06 மார்ச் 2013

எழுத வைத்த எழுதுகோல்–பத்தி எழுத்து

 

 

download

 

 

 

 

என்னிடம் தான் பலரும் பேனா கேட்கிறார்கள். எத்தனை கூட்டம் இருந்தாலும் சரி. இந்த மூஞ்சியில் அப்படி என்னதான் இருக்குமோ அறியேன். மனிதர்கள் தங்களின் எல்லாச் செயல்களுக்கும் ஒரு கணிப்பு வைத்திருக்கிறார்கள். பஸ் ஸ்டாப் கேட்பது, தெரு கேட்பது, வங்கி உண்டுதானே?, போஸ்ட் ஆபீஸ் ஒர்க்கிங்க டே தானே? என்று பலவாறாக. நானும் கொடுத்து, மறந்து, இப்படியாக சுமார் இருபது பேனாக்கள் வரை விட்டிருக்கிறேன். அது ஒரு பெரிதல்ல. ஆனாலும் தொடர்ந்து கேட்பவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்திருக்கிறேன் பாருங்கள். அதுதான் அங்கே முக்கியம். சார், பேனா வேணாமா? என்று கேட்டவர் சிலர். சார், பேனா வாங்காமப் போறீங்க? என்று சொன்னவர் சிலர். கொஞ்சம் இருங்க சார்... என்று காக்க வைத்தவர் சிலர். பார்த்துக்கொண்டே போனாப் போகட்டும் என்று விட்டவர் சிலர். எங்கும் எல்லாவிதமாகவும் மனிதர்கள் இருக்கிறார்கள். இரண்டு ரூபாய்ப் பேனா விற்பது எத்தனை வசதியாய் இருக்கிறது? - உஷாதீபன்

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...