30 செப்டம்பர் 2018

அசோகமித்திரனின் “மணல்“ குறுநாவல்



எத்தனை புத்தகக் கண்காட்சிகள் நடந்தால் என்ன, எத்தனை புத்தகங்கள் புதிதாய் வந்தால்தான் என்ன? ஆயுசுக்கும் அலுக்காத திரும்பத் திரும்பப் படிக்க, ரசிக்க, உருக, உள்வாங்க, என்று ஒரு எழுத்து உண்டென்றால் அது
திரு.அசோகமித்திரன் அவர்களின் எழுத்துதான்.
அவரால்தான் நான் எழுதுகிறேன். உடம்பு பூராவும் எழுது எழுது என்று உத்வேகம் பெற வேண்டுமென்றால் உடனடியாக இவர் புத்தகத்தைத்தான் கையில் எடுப்பேன். மனசைக் கோயில் போலாக்கும் வல்லமை இவர் எழுத்துக்கு உண்டு. இந்த வாழ்க்கையின் எல்லாவிதமான முதிர்ச்சிக்கும் நம்மைக் கொண்டு நிறுத்தும் ஆன்மீக பலம் வாய்ந்தது இவரது எழுத்து.. இலக்கியம் மனிதனைச் செழுமைப்படுத்துகிறது என்ற கருத்து இவர் எழுத்தில் சத்தியமாகிறது.
அவரது “மணல்” குறுநாவல் தொகுதி இப்போது என் வாசிப்பில் மீண்டும். கீழே நாலு வரிகள் -
“தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது கிடையாது. அவரைப் பார்த்ததேகூடக் கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்களைத் தான் பறித்துக் கொள்வதற்கும்தானா?
“தலைமுறைகள்” கதாநாயகன் சங்கரனுடைய சிந்தனையில் இப்படியும் எண்ணங்கள் எழுகின்றன. அவன் மீண்டும் சுரண்டல் வாழ்க்கையில் ஆழ்ந்து விடுகிறான் என்றாலும் அவனுக்கும் இப்படிச் சிந்தனைகள் தோன்றின என்பதே நம்பிக்கைக்குரிய விஷயம். ஆனால், இந்த அளவு ஈரப்பசைகள் ஒரு மனிதனுக்கு இல்லாது போய்விட்டால் இந்த உலகமும் வாழ்க்கையும் மதிப்பும் கண்ணியமும் அற்றவையாகி விடும்”
“காந்தி” என்று ஒரு அற்புதமான தொகுப்பு. அதில் “அம்மாவுக்கு ஒரு நாள்” என்று ஒரு சிறுகதை. படிக்கவில்லையென்றால் தேடிப் படியுங்கள். பிறகு சொல்லுங்கள்...
2

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...