28 அக்டோபர் 2016

அவ்வப்போது கவிதைகளும்…..

    Ushadeepan Sruthi Ramani

    “அறி…!”
    *******************************************
    பார்ப்பதும் பார்க்காததும்
    உன் விருப்பம்
    பார்த்தும் பார்க்காதது
    என் விருப்பம்
    கேட்பதும் கேட்காததும்
    உன் விருப்பம்
    கேட்டும் கேட்காதது
    என் விருப்பம்
    பேசுவதும் பேசாததும்
    உன் விருப்பம்
    பேசியதும், பேசாததும்
    என் விருப்பம்
    உன்னோடு அது என்றால்
    என்னோடு இது…!
    உனக்கு மட்டும் அது என்றோ
    எனக்கு மட்டும் இது என்றோ
    எதுவுமில்லை!
    உன்னோடு உள்ளது உன்னுடையது
    என்னோடு கிடப்பது என்னுடையது
    அவரவர்க்கு அவரவருடையதுதான்
    யாரும் எதுவும் பறிப்பதற்கில்லை
    யாரும் யாரையும் முடக்குவதற்குமில்லை
    உனக்கும் எனக்கும்
    உலகம் ஒன்றுதான்….!
    பயணம்தான் வேறு…!

    -----------------

    Image may contain: one or more people


தீர்வு…! ஸ்ருதி ரமணி,
--------------------,
எனக்கும் அவனுக்குமான உறவை
எது சேர்த்து வைத்தது?
எனக்கும் அவனுக்குமான கேள்விகளை
எது துவக்கி வைத்தது?
எனக்கும் அவனுக்குமான புரிதலை
எது முன்னின்று தடுக்கிறது?
எனக்கும் அவனுக்குமான வித்தியாசங்களை
எது காட்டிக் கொடுக்கிறது?
எனக்கும் அவனுக்குமான இணக்கங்களை
எது மறைக்கப் பார்க்கிறது?
எனக்கும் அவனுக்குமான குரோதங்களை
எது தடுத்தாட்கொள்கிறது?
எனக்கும் அவனுக்குமான வருத்தங்களை
எது அமைதிப் படுத்துகிறது?
எனக்கும் அவனுக்குமான விலகல்களை
எது வேடிக்கை பார்த்துச் சிரிக்கிறது?
எனக்கும் அவனுக்குமான ஒற்றுமையை
எது பிரித்து வைக்கிறது?
எனக்கும் அவனுக்குமான நெருக்கத்தை
எந்த மனம் ஏற்க மறுக்கிறது?
என்னில் “நானை” உதறியெறிந்து – அவன்
தன்னில் ”தன்னைப்” புதைத்து விட்டால்
எங்கும் எதுவும் சாத்தியமோ…!
-------------------------------------------------------------------------

No automatic alt text available.

கேள்வி ...!
***********************************************
ஏன் பொறுக்க மறுக்கிறது மனம்
நானொன்று சொல்ல
அவர்கள் ஒன்று நினைக்க
எந்த இடத்தில் விழுந்தது
இந்தப் புள்ளி?
வெள்ளைத்தாளில் விழுவதெல்லாம்
வெறும் புள்ளியா? கரும்புள்ளியா?
வெறும் புள்ளியாயினும்
கண்ணுக்குத் தெரிவது
அது மட்டும்தானே…!
அப்படியானால் கரும்புள்ளி?
வன்மம் வளர்க்குமோ…?
வார்த்தை தெறிக்குமோ?
எதிர்வினையில் எகிறி விழுமோ?
பொது வெளியின்
பொத்தாம் பொதுவினை
தனக்கானதாய்
இனம் பிரிக்கும் மனம்
எந்த வகை முதிர்ச்சி?
----------------------------

No automatic alt text available.

ஒரு கவிதை...
--------------------------
கேள்வி…!
--------------------
கூடவே
வேண்டும் ஒருவர்
பின்பாட்டுப் பாட
அல்லது
தலையசைக்க
அல்லது
அவ்வப்போது பெயர் சொல்ல
எதிர்வினை அம்புகளை
எட்டிப் பிடித்து எறிய
அல்லது
எரித்துச் சாம்பலாக்க
எப்படிச் சொல்லப் போச்சு
என்று
எதிர்க் கேள்வி கேட்க
அல்லது
எதிரே நின்று குரைக்க
எங்கிருந்து முளைக்கிறது
இந்த அகங்காரம்?
எதிலிருந்து கிளைக்கிறது?
எதற்காக இந்தத்
தன் முனைப்பு?
எண்ணுவதோ
எழுதுவதோ என்ன
காப்பியமா?
-----------------------------------------

Image may contain: flower, plant and nature

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...