இன்று (22.02.2014) ராகப்ரியாவில் நெய்வேலி சந்தானகோபாலன் அவர்களின் இசைக் கச்சேரி மனதை பக்தி லயத்தில் மூழ்க வைத்தது. நெய்வேலி சந்தானகோபாலன் ஆரம்ப காலங்களில் தன் தாயிடமும், பின்னர் சி.எஸ்.அனந்தராமபாகவதரிடமும், அதற்குப்பின் முழுமையாக மதுரை டி.என்.சேஷகோபாலனிடமும் இசையைக் கற்றுக் கொண்டவர். அவருக்கென்று ஒரு ஸ்டான்டர்டு உண்டு. மனத்திருப்தியோடு, அர்ப்பணிப்போடு பாடுகையில் பக்திப் பிரவாகம் ரசிகர்களைக் கட்டிப்போட்டு விடுகிறது என்பதும், அவர்களையும் பக்தி லயத்தில் மெய் மறக்கச் செய்து விடுகிறது என்பதுவும் இவரது கச்சேரியில் பலமுறை உணர்ந்த உண்மை.
இன்றைய கச்சேரி திரு.தேவேந்திரபூபதி, வணிக வரி அலுவலரின் தந்தையாரின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டது. இசையில் ஈடுபாடு உள்ள நல்ல ரசிகர். வருடத்திற்கு மூன்று நான்கு முறைகள் அவரது ஏற்பாட்டில் நல்ல பாடகர்களைத் தேர்வு செய்து, அவர்களிடம் அன்போடு முறையிட்டுக் கொண்டு, தமிழ்ப் பாடல்களாய் பாடச் செய்து கச்சேரியை சிறப்புச் செய்வது இவரது தொண்டு.
இன்றைய கச்சேரியின் சிறப்பே தமிழ்ப்பாடல்களாய்த் தேர்வு செய்து பாடியது என்பதுதான். ஒவ்வொரு பாடலின் சிறப்பையும் முன்னுரையாக விளக்கி பின்பு பாடலைப் பாடியது, ரசிக்க ஏதுவாகவும், அதன் மகிமையையும் உணரத்தக்கதாகச் செய்தது மறக்க முடியாத ஒன்று.
22 பிப்ரவரி 2014
நெய்வேலி சந்தான கோபாலனின் தமிழ் இசைக் கச்சேரி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
'குற்றம் புரிந்தவன்' - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன் - ல் வெளியிடப்பட்டுள்ளது. (www.pustaka.co.in) --------------------...
-
“விடியுமா?” - கு.ப.ராஜகோபாலன் சிறுகதை - வாசிப்பனுபவம் - உஷாதீபன் வெளியீடு:- அடையாளம் பதிப்பக...
-
“மின்னல்“ – சிறுகதை – கி.ராஜநாராயணன் *************************************************************************************...
-
தி.ஜா.நூற்றாண்டு - “முள்முடி” சிறுகதை -வாசிப்பனுபவம் - உஷாதீபன் க தை எழுதப்பட்டது 1958-ல். மதமாச்சர்யங்கள் அற்ற காலம். ஒழுக்கமும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக