06 டிசம்பர் 2014

எழுத்தாளர் இமையம் அவர்களின் “சாவு சோறு” – சிறுகதைத் தொகுப்பு – க்ரியா வெளியீடு.

 

 

 

2014-12-06 18.41.12 2014-12-06 18.41.24

 

 

download download (1)

 

ஏற்கனவே உயிர்மையில் படித்ததுதான் என்றாலும், கையில் புத்தகமாய் வைத்துப் படிப்பதில் ஒரு சுகம், சந்தோஷம். மறு வாசிப்புக்கும், மறுபடி, மறுபடி வாசிப்புக்கும் தகுதியானவற்றைத்தானே தேடித் தேடிப் படிக்கிறோம். அப்படித்தான் படித்தேன் இன்று. முதல் கதையைப் படித்ததுமே மனசு நடுங்கிப் போனது. இதயம் இன்னும் படபடத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கும் பல கிராமங்களில் சாதி வெறி எப்படித் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறது? என்று நினைக்க வைத்தது. முதல் கதையைப் படித்து முடித்து, அதன் பாதிப்பு அடங்கவே ரெண்டு நாள் ஆகும்போல்தான் தெரிகிறது. மனசு உள்ளுக்குள் அழுது கொண்டே இருக்கிறது. எண்ணி எண்ணிப் புழுங்குகிறது. எல்லா மக்களும் சந்தோஷமாயும், ஒற்றுமையாயும், சமத்துவத்தோடும், சகோதரத்துவத்தோடும் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இம்மாதிரியான நிகழ்வுகளையும், செய்திகளையும் அறிய நேரிடும்போது தங்களுக்குள் நொறுங்கித்தான் போவார்கள்.
“சாவு சோறு - அதுதான் நான் படித்த முதல் கதை. அது வெறும் கதையல்ல. அந்த மக்களின் அவல வாழ்க்கை. புத்தகத்தின் பெயரும் அதுதான். க்ரியா வெளியீடு. இன்று கைக்குக் கிடைத்தது. இமையத்தின் ஆழமான எழுத்து மனசைப் பிழிய வைக்கிறது. அற்புதமான படைப்பாளி. அவரின் எந்தப் படைப்பையும் சோடை சொல்லவே முடியாது. நான் அதிகம் விரும்பிப் படிக்கும் படைப்பாளிகளுள் அவரும் ஒருவர்.
மீதமுள்ள ஒன்பது கதைகள் இன்னும் என்னெல்லாம் பாடுபடுத்தப் போகிறதோ என்னை...! கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய முக்கியமான சிறுகதைத் தொகுப்பு ”சாவு சோறு”

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...