07 ஜூலை 2022

தேய்(ப்)பவர்கள் -கல்கி - பிரசுரம் - சிறுகதை

 


தேய்(ப்)பவர்கள்    



                                          -----------  

      துணி வாங்கிட்டீங்களா…?” – சைக்கிளில் போகும் அவரை, வண்டியில் கடந்த இவன் கேட்டான்.

     பின்னால் அடுக்கியிருக்கும் துணி மூட்டைகள் சாய்ந்து விடக் கூடாது. அதுதான் முக்கியம். விழுந்தால் எல்லாம் மண்ணாகிப் போகும். வாஷ் பண்ணிய துணிகள். பிறகு வாங்கி வந்த இடத்திற்கு பதில் சொல்ல முடியாது. பொல்லாப்பு வந்து விடும். ஒரு கையால் அதை ஜாக்கிரதையாய்ப் பிடித்துக் கொண்டே உழட்டிக்கொண்டே ஓட்டிப் போன அவர், ‘வாங்கிட்டேன் சாரே…’ என்று பதில் சத்தம் கொடுத்தார்.

     ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பின்னும் அவரின் இந்தசாரேமாறாமல் அப்படியே இருந்தது. ஸார் என்பதைத்தான் அப்படி நீட்டுகிறார். இது எந்த ஊர்ப் பழக்கம்? தெரியவில்லை. கொரோனா காலத்திலும் அவரது அயராத உழைப்பு.

     ஆனால் ஒன்று. வாங்கிட்டேன் என்ற அந்த பதிலில்தான் எத்தனை உற்சாகம். எவ்வளவு சந்தோஷம்.

                துணி வாங்கிட்டீங்களா?’ என்று கேட்டதன் மூலமாக, தான் சொல்லித்தான் இது நடந்திருக்கிறது என்பதாக அவன் புரிந்து கொண்டிருக்கக் கூடும். ஆனால் உண்மையில் அது அப்படியல்லவே? தேவிகா சொல்லியல்லவா அது நடந்திருக்கிறது! அவள் விருப்பத்தை மீறி என்ன நடக்கக்கூடும்?

                நாளைக்குக் காலைல வந்து துணி வாங்கிக்குங்கஅயர்ன் பண்ணிக் கொடுங்க…”

     அலுவலகம் விட்டு வருகையில் அவள்தான் சொல்லியிருக்கிறாள். எத்தனை நாள்தான் அவளும் பொறுப்பாள்?

                கஞ்சி போட்டு வைக்கிறேன்வாங்கன்னு சொன்னேன்இன்னும் வந்திட்டிருக்காங்கஒரு மாசமாச்சுஇன்னைவரைக்கும் ஆளைக் காணலைஎன்ன நினைச்சிட்டிருக்கு அந்தம்மா? கல்யாணத்துக்குப் போறேன்காட்சிக்குப் போறேன்னா சொல்லிட்டுப் போயிடலாமுல்ல?  நாம வேறே ஏதாச்சும் அரேஞ்ஜ் பண்ணிப்போமில்ல? வரேன், வரேன்னுட்டு, ஒரேயடியா வராமயிருந்தா? எனக்கானா உடம்பெல்லாம் எரியுது இந்த வெயிலுக்குதாங்க முடியலைஅதான் காட்டன் சேலையைக் கட்டிண்டு போவோம்னு ஒண்ணு ரெண்டுன்னு கஞ்சி போட்டு ஏழெட்டு சேர்த்து வச்சிருக்கேன்அந்தம்மா என்னைக்கு வர்றது? என்னைக்கு நான் அதைத் தேய்ச்சுக் கட்டுறது? அதுக்குள்ளேயும் சம்மரே கழிஞ்சிடும் போலிருக்குஇவுங்க வசதிக்கு இஷ்டம் போல வருவாங்கவச்சிருந்து வர்றபோது தூக்கிக் கொடுக்கணுமோ? அடிக்கிற வெயிலுக்கு பாலியஸ்டர், ஷிஃபான்னு போடவா முடியுது? வியர்வையானா ஊத்துது! உடம்போட ஒட்டிக்கிதுபிச்சுத்தான் எடுக்கணும் போலிருக்கு…”

     அவளின் ஆதங்கம் நியாயமானதாய்த்தான் தோன்றியது. ஆனாலும் இன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் பொறுக்கலாமோ?

                சும்மாருங்கஎன் கஷ்டம் எனக்குத்தான் தெரியும்நாளைக்கு நா எதைக் கட்டிட்டுப் போறதாம்?”

                வர்றேங்கம்மாஎதிர்த்த வீட்டுக்கு வருவேன். அப்போ உங்க வீட்டுலயும் வந்து துணி வாங்கிக்கிடுறேன்…”

                மறந்துடாதீங்க…”

                அதெல்லாம் மறக்க மாட்டம்மாநீங்கதான் என்னை மறந்துட்டீங்கதுணி குடுத்துக்கிட்டே இருந்தீங்கதிடீர்னு நிறுத்திப்புட்டீங்கஎன்னன்னு தெரிலவருஷம் ஓடிப்போச்சு…”

                அதெல்லாம் ஒண்ணுமில்லவாங்கவந்து வாங்கிக்குங்க…”

     இத்தனை நாள் என்னைப் போட்டு என்ன பாடு படுத்தினாள்? அப்பாடா! பிரச்னை தீர்ந்தது.

     எனக்கு அந்தப் பழைய சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

                என்னடா, சோர்வா வர்ற?”

                ஒண்ணுமில்லப்பா…”

                ஒண்ணுமில்லன்னா? என்னத்துக்கு மூஞ்சிய உம்முன்னு வச்சிட்டிருக்கே?”

                அதெல்லாமில்லே…”

                என்ன நடந்தது சொல்லுயூனிபார்மை எங்கயாச்சும் மண்ணுல போட்டுட்டியா?”

                இல்லப்பாநீ என்னைத்தான் குத்தம் சொல்லுவேவேறென்ன தெரியும் உனக்கு?”

                பின்னே என்ன பண்ணினே சொல்லுதுணியைத் தேய்க்கக் கொடுத்தியா? இல்லியா?”

                கொடுத்தாச்சுகொடுத்தாச்சு…”

                எதுக்குடா  இம்புட்டு அலுப்பு? வாங்கிக்கிட்டான்ல…?”

                வாங்கிட்டான்வாங்கிட்டான்…”

                அப்புறமென்ன?”

                அந்த ஆளு ரொம்ப அல்ட்ராம்ப்பா…”

                என்னது அல்ட்ரானா? இதென்ன பாஷைடா? அப்டீன்னா?”

                அப்டீன்னாகிராக்கி பண்ணிக்கிறான்னு அர்த்தம்இல்லடா கண்ணு…” – தேவிகா.

                என்ன கிராக்கி பண்றான்? தேய்க்க முடியாதுங்கிறானா? வாங்கிட்டான்ல…”

                இதுக்குத்தான் சொல்றதுவீட்லயே அயர்ன் பண்ணிக்கலாம்னுயாருக்கும் முதுகு வளைய மாட்டேங்குது…”  -.

                எனக்குத்தான் வளைய மாட்டேங்குதுநீ கொஞ்சம் வளைச்சுப் பார்க்க வேண்டிதானே…”

                நாந்தான் தெனமும் சமையக்கட்டுல வளைச்சிட்டிருக்கேன்லஇதுக்கு நீங்கதான் வளைக்கணும்…”

                உங்க சண்டைய விடுங்கப்பாஇந்த ரெண்டு துணியத் தூக்கிட்டு மாங்கு மாங்குன்னு அங்கேயிருந்து வந்திட்டியாக்கும்ங்கிறாம்ப்பா அவன்…”

     தேவிகா அவனை இழுத்து அணைத்துக் கொண்டாள். தலையை வருடிக் கொடுத்தாள்.

                அப்டியா சொன்னான்? என்ன திமிர் அவனுக்கு…?” – தேவிகாவின் ஓங்கிய குரல்.

     படபடத்த அவளை அமைதியாக் நோக்கினேன் நான். ‘சரிசரிவிடு…’

                என்ன நீங்க..விடுங்கிறீங்க…? துணி தேய்க்கக் கொடுத்தா பேசாம வாங்கிக்கிட வேண்டிதானே அவன் வேலைஅத விட்டிட்டு இதென்ன பேச்சு…”

                ஏய்நீ என்ன? இதுக்குப் போயி இவ்வளவு டென்ஷனாரே? ஒவ்வொரு சமயம் அப்டித்தான்அவன் என்ன டென்ஷன்ல இருந்தானோஅன்றாடங் காய்ச்சி அவன்ஏதோ சின்னப்பயதானேன்னு சொல்லியிருப்பான்இதெல்லாம் ஒரு குத்தமா? இந்தக் கொரோனா காலத்திலும் இப்டி உழைக்கிறானே வீட்டோட முடங்காம?  

                அதெப்படிங்கஅவசரத்துக்குத்தானே இந்த ரெண்டு துணி? யாராச்சும் பத்திருபதுன்னு தூக்கிக் கொடுத்தனுப்புவாங்களா? வீடு வீடா அவன் வந்துதானே வாங்கிக்கிறான்? தூக்கிட்டுப் போய்க் கொடுக்கிறோம்னா அதை அவசரம்னு புரிஞ்சிக்க வேண்டாமா? இப்டியா பேசுறது? ஒரு நாளைக்கு ரெண்டு துணி கொடுத்தா அதென்ன இளப்பமா? கேவலமா? எல்லா நாளுமா பத்திருபதுன்னு கொடுக்க முடியும்? ரெண்டே ரெண்டு. அதுவும் யூனிபார்ம்னுதானே கொடுத்தனுப்பினது? வாடிக்கையான அவன் இதைச் சொல்லக் கூடாதுல்ல…? ரெண்டு துணிக்கான காசு பத்து ரூபான்னா அது பணமில்லியா? அதுக்கு மதிப்பில்லியா? எந்த வீட்லயும் இந்த மாதிரி என்னிக்காச்சும் ரெண்டு துணி கொடுத்தே இருக்க மாட்டாங்களா? எல்லாரும் எப்பவும் இருபது, முப்பதுன்னுதான் துணி கொடுப்பாங்களாக்கும்? அப்பத்தான் இவுரும் வாங்குவாராக்கும் அய்யா? இதெல்லாம் வேண்டாத பேச்சில்ல?”

     அசந்து போனேன் நான். இதற்கு இவ்வளவு அர்த்தங்களா? வாயடைத்துப் போனேன்.

                எப்பவுமே ஒருத்தரையே சார்ந்து இருந்தா இப்படித்தாங்கஇதெல்லாம் வரத்தான் செய்யும்இதுக்கு ஒரு வழி பண்ணினாத்தான் ஆகணும்…”

     சொன்னாள். சொன்னதுபோல் செய்தும் விட்டாள்.

     எங்கு போய் ஆளைக் கூட்டி வந்தாளோ? எப்படித் தேடிக் கண்டு பிடித்தாளோ? யாரிடம் சொன்னாளோ? தெருக் கோடியில் பரந்த மரத்தடியில் ஒரு அயர்ன் வண்டி. ஆளா இல்ல…? அவளே சொல்லிக் கொண்டாள்.

     ஏம்மா துணி கொடுக்கலை…? அவனும் கேட்கவில்லை.

     எத்தனை வருடங்கள் ஓடிப் போயின? வாசலில் வண்டியை ஸ்டான்ட் போட்டு பூட்டிவிட்டு அறைக்குள் நுழைந்தவன்தான்அதற்குள் அந்தச் சத்தம்.

                யம்மா…”

                யாரு…?”

                அயர்னுங்க ஸார்…”

                அயர்னா? வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்தேன்.

                அடடே…! நீங்களா? வாங்கம்மா…”

                ஆமாங்கய்யாதுணி தர்றீங்களா…?”

                துணியா..தர்லாமேதேவிகாஏய் தேவி….! அந்தம்மா வந்திருக்காங்க…” – பதட்டத்தில் என்னவோ சொன்னேன். இதென்ன கஷ்டம் ஆக்கப் பொறுத்து ஆறப் பொறுக்காத கதையாய்

                துணி இல்லன்னு சொல்லுங்க…” உள்ளேயிருந்து சைகை மூலம் தெரிவித்தாள்.

                துணி இல்லியாமேம்மா…”

                இல்லீங்களா…? சரிங்கய்யாஎங்கண்ணாச்சிக்கு ஒடம்பு முடில.....கொரோனா வந்திருச்சு...புள்ளைகளப் பார்த்துக்க ஆளில்ல...அதுக்குப் போயிட்டேன்அதான் வரமுடிலீங்கய்யா…”

                அப்டியா? ஒரு மாசம் போல ஆச்சு போலிருக்கு?”

                ஆமாங்கய்யாஎங்க அத்தைட்டக் கூடச் சொல்லி விட்டிருந்தேன்வெவரம் சொல்லிப்புடுன்னுஅது வீடு தெரிலன்னு திரும்பி வந்திடுச்சி…. …அடுத்த வாரம் வாரேன்எடுத்து வச்சிருங்கதேய்ச்சுத் தாரேன்இதான்யா எங்க பொழப்பே...விட்ர முடியுமா? ” – சொல்லி விட்டு நகர்ந்தது அது.

     உள்ளே வந்தேன். அவரவர் பாடு அவரவர்க்கு. ஒரு சின்ன வருமானம் என்றாலும் விட முடிகிறதா? சிறுகச் சிறுக காசு பார்த்துத்தான் ஜீவனமே...! அன்றாடப் பாடு..பட்டால்தான் தெரியும் .! பாவம்தான்...!

     துணிகளை அந்தாள்ட்டக் கொடுத்தாச்சுன்னு சொல்ல வேண்டிதானே? ஏன் இப்படிப் பயப்படுறீங்க…?”

                எனக்கு பயமான்னு கேட்குறியே? நீ வந்து சொல்ல வேண்டிதானே? உள்ளேயிருந்து சைகை காண்பிக்கிறே?”

     எனக்கு பயமா? எதுக்கு?   பயமா? அல்லது தயக்கமா?

     மீண்டும் வாசலில் சத்தம்.

                அய்யாஅம்மா கஞ்சி போட்டு எடுத்து வைக்கிறேன்னு சொல்லியிருந்தாகய்யா பாவம்சேலைக இருக்குதான்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்கய்யா…”

                சொல்லுங்கசொல்லுங்கசொல்லிடுங்க…” உள்ளேயிருந்து விரட்டினாள் தேவிகா.

                நீங்க வரலேன்னுட்டு அடுத்த தெருவுல ஒருத்தர் இருக்காருல்லஅவர்ட்டக் கொடுத்து வாங்கியாச்சு…”

                அப்டீங்களா? ஆகட்டுங்கய்யாபரவால்லஅடுத்த வாரம் வாரேன் எடுத்துவச்சிருங்கதேய்ச்சுக்கொடுக்கிறேன்என்னங்கய்யாகண்டிப்பா வந்திடுறேன்இனி எந்த வேலையுமில்லமறக்காம எடுத்து வச்சிருங்கஅம்மாட்டச் சொல்லிடுங்கஉள்ளாற வேலையா இருக்காக போலிருக்குஇந்தக் கொரோனா பல வகைல கஷ்டப்படுத்திருச்சிய்யா...நிறைய வாடிக்கைக இல்லாம ஆயிடுச்சி...பாதிக்குப் பாதி வருமானம் போச்சு...நம்மம்மா என்னைத் தவிர வேறே யார்ட்டயும் கொடுக்க மாட்டாகநாந்தேன் வந்து வாங்கிட்டுப் போவேன்அவுக சொல்றப் பிரகாரம் தெளிவா அயர்ன் பண்ணிக் கொடுப்பேன்அதுனால எங்கிட்டத்தான் கொடுப்பாகஅம்மாட்ட மறக்காமச் சொல்லி வையுங்க சாமி….அடுத்த ஞாயித்துக்கெழம வந்திடுறேன்ஒவ்வொரு வாடிக்கையா கொறையுது தெய்வமே...நீங்களும் கைவிட்ராதீக....”-தழுதழுக்கும் குரல் என்னை நெகிழ்த்தி விட்டது. காலமெல்லாம்  உழைத்து உழைத்து உருக்குலைந்து தேயும் இம்மாதிரி எத்தனை மனிதர்கள் இந்த உலகில்?

     எவ்வளவு நம்பிக்கை?  எங்கிட்டதான் கொடுப்பாக...எங்கிட்டதான் கொடுப்பாக....எத்தனை தடவை சொல்லும் இதை? பாவமாய் இருந்தது எனக்கு.என் வறுமை கலந்த ஆரம்ப கால வாழ்க்கை ஞாபகம் வந்து மனசைக் குடைந்தது.  தளர்ந்த நடையோடு போய்க் கொண்டிருக்கும் அந்தப் பெண் வறுமையின் அடையாளமாய்....!

     அட கடவுளே! கடைசியில் பழி எனக்குத்தானா?  கூடவே இதுவும் உறுத்த ஆரம்பித்தது.

     அடுத்த வாரம் யாரிடம் கொடுப்பது? சட்டென்று வந்து விழுந்த கேள்வி.

                யம்மாஅயர்ன் துணி கொண்டு வந்திருக்கேன் தாயீ…”

     வாசலில் அவன்  குரல்!!                                                                                                                                                                                                                                                                                ----------------------------------      

 

                உஷாதீபன்,                                                                    எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                   மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                       ராம் நகர் (தெற்கு)12-வது தெரு, ஸ்ருஷ்டி ப்ளே ஸ்கூல் அருகில்,                   மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188)

 

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...