29 செப்டம்பர் 2016

இரா.ராஜேந்திரன் (தில்லையாடி ராஜா) சிறுகதை ஆய்வுப் புத்தகம்

 

 

20160929_15523820160929_164009

தில்லையாடி ராஜா” எழுதிய “சிறுகதை திறனாய்வுகள்” என்றொரு புத்தகம் வசந்தா பிரசுரத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. இத்தொகுப்பில் மொத்தம் 23 படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு பற்றியும், அவற்றில் அவரது மனம் கவர்ந்த ஒரு சிறுகதையைப் பற்றியும் திறனாய்வு செய்யப்பட்டுள்ளது.

பின் அட்டையில் முனைவர் சு. தமிழ்வேலு அவர்கள் கூறியுள்ளதுபோல் ஒரு கட்டம் போட்டுக் கொண்டு அக்கட்டத்திற்குள் கொண்டு வந்து அடைக்க முயலும் பல்கலைக் கழக ஆய்வுகளைப் போலில்லாமல் தேர்ந்த கல்விப் புலமையாளர்களால் தரப்பெறும் இசங்களையும் கோட்பாடுகளையும் பேசி படைப்பாளியின் உண்மை முகத்தை வெளிக் கொண்டு வராத ஆய்வுகள் போல் இல்லாமல் மண்ணுக்கேத்த மகத்துவமாய்ப் போற்றும் வகையில் தன் மனப்போக்கில் படைத்துத் தந்துள்ள படைப்பாளியின் ஆய்வுப் புலமையைப் போற்றுவோம், பாராட்டுவோம்...

1) ஒரு தொழிலாளியின் டைரி - சூர்யகாந்தன்-என்சிபிஎச்
2) மஞ்சள் நிற ரிப்பன் - ஏகாதசி - எழுத்து பதிப்பகம்
3) மாலை சூடும் அரும்புகள் - அல்லி நகரம் தாமோதரன்-தாமரை பதிப்பகம்
4) வலி - கலைச்செல்வி - காவ்யா பதிப்பகம்
5) நாட்குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் - ஆசு - இருவாட்சி பதிப்பகம்
6) ஒரு துளி துயரம் - சு. வேணுகோபால் - தமிழினி
7) இச்சி மரம் சொன்ன கதை - விமலன் - ஓவியா பதிப்பகம்
8) பேசும் ஊமைகள் - சுப்ரியா சாந்திலால் - சொந்த வெளியீடு
9) ஒரு பாதையின் கதை - குப்பிழான் ஐ. சண்முகம் - காலச்சுவடு - ஸ்ரீலங்கா எழுத்தாளர்
10) டைனோசர் ஆயிரம் சூழ வலஞ்செய்து - ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ் - Shakespear's Desk பதிப்பகம்
11) மௌன மொழி - தேவவிரதன் - வசந்தா பிரசுரம்
12) நாயகன் - ம.வே.சிவகுமார் - அல்லயன்ஸ் பதிப்பகம்
13) பிரம்ம லிபி - எஸ்ஸார்சி - அன்னை ராஜேஸ்வரி பதிப்.
14) கோமாளிகள் சர்க்கஸில் மட்டும் இல்லை - இரா.கதைப்பித்தன்
15) பதிவு செய்யப்படாத மனிதர்கள் - வி.எஸ்.முகம்மது அமீன் - மனக்குகை பதிப்பகம்

16) வாழ்க்கை ஒரு ஜீவநதி - உஷாதீபன் - என்சிபிஎச்.
(திருப்பூர் தமிழ்ச் சங்கம் மற்றும் அமரர் ஜீவா-பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்ற புத்தகம்)(மதுரை லேடி டோக் கல்லூரியில் பாடப்புத்தகமாக வைக்கப்பட்ட தொகுதி)

17) ஆண்கள் - ஜி.ஆர்.சுரேந்தர்நாத், சிக்ஸ்த் சென்ஸ் பதிப்பகம்
18) நோய் மனம் - கோவி.பால.முருகு -
19) வலையில் மீன்கள் - வளவ துரையன் - அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம்
20) தோற்றப்பிழை - தி.தா.நாராயணன்-என்சிபிஎச்
21) மகாதானபுரம் ரயில்வே கேட் - இசட்.ஒய்.உறிம்சாகர்
22) போன்சாய் மரங்கள் - ஃபிர்தௌஸ் ராஜகுமாரன்-உயிர் எழுத்து பதிப்பகம்
23) மனம் விளைந்த பூமி - நாகை கவின் - .இமயம் பதிப்பகம்


25 செப்டம்பர் 2016

கவிதா பப்ளிகேஷன் 40ம் ஆண்டு விழா

Ushadeepan Sruthi Ramani added 4 new photos — with Sivaji Peravai and கவிஞர் செல்வராஜா.

2 hrs ·

13612299_10205061589578010_7617412377753321834_n20160925_08375320160925_08384620160925_08385720160925_08391713658929_10205061584697888_7221062273972302208_n

கவிதா பப்ளிகேஷனின் 40 ம் ஆண்டு விழா நேற்று (24.9.2016) கோடம்பாக்கம் அருகிலுள்ள மஉறாலிங்கபுரம் எம்.எல்.எம். கல்யாண மண்டபத்தில் சிறப்புற நடந்தேறியது. மிகப் பிரம்மாண்டமான விழாவாக இதை உணர்ந்தேன் நான். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட மிகப் பெரிய உறால் நிரம்பி வழிந்தது. நிறைய எழுத்தாளர்கள்...கலைஞர்கள், வி.ஐ.பி.க்கள், வாசகர்கள் என மேடையில் அ மர்ந்திருக்கும் முக்கியஸ்தர்களின் பேச்சைக் கேட்க ஆவலாய்க் காத்திருந்தார்கள்..

வாயிலில் நுழையும்போதே மணக்க மணக்க டிகாக் ஷன் காபி சப்ளை செய்ததுதான் Hi லைட்....... சூடான அந்தக் காபி தொண்டைக் குழிக்குள் இறங்கியதும், வந்த அலுப்பெல்லாம் மறைந்து போனது.

இந்த விழாவின் சிறப்பம்சம் 105 புத்தகங்களைக் கவிதா வெளியிட்டதுதான். அதனை மேனாள் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டது சிறப்பு. இந்த 105 ல் என்னுடையதும் இரண்டு என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். (1) நாவல் - லட்சியப் பறவைகள் (2) நின்று ஒளிரும் சுடர்கள் - கட்டுரைகள்
இத்தனை பிரம்மாண்டமான விழாவை நான் கண்டது இதுவே முதல் தடவை.....கவிதா பப்ளிகேஷன் நிறுவனத்தின் ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்கும் சகோதரி கவிதா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


22 செப்டம்பர் 2016

அற்புதமான நாவல்…by இந்திரா பார்த்தசாரதி

20160911_105505download (1)download

Ushadeepan Sruthi Ramani

அமெரிக்காவிலிருந்து, ஒரு நல்ல யுனிவர்சிடியில் கிடைத்த ப்ரொபஸர் வேலையை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்கு வருகிறான் நாயகன் ஜெயராமன். அரசியலில் பங்கெடுத்து நாட்டு மக்களுக்கு உண்மையான சேவையாற்றுவதற்கு தன் அறிவுத்திறன் முழுதையும் பயன்படுத்த வேண்டும் என்கிற லட்சியம் அவனுக்கு. ஆனால் அதற்கு இங்கேயிருக்கும் நடைமுறை அரசியல் பொருத்தமாய் இருக்குமா என்கிற முடிவிலே எடுத்த எடுப்பிலேயே தவறி விடுகிறான். எதிர்க்கட்சியில் சேர்ந்து, பிறகு அங்கிருந்து உடனே விலகி ஆளுங்கட்சிக்கு வந்து, முக்கியஸ்தனாகக் கருதப்பட்டு, மந்திரியாகி, சேவையாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தில் மண் விழுகிறது. மந்திரியானவன், தந்திரியாக முடியாமல் தவிக்கிறான். தந்திரியானால்தான் சரியாகுமோ என்கிற தவிப்பிலேயே நடைமுறை அரசியல் அவலம் அவனைப் புரட்டிப் போட்டு விடுகிறது. கடைசியில் திரும்பவும் வந்த இடத்திற்கே சென்று விடுவது என்பதான புள்ளிக்கு அவனை இட்டுச் செல்கிறது.
எத்தனையோ நாவல்கள் இன்று வதவதவென்று வருகின்றனதான். ஒன்றும் புத்திசாலித்தனமாய் இருப்பதாய்த் தோன்றவில்லை. வளவளவென்று ஒரு அழுத்தமும் இல்லாமல் பக்கங்களை நகர்த்திச் செல்கிறார்கள். இதுதான், இப்படித்தான் என்கிற முடிவோடு , பாதி வழியில்வாங்கிய புத்தகத்தை அப்படியே மூடி மூலைக்குத் தள்ளுவதோ, யாரிடமேனும் கொடுத்துவிடுவதோ தொடர்ந்து நிகழ்கிறது. முன்பு இலைமறை காயாகச் சொல்லப்பட்டதெல்லாம் இன்று அப்பட்டமாய், அசிங்கமாய் (அசிங்கம் இல்லை என்கிற உணர்வோடு) மனசைக் கசடாக்கும் அநி-யாயத்தோடு கண்டதையும், கண்டமேனிக்கு எழுதிக் குவிக்கிறார்கள். இதுதான் நவீனத் தமிழ் இலக்கியம் என்று நிறுவியே விட்டார்கள். ஓஉறா...இப்டித்தான் போலிருக்கு என்று பலரும் புகழ்ந்து தள்ளுகிறார்கள். என்ன கண்றாவியோ...கஷ்டகாலமோ....!!!
இந்திராபார்த்தசாரதியின் இந்த மாயமான் வேட்டை கையில் வைத்துப் படிப்பதற்கே ஒரு கௌரவமானது. புத்திசாலித்தனமான எழுத்து....ஆழ்ந்த கருத்துக்களை அதற்குத் தகுதியான கதாபாத்திரங்க ளின் ஆழமான விவாதங்களோடு கதையை நகர்த்திச் செல்லும் பாங்கு பல இடங்களில் வியக்க வைக்கிறது.
ஒரு கதாபாத்திரத்தின் குணாதிசயம் என்பது நாவலின் ஆரம்பத்தில் என்ன நோக்கில் ஆரம்பித்ததோ அதே புள்ளியில் சிறிதும் பிறழாது, அதன் செயல்பாடுகளால் தோன்றும் பிரச்னைகளை மையமிட்டு, புயலாய் நகர்ந்து சென்று, அதற்கான தீர்வினை மிகச் சரியான கோணத்தில் சென்றடைவது என்பதான மிக இயல்பான சம்பவக் கோர்வைகள், அவரது எழுத்து அனுபவத்தைத் தலைநிமிர்த்திப் பறைசாற்றுகின்றன.
இன்று இவரின் இந்த நாவலை நான் படித்தேன் என்று வெளியில் கம்பீரத்தோடு நாம் சொல்லிக் கொள்ளலாம். இந்திரா பார்த்தசாரதி போன்ற படைப்பாளிகளை நாம் ஆய்ந்துணர்ந்து நமக்குள் போற்றி மகிழ்வது, சிறந்த வாசகனுக்கான பெருமை என்றே சொல்லலாம்.
இப்பத்தான் படிக்கிறீங்களா? என்பார்கள் சிலர். அதெல்லாம் எப்பயோ படிச்சாச்சு என்கும் சிலதுகள். அதெல்லாம் பழசு என்போர் சிலர். வேறுமே படிச்சு முடிக்கிறது வேறே. ஆழ்ந்து அனுபவிக்கிறது வேறே... நான் சொல்கிறேன். Old is gold. அவர்களுக்கு இணை அவர்கள் மட்டுமே...!!! இவர்களின் புகழாரங்களை அவர்கள் எதிர்பார்ப்பதில்லை என்பதுதான் நிஜம்...


19 செப்டம்பர் 2016

பு ல ன் க ளு க் கு

வ ச ப் ப டு த ல்

எ ன் ப து

அ க வ லி மை யை

இழத்தல் clip_image001

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...