி, லைசென்ஸ் எடுத்து, டவுனுக்குள்ள ஓட்டவா…? இத்தனைக்கும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாய் இந்த விரிந்து பரந்த நகரத்தில் டூவீலரில் பறப்பவன் நான். ஒரு முறை கூட ஒரு சிறு விபத்து என்று நிகழ்ந்ததில்லை. அதாவது நான் போய் எவனிடமும் முட்டியதில்லை.. அதுவும் இதுவும் ஒண்ணாயிடுமா?

டூ வீலர விட கார்தான் சார் ஈஸி….சேஃப்டியும் கூட…எனக்கு டூ வீலர் ஓட்டத் தெரியாது…கியர் வண்டியச் சொல்றேன்….என்றுவிட்டு இன்றுவரை மொபெட் ஓட்டிக் கொண்டிருக்கிறார் எதிர் வீட்டு நண்பர். என் தோரணைக்கு கார்தான் சார் கரெக்ட் என்று உசுப்பேற்றி விட்டார். அவர் வைத்திருப்பது ஒரு செகன்ட் உறான்ட் ஃபியட். குழந்தையாய்ப் பராமரிக்கிறார். அம்புட்டுச் செல்லம் அது. புத்தம் புது ஏ.சி. கார். கூட அப்படியிருக்காது.

சொல்றவன் சொல்லத்தான் செய்வான்…உனக்கெங்க போச்சு புத்தி…..!

நான் ஆக்ஸிடென்ட் பண்ணியதில்லையே ஒழிய, கார் வந்து இடித்த அனுபவம் உண்டு. நாம சரியா இருந்தாலும், எதிராளியும் அப்டியிருக்கணுமே…?

பிள்ளையார்பட்டி போய் திரும்பிக் கொண்டிருந்த ஒரு அம்பாசிடர்காரன், தொடர்ந்த ஓய்வில்லாத டிரைவிங்கோ என்னவோ தூக்கக் கலக்கத்தில் ஸ்டியரிங்கை விட்டதனால் என் மீது வந்து இடித்தான். அது நான் சேடக் ஸ்கூட்டர் வைத்திருந்த நேரம். வலது காலை இடது பக்கம் விலக்கி வண்டியைப் போட்டுவிட்டு ஓடியே போய்விட்டேன். அடிச்ச அடியில் வண்டியின் பாகங்கள் டார் டாராய்…பக்கத்திற்கொன்றாய்……

அன்று படு உஷார் நான்…அதனால் தப்பினேன்.

ராஜேந்திரன்….வண்டிக்காரன் நம்மள நோக்கித் தப்பா வர்றான். குதிச்சு ஓடிடுங்க…என்று பின்னால் உட்கார்ந்திருந்த நண்பரை எச்சரிக்க, அதே சமயம் நானும் கணத்தில் சுதாரிக்க மயிரிழையில் தப்பித்தோம் இருவரும்….என்றும் வராதவர் அன்று பின்னால் வர நடந்து போன விபரீதத்தைப் பாருங்கள். சில எதிர்பாராத சம்பவங்கள் மனிதர்களை எங்கெங்கோ கொண்டு நிறுத்தி விடும். இப்டியெல்லாம் நடக்கும்னு யாரு நினைச்சா? என்று சொல்லிக் கொண்டு பிற்பாடு தலையைச் சொரிவதில்லையா? இன்று பார்த்தாலும் நண்பர் அதைத்தான் முதலில் நினைவுகூறுவார். என்னைக்குமில்லாம நீங்க பின்னாடி உட்கார்ந்த கெரகம்தான்னு நான் சொல்ல முடியுமா…?

என்னா சார்….வண்டி இப்டிப் பார்ட் பார்ட்டா பக்கத்துக்கொண்ணாக் கிடக்கு….நீங்க பொட்டு அடி இல்லாம முழுசா நிக்கிறீங்க….ரொம்ப ஆச்சரியம்…அதிர்ஷ்டக்காரர் சார் நீங்க.. – பார்த்தவர்கள் பிரமித்தார்கள்…..நான் என் மனைவியை நினைத்துக் கொண்டேன். எல்லாம் அவள் தாலி பாக்கியம்….! அவருக்கு?

கண்ணுக்கு முன்னால் ஒரு கட்டு நோட்டை எடுத்து கத்தையாய்க் கொடுக்க அதை அந்தப் போலீஸ் வாங்க, பறந்து விட்டான் கார்க்காரன். என்ன ஒரு அருமையான இம்மீடியட் டீல்….! மாட்டிக் கொண்டது நாங்கள். எப்பவுமே அப்பாவி சப்பாவிதான மாட்டுவான்…அன்று என்னிடம் இன்ஸ்யூரன்ஸ் வேறு இல்லை. கடைசி நாள் லேப்ஸ் ஆகி இரண்டு தினங்கள் கடந்திருந்தன. அப்பன் குதிருக்குள்ள இல்லை என்று சொல்லாமல் வாய் மூடி மௌனியானேன். .

ஏன் சார்….ஒரு ஃபோன் அடிக்க மாட்டீங்களா….பறந்து வந்திருப்பனே இப்டியா ஆள விடுவீங்க….வண்டி நம்பராச்சும் குறிச்சீங்களா…? என்றார் ஒர்க் ஷாப் நண்பர் உறமீது. அழைத்திருந்தால் நிச்சயம் ஏதாச்சும் நிவாரணம் தேடும் தில் அவருக்கு உண்டுதான். நமக்குத்தான் நம் பக்க நியாயம் உறுத்துகிறதே…!

என்னவோ விட்டுவிட்டார் எங்களை அந்த எஸ்.ஐ. வண்டிச் செலவே இவங்களுக்குச் சரியா இருக்கும் என்று கணக்குப் பண்ணிட்டாரோ என்னவோ….கல்லுக்குள் ஈரம். அல்லது அதான் காசு பார்த்தாச்சே…. என்றும் இருக்கலாம். எங்களிடமும் பிடுங்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? அதுதான் ஆச்சர்யம். இருப்பவனிடம் பிடுங்கிக்கொண்டு, இல்லாதவனை விட்டுவிடும் கொள்கையோ என்னவோ? தப்புச் செய்வது தெரிந்து செய்வது….

ரிப்பேர் பார்த்து அதே வண்டியைப் பழையபடி கொஞ்ச காலத்திற்கு ஓட்டிக் கொண்டுதான் அலைந்தேன். ஆக்ஸிடென்ட் ஆன வண்டிய வச்சுக்காதீங்க சார்…என்றார்கள் பலரும். தீட்டுப் போல் பார்த்தார்கள். முன்னாடி கருப்புக்கயிறு கட்டாத குறைதான்.

அவன் வந்து மோதினா அதுக்கு நானென்னய்யா பண்ணுவேன்…எதுக்கு வண்டிய மாத்தச் சொல்றீங்க….?

வாணாம் சார்…சொன்னாக் கேளுங்க….பட்டகால்லயே படும்னு கேள்விப்பட்டதில்லையா?

அடப்பாவிகளா…திரும்பவும் விபத்து நடக்கும்ங்கிறீங்களா? சொல்லுங்கடா வாய்விட்டு….

என்னய்யா சென்டிமென்ட் இது? நீங்களும் ஒங்க சென்டிமென்டும்…? தூக்கி ஒடப்புல போடுங்கய்யா…என்றவன், எதுக்கு வம்பு என்று கொஞ்ச நாளில் போன விலைக்குத் தள்ளிவிட்டு விட்டேன்.. புதுசோ, பழசோ…கைமாறினால் மாத்து கம்மிதான்.

குடும்பங்களில், நடைமுறைகளில் இந்த சென்டிமென்ட் வகையறாக்கள் இல்லையென்றால் மனிதன் எவ்வளவோ நிம்மதியாய் இருக்கலாம்….பாதி சண்டை இவைகளால்தான். பெரிய்ய்ய்ய கச்சடா விவகாரம்…

எனக்கு இந்த வண்டில உக்காரவே பிடிக்கல…. பயம்ம்மா இருக்கு….என்னவாது நடந்திருமோன்னுட்டு…-பேய் வண்டி போலப் பார்த்தாள்….!

மனுசன நிம்மதியா இருக்கவிட்டாத்தான…? அப்புறந்தான் கார் ஆசை….

புதுஸ்ஸா கேட்டைக் கட்டித் தூக்கி நிறுத்தி, இப்டி அடுத்தவங்களுக்கா அள்ளிக் கொடுப்பீங்க….? உங்கள மாதிரி அசடு யாருமில்ல…! .ஒரு வார்த்தை ஏங்கிட்டக் கேட்க மாட்டீங்களா? என்னவோ பெரிய தர்மப் பிரபுன்னு நினைப்பு மனசுல….

விஷயம் எங்க வந்து நிக்குது பாருங்க?

இருந்தா என்ன, பேசாம இரு…..! சும்மாக் கெடக்குறதுக்கு அவுங்களுக்காவது பயன்படட்டும்…

என்னத்த பேசாம இரு? என்னை மதிச்சிருந்தா ஒரு பேச்சு கேட்கத் தோணியிருக்காதா? ராஜ பாட்டையா இப்டித் திறந்து விட்டுட்டீங்களே…அந்த ஷெட்டுல நம்ம சொந்த வண்டிய நிறுத்தி அழகு பார்க்கணும்னு இருந்தேன்…அடுத்தவங்க வண்டியக் கொண்டுவந்து அடைக்கிறதுக்கா கட்டி வச்சிருக்கு? மாடு அடைக்கிற பட்டியா இது? இப்போ நீங்க உங்க டூவீலர எங்க கொண்டு நிறுத்துவீங்களாம்…? மிகச் சரியாய்க் கொக்கியைப் போட்டாள்.

சுசீலா இப்படிக் கேட்க, முழித்துப் போனேன் நான். அதுவரையில் மூளையில் தோன்றவேயில்லை எனக்கு. மூடிய கார் கேட்டுக்குப் பக்கத்தில் வீட்டின் நுழைவாயில் சின்ன கேட். அது வழியே அசால்ட்டாய் வண்டியை உள்ளே நுழைத்து, அகன்ற பகுதியில் வசதியாய் இஷ்டம்போல் நிறுத்திக் கொண்டிருந்தேன். இப்போது எதிர்த்த வீட்டுக் காருக்கு விட்டாயிற்றா….துளி இடமில்லை…..மாடிக்குப் போவதானால் கூட இண்டு இடுக்கில் நம்மைச் சுருக்கிக் கொண்டுதான் போயாக வேண்டும். கார் நிற்கும் அழகு ஐஸ்வர்யம் பொங்கி வழிவது போலிருந்தது. மூணாமத்தவன் பார்த்தால் அப்டித்தான் நெனைப்பான். ஆனா நம்ம காரில்லையே…! பீத்தப் பெருமை எதற்கு?

பேசாம ரோட்டுல நிறுத்துங்க…அதுதான் உங்களுக்குச் சரி….ஆறெல்லாம் தண்ணியா ஓடினாலும் நாய்க்கு நக்கித்தான குடிக்கணும்? சமயம் பார்த்துப் பொட்டில் அடித்தாள் சகதர்மிணி. எதுலடா இவன் மாட்டுவான் என்று காத்திருந்தது போலிருந்தது.

சார்…ஒரு சின்ன ஆப்லிகேஷன்….கொஞ்ச நாளைக்கு….நீங்க வண்டி வாங்குறவரைக்கும்தான்….என் காரக் கொஞ்சம் உங்க ஷெட்டுல நிறுத்திக்கட்டுமா?

ஓ…தாராளமா….!! சும்மாத்தானே கெடக்கு….நல்லா நிறுத்திக்கோ…இதுக்கு எதுக்குத் தயங்குறே…?

அப்பாடீ…எம்புட்டுத் தாராள மனசு…!.எனக்கே ஆச்சரியம்தான் – வாழ்க்கையில் எப்பொழுது எதைத்தான் யோசித்திருக்கிறேன் நான்? எல்லாத்துக்கும் உடனுக்குடன் பதில் உண்டு என்னிடம். ஏற்கனவே முன் முடிவுகளோடு இருப்பவன்போல். அது நல்லதோ, கெட்டதோ….அதெல்லாம் தெரியாது….கல்யாணம் ஆகி குழந்தை குட்டி ஆகிவிட்டால் எல்லா முதிர்ச்சியும் வந்து கூடிவிட்டது என்று அர்த்தமா? மனித மனம் முதிர்ச்சி அடைவது என்கிற கதையே வேறு. அதற்கு ரொம்ப அனுபவம் வேண்டும். வாழ்வியல் அனுபவங்கள்தான் மனிதனை வடிவமைக்கின்றன. ஒரு சின்ன விஷயத்தில் கூட பெரும்பாலானவர்களுக்கு அறுபது, எழுபதுவரை என்றும் சொல்லலாம்…பாந்தமாய்ப் பேச, செய்யத் தெரியாது.

என்னாடாது…சுத்த சின்னப்பிள்ளத்தனமா இருக்கு…. – வடிவேலுவின் கேலி என்னைக் கிண்டல் செய்தது.

“நீங்க வண்டி வாங்குறவரைக்கும்னானே, கவனித்தீர்களா? நான் நிச்சயம் வாங்கப் போவதில்லை என்று உணர்ந்து கொண்டிருப்பானோ? இந்தக் காலத்துப் பசங்க புத்திசாலிகளாச்சே…!

வருஷத்துக்கு இருபதாயிரத்துக்குக் குறையாம இன்ஸ்யூரன்ஸூக்கு அழணும்… வண்டிய வெறுமே நிறுத்தி வைக்கப்படாது. தினசரி கொஞ்ச தூரமாச்சும் ஓட்டணும்…இல்லன்னா பேட்டரி வீக்காயிடும்….வண்டி எப்பயும் மூவ்மென்ட்லயே இருக்கணும்…அப்பத்தான் நல்லது….லிட்டருக்கு அதிகபட்சமா பன்னெண்டு, இல்லாட்டி பதினஞ்சு….அம்புட்டுத்தான்…இங்கருக்கிற கோயிலுக்குப் போயிட்டு வர்றதானாக்கூட குறைஞ்சது அஞ்சு லிட்டராச்சும் போட்டுத்தான் வண்டிய எடுக்க முடியும்….அதுதான் சேஃப்டி. ரிசர்வ் வேறே இருக்குது….அதையும் கணக்குப் பண்ணிக்கணும்….அதுபாட்டுக்கு நடுவழில நின்னிடுச்சின்னா…? அதெல்லாம் கெடக்கட்டும்…என்னத்தவோ பெட்ரோலப் போடுறோம்…வண்டிய எடுக்கிறோம்னே வைங்க…கோயிலுக்குப் பக்கத்துல வண்டிய எங்க பார்க் பண்ணுவீங்க…முதல்ல அத டிசைட் பண்ணிக்குங்க….அங்க போயிட்டு எங்கிட்டுப் போகலாம்…எப்டித் திருப்பலாம்னு நோங்கித் தயங்கிட்டு நிற்கக் கூடாது….சார்ஜன்ட் வண்டியத் தூக்கிடுவான்….க்ரேன் வேன் ரெடியா நின்னுட்டிருக்கும்…மனசுல வச்சிக்குங்க….சிட்டிக்குள்ள போயிட்டு மீள்றதுங்கிறது சாதாரணமில்ல இன்னைய தேதிக்கு….

நான் மௌன சாமியாராகி வெகு நேரமாகியிருந்தது.

என்னத்துக்கு இப்பக் காரு…? ஒரு கால் டாக்ஸியப் பிடிச்சா ஆச்சு…எத்தனையோ இருக்கு…தெனமும்தான் வீட்டு வாசல்ல நோட்டீச எறிஞ்சிட்டுப் போறானே…ஒரு .ஃபோன் போட்டா அடுத்த நிமிஷம் வந்து நிப்பான்….கார்ல போகுற ஆசய அதுல தீர்த்துக்க வேண்டிதானே…! நாம என்ன பிஸ்னஸ்மேனா, கார் வச்சிக்கிறதுக்கு? தெனமும் பணம் புரள்றவங்களுக்குத்தான் அது லாயக்கு….நாம அதுக்குத் தீனி போட்டு மாளாதாக்கும்…உங்களுக்கு ஓட்டவும் தெரியாது….இம்புட்டு வயசுக்கு மேல கத்துக்கிட்டு, எங்கயாவது போய் முட்டி வைக்கவா? நா வரலப்பா….

நீட்டி முழக்கி சுசீலா சொன்னதில் ரொம்பவும் கழன்று போனேன் நான்.

ஏண்டீ….அப்போ கேட் வைக்கைல எதுக்கு பார்த்திட்டு சும்மாயிருந்த…அப்பயே சொல்லியிருக்கலாமுல்ல…எவ்வளவு செலவு மிச்சம்…?

அந்த நேரம் எனக்கும்தான் ஆசையிருந்திச்சு….ஏன் இருக்கக் கூடாதா? நம்ம பையன் கார் வாங்க மாட்டானா? மெட்ராஸ்லேர்ந்து இங்க கொண்டாரப்போ, நிறுத்த வசதியாயிருக்கும்தானே…அதுக்காகச் சொன்னேன்…

இங்க கொண்டாந்து நிப்பாட்டிட்டு அவன் போயிடுவான்….அதுபாட்டுக்கு வச்சமேனிக்கு அசையாம நிக்கும்….தூசி, புழுதி ஏறாம நாந்தான் கெடந்து அதைத் துடைச்சுப் பராமரிக்கணும். இல்லன்னா வர்றப்ப சடைச்சுக்குவான். என்னைக்காவது அவன் வர்றைலதானே எடுக்க முடியும்? மாசா மாசமா வர்றான்…? மூணு மாசத்துக்கொருதரம், தவறினா நாலுன்னு…ரெண்டு நாளைக்கு லீவுல வர்றான்…அதுக்கு இது தேவையா? அந்தக் காசை எதாச்சும் ஃபிக்சட் டெபாசிட்ல போட்டாலும் பிரயோஜனம்…என் பேர்ல சீனியர் சிட்டிசன் வட்டியாச்சும் வரும். நான் கத்துக்கறேன்னாலும் கேட்க மாட்டேங்கறே…உனக்கு நம்பிக்கை வர மாட்டேங்குது…பிடிவாதமாக் கத்துண்டாலும், நீ உட்காருவியோ மாட்டியோ…நான் மட்டும் போய் செத்து வைக்கிறதுக்கா? போறதோ போறோம்…ரெண்டு பேரும் ஒரேயடியாப் போய்ச் சேர்ந்தாலும்…பையனாச்சும் நிம்மதியாயிருப்பான்…

அய்யோ, ராமா….நல்லதே பேசுங்களேன்…எதுக்கு இப்படி அபத்தமா? என்னமோ தோணியாச்சு…வச்சாச்சு….இப்ப அது எதுக்கு? கார் இல்லாட்டி என்ன…உள்ளே புழங்குறதுக்கு எடம் விசாலமா இருக்குல்ல…ராத்திரி ஒரு சேரைப் போட்டுட்டுக் காத்தாட உட்காரலாமில்ல…சுதாரிப்பா மேலே கொக்கி போட்ருக்கோம். ஊஞ்சல் போட்டு ஆடலாமுல்ல…கார் வாங்கறோம்…வாங்கல…அது நம்ம இஷ்டம்… இப்டி எடத்தை அடைக்கிற மாதிரி வலியக் கஷ்டத்த வரவழைச்சி யாராவது அனுபவிப்பாங்களா? அந்த ஸ்பேஸ்ல துணி உலர்த்த கொடி கட்டியிருந்தீங்களே ஒரு மைலுக்கு…? இப்போ நான் எங்க கொண்டு போய் என் புடவை துணிமணிகளை உலர்த்தறதாம்? வீட்டுக் காம்பவுன்டுக்குள்ள அதுபாட்டுக்குக் காய்ஞ்சிட்டிருந்தது…ராத்திரிக் கூட எடுக்க மாட்டேன்….க்ளிப்பப் போட்டுவிட்டா அக்கடான்னு தொங்கிட்டிருக்கும்…என் வசதி போல வச்சிப்பேன், உருவிப்பேன்…இப்ப எல்லாம் போச்சு…..எதையாச்சும் அச்சுப் பிச்சுன்னு செய்து வைக்கிறதே உங்களுக்கு வேலையாப் போச்சு…உங்களோட சேர்ந்து நானும் படவேண்டிர்க்கு…பாரத்த கர்மம்….

இவள் பேசுவதைப் பார்த்தால் ராத்திரித் தூக்கம் போய்விடும் போலிருந்தது எனக்கு. என்ன தர்ம சங்கடம் இது? ஒருத்தருக்கு நல்லது செய்யப்போய் அதனால் இப்படியுமா கேடு விளையும்? இது நாள் வரை அந்த எதிர்வீட்டுக்காரப் பையனின் கார் ரோட்டில்தான் நின்றது. அகஸ்மாத்தாய் கவனமின்றி கொஞ்சம் ஒதுக்கி நிறுத்தத் தவறினாலும் கூட, நடு ராத்திரிக்கு மேல் வரும் மணல் லாரிக்காரன் கூட காது கிழிவதுபோல் ஏர்உறாரனை அலறவிட்டு அத்தனை பேர் தூக்கத்தையும் கெடுத்தான். அங்கங்கே நடக்கும் கட்டட வேலைகளுக்கு எங்கள் தெரு வழியாய்த்தான் செங்கல், ஜல்லிகள், மணல், சிமின்ட் மூடைகள் இத்யாதி என்று சென்று கொண்டிருந்தன. மற்ற எல்லாத் தெருக்களுக்கும் லிங்க் ரோடு எங்கள் வீதிதான். ஒரே புழுதிமயம்தான். எந்நேரமும் போக்குவரத்து இருந்தமணியம்தான். ஆனால் அதுவே யார் வந்தது போனது என்று அறிய முடியாத நிலையும்.

எதுறா சாக்கு என்று கண்ணில் விளக்கெண்ணெய் விட்டுக் காத்திருந்தான் போலிருக்கிறது. கொஞ்ச நாளாவே யோசித்திருப்பான் போலிருக்கிறது. கேட்டேவிட்டான் என் மகன் வயசு. மரியாதையான பையன். கேட்டதும், இல்லை என்று மறுக்க மனசு வரவில்லை, நான் என்ன செய்ய? அவன் அப்பாவோ, அம்மாவோ வந்து கேட்கவில்லை. அது சரியல்ல என்ற எண்ணமிருந்திருக்கலாம். பையனே கேட்கட்டும், அமைந்தால் அமையட்டும் என்று விட்டிருக்கலாம்….எங்களுக்குத் தெரியாது என்பதுபோல் இருப்பதும் ஒரு சாமர்த்தியம்தானே…! சும்மாத்தானே கெடக்கு…எல்லாம் கொடுப்பாங்க…போய்க் கேளு…என்று உசுப்பி விட்டிருக்கலாம்.

இப்போது என்பாடு திண்டாட்டமாய்ப் போயிற்று. என் யமஉறாவை நான் எங்கே நிறுத்துவது? அதுதான் ரோட்டில் நிறுத்தச் சொல்கிறாளே இவள்…! நிறுத்தினால் கண்டிப்பாய் மறுநாள் வண்டி இருக்காது….மணல் லாரியில் அல்லது ஏதேனும் சின்ன வேனில் வண்டி திருப்பூர் தாண்டிப் போய்விடும்….எங்கள் பகுதியில் திருடு போன டூவிலர்கள் சில அங்குதான் கிடைத்தன. முன்னூறு, நானூறு மைல் தள்ளி விற்றால்தானே சந்தேகமின்றி ஈஸியாய்க் காசு பார்க்க முடியும்? கள்ளன் பெரிசா…காப்பான் பெரிசா….?

சார்…திரும்பத் திரும்ப உங்களத்தான் சங்கடப் படுத்த வேண்டிர்க்கு. ராத்திரி உங்களை டிஸ்டர்ப் பண்றது அவ்வளவு நல்லாயிருக்காது…இத்தன நாள் உள்ளே பூட்டிட்டிருந்தீங்க…இப்போதான் வண்டி வந்திருச்சே…நா வெளிலயே பூட்டிக்கிறேன்… அப்பத்தான் காலைல எடுக்கைல உங்க தூக்கத்தக் கெடுக்காம, தொந்தரவு பண்ணாம இருக்க முடியும்….நாம்பாட்டுக்கு வண்டிய சைலன்டா வெளில எடுத்திட்டு, பாதுகாப்பா திரும்பக் கேட்டைப் பூட்டிட்டுப் போயிடுவேன்…அதுதான் உங்களுக்கும் நல்லதுன்னு நினைக்கிறேன்…உங்க பூட்டுச் சாவிய நீங்களே வச்சிக்குங்க…வேறே எங்கயாச்சும் பூட்டிக்கலாம்ல…நான் புதுசு வாங்கிக்கிறேன்….

என்னவோ எனக்கு வசதி செய்து தருவது போலவும், ரொம்பவும் பொறுப்பானவன் போலவும், கச்சிதமாய்ப் பேசிக் கொண்டே போனான். ஏறக்குறைய ஆண்டு அனுபவிப்பதற்குத் தயாராகிவிட்டவன் போலிருந்தது. வெறும் பூட்டுச் சாவிதான் மிச்சம் எனக்கு. அடுத்தாற்போல் அந்தப் பெரிய கேட்டைத் திறக்க வேண்டுமானால் நான் அவனிடம்போய் சாவிக்கு நிற்க வேண்டும். பொறுப்பு விட்டது. அது ஒன்றுதான் கிடைத்த பலன்.

அன்று பல காரியமாய் வெளியே போய்விட்டுச் சற்றுத் தாமதமாய் நான் வீடு வந்த போது சுசீலா சொன்னாள்.

அந்தப் பையனோட அம்மாட்டச் சொல்லியிருக்கேன்….அவுங்க வீட்டுக் காம்பவுன்ட்டுக்குள்ள வண்டியக் கொண்டு போய் நிறுத்தி ஞாபகமாப் பூட்டிட்டு வாங்க…..இனிமே அதுதான் இடம்…..- கண்டிப்பாய்ச் சொல்லிவிட்டு மறு பேச்சுக்கு நில்லாமல் வேலையைப் பார்க்க உள்ளே போய் விட்டாள்.

அதானே பார்த்தேன்….சும்மாயிருக்க மாட்டாளே….பதிலுக்கு பதில் எதாச்சும் செய்யாட்டா மனசு ஆறாதே….! என்று நினைத்தவாறே எதிர்வீட்டுச்சாரிக்கு வண்டியை உருட்டினேன். கொஞ்சம் ஒடுக்கமான நுழைவாயில்தான். கவனமாய்த்தான் வண்டியை உள்ளே நுழைக்க வேண்டும். திருடுபவனுக்குக் கூட வண்டியைச் செந்தூக்காகத் தூக்கி வெளியில் நிற்கும் ஆளிடம் கொடுத்தால்தான் முடியும். இல்லையென்றால் திருட்டுத் தொழில் வெறுத்துப் போகும். ஏறக்குறைய வெட்ட வெளியில் நிற்பது போலத்தான். வீதியில் செல்வோருக்குப் பார்வையில் நன்றாய்ப் படுமே…! திருடு…என்று தூண்டுமே…! இனி இதற்கென்று அதற்கு ஒரு கவர் வாங்கிச் சாத்தி மூட வேண்டும். அதெல்லாம் கூடச் செய்துவிடலாம்தான். இவையெல்லாவற்றையும் மீறி இந்த நினைப்பில்லாமல் இரவில் நான் நிம்மதியாய்த் தூங்க வேண்டும். வண்டி வெளில இருக்கே…வெளில இருக்கே…என்று நினைத்துக் கொண்டிருந்தால்…பொழுது தானாய் விடிந்து போகும். அப்படி நிறுத்தியிருந்த சில வண்டிகள்தானே ஏற்கனவே சில வீடுகளில் திருடு போனவை…..இத்தனை நாள் இல்லாத புதிய பயம் ஒட்டிக்கொண்டது என்னிடம்.

இப்படி அநாவசியத்துக்கு நிம்மதியைக் கெடுத்துக்கொண்ட மனிதர்கள் எவரையேனும் நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? இதற்கு வயசெல்லாம் கணக்கில்லை. எந்த நேரமும் இப்படியான துன்பங்கள் வர சாத்தியம். இதற்குப் பெயர்தான் வருத்திக்கூட்டி அனுபவிப்பது என்பது…! முணுக் முணுக்கென்று செய்துவிட்டு, பிறகு கிடந்து திண்டாடுவது…!

சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த வீட்டு அம்மாள் என்னைப் பார்த்துச் சொன்னார்கள்.

ராத்திரி சித்தச் சீக்கிரமே, பொழுதோட வண்டியக் கொண்டு வந்து வச்சிடுங்க….ஏன்னா எங்க வீட்ல, வழக்கமா ஒன்பது மணிக்கெல்லாம் கேட்டைப் பூட்டிட்டு லைட்டை அணைச்சிட்டுப் படுத்திடுவோம்…சரியா.!!!

யாரோ சவுக்கைக் கொண்டு முதுகில் விளிச்சென்று வாரியது போலிருந்தது எனக்கு.

--------------------------------------------

“மதுரைச் சிறுகதைகள்” – தொகுப்பு ஆ.பூமிச்செல்வம், மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் – வெளியீடு அன்னம் பதிப்பகம், தஞ்சாவூர்.

 

 

 

2015-06-10 13.22.02

ஏப்ரல் 2015 வெளியீடு. .இதில் உள்ள கதைகள்..........

1. சத்யாக்ரகி – சி சு செல்லப்பா
2. மடித்தாள் பட்டி – பி எஸ் ராமையா
3. சம்பாத்யம் – ஜி நாகராஜன்
4. தேன் கலந்த நீர் – காஸ்யபன்
5. வண்டி ஓட வேண்டாமா ? – கர்ணன்
6. பரிணாமம் – கோபி கிருஷ்ணன்
7. புன்கணீர் பூசல் தரும் – செண்பகம் ராமசாமி
8. கல்வெட்டு – ரோஜாகுமார்
9. புழுக்கம் – உஷாதீபன்
10. போதை – முருகேச பாண்டியன்
11. மொய் – அர்ஷியா
12. வைகை பெருகி வர – எம் ஏ சுசீலா
13. மேஷ புராணம் – யுவன் சந்திரசேகர்
14. மூன்றாம் சுமை –எம் எஸ் கல்யாணசுந்தரம்
15. கடந்த காற்று – ஷாஜஹான்
16. புகை – பா வெங்கடேசன்
17. காதுகள் உள்ளவன் கேட்கக் கடவன் – விஜய மகேந்திரன்
18. கலைடாஸ்கோப் மனிதர்கள் – கார்த்திகைப் பாண்டியன்
19. சுப்பு – லக்ஷ்மி சரவணக்குமார்
20. கடுந்துயரம் – எஸ் செந்தில் குமார்
21. பொன்னகரம் – புதுமைப்பித்தன்
22. நகரம் – சுஜாதா
23. கனவுப்பறவை – சொல்விளங்கும் பெருமாள்
24. 360 பாகையில் சுழலும் இளவரசி இனிப்பக சந்திப்பு – சமயவேல்
25. அந்த மனிதர்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்
26. நகர்வு – பா திருச்செந்தாழை
27. மதுரைக்கு வந்த ஒப்பனைக்காரன் – கோணங்கி

Ushadeepan Sruthi Ramani's photo.

26 மே 2015

நவீன விருட்சம் இலக்கிய இதழில் (97-வது இதழ்)எனது “விபத்தில் சிதைந்த காதல் கதை” சிறுகதை. (காலாண்டு இதழ்-மே 2015)

 

 

download 2015-05-25 14.30.04 2015-05-25 14.30.30

 

 

2015-05-25 15.12.26

 

 

 

 

 

அழகிய சிங்கரின் “நவீன விருட்சம்” (97-வது)(மே 2015) இலக்கிய இதழில் எனது ”விபத்தில் சிதைந்த காதல் கதை” சிறுகதை.
இக்கதை இந்த இதழில், அதுவும் அழகிய சிங்கரின் தேர்வில் வெளிவந்ததில் நான் பெருமைப்படுகிறேன். ஏற்கனவே எனது வேறு சில கதைகளை இதுபோல் தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார். ஆனாலும் இதழின் கால்பங்குப் பகுதியை நானே எடுத்துக் கொண்டதுபோல் பத்துப் பக்கம் கொண்ட இந்தக் கதையை அவர் அப்படியே வெளியிட்டது எனக்கு ரொம்பப் பெருமை. மகிழ்ச்சி. மெயில் அனுப்பிய உடனேயே படித்துவிட்டு உடனே அடுத்த இதழிலேயே போட்டுவிடலாம் என்று தெரிவித்த அந்தக் கணம் முதல் இந்தக் கதைக்கான தேர்வின் மகிழ்ச்சியில் இருந்தேன் நான்.

இருவேறு முடிவுகளை, எழுதிச் செல்லும்போதே தானே தேடிக் கொண்ட படைப்பு இது. வலியப் புகுத்தினதுபோல் அமையாதது இதன் வெற்றி. ஒரு குறும்படமாக எடுத்தால் நிச்சயம் நன்றாக அமையும். ஆனால் எடுக்கும் நபருக்கு ஆழ்ந்த ரசனை வேண்டும். அப்போதுதான் கதையின் சாரமும், ஊடாட்டமும், படத்திலும் தவழும். எழுதிய மெருகு படத்திலும் குலையாமலிருக்கும்..

நவீன விருட்சம் இலக்கிய இதழ் 1988 முதல் வந்து கொண்டிருக்கிறது. விடாமல், பிடிவாதமாக ஒரு இலக்கிய இதழை அதன் தரம் குன்றாது நஷ்டங்களைப் பொருட்படுத்தாது நடத்திச் செல்வது என்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இந்த இதழின் தரம் நிரந்தரம். நண்பர்கள் அவசியம் இந்த இதழை வாங்கிப் பயனடைய வேண்டும்.