31 ஜூலை 2022

“ஏணி" (31.7.22 - தினமணி கதிர் பிரசுரம்)

 

     ,                   “ஏணி" (31.7.22 - தினமணி கதிர் பிரசுரம்)    




 
             

   சிவராமனுக்கு மனம் குமுறிக் கொண்டிருந்தது. அவர் வார்த்தைகைளை இங்கே யாரும் மதிப்பதில்லை. அவரது இருப்பை எவரும் உணர்வதில்லை. அவரவர் பாடு அவரவருக்கு என்று ஏதோ நடந்து கொண்டிருந்தது அந்த வீட்டில்.

      நாற்காலிக்குக் கீழே தன் காலடியிலேயே கிடந்த அந்த சாம்பல் நிறப் பூனை கூட இன்று வெளியில் சென்று படுத்துக் கொள்கிறது. அங்கிருந்து எட்டிப் பார்த்துத் தலையைத் திருப்பிக் கொள்கிறது. மனதில் இருந்தது தேடும்போது கிடைக்கவில்லை.

      வைத்த இடத்தில் வைத்த பொருள் இருந்தால்தானே? பூதமாய் இருக்கும் பெரிய பொருள் கூட குறிப்பிட்ட இடத்தில் இல்லாமல் போய்விடுகிறது. அதுவும் தான் தேடும்போது அது இருப்பதேயில்லை. அப்படி எங்குதான் போகுமோ? ((என்னதான் ஆகுமோ? ( உனக்குப் பிடித்த இடத்தில் நான் இருக்க மாட்டேன்....என் பயணம் தனி....).)

      மனதுக்குள் குமுறிக் குமுறி அழாத குறைதான்.  வாய் விட்டுக் கேட்க முடிவதில்லை. கேட்டால் ஒழுங்கான பதில் வருவதில்லை. தன் மதிப்பைத் தானே குறைத்துக் கொள்ள வேண்டுமா? என் மதிப்பு தன் மதிப்பு. அடுத்தவர் மதித்தால்தான் அது இருக்கிறது என்று அர்த்தமா? வெடித்தால் கோபம்தான் கொப்பளிக்கும். ஆனால் சிவராமனுக்கு இப்பொழுதெல்லாம் அழுகைதான் வந்தது. ஒன்றை நினைக்கும்முன்பே கண்கள் கலங்கி விடுகின்றன. சுய பச்சாதாபம். சொல்ல முடியாமை. சொன்னாலும் காது கொடுத்து வாங்கி, அதைச் செய்ய நேரமில்லை எவருக்கும். ({தன் கஷ்டம் யாருக்கும் புரிவதில்லை.}) தனக்குள் அழுது கொண்டிருக்கிறார் அவர். உடல் நலம் அவருக்கு ஒத்துழைக்கவில்லை. அதனால் அதைப் போட்டு வைத்திருக்கிறார்.

      ஆனாலும் அவர் காரியங்களை இன்றுவரை அவரேதான் செய்து கொள்கிறார். மெத்தையைத் தூசி தட்டுவது, நாற்காலி, மேஜைகளைத் துடைப்பது, அலமாரியைச் சுத்தம் செய்து, வெளியே எடுத்த புத்தகங்களைத் திரும்ப அடுக்குவது, ({அறையிலிருக்கும் ஆளுயரக் கண்ணாடியை அழுக்குப் போக விபூதி போட்டுத் துடைப்பது}) என்று. வேலைக்காரப் பெண் தரையைக் கூட்டுவது அவருக்குப் போதவில்லை. அது கூட்டி முடித்துப் போனபின்புதான் அங்கங்கே தலைமுடி சுற்றிச் சுற்றிப் பின்னிக்கொண்டு தரையில் வட்டமிடுகிறது. எடுத்துப் போட்டு மாளவில்லை. அதை அதனிடம் சொல்லவே தயக்கம் இவருக்கு. அது ஏதாச்சும் எடக்கு மடக்காகப் பதில் சொல்லி வைக்கப் போக...ஏண்டா கேட்டோம் என்று துக்கப்படவா? மற்ற அறைகளின் முடிக்கற்றைகளெல்லாம்  தன் அறைக்கு வந்து விடுகிறதோ என்று தோன்றியது இவருக்கு. வரத்தான் செய்கிறது. சந்தேகமில்லை.

      ({நேர் எதிர் பால்கனி ஜன்னல். ஆளுயரத்திற்கு மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, திறந்து கிடக்கிறது. அது வழியாகக் காற்று பிய்த்துக் கொண்டு அடிக்கிறது. வெள்ளம் ஓரிடத்தில் கசடுகளைச் சேர்ப்பதுபோல் தன் அறைக்குள் வந்தடைகிறது படையும். வீட்டுக்குள் வைத்து தலை வாராதீர்கள் என்று சொன்னால் யாரேனும் காதில் வாங்கினால்தானே? அப்படியே தலை கோதினாலும் முடியை விரலில் சுற்றி எடுத்து முடிச்சிட்டுக் கொண்டு குப்பையில் போட வேண்டாமா?}) }இதென்ன வீடா அல்லது பார்பர் ஷாப்பா? அங்கே கூட ஒராள் எழுந்ததும் கூட்டி மூலையில் ஒதுக்கி விடுகிறானே? அது தொழில் நியாயம் என்றால் இங்கே வீட்டு நியாயம் ஏன் இப்படிக் கிடந்து  சீரழிகிறது? ({பொறுமிப் பொறுமி என்ன பயன்? சுத்தம் சோறு போடும் என்றால் அப்ப வேலைக்குப் போக வேணாமா? என்று கிண்டலாய்க் கேட்கிறான் மகன்? })

      அது கிடக்கட்டும்...எது எப்படியிருந்தென்ன? இந்தப் பாழாய்ப்போன ஃபேனை மட்டும் துடைத்துச் சுத்தமாக்குவதற்கு இன்னும் வேளை வரவில்லையே? ஒட்டடைக் குச்சி கொண்டு சுவற்றில், உத்தரத்தில் படிந்திருக்கும் ஒட்டடைகளை, தூசிகளைக் கூட வாயில் துணியைக் கட்டிக் கொண்டு அகற்றி விடுகிறார்தான். இந்த சீலிங் ஃபேனைத் துடைக்க மட்டும் இன்றுவரை வாய்க்கவில்லை. என்னவோ ஒரு மனத் தயக்கம்.

      நடு அறையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பண்ணி விடுவோம் என்றால் மனதின் மூலையில் சிறு பயம். ஸ்டூலில் ஏறி நின்றாலும், கையை உயர்த்தித்தான் ஃபேனின் காற்றாடிகளைத் துடைத்தாக வேண்டும். கையை உயர்த்தும்போது தலையையும் உயர்த்தியாக வேண்டியிருக்கிறது. அப்போதுதான் அந்த விபரீதம் நடக்கிறது. தலை ஏன் அப்படி சுற்றுவது போல் பிரமை ஏற்படுகிறது? கண்கள் ஏன் மேல் நோக்கிச் செருகுகின்றன? ({ எட்டி, இறுக்கிப் பிடிக்க சுவர் இருக்கிறது என்றால் அது ஃப்ளாட்டாகவல்லவா நின்று கொண்டிருக்கிறது? அங்கே ஒரு பிடியில்லையே? கையை வைக்கலாமேயொழிய பிடி கி்டைக்காதே?அப்படியிருக்கையில்} }தலைகிறுக்கிக் கீழே விழுந்து வைத்தால்? ..

      முடிந்தது கதை. பிறகு நொண்டிக் கழுதைதான். அந்தச் சிரமத்தை யாருக்கும் வைக்கக் கூடாது. தனக்கும் கஷ்டம். மற்றவர்களுக்கும் சிரமம்...உபத்திரவம்...வேதனை. (ஆக அது சாத்தியமில்லை. )

      இப்படி சாத்தியமில்லை...சாத்தியமில்லை என்றே நாளும் பொழுதும் ஓடி விட்டது, ஃபேனும் பிசினாய் மசி போல் ஒட்டிக் கொண்டு அழுக்கு அடைந்து கிடக்கிறது. அடைந்திருக்கும் அழுக்கே அதன் வேகத்தைக் குறைக்கிறதோ என்கிற அளவுக்கு சந்தேகமும் வந்துவிட்டது.  அதன் நிறமே மாறி விட்டது. அறைக்கதவை அடைத்தால் ஒரு மாதிரி வாடை வருகிறது. {{அது அந்த அடைஅழுக்கு நாற்றம்தானோ? {ஏதேனும் பல்லி கில்லி மேல் தட்டில் செத்து விழுந்து ஒட்டிக் கொண்டிருக்குமோ? என்ன கண்றாவி இது! சமீபத்தில் கீச்...கீச்...கீச்...என்ற சத்தம் வேறு கேட்க ஆரம்பித்திருக்கிறது. எண்ணெய் போட வேண்டும். சத்தம் நிற்கும். அது சுத்தம் பண்ணி பிறகு செய்ய வேண்டியது.} }

      பாதுகாப்பாய் முதலில் நம்மை நிறுத்திக் கொண்டு அந்த வேலையைச் செய்தாக வேண்டும். தான் செய்தால்தான் உண்டு. நிச்சயம் வேறு யாரும் அதைச் செய்துவிடப் போவதில்லை. மகனோ, மருமகளோ, மனைவியோ யாரும் எதையும் கண்டுகொள்ளப் போவதில்லை. அவர்கள் அறையில் உள்ளவைகளைச் சுத்தமாய் வைத்துக் கொள்ளவே அவர்களுக்குத் துப்பில்லையே? {{அதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை. இதில் தன்னை எங்கே கவனிக்க? }}

      அதென்ன வீடாகவா கிடக்கிறது? எத்தனை சதுர அடிக்கு வீடு வாங்கி என்ன புண்ணியம்? கண்ட கண்டதையெல்லாம் வாங்கிக் குவித்தால் அது பங்களாவாய் இருந்தாலும் பத்தாதுதான். {{முதலில் அவர்கள் அறையை நிரப்பி, பிறகு சும்மாக்கிடந்த இன்னொரு அறையையும் அடைத்து (த்ரீ பெட் ரூம் ஃப்ளாட்) இப்போது உறாலும் நிரம்பி வழிகிறது. கலை எழில் மிளிர வீட்டை அழகு படுத்துகிறார்களாம்...!}} அவர்கள் செய்தது அவர்களுக்கே இப்போது வினையாய்! வாங்கின பொருளெல்லாம் குவிந்து கிடக்க, தொடர்ந்து வைத்திருப்பதா, தூக்கி எறிவதா?

      தூக்கி எறிஞ்சிடலாம்...தூக்கி எறிஞ்சிடலாம்...இவர் மனையாள் வாசுகிதான் சொல்வாள் இதை. நீ அடிக்கடி இதைச் சொல்றதப் பார்த்தா ஒரு நாள் என்னையும் உங்களை அறியாமத் தூக்கி எறிஞ்சிடுவேள் போல்ருக்கே.{{..மனுஷன் உபயோகமில்லேன்னா அவ்வளவுதானா? {தூங்கிறபோது மாடிலேர்ந்து கீழே போட்ருவேளோ?} }

      இவர் பேச்சு அவர்களுக்குப் பிடிக்காதுதான். ஆனாலும் தோன்றுவதைச் சொன்னால்தான் மனசு ஆறுதல்படுகிறது. {{நினைக்கிறதைப் பேசக் கூட எனக்கு உரிமையில்லையா? வாயுமா அடைபட்டுப் போகணும்? ஏதோவொரு விதத்தில் அந்தப் பேச்சு தன்னை சுட்டுகிறதுதானே? }}

      தூசியெல்லாம் அடிக்க முடியாது....ஆளக் கூப்பிட வேண்டிதான்....

      அதானே பார்த்தேன்...எங்க களத்துல இறங்கிடப் போறாங்களோன்னு...?

      காச விட்டெறிஞ்சா ஆச்சு....செய்திட்டுப் போறான்.....கூப்பிட்டுவிட்டா செய்றதுக்கு வரிசைல நிக்கறது ஆட்கள்...!

      வார்த்தைகளைக் கேட்டீர்களா? எப்டீ.?...விட்டெறிஞ்சா.!...-என்ன திமிர் பாருங்க...? சம்பாதிக்கிற காசுக்கான மரியாதையைக் கேளுங்க?  இவனுங்களுக்கெல்லாம் இப்டி இஷ்டத்துக்குச் சம்பளம் கொடுக்கிறதே தப்புங்கிறேன்....கஷ்டப்பட்டு பணம் சம்பாதிச்சாத்தான் அதோட அருமை தெரியும்ங்கிறேன்.{{...அந்தக் காலத்துல நாலு காசு பார்க்க என்ன பாடு பட்டிருக்கு? என்ன உழைப்பு  உழைச்சிருக்கு? இவ்வளவுதானா கூலின்னுல்ல இருந்திருக்கோம்? அந்த அருமை தெரியுமா இவங்களுக்கு? அதையே குருவி சேர்க்கிறமாதிரி பார்த்துப் பார்த்து சேர்த்ததுனாலதான இன்னைக்கு இவனுங்க இந்தப் பேச்சு பேச முடியுது? அதை எவனாவது உணருவானா? வெட்டிப் பசங்க...}.}

      தெனம் ஏழெட்டு மணி நேரம் வேலை செய்துதாம்ப்பா இந்தக் காசைச் சம்பாதிக்கிறோம்...சும்மா ஒண்ணும் வந்திடலை.....

      அப்போ?  சிக்கனமா செலவு செய்யணும், சிறுகச் சிறுகச் சேமிக்கணும்...(.(இவங்க வாங்குற சம்பளத்துக்கு பெருகப் பெருகச் சேமிக்கலாம்தான்)} ங்கிற எண்ணமே இருக்கிற மாதிரித் தெரிலயே...சேவிங்க்ஸ் பாங்குல பணத்தைத் தூங்க வச்சு என்னடா புண்ணியம்? எவனாவது சைபர் க்ரைம் திருடன் சுருட்டிட்டுப் போகவா? அப்பப்ப எடுத்து எஃப்.டி.ல போடுங்க....அப்பத்தான பாதுகாப்பு...? எத்தனவாட்டிடா சொல்றது உங்களுக்கு...? ஆபீஸ் வேலையத் தவிர வேறே எதுவுமே செய்ய மாட்டீங்களா? திங்க, தூங்க, பேள...இதானா தினசரித் தியானம்?

       மத்த எல்லாத்துக்கும் உங்களுக்கு ஆள் வேணுமா? சுயமா செயல்பட மாட்டீங்களா?  ஆபீஸ் போக வேண்டிது...சனி...ஞாயிறானா வெளில ஊர் சுத்திட்டு ஓட்டல்ல கண்டதைத் தின்னுட்டு வீட்டுல வந்து விழ வேண்டிது....அன்றாடம் கை வௌங்கி சமைக்கவே துப்பில்லையேடா உங்களுக்கு? அதையும் வெளிலல்ல வாங்கித் தொலையுறீங்க? எவனோ, என்னைக்கோ பண்ணினதை ஃப்ரெஷ் டுடேன்னு உங்ககிட்ட வந்து கதவத் தட்டி நீட்டறான்.  ஈஈன்னு இளிச்சிண்டு மதிப்பா வாங்கி முழுங்கிறீங்க...{{அவன் என்னவோ ஓசில கொடுத்த மாதிரி}}....உங்களையெல்லாம் திருத்தவே முடியாதுடா...!.

      எனக்காக இதச் செய்யுங்கோன்னு உங்ககிட்டயெல்லாம் ஒண்ணு சொல்றதுக்கே எனக்குக் கூச்சமா இருக்கு....இந்த வயசுல என் வேலையை நான் பார்த்துண்டாலே ரொம்ப மதிப்பாக்கும்னு நினைக்க வேண்டிர்க்கு...{{ஏன்னா...நான் ஒண்ணு சொன்னா எனக்கு அதை உடனே செய்யணும்...அது உங்ககிட்டே இல்லையா? பத்துத்தரமில்ல சொல்ல வேண்டிர்க்கு....}}.

      என்னென்னவோ நினைத்துக் கொண்டார். இன்று எப்படியும் அந்த ஃபேனைத் துடைத்து சுத்தம் செய்து விடுவது என்று முடிவு செய்து கொண்டார். வீட்டில் மொத்தம் ஆறு ஃபேன்கள் ஓடுகின்றன. அதில் ஒன்று     24 x 7. அதை அவர் அப்படித்தான் சொல்கிறார். கேட்டால் சிரித்துக் கொள்கிறார்களே தவிர தாக்கம் உணரப்படுவதில்லை.

      ஆள் இல்லாத எடத்துல எதுக்கு வேஸ்ட்டா  ஃபேன் ஓடுது?

      ஒண்ணுக்குப் போகப் போனேன். அதான் உடனே வந்திடுவனே...அதுக்குள்ள ஒரு தரம் அணைச்சுப் போடணுமா? - மனையாளே இப்படிச் சொன்னால்? {{மூத்த தலைமுறை என்று பெயர். அவளுக்கே நம் சுட்டிக் காட்டல் எரிச்சல் படுத்துகிறது.}} பிறகு மற்றவர்களைச் சொல்லி என்ன பயன்? நாம் வழிகாட்டியாய் இருக்க வேண்டாமா? ஒரு இடத்தை விட்டுக் கடக்கும்போது அங்கு ஓடும் ஃபேனை அணைக்க வேண்டும் என்பதை ஒருவர் சொல்லியா தெரிய வேண்டும்? சொல்பவன்தான் பகையாளி. நல்லது செய்தால் மதிப்பில்லை இந்நாளில்...! எத்தனை முறைதான் எழுந்து போய் அணைப்பது? அதுக்குள்ளயும் அணைச்சாச்சா? தரித்திரம்...! இந்த வார்த்தை அந்த செயலுக்கா அல்லது எனக்கா?

      ச்சே...!.. இந்தப் பெரிசு தொல்லை தாங்க முடிலப்பா...!..பேசாம இடம் மாத்திர வேண்டிதான்.....- கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் என்னவளும்...! எனக்குக் காதில் விழாது என்ற நினைப்பு.! நல்ல பசங்கதான் ஆனாலும் சமயத்துல இப்படியும் முனங்குறாங்களே?அவ என்ன பெரிசில்லையா? சிறிசா? ஒருவேளை நச்சு நச்சென்கிறவர்கள்தான் பெரிசோ? {{சோறு கிடைத்தால் போதும் என்று வாய் மூடிக் கொத்தடிமையாய்க் கிடக்கிறவர்கள் வீட்டுக் காவல் நாய் போலும்...! நீ அந்த வகைதான்...மனுஷன்னா கொஞ்சமேனும் சுரணை வேணும். நாம வளர்த்த பிள்ளைகள் விட்டேத்தியா இருந்தா....பரவால்லன்னு விடுவியா? அதைக் கண்டிக்க வேண்டாமா?}} நல்லதை எடுத்துச்  சொல்ல வேண்டாமா? நாம சொல்லாம வேறே யார் சொல்லுவா? ரோட்டுல போறவனா வந்து சொல்லுவான்?

      அவள் என்றோ மஷணை ஆகிவிட்டாள். பிள்ளைப் பாசம் கண்ணை மறைக்கிறது. கிருஷ்ணா ராமா....கிருஷ்ணா ராமா......!

      போகட்டும்...இன்று துவங்கிய வேலையை முடிக்கப் பார்ப்போம்.

      ஏற்றி விட்ட ஏணி தட்டுத் தடுமாறி எழுந்து நின்றது.

      ஏணி என்ற அந்தச் சொல் எதையோ உணர்த்தியது இவருக்கு. ஊறுகாய், ஊறுகின்ற காய், ஊறிய காய்...வினைத்தொகை. ஏணி...ஏற உதவும் ஏணி, ஏற்றி விட்ட ஏணி....! - தனக்குத்தானே உள்ளுரச் சிரித்துக் கொண்டார்.

      {{நாலு எட்டு வைப்பதற்குள் எட்டி கதவு நிலையைப் பிடித்துக் கொண்டது.}} கதவுக்கு வெளியே அந்த ஃப்ரிட்ஜ்ஜின் பின்னால் சுவற்றில் சாத்தி வைத்திருந்த அலுமினிய ஏணி எங்கே? கொண்டு வந்து சாத்தி நிறுத்திய பிறகு இவர்களுக்கு அது பயன்பட்டதா ஒரு நாளாவது? அந்த அபார்ட்மென்டுக்குப் பயன்படட்டும் என்றே வாங்கியிருப்பார்களோ? ரொம்ப தாராளம்தான்...!

      அது கீழ போயிருக்குப்பா...... - ரமணனின் பதில். வாசுகி பிள்ளையை நோக்கினாள்....அவன் உதட்டில் விரல் வைத்தான்.

      அதுவா நடந்து போயிடுச்சோ....? எப்ப மேல வரும்? கேட்கத் தோன்றியது இவருக்கு. அது அவனுக்கே தெரியாது..

      இப்ப எதுக்கு அதைத் தேடிண்டு? எப்டிப் போச்சோ அப்டியே திரும்ப வரும்.  தேமேன்னு உட்காருங்கோ....

      ரூபாய் மூவாயிரம் கொடுத்து ஏணி வாங்கிய பின்பாவது வேலை நடைபெறும் என்று பார்த்தால் பிறகும் வேலையாள் வந்துதான் அதைச் செய்தாக வேண்டும். இவர்களே செய்வதாய் இல்லை. உடம்பு வணங்காது.  {{அதாவது வேலையாளுக்கு வசதி செய்து கொடுக்கிறார்கள். தாங்கித் தடுக்கிடுகிறார்கள். அது கிடக்கட்டும்.}} }வாங்கிய பலனுக்கு முதலில் நம் வீட்டு வேலைகளை முழுவதுமாய் முடித்துக் கொண்டு பிறகு இரவல் கொடுக்கக் கூடாதா?

       பாத்திரம் தேய்த்துக் கூட்டும் வேலைக்காரம்மாதான் அதையும் செய்தது. தினமும் ரெண்டு ஃபேன் என்று துடைக்க ஆரம்பித்து நாலு ஃபேன் துடைத்து முடிப்பதற்குள் அதற்கு உடம்புக்கு முடியாமல் ஆகிப் போனது. நமக்கு ஓட்டடையும் தூசியும் ஆகாதென்றால் அதற்கு மட்டும் ஒத்துக்குமா? அதுவும் மனித ஜீவன்தானே?{{இந்தச் சாக்கில் லீவு போடாவிட்டால் பிறகு எப்பதான் போடுவதாம்?

      (ஒரு வாரம் ஆச்சே...அந்தம்மா வரக் காணலை....சம்பளம் குறைப்பேளா மாட்டேளா...? குறுகுறுத்த மனதுக்கு ஒத்தடமாய் இதைக் கேட்டு வைத்தார் சிவராமன்.

      சம்பளம் குறைக்கிறதாவது? அதல்லாம் அந்தக் காலம்...! பண்ணினா வேலையை விட்டு நின்னுடுவா....இன்னிக்கு அவாளுக்குத்தான் கிராக்கி...மேன்யூவல் லேபருக்குத்தான் இன்னைக்கு மதிப்பு...! இந்த ஏரியாவுல அங்கங்கே பொழுது விடிஞ்ச ஜோர்ல மொபெட்டும், சன்னியுமா குறுக்கும் நெடுக்கும் பறக்கிறதே...அதெல்லாம் யாருன்னு நினைச்சேள்...எல்லாம் இவாதான். ஒவ்வொருத்தர் கைலயும் பத்துப் பதினைஞ்சு  வீடாக்கும். மாசம் இருபதாயிரம் சம்பாதிக்கிறா. நடந்து போய் ஆகாது. சர்ரு...சர்ருன்னு பறந்துண்டிருக்கா..நிக்க நேரமில்லை அவாளுக்கு..நீங்க புதுசா எந்த வேலை சொன்னாலும் அதுக்குத் தனிக் காசு....அதுவும் சொன்ன நாள்ல நடக்காது. அவாளுக்கு ஒழியறபோது வந்து செய்து கொடுத்திட்டுப் போவா....கருணை வைக்கணும்....!}}

      நின்று போனது அந்தப் பணி. அடுப்படியும், இவர் அறையும்தான் மிச்சம்.. கண்டு கொள்ளவேயில்லையே யாரும்? மறந்தே போயாச்சு போலிருக்கு...போயே போச்சு...போயிந்தே...!

      டியிறங்கிக் கொண்டிருந்தார் சிவராமன். மொத்தம் ரெண்டு மாடிதான். கீழே கார் பார்க்கிங். அவர் எப்பொழுதும் லிஃப்ட்டைப் பயன்படுத்துவதில்லை. பயம். ஒரு முறை அதில் ஆசையாய் நுழையப் போக அன்று பார்த்துக் கரன்ட் போனது. சின்ன விஷயத்துக்குக் கூட மனுஷனுக்கு யோகம் இ.ருந்தாத்தான் நடக்கும். கிரகம்.   உள்ளே வகையாய் மாட்டிக் கொண்டார். {{லைட் இல்லை.  இருக்கும் குருட்டு வெளிச்சத்தில், பதற்றத்தில், என்னென்னவோ பட்டனை அமுக்கி அமுக்கிப் பதறிப் போனார். வியர்த்து வடிந்து விட்டது நிமிஷத்தில். வெளியே யாருக்கும் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை. எமர்ஜென்ஸி பெல் வீச்சு வீச்சென்று அடித்துக் கலக்கியும், யாரும் அதை நுணுகிக் காதில் வாங்கியதாகவே தெரியவில்லை. அதான் ஒவ்வொரு வீட்டிலும் அணைக்காத டி.வி. சதா சர்வகாலமும் காது கிழிய அலறிக்கொண்டேயிருக்கிறதே...! அதை மீறி யாருக்குத்தான் காதில் விழும்? }

      உள் கதவு வெளிக் கதவு என்று சாத்தியிருந்த நடு இடுக்கு வழியே தெரிந்த கோடு போன்ற இடைவெளியில் சற்றே காற்று வர அதனருகில் மூக்கை வைத்து கஷ்டப்பட்டு மூச்சை இழுத்துக் கொண்டார். சாதாரணமாய் இருந்திருந்தால் கூடச் சமாளித்திருக்கலாம். மனதில் தோன்றிய பயம்...மூச்சே நின்று விடும்போல் உணர வைத்து நெஞ்சு படபடத்து மரண பயம் வந்து விட்டது. கீழே போனாரே மனுஷன்...என்ன ஆனார்? ஏதானார்?  யாருக்கேனும் பிரக்ஞை வேண்டுமே? ஊறீம்....தன்னைப்பற்றிய எண்ணமேயில்லையே எவருக்கும்? யார் செய்த புண்ணியமோ...கீழ் வீட்டுப் பையன் பார்த்துவிட, எமர்ஜென்ஸி கீயைக் கொண்டு வந்து கதவைத் திறக்க, இரண்டடி பள்ளத்தில் இருந்தார் இவர்.

      அப்டியே இருங்க அங்கிள்...பயப்படாதீங்க...நா தூக்கிடறேன்...என்றவாறே கட்கத்தில் கையைக் கொடுத்து ஒரு இழு இழுத்தானே பார்க்கலாம். நா என்ன இளந்தாரியா...இந்த வேகத்துல இழுக்கிறான்? மடப்பய.மவன் ...பார்த்துத் தூக்க வேண்டாம்...? - நினைத்துக் கொண்டாரேயொழிய சொல்ல முடியுமா? பாழாய்ப் போன கரன்ட் அன்று மாலை வரை வரவேயில்லையே? காலில் முட்டிக்குக் கீழே சிராய்ப்புகள். யாருக்கும் தெரியாமல் தேங்காய் எண்ணெயைத் தடவி விட்டுக் கொண்டார் சிவராமன். கட்கத்தில் கை வைத்துத் தூக்கினானே...அங்கே ஷேவ் பண்ணி வருஷமாச்சே...! என்ன நினைத்துக் கொண்டானோ? கருமாந்திரம்....!

      {{லிஃப்ட்டுக்கு பேட்டரி போடுங்கோ...போடுங்கோன்னு ஆயிரம் தடவை சொல்லியாச்சு...யாரும் ஒத்துக்கலை...கரன்ட் எப்பயாச்சும்தானே போறது...எதுக்கு பேட்டரிங்கிறா? எட்டு வீட்டுல இருக்கிறவங்ககிட்டே ஒத்துமையில்லை.... தன் பேச்சு எடுபடாது என்று தெரியும்தான். போதாக்குறைக்கு பக்கத்து அபார்ட்மென்ட்களில் பேட்டரிகள் திருடு போய்விட்டன என்று வேறு தகவல் வர அந்தப் பேச்சு அத்தோடு சமாதியாகிப் போனது. }}

      எப்பொழுதாவது கீழே போக நேரும்போது படிகளையே பயன்படுத்தினார் சிவராமன். காலுக்கும், கால் முட்டிகளுக்கும் கொஞ்சமாவது இயக்கம் இருக்கட்டும் என்று அதைச்செய்தார். இப்பொழுது முதல் மாடிக்கு வந்து விட்டார். நாலு வீடுகள் எதிர் எதிராக. ஒவ்வொருவராகக் கதவைத் தட்டினார். இல்லை இல்லை என்றார்கள். நீங்க ஏன் வந்தீங்க தாத்தா என்றது பேத்தி போல் இருந்த ஒரு குட்டிப் பெண். நாலு வீட்டிலும் இல்லையென்றால் பிறகு எங்கேதான் போயிற்று? ஒருவேளை மேலேயுள்ள மற்ற மூன்று வீ்டுகளிலும் கேட்டுவிட்டுப் படியிறங்கியிருக்க வேண்டுமோ? அதிலும் ஒரு வீடு பூட்டியல்லவோ கிடக்கிறது. மீதி இரண்டு. அவர்கள் யாரும் வாங்கியிருக்க வாய்ப்பில்லை. புதிய வீட்டிற்கு இப்பொழுதுதான்  புதிதாய் வந்தவர்கள்.

      இதென்னடா வம்பாப் போச்சு...? மூவாயிரம் போட்டு வாங்கின அலுமினிய ஏணியை எங்க போச்சுன்னு தெரியாம, தனக்கும் பயன்படாம, அதுபத்தின நினைப்பே இல்லாம இப்டி இருக்காங்களே? எங்ககிட்ட இல்லையேன்னு வேணுமின்னே சொன்னா? யாருக்குத் தெரியும்?உள்ளே பூந்தா பார்க்க முடியும்?   நாமளே சிரமப்பட்டுச் செய்திடுவோம்னு முனைஞ்சாலும் காரியம் ஆக மாட்டேங்குதே? இதென்ன கஷ்டகாலம்....?

      மனம் நொந்தவராய் வந்ததுதான் வந்தோம்...கீழே கார் பார்க்கிங்கில் சற்று உலாவுவோம்...அது எப்படித்தான் இருக்கிறது என்று முழுசாகக் கொஞ்சம் அளப்போமே...என்று பதவாகமாய் தரைத் தளத்தை நோக்கிக் கீழே இறங்கினார்..

      {{ஈரம் பாலித்திருந்தது கார் பார்க்கிங் ஏரியா. அடிக்கும் நெருப்பு வெயிலுக்கு அஞ்சாமல் படிந்திருக்கும் பசுமையான சொத சொத  ஈரம். சாலையில் நாலடி தோண்டினால்  தாங்க முடியாத உப்புத் தண்ணீர். வற்றாத, எந்தக் கோடையினாலும் வற்ற வைக்க முடியாத சதுப்பு நிலக் கசடுகளடர்ந்த பிசின் ஈரம்  பாலித்த இடம். அந்தப் பகுதியின் பல இடங்களில் குளங்களாயத் தேங்கி நிற்கும் அடர்த்தியான நீர்த்தடங்கள். கொழ கொழவென்று மிதக்கும் துர்நாற்றப் பாசி படர்ந்த பச்சைத் தண்ணீர். என்னென்னவோ செத்து வேறு மிதக்கிறது.  மூக்கைப் பிடித்துக் கொண்டுதான் நகர்ந்தாக வேண்டும். அவ்வளவு கம கம மணம். }}

      செப்டிக் டாங்க் நிரம்பி வெளியே கசடு கசிந்து கொண்டிருந்தது. வாடை ஆளைத் தூக்கியது. கார்ப்பரேஷன்காரன் கண்ணில் படாமல் இருக்க வேண்டும். அதற்குள் க்ளீன் பண்ணியாக வேண்டும். மாதாமாதம் உண்டாகும் அதற்கான செலவு. காற்றின் போக்கில் அடிக்கும் நாற்றத்தில் துண்டால் வாயையும் மூக்கையும் இறுக்கப் பொத்திக் கொண்டார் சிவராமன். சொந்த வீடு வாங்கி, மாசா மாசம் வாடகை கொடுக்கிற மாதிரி மெயின்டனன்ஸ் செலவு மூவாயிரம் அழ  வேண்டிர்க்கு..! அபார்ட்மென்ட்ல வீடு வாங்குற மாதிரி ஒரு தப்பு எதுவுமில்ல….!

      கண்ணில் பட்டது அந்தக் காலி அறை. செக்யூரிட்டி கிடையாது. ரூம் மட்டும் இருக்கிறது. இன்னும் சில்லரை வேலைகள் பாக்கியிருக்கிறதே...! வெறுமே  கதவைச் சாத்தி வைத்திருக்கும் அதற்குள் மெல்லத் திறந்து எட்டிப் பார்த்தார். .

      அட....ஏணி இங்கிருக்குதே...!? கண்ணைக் கசக்கி விட்டுக் கொண்டார். பார்வை என்ன இத்தனை மங்கிக் கிடக்கிறது? மூக்குக் கண்ணாடி  இல்லாமயே வந்தாச்சா? அட ராமா...!  ரொம்பத் தப்பாச்சே...!   சரியாப் போச்சு....அநாதை மாதிரில்ல கிடக்கு? எவனாச்சும் லவுட்டிட்டுப் போயிட்டா? கேட்க நாதியில்லையே...? நல்லவேளை...என் கண்ணுல பட்டது.....பொழைச்சிது.....! அத்தனையையும் அவரே சொல்லிக் கொண்டு இரு கைகளாலும் அணைத்துத் தூக்கினார். நாலே நாலு படிகளானாலும் இணைத்திருக்கும் ஸ்டான்டோடு சேர்த்து கனக்கத்தான் செய்கிறது. அலுமினிய ஏணி இத்தனை கனமா? இதத் தூக்கிட்டு எவன் இரண்டு மாடி ஏறுவது? நினைத்த கணத்தில் லிஃப்டில் நுழைந்தார். கதவைச் சாத்தி பட்டனைத் தட்டினார்.

      இன்னைக்கு எப்டியும் வேலையை முடிச்சிப்புடணும்....இதுக்கு மேலே தாமதப்படுத்தக் கூடாது. திடீரென்று ஒரு வேகம் வந்தது. அந்த ஃபேன் அழுக்குக்கே திரும்பக் கொரோனா  வந்தாலும் போச்சு....! - சொல்லிக் கொண்டே லிஃப்ட்டிலிருந்து வெளியே வந்து ஏணியைத் தூக்கிக் கொண்டு சரசரவென வீட்டிற்குள் நுழைந்தார்.

      அறைக்குள் கொண்டு வைத்ததுதான் தாமதம். அந்தச் சத்தம் கேட்டு ஓடி வந்த வாசுகி....இதெங்கிருந்து கிடைச்சது உங்களுக்கு? நீங்க பாட்டுக்குத் தூக்கிண்டு வந்திருக்கேள்? என்றாள் படபடத்தவாறே.

      என்னடீ சொல்றே? கீழே செக்யூரிட்டி ரூம்ல அநாதையாக் கெடக்குடீ இந்த ஏணி...!...ரூமே வெறுமேத்தான் சாத்தி வச்சிருக்கு.பூட்டலை... எவனாச்சும் திருடிண்டு போனான்னா? அதுக்கு ஒரு பூட்டுப் போட நாதியில்லையா இங்கே?

      ஐயோ ராமா....உங்களுக்கென்னத்துக்கு இந்த வேலை? இந்த ஏணி நம்மளுது இல்லை. அழுக்கும் பிசுக்குமா..அரதப் பழசா....யாரோடதோ? பார்த்தாலே தெரில...? கர்மம்...கர்மம்...இப்டியா.நெஞ்சுல அணைச்சிண்டு செல்லமாத் தூக்கிண்டு வரணும்....! கிரஉறச்சாரம்...முதல்ல ஒரு குளியலைப் போடுங்கோ...ஏதேனும் வியாதி தொத்திக்கப் போறது. கொரோனாக் காலம் இன்னும் முழுசா தீரலையாக்கும்...! நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்....ஞாபகமிருக்கட்டும்....

      நான்தான் பூஸ்டரே போட்டாச்சே...என்னை இனிமே எதுவும் அண்டாது...என்ன சொன்னே? நம்மளோடது இல்லையா? பின்ன யாரோடது....? அப்போ நம்மது என்னாச்சு...ஏற்கனவே காணாமப் போயிடுத்தா...?

      ஆமா..கண் .காணாமப் போயிடுத்து...சொத்தை அள்ளிண்டு போயிடுத்து...இந்த வாய்க்கு ஒண்ணும் குறைச்சலில்லே...?. எதுத்த வீடு பூட்டிக் கெடக்கே...அங்கே மாட்டிண்டிருக்கு நம்ம ஏணி....சொல்லாமக் கொள்ளாம அவா ஊருக்குப் போயிட்டா...அவாளும் .மறந்து போயிட்டா..நமக்கும் ஞாபகமில்லே.....வந்தாத்தான் ஆச்சு....இதைச் சொல்ல வேண்டாம்னு பார்த்தேன்...சொல்ல வச்சுட்டேள்...அவா திரும்ப வந்துதான் ஆகணும்...போறுமா?

      அந்தப் போறுமா? என்ற சொல்லைக் கேட்க காது இல்லை சிவராமனுக்கு. அதற்குள் தூக்கி வந்த ஏணியின் மறுபக்க ஸ்டான்ட் கழன்று இரண்டாய்ப் பிரிந்து ஒன்று அவர் மேலேயும் இன்னொன்று தரையிலும் எனத் தடாலென்ற பெருத்த சத்தத்தோடு சரிய, ஐயையோ..என்னாச்சு....என்னாச்சுப்பா....? என்ற பதற்றத்தோடு மடியில் வைத்திருந்த கணினியைத் தலையணையில் தூக்கிப் போட்டுவிட்டு விழுந்தடித்து ஓடி வந்தான் பையன் ரமணன்.

      இந்த மனுஷனால என்னெல்லாம் பாடு? என்று பல்லைக் கடித்துக் கொண்டே  தன் பங்குக்குப் பதறியவளாய் செய்வதறியாது பிரமித்து நின்றாள் வாசுகி.

                              ----------------------------

       

     

                       உஷாதீபன்,   (ushaadeepan@gmail.com)                                                                   எஸ்.2 – இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171, 172)                                                 மேத்தா’ஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                                 ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                                                        மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188).

 

22 ஜூலை 2022

படத்திற்கு ஒரு கதை காவலன் காவான் எனின்.....

 

படத்திற்கு ஒரு கதை      காவலன் காவான் எனின்.....

                              -----------------------------------------------------



     ரசர் அப்படித் தன்னைக் காவலுக்கு அனுப்புவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை சம்புகன். மனம் குதூகலமடைந்தது.. அரச கட்டளையின் அடையாளமாய் அசுர பலம் கூடிவிட்டதாய் உணர்ந்தான்.

     என்னடாது...! தரையில் உட்கார்ந்தாலே ஐந்தடி உயரம் இருக்கிறோமே...! பாதம் முதல் கழுத்து வரை இந்தப் புஜ பல பராக்கிரமம் வியப்பாயிருக்கிறதே? ஒரு போர் வீரனுக்கான அடையாளங்கள்? ஊர்க்காவல் உத்தரவு... எப்படி சாத்தியமானது? எந்த சக்தி எனை ஆட்கொண்டது?

     கட்டுக் குடுமியை சிலிர்ப்பி அவிழ்த்து விட்டு எழுந்து நின்றான். வானம் தொட்டது போலிருந்தது. இந்த தேஜஸை வழங்கிய மாய சக்திக்கு என் பாதம் பணிந்த நமஸ்காரங்கள். குடுமியை முடிந்து தலைப்பாகையை இறுக்கினான். ஈஸ்வரோ ரக்க்ஷது....

     திப்பு மிகு பைரவரே...நீ்ர் எமக்குத் துணையா அல்லது நான் உமக்கா?

     அரசர் ஆணை.. அதனால் வந்திருக்கிறேன். உங்கள் ஆணைப்படியே என் இயக்கம்.

     நல்லது. நாம் இப்போது எதன் பொருட்டு இரவு நேரத்தில் இந்த நகர்வலத்தை மேற்கொண்டிருக்கிறோம்...அறிவீர்களா?

     அறிவேன் ஐயா....எளிய மக்கள் மிகுந்த உடல் போதைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள். அதனால் குடும்பங்கள் சீரழிகின்றன. உழைக்கும் வர்க்கத்தினரின் ஊதியம் ஒழுங்காக வீடு போய்ச் சேருவதில்லை. மந்திரிப் பிரதானிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு  எடுத்த முடிவாக ஒழுக்கக் கேடுகளை அழித்து ஒழிப்பதற்காக நாம் புறப்பட்டிருக்கிறோம்.

     ஆம்...மிகச் சரி. பகலில் உழைக்கச் செல்பவர்கள் இரவானதும் அவரவர் வீடு திரும்பி உறங்கி ஓய்வெடுக்காமல், பல இடங்களில் மயங்கி மண்ணடித்துப் போகிறார்கள். கேளிக்கை விடுதிகள் அதிகமாகி விட்டன. குதூகலமும், கும்மாளமும் கொக்கரிக்கின்றன. இன்று இந்த வேதபுரி நகரின் பகுதிக்கு மட்டுமே நாம் காவலை மேற்கொள்ள வேண்டும். குற்றவாளிகளைப் பிடித்து ஒப்படைக்க வேண்டும். வேதபுரி சேதபுரியாகிவிடாமல் காப்பாற்ற வேண்டியது நம் கடமை.

     நமக்கு அரசர் தந்த தலையாய  பணி. செவ்வனே நிறைவேற்றுவது கடமை. முக்கியமான ஒன்றைச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். சொல்லலாமா?

     தாராளமாக....நிறைவேற்றுவது என் சித்தம்.

     இந்தக் காவல் கண்காணிப்பை அமைதியாக, தடமின்றிப் பயன்படுத்த வேண்டும்.

     சற்று விளக்கமாகச் சொன்னால் புரிந்து கொள்ள ஏதுவாகும்...!

     அதாவது எந்தவொரு தடயமும் நம்மிடமிருந்து வெளிப்படக் கூடாது. குறிப்பாக நடக்கும் தவறுகளைக் காணும்போது சட்டென்று நீர் குரல் கொடுத்து விடக் கூடாது. என்னைப் பார்த்து, சைகை செய்து,  என் கைகளைப் பற்றி இழுத்துப் பதுங்கி, குறிப்பிட்ட இலக்கினைச் சுட்ட வேண்டும்.....உமது இயல்பான குணம் வெளிப்படாமல் நீர் உம்மை அடக்கி இருத்திக் கொள்தல் அவசியம். கருமமே கண்ணாக கடமையை ஆற்ற ஆயத்தமாக வேண்டும்.

     ஆகட்டும் ஐயா.....தங்கள் சித்தம் என் பாக்கியம்...! கை கோர்த்து தீமையை ஒழிக்க முன்னிற்பதே கருத்தான பணி.

     நல்லது.... பிரிந்து செல்லுங்கள். முதலில் நாம் அரண்மனைக்கு விலகிய தூரத்திலான   இந்த  வேதபுரிப் பகுதியில் நமது சோதனையைத் துவக்குவோம். இரகசியங்கள் அடங்கிய பகுதி. எங்கு சென்றாலும் நீர் எம் பார்வையிலிருந்து விலகி விடக் கூடாது. மனதில் கொள்ளுங்கள்....

                                ( 2 )

     ம்புகன் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, பாதங்களைப் பதவாகமாக வைத்து சத்தமின்றி முன்னேறினான். ஓரிடத்தில் சற்றுத் துல்லியமான ஒலியில் நிலை பெற்றான்.

     அந்தப் பேச்சுச் சத்தம் நிதானிக்க வைத்தது. அதிகாரிகள் அதிகமாகக் குடியிருக்கும் பகுதி. திட்டங்களை எவ்வாறு நிறைவேற்றுவது, அதன் முன்னேற்றங்களை எவ்வாறு மேலிடத்திற்குத் தெரிவிப்பது, பணியாளர்களை எவ்வாறு சாமர்த்தியமாய் வேலை வாங்குவது, சுணக்கமின்றி எப்படிப் பயன்படுத்திக் காரியத்தை சாதித்துக் கொள்வது என்பதான பேச்சின் போக்கு காதில் விழுந்த அளவு சம்புகனுக்குப் புரிய ஆரம்பித்தது.

     கேட்கக் கேட்க ஒன்று புரிகிறது. முழுப் பேச்சையும் கேட்டால்தான் துல்லியமாய் உணர முடியும். போதையில் விழுந்து கிடக்கும் மக்களைத் தேடி வந்தால், இங்கு வேறு ஒரு வகையான போதை பரவிக்கிடக்கிறதே! அதிகார போதை....!

     அதிகாரம் எளிய மக்களை நசுக்குகிறது. ஏமாற்றுகிறது. அறிந்தும் அறியாமலும் அவர்களை அடிமையாக்குகிறது. வார்த்தை மயக்கங்களுக்குப் படிகிறது.. மேலிடத்தோடு நெருக்கத்தை போலி என்றறியாமல் உணர்ந்து எதிர்பார்ப்புக்கும் மேலாகக் கடுமையாக உழைத்து தங்களை நசித்துக் கொள்கிறது உழைக்கும் வர்க்கம்.

     “இங்க பாருங்க பி.ஏ., நமக்கு யாரு வந்திருக்கா, வரலைங்கிறது முக்கியமில்லை...காரியம் ஆகுதா, இல்லையாங்கிறதைத்தான் கவனிக்கணும். செக்ரட்டரி மீட்டிங்குக்காக அன்யூவல் ஸ்டேட்மென்டை ஊர் போனதும் அனுப்பி வெச்சுடறேன்னு டைரக்டர் கிட்டச் சொல்லிவிட்டு வந்தேன். நேத்து சிகாமணிகிட்டச் சொல்லிப் போடச் சொன்னேன். அவரே தயார் பண்ணி, கம்ப்யூட்டர்ல டைப் பண்ணி, பிரின்ட் அவுட் எடுத்து எங்கிட்ட ஒப்புதல் வாங்கி இ..மெயில்ல அனுப்பியும் வச்சிட்டாரு....யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்ங்கிறதைக் கவனிக்கணும். இத்தனைக்கும் நேத்து மாநில பந்த். ஊரே மூடிக் கிடக்கு. அங்கங்க கூட்டம் கூட்டமா போலீஸ்...பல இடங்கள்ல கலகம், கலாட்டா...கல்லெறி...அத்தனையையும் மீறி எப்படித்தான் ஆபீஸ் வந்தாரோ....கடமையுணர்ச்ச்சி அதீதமா உள்ளவன், புறச் சங்கடங்களையெல்லாம் பொருட்படுத்துறதில்லை. கொக்குக்கு ஒண்ணே மதி, வேலைகள் பென்டிங் இருக்கக் கூடாதுன்னு மைன்ட்ல வச்சிட்டு, வந்து உட்கார்ந்திருக்கான் பாருங்க அந்த ஆளு...சிகாமணி நிச்சயம் வந்திருப்பாருங்கிற எண்ணத்துல ஃபோன் போட்டேன். அந்தாளே எடுக்கிறான்னா பார்த்துக்குங்களேன். நினைச்ச மாதிரி வலைய வீசினேன். அவனுக்கு எதிர்த்துப் பேசத் தெரியாது....சரி...சரின்னு மட்டும்தான் கேட்கத் தெரியும். பாஸ் சொல்லிட்டாரு செய்துடணும்ங்கிற முனைப்புதான் அந்தாளுக்கு மூக்குக்கு முன்னால நிக்கும்...ரொம்ப தெய்வ பக்தி உள்ள ஆளு...ஆட்டத் தூக்கி மாட்டுல போட்டு, மாட்டத் தூக்கி ஆட்டுல போட்டு எவ்வளவு தகிடு தத்தம் பண்றோம் நாம....இது எதுலயும் தலையைக் கொடுக்காத, தூக்கத்துல கூடக் கை நீட்டாத சுத்தபந்தன் அவன்.

     யாருகிட்டே சொன்னா வேலை ஆகும்னு கவனிக்கணும். வராதவங்களைப் பத்திக் கேட்டு, பேசி நேரத்தை வீணாக்கிறதை விட இது பெட்டர் இல்லையா? இதைத்தான் சுருக்கமாச் சொல்லியிருக்காங்க...வேலை செய்றவனுக்கு வேலையைக் கொடு...அல்லாதவனுக்கு சம்பளத்தைக் கொடுன்னு....என்ன நான் சொல்றது புரியுதா? இப்டித்தான் நீங்க நம்ம ஆபீஸ் ஸ்டாஃப்கிட்ட வேலை வாங்கக் கத்துக்கணும்....அஞ்சு விரலும் ஒண்ணாவா இருக்கு...எம்.பி.ஏ.வுல என்ன சொல்லித் தர்றாங்க...? இதைத்தானே? நிர்வாகம்ங்கிறது இந்த மாதிரிப் பல்வேறு கூறுகளைக் கொண்டது. அதை கரெக்டாக் கடைப்பிடிக்கிறவன்தான் சிறந்த நிர்வாகியாக் கணிக்கப்படுறான்.....

     சம்புகனுக்கு மனசே நடுங்கிப் போனது. அப்போ வேலை செய்றவங்க, செய்யாதவங்க, டபாய்க்கிறவங்க, டிராமாப் போடுறவங்க...இப்படி எல்லாரும் கலந்து பயணம் பண்றதுக்குப் பேருதான் நிர்வாகமா? கஷ்டப்படுறவன், உண்மையா இருக்கிறவன், உழைப்பையே தெய்வமா நினைக்கிறவன் என்னைக்கும் உழைச்சிக்கிட்டே இருக்க வேண்டிதானா? ஏமாத்தித் திரியறவன் அதையே தன்னோட ஆயுதமா வச்சிக்கிட்டு தப்பிச்சிக்கிட்டே இருப்பானா? இதென்ன அநியாயமா இருக்கு?

     சம்புகன் மனம் மிகுந்த வேதனைக் குள்ளாகியது. எல்லோருமே ஒரு பொறுப்பற்ற , விட்டேற்றியான மன நிலைக்குப் போய் விட்டார்கள். இன்னமும் கடமையுணர்ச்சியோடும், கஷ்டப்பட்டும் செயலாற்றுபவர்களை இது பாதிக்கக் கூடும். நம்ம கடமையை நாம செய்தோம்...அதுக்கு மேலே இதுல ஒண்ணும் இல்லை என்ற முதிர்ந்த நிலை எத்தனை பேருக்கு வாய்க்கும்?

     உடல் ரீதியான ஒழுக்கக் கேடுகளை ஆய்வு செய்வதற்குப் புறப்பட்டு வந்தால் இங்கு மன ரீதியான ஒழுக்கக் கேடுகள் பரவலாக விரிந்து கிடக்கிறது.  அதிகார போதை சீரான நிர்வாகத்திற்கு வழி வகுக்காது சீர்கேட்டை ஏற்படுத்துவதும், நல்லவர்களை அடிமைப்படுத்துவதும் கூட தேசத்தின் நலனுக்கு உகந்ததாகாதே....! தர்மத்தை ஒடுக்குதல் தகுமா?

     என்னுடைய கடமையுணர்வும் இந்தப் பாதையில்தானே இத்தனை ஆண்டுகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது? அன்னைக்கு  பந்த்தின் போது சிகாமணி மட்டும் ஆபீஸ் வரலேன்னா என் பில்லைக் கேஷ் பண்ணியிருக்க முடியாதே...! என் பெண்டாட்டி ஆபரேஷனுக்குப் பணம் கட்டியிருக்க முடியாதே...! என் வேலைதான் முதல்லன்னு எடுத்து செய்தாரே....அவரையா நம்ப அதிகாரி இப்படி ஏமாத்துறாரு...? இது அடுக்குமா? அதிகாரத்தைக் கைல வச்சிருக்கிறவங்க இப்படிச் செய்யலாமா? எல்லாப் பணியாளர்களையும் ஒரே மாதிரித்தானே ட்ரீட் பண்ணனும்? காலம் பூராவும் டபாய்க்கிறவனை கண்டுக்காம விடுறதா நிர்வாகம்? அவங்களுக்கு உரிய தண்டனையைக் கொடுத்து விலக்கிட்டு நல்ல நிர்வாகத்தை நிர்மாணிக்கிறதுதானே ராசாவா இருக்கிறவருக்கு அழகு...!

                           ( 3 )

     திரே பைரவன் சத்தமின்றிப் பாய்ந்து வருவது தெரிந்தது. சம்புகனின் கையைப் பிடித்து இழுத்து அது இருந்த பகுதிக்கு அழைத்துச் சென்றது. மறைந்து நின்று காட்டிய திசையில் பார்வையை ஓட விட்ட போது அந்த அதிசயம்...தன் கண்களையே தன்னால் நம்ப முடியாத பேரதிசயம் ...சம்புகனை நிலை குலைய வைத்தது.

     அரசர் பிரதானமாய் மெத்தையில் வீற்றிருக்க.... சுற்றியிருந்த அதிகாரிகள் தாங்கள் கொண்டு வந்திருந்த சூட்கேஸ்களைத் திறந்து கட்டுக் கட்டுகளாக அவர் முன்னே பரப்பிக் கொண்டிருந்தனர். இவ்வளவுதானா...மதிப்பீட்டிற்கு- அளவீடு குறைகிறதே? பங்கீடு பாதிக்குமே?  அரசர் கொதித்தார்.

     பைரவரே...வாருங்கள் போவோம்...நாம் வந்த சுவடு கூட இங்கே தெரியக் கூடாது...ஆபத்து..... மிகுந்த வேதனை....புறப்படுவோம்...காவலன் காவான் எனின்...

     அறம் குன்றும்...நாட்டிலுள்ள பசுக்களின் மடியில் பால் குன்றும்...வானம் பெயல் ஒல்லாது....வேதம் ஓதப்படுதல் நின்று போகும்.....இப்படி இன்னும்...இன்னும்.....!!!

     ய்...சோமாறிப் பியூனு.......என்னா இன்னைக்கு இவ்வளவு தூக்கம்....ஆபீஸ்  லீவு விட்டுட்டாகளா...? - சத்தமாகக் கேட்டவாறே அருகே வந்து அவன் முகத்தில் சல்லென்று தண்ணீரை அடித்தாள் அஞ்சலை....அலறிப் புடைத்து எழுந்த சம்புகன்....ஒன்றும் புரியாமல் பே...பே...என்று விழித்தவாறு மிரண்டு குன்றிப்போன தன் மெலிந்த திரேகத்தையே அதிசயமாய்ப் பார்க்கலானான்.

                     ---------------------------------------------------.

    

13 ஜூலை 2022

“தன்னை வென்றவன்“ சிறுகதை - உயிர் எழுத்து - பிரசுரம்-ஜூலை 2022

 

                                                                                             “தன்னை வென்றவன்“       -








       கிலாவிற்கு சட்டென்று விழிப்பு வந்ததும்தான்,  தான் வேறொரு வீட்டில் இருக்கிறோம் என்று புரிந்தது. புதிய இடம் என்று எங்கு போனாலும் அவளுக்குத் தூக்கம் வராது. எல்லாரும் தூங்கிய பின்னும் அவள் புரண்டுகொண்டேயிருப்பாள். ஆனால் இங்கு எப்போது தூங்கினோம் என்றே தெரியாமல் அசந்திருப்பதை உணர்ந்தாள். புகுந்த வீடு, புதிய வீடு, புதிய மனிதர்கள்... இனி உறவுகள்...!

      இதைப் புதிய இடம் என்று இனிக் கொள்ள முடியாது. அவள் இடமும்தான். தன் உடலை, எண்ணங்களை, நடத்தையை, செய்கையை, பேச்சை, ஏன் மூச்சையே... அந்த இடத்திற்கு, அந்த வீட்டிற்கு ஏற்றாற்போல் மாற்றிக் கொள்ள வேண்டும்.

      அருகில் குமார் அயர்ந்த உறக்கத்தில் இருந்தான். உனக்கு டயர்டா இருந்திச்சின்னாத் தூங்கு ஒண்ணும் பிரச்னையில்ல....என்று நேற்றிரவு அவன் சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக் கொண்டதை நினைத்துக் கொண்டாள். அடுத்தவர் மனதையும் எண்ணங்களையும் எடைபோடுபவனாய், அதனை மதிப்பவனாய்த் தோன்றியது.    

      “அது”தான் பிரதானம் என்று அவன் முனையவில்லை.  உறாலில் அப்பா, அம்மா, அண்ணா, மன்னி இவர்களுடன் அவனும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சட்டென்று ஒன்றை உணர்ந்தவனாய், நீ போய்ப் படு....அவளுக்கு டயர்டா இருக்கு போல....என்று அண்ணா சைகை செய்ய.....இருக்கட்டும்...அதுக்குள்ளேயும் என்ன தூக்கம்? என்று சொன்ன இவன்...அகிலாவைப் பார்த்து, உனக்குத் தூக்கம் வந்ததுன்னா...நீ போய்ப் படுத்துக்கோ.... என்றான்.  

      எல்லோரும் குடும்பமாய் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் சட்டென்று எழுந்து அறைக்குள் புகுந்து கொண்டு பொண்டாட்டியுடன் கதவைச் சாத்திக் கொள்வது என்பது ஏதோ வெட்கங்கெட்ட செயலாய்த் தோன்றியது இவனுக்கு. இரண்டு நாட்களாய் நடக்கும் இந்த நாடகம் அவனுக்குப் பொருந்தவேயில்லை.

      கல்யாண மண்டபங்களில் கூட சாந்தி மூகூர்த்த அறை என்று பிரித்து, தனியே அமைத்திருப்பதையும், பிற அறைகள் சற்றுத் தள்ளியே கட்டப்பட்டிருப்பதையும், அப்படி இல்லையென்றால் அம்மாதிரித் தனியான அறை எது என்று தேடி அதனையே சாந்தி முகூர்த்த  அறையாய்த் தேர்ந்தெடுப்பதும் வழக்கமாய் இருப்பதை நினைத்துக் கொண்டான்.

      சொல்லப் போனால் உறாலில் பலரும் படுத்திருக்கையில் அறைக்குள் புதிய மனைவியைக் கொஞ்சுவதும், அவளோடு விளையாடுவதும் கூட ஒரு சிறிய வீட்டில் அத்தனை பொருத்தமில்லாத செயல் என்றுதான் தோன்றியது இவனுக்கு. வெளியே லைட் எரிகையில் உறங்குவதற்குப் போதிய நேரம் ஆகாத வேளையில், மனைவியோடு அறைக்குள் சென்று விளக்கை  அணைப்பதும், கதவு இடுக்கு வழியாகத் தெரியும்  வெளி வெளிச்சம் அவர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்த்தி அவனுக்குள் ஒரு கூச்சத்தை ஏற்படுத்தியது.

      முப்பத்தைந்து வயதான இந்தத் தாமதமான பொழுதில்தான் திருமணம் செய்திருக்கிறான் குமார்.  அலுவலகத்தில் இப்போதும் கூட பெண் பணியாளர்களோடு நேருக்கு நேர் நின்று பேசியதில்லை. கோப்புகளை எடுத்துக் கொண்டு வந்து தன் முன் நின்று சந்தேகங்களை அவர்கள் கேட்கும்போது கூட, நீங்க  சீட்டுக்குப் போங்க...நான் பார்த்துச் சொல்றேன்...என்று கூறி அனுப்பி விடுவான். திரும்பவும் அருகே  வந்து நின்று எதுவும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, என்ன தீர்வோ அதைத் தன் கைப்பட எழுதியே அனுப்பி விடுவான். அவர்களுக்கு வேலை மிச்சம். அதுபற்றி இவனுக்குக் கவலையில்லை. இந்த வயதிலும் அவனுக்குள் அந்தக் கூச்சம் போகவில்லை. சில சமயம் எரிச்சலாகக் கூட இருந்தது அவனுக்கு. பெண்களின் அருகாமை அவனை மிரள வைத்தது..அதைத் தவிர்க்க அவர்களை விரட்டினான்.

      அது ஒழுக்கத்தின் அடையாளம் என்று கருதினான். அது தன்னோடு தொடர்வது நல்லதுதான் என்று நினைத்தான். படிக்கும் காலங்களில் கூட நாலு வீடு தள்ளியிருந்த ஜெயா சந்தேகம் கேட்க வருவாள். இது...இதுக்கென்ன அர்த்தம் என்று அவள் பாடப் புத்தகத்தில் சுட்டிக் காண்பிக்கையில் விரல்கள் மோதியிருக்கின்றன. ஸ்பரிசங்கள் பகிரப்பட்டிருக்கின்றன.  அதை அவன் அந்தக் கணமே தவிர்க்க விரும்பினான். இனிமே என்கிட்ட வராதே என்று முகத்திலடித்தாற்போல் கூறிவிட்டான் ஒருநாள். ஏன்? என்று கேட்ட அவளுக்கு அது அப்டித்தான் என்று மட்டும் சொன்னான். அழுது கொண்டே போய் விட்டாள் அவள். ஊரில்  பெண்களுக்கு என்று தனி உயர்நிலைப் பள்ளி வந்தபோது அவனுக்கு ஏற்பட்ட சந்தோஷத்திற்கு அளவேயில்லை. அப்பாடா...! தொல்லை விட்டது...!! அது நாள் வரை அந்தப் பள்ளியின் இடம் வெறும் கொட்டாரமாக இருந்தது. பள்ளிக்கான பெரிய கட்டடம் வந்து, பள்ளியும் நடைபெற ஆரம்பித்ததும் அந்தப் பகுதி வழியாக ஆற்றங்கரைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். ஒதுங்கியே இருப்போமே...எதற்கு வம்பு?

அலுவலகங்களில் சிற்சில சீனியர்கள் கொஞ்சம் அப்படி இப்படி இருப்பதைப் பார்த்திருக்கிறான். பார்த்துக் கொண்டுமிருக்கிறான். ஏனிப்படி சபலம் பிடித்து அலைகிறார்கள் என்று தோன்றும். வாயில் எச்சில் வழிய அலையும் நாயைப் போல நினைத்துக் கொள்வான். அவர்களின் சில்மிஷத்திற்கு  அந்தப் பெண் ஊழியர்களும் சிலர் பணிகிறார்கள் என்பதுதான் இவனுக்கு வியப்பாயிருந்தது. அனுமதிக்கிறார்களா அல்லது அவர்களே எதிர்பாராத கணத்தில் அது நடந்து போகிறதா? அப்படியானால் அதைத் தடுக்க வேண்டாமா? இந்த மாதிரி விளையாட்டெல்லாம் எங்கிட்ட வச்சிக்கிடாதீங்க சார்...என்று பட்டென்று முகத்திலடித்தாற்போல் சொல்ல வேண்டாமா? அப்படிச் சொல்லி விட்டால் அடுத்தாற்போல் கை நீளுமா?  அது இல்லையே? அப்படியாவது ஏதேனும் சலுகையைப் பெற்றாக வேண்டுமா? எதிர்பார்ப்பு இல்லையென்றால் இப்படி நடக்குமா? போகட்டும்...சபலக் கேஸ்...என்று தட்டிக் கழிக்கிறார்களோ?

      ஒரே இடத்தில், ஒரே அலுவலகத்தில் மாற்றமில்லாமல் பணியாற்ற வேண்டும் என்பது குடும்பத்தின் தேவையாயிருந்தது. அதற்கு அவர்களின் உதவி தேவைப்பட்டது. உள்முக அரசியல் அங்கே ஆதிக்கம் செலுத்துகிறது.  அதற்காக அப்படிச் சில சலுகைகளை அளிக்கிறார்களோ? சும்மா தட்டத்தான செய்றான்...தடவத்தான செய்றான் என்று விட்டு விடுகிறார்களே? இதற்கெல்லாம் சுணங்கினால் காரியம் ஆகாது....! கொஞ்சம் துணிச்சல் அதிகம்தான்...!

      முருகேசன் என்ற அந்தக் கண்காணிப்பாளர் அந்தப் பெண் எழுத்தரின் கன்னத்தைத் தட்டுவதை அடிக்கடி இவன் பார்த்திருக்கிறான். தற்செயலாய்ப் பார்க்க நேரும் சந்தர்ப்பங்களில் அவர்கள் அதற்காக எந்த அதிர்வையும் வெளிப்படுத்தியதில்லை. மறுப்பும் தெரிவித்ததில்லை. பதிலுக்கு நாணுகிறார்கள். இவனெல்லாம் ஒரு ஆளா? என்றுகூட இருப்பார்களோ என்னவோ? அப்படியிருந்தால் அது சரியா? எப்படியோ இருந்து விட்டுப் போகட்டும். வேறு எதிர்பார்ப்பு இருப்பவனுக்கல்லவா அது ஏமாற்றம்...தனக்கென்ன வந்தது? இடத்தைக் கொடுத்தால், மடத்தைப் பிடிக்கும் எண்ணம்தானே வரும்? அவர்களின் கை மேலும் நீண்டது என்பதுதான் உண்மை. சபல புத்தி உள்ளவர்கள் எங்கேனும் அடி வாங்கிக் கேவலப்படும்வரை ஓய மாட்டார்கள். ஒரு இடத்தில் படியும். இன்னொரு இடத்தில் மீறும். அப்போது புத்தி வரும்....!

      அண்ணே...எப்டீண்ணே பிடிக்கிறீங்க...? உங்களுக்கு மட்டும் சுலபமா மடங்கிறுதேண்ணே...?-ஈஸியா மசியுறாங்களே? விளையாட்டுக்காகவோ அல்லது மனதுக்குள் ஏங்கியோ இந்தக் கேள்வியை முருகேசனிடம் கேட்டார்கள் சிலர். அவரின் அந்தப் பதில்  புன்னகை  ஒரு கதாநாயகனின் உச்சம். அந்த லீலைக்குத் தனிப் பயிற்சி வேண்டும் என்பது போன்றதான பாவனை.

      சின்ன வயசிலிருந்தே  அந்த மாதிரிப் பழக்க வழக்கங்கள் உள்ளவர்கள்தான் அந்த நடுத்தர வயதிலும் அப்படி இருக்க முடியும் என்றும், அப்படியாகப் பழகுபவர்களுக்குத்தான் தொடர்ந்து அமைந்து கொண்டேயிருக்கும் என்றும் ஆராய்ச்சி செய்து சொன்னார் நண்பர் பாலுச்சாமி. அவருக்கென்ன ஆதங்கமோ? அக்கௌன்டன்சி கணக்கு நன்றாப் போடுவார். பாலன்ஸ் ஷீட்டை எனக்கு முன் டாலி செய்து வாத்தியாரிடம் நீட்டி விடுவார். கூடவே இந்தக் கணக்கும் அறிந்து வைத்திருக்கிறார் போலிருக்கிறது.

      உனக்கு வேணும்போல இருக்கா...சொல்லு...நான் கூட்டிட்டுப் போறேன் என்றார். தன்னைப் பார்த்து இப்படியொரு கேள்வியைக் கேட்க ஏன் தோன்றியது அவருக்கு? கூட நிற்பவனையும் கெடுக்க ஏன் இத்தனை முனைப்பாய்த் திரிகிறார்கள்?  இம்மாதிரி ஆட்களோடெல்லாம் பழகினாலே தன்னைப் போலவே மற்றவர்களையும் நினைத்து விடுவார்கள் போலிருக்கிறது

.   மூன்று தங்கைகளோடு பிறந்தவன் அவன். ஓடிப்பிடித்து விளையாடி, சண்டை போட்டு, அடித்துப் பிடித்து அழுது புலம்பி..அம்மாவிடம் புகாருக்கு நின்று....இப்படித்தான் பழகியிருக்கிறான். இந்த மாதிரி வித்தியாசமாக அதுவும் வெளிப் பெண்களிடம்...இவர்களுக்கும் சகோதரிகள் இருப்பார்கள்தானே? ஊரும் உலகமும் இருக்கும் நிலைமையைப் பார்த்தால் நான்தான் அப்பாவியோ? என்று தோன்றி சிரித்துக் கொள்வான் குமார்.

      அன்றொரு நாள் படம் பார்த்துவிட்டு, வெளியே வந்து அல்வா சாப்பிட்டு, டீ குடித்து நகருகையில், பொழுது இருட்டும் அந்த வேளையில், கூடவே பின்னால் துரத்திய அந்தப் பையன் கேட்ட கேள்வி இவன் மனதுக்குள் நெருடியது. ஒரு பொடிப் பயல்...அவனிடம் இதை அவன் எதிர்பார்க்கவேயில்லை.

      சார்...கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு....எது வேணும் சார்.....? வாங்க சார்....கூட்டிட்டுப் போறேன்....கம்மியான ரேட்தான் சார்.....

      எவ்வளவு தருவா....? என்றார் பாலு. அந்தப் பையன் திகைத்து நிற்பதைப் பார்த்து, போடா...போடா...என்று  சிரித்துக் கொண்டே விரட்டினார்.

      ஏதோ லாட்டரிச் சீட்டு விற்பவன் போல் அந்தப் பையன் கேட்டதும், இவர் பதில் சொன்னதும்....அதுநாள் வரை அவன் கேள்விப்படாத ஒன்று.

      பொடியன் என்ன சொன்னான், புரிஞ்சிதா? என்றவர்....அந்தப் பய கூப்டானே....அந்த லாட்ஜ் இதுதான்.... என்று காண்பித்துக் கொண்டே நடந்தார். பழைய காலத்து வீடு போல் முற்றம் வைத்து சச்சதுரமாய் நான்கு புறமும் அறைகள்....வெளியிலிருந்து பார்க்கையில் அவ்வளவுதான் தெரிந்தது. உள்ளே போவமா? என்ற பாலுச்சாமியைப் பார்த்துப் புன்னகைத்தான் குமார்.

      எத்தனை வருடமாய் அந்த ஊரில் இருக்கிறான் அவன். அப்படியெல்லாம் லாட்ஜ்கள் அதற்கென்றே இருக்கின்றன என்பது அவனுக்குத் தெரியவே தெரியாது. அவர் குறிப்பிட்ட அந்த லாட்ஜை, குடும்பத்தோடு தங்குவதற்கு சிறந்த இடம் என்றுதான் அதன் பழமையைக் கணக்கிட்டு நினைத்திருக்கிறான் இவன். இவர் வேறொரு இடமாய் அதனை அடையாளம் காட்டுகிறார். என்ன விபரீதம்? நான் எனது சொந்த ஊரிலேயே ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும் போலிருக்கிறதே? இப்படி நகரின் நெருக்கமான பகுதிகளில் கலந்து கலந்து இவைகளும் இருந்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் எது நல்ல லாட்ஜ், எங்கு பிரச்னையின்றித் தங்கி,  சாமி தரிசனம் செய்து ஊர் திரும்ப முடியும் என்பதை எங்ஙனம் நிர்ணயிப்பார்கள்? யாரிடமும் விசாரித்தால் அவர்களும் குடும்பத்தினர் தங்குவதற்கென்று நல்ல இடமாய்க் காண்பிப்பார்கள் என்பதற்கு என்னதான் உத்தரவாதம்? வேண்டுமென்றே எங்கேனும் கோர்த்து விட்டு, பணம் பிடுங்கினால்? கமிஷனுக்கு அலையும் ஆட்கள் அவரவர் முதலாளிகளுக்கு ஆதரவாய் இருப்பார்களா அல்லது வரும் சுற்றுலாவாசிகளுக்கு நம்பிக்கை தருவார்களா?

நமது மாநிலம், எதானாலும் நம்ம ஊர், நம்ம மக்கள் என்று எப்படித்தான் நம்பிச் செயல்படுவது? ஏமாற்றி விட்டால், எதிலேனும் மாட்டிக் கொண்டால் கேவலமில்லையா? அப்படியானால் ஏதேனும் ஒரு ஊருக்குச் செல்வதென்பது அன்றே சென்று அன்றே திரும்புவதுதான் உசிதமான செயலா? அதுதான் பாதுகாப்பா?  தங்குவது, ஓய்வெடுப்பது, ஒவ்வொன்றாய்ப் பார்ப்பது என்று முடிவெடுத்தால் இப்படியும் அமையலாம் அல்லது அப்படியும் ஆகலாம் என்பது போலல்லவா இருக்கிறது? அறிந்தும் அறியாமலும் ஆபத்தோடு கண்ணாமூச்சி ஆடுவதா? எல்லாம் கிடக்கட்டும். முதலில் இதையெல்லாம் அனுமதிக்கலாமா? அடியோடு ஒழித்துக் கட்ட வேண்டாமா? ஊரும் நாடும் சீர்கெட்டுக் கிடக்கிறதா? இவைகளோடுதான் கலந்து வாழ்ந்தாக வேண்டுமா? எல்லாம்தான் இருக்கும். நீ விலகிப் போகக் கத்துக்கோ...! இதுதான் நடைமுறை சித்தாந்தமா?

      உலகம் ரகசியமாய் இயங்கிக் கொண்டிருப்பதாய்த் தோன்றியது குமாருக்கு. பாம்பு, பழுது என்று பார்த்துத் தாண்டிப் போவது உன் பொறுப்பு என்று சொல்லியது.  மனிதர்கள் யாரையும் ஒரே பார்வையில், ஒரே பேச்சில் நம்பி விடுவதற்கில்லை. கவனமாய்த்தான் அடியெடுத்து வைத்தாக வேண்டும். கூடியானவரை ஆசைகளைத் தவிர்த்தால் இவைகளெல்லாம் அண்டாது.  ஆசைகள்தான் மனிதனை அலைக்கழிக்கின்றன. தவறுகள் செய்யத் தூண்டுகின்றன. குதிரைக்கு சேணம் பூட்டியவனைப் போல் இந்த வாழ்க்கையைக் கவனமாய்க் கடந்து செல்ல வேண்டும். இது அவனுக்கான முடிவு. வேலைக்கென்று வந்த பிறகே இம்மாதிரி வெவ்வேறு விதமான அனுபவங்கள். உலகத்தின் விபரீதங்கள் ஒவ்வொன்றாய்ப் புரிய ஆரம்பித்தன. ஊரும் உலகமும் நிறையக் கற்றுக் கொடுத்தன. களத்தில் இறங்கினால்தான் ககனம் புரிகிறது.

      இதெல்லாம் குமார் தன் பணி அனுபவங்களில் நண்பர்களோடு அலைந்து பயணித்துக் கற்றுக் கொண்டது. எந்த இடத்திலும், எவ்வளவு இக்கட்டுகளிலும், தன் தனித்துவத்தை விட்டு விடக் கூடாது என்பதில் அவன் திடமாய் இருந்தான். பலரும் பலவிதமாய் விட்டேற்றிகளாய் இருப்பதைப் பார்த்து அவன் ஜாக்கிரதையாகிக் கொண்டான். உலகின் பலரது செயல்பாடுகள் அவனுக்கு வெறுப்பைத்தான் தந்தன. விலகிப் போகச் செய்தன. தனித்திருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்தை ஏற்படுத்தின. நமக்கு நாமே நன்றாய் சிந்தித்து செயல்பட்டால்தான் பாதுகாப்பு.

      சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ஆற்றில் மென்மையாய்த் தங்களை முக்குளித்துக் கொண்டு குளித்து எழாமல்,  வீணாய் ஏன் கலக்கி, அழுக்காக்கி, கதி கலங்கிக் கொண்டிருக்கிறார்கள்? குமாரின் அலுவலக வாழ்க்கையும் எச்சரிக்கையாய்த்தான் கடந்து கொண்டிருந்தது. அவனுக்கு எதிரிகள் நிறைய இருந்தார்கள். வெளியே சொல்லாமல், காண்பித்துக் கொள்ளாமல் பதுங்கினார்கள். தங்களின் செயல்பாடுகளுக்கு அவனால் பங்கம் வந்து விடக் கூடாது என்று ஒதுங்கினார்கள். இனிய நட்போடு கடப்பதாய் வேஷம் காட்டினார்கள். தொட்டும் தொடாமலும், பட்டும் படாமலும் கடந்தான் குமார்.

      மூன்று தங்கைகளுக்குக் கல்யாணம் ஆகி, பிறகு பண்ணிக் கொள்கிறேன் என்று ஒரே பிடியாய் இருந்து விட்டான் குமார்.  இன்னும் கொஞ்ச காலம் கடந்திருந்தால் திருமணமும் நான் உங்கிட்ட வரலை என்று தள்ளியே போயிருக்கும். போ...போ...போய்த் தொலை...என்று அவனும் உதறியிருப்பான்.  அடக்கி வைத்ததோ, அல்லது அடங்கிக் கிடந்ததோ தெரியவில்லை...எகிறிக் கொண்டு குதிக்க ஆரம்பித்தது. எது தன்னை ஆட்டுவிக்கிறது என்று இனம் புரியாமல் தெறிக்க ஆரம்பித்தான் அவன். தான் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறோம் என்று அவனுக்கே புரிபடாத நிலை. எந்தப் பேய் பிடித்துக் கொண்டு தன்னை உலுக்குகிறது என்று உணர்ந்து கொள்ள முடியவில்லை. ஒரு கட்டத்தில் தான் ஆளே மாறிப் போனதாய் உணர ஆரம்பித்தான். ஆனால் சரி செய்து கொள்ள முடியவில்லை. பிடி நழுவிப் போய்க் கொண்டேயிருந்தது. தீய பழக்கங்கள் படியவில்லையாயினும், தீய குணங்கள் பற்றிக் கொண்டன

தேவையில்லாமல் அம்மாவிடம் ஏன் கோபப்படுகிறோம், ஏன் தாயாரை அழ வைக்கிறோம்?  ஒன்றுமில்லாத சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாமா எரிந்து விழுவது? தான் எப்போதும் இப்படியெல்லாம் இருந்ததேயில்லையே? கோபப்படுவதற்கும் ஒரு அர்த்தம் வேண்டாமா? குணக்கேடு அடைவதற்கும் சில சீரழிவுகள் என்கிற பின்புலம் வேண்டாமா? கெட்டுச் சீரழிந்த அனுபவமும் இல்லாமல், வெறும் எண்ணங்கள் தரும் முறுக்கிலே சிக்கிக் கொண்டு, எதற்காக,  இப்படிக் கழிசடையாகிப்  போனோம்? தாய் தந்தையரின் மனம் புண்படுத்துவது என்பது ஒரு பொழுதுபோக்கா என்ன? வார்த்தைகளைக் கூர் அம்புகளாய்ப் பாய்ச்சுவது ஒரு திறமையா? அதுவா புத்திசாலித்தனம்? ஒருவர் மனதைப் புண்படுத்துவதில் அத்தனை இன்பமா?  கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தெய்வங்களை இப்படி இகழலாமா? அவர்களை அலட்சியப்படுத்தலாமா? அவர்களோடு சண்டையிடலாமா? அவர்கள் என்ன பகைவர்களா? எதற்காக எப்போதும் இந்தக் கோபம், அசூயை, ஆத்திரம்? ஆங்காரம்? என்ன தவறு செய்தார்கள் அவர்கள். தன்னை வளர்த்து, ஆளாக்கி இந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டதுதான் தவறா?

இனம் புரியாத பருவ நிலை தன்னைப் படுத்துகிறதா? காமம் கழுத்தளவு உட்கார்ந்து கொண்டு மூளையைக் கலக்குகிறதா? சொல்லாமல் சொல்லி நிறைவேற்றிக் கொள்ளத் துடிக்கிறதா? இந்தளவுக்கு வெறுப்பு மண்டுவானேன்? ஒன்றை வெளிப்படுத்த முடியாமல் இன்னொன்றைச் சொல்லிப் புரிய வைக்க, சண்டை போட, வயதான பெற்றோர்கள்தான் வாய்த்தார்களா? அவர்கள்தான் சோதனைக் களமாக அமைந்தார்களா? என் வன்மத்திற்கு அவர்கள்தான் பலிகடாவா? பெற்றெடுத்த பாவத்திற்கான தண்டனையா? தொட்டதற்கெல்லாம் கோபமும், வெறுப்பும், சுடு சொற்களும்...ஒத்துழையாமையும்....ஓடி ஒளிதலும்....உறவுகளுக்குள்ளேயேவா இதைச் செயல்படுத்துவது? தாய் தந்தையர் முன்னேயேவா தாண்டவம் ஆடுவது? இதற்குக் கல்யாணம் பண்ணி வைங்க என்று நேரடியாகவே சொல்லித் தொலையலாமே? அதைச் சொல்லத் துணிவின்றி, குத்திக் குதறிக் கிழித்தால் பெற்றோரின் சாபம் சும்மா விடுமா?

அம்மா இரவெல்லாம் தூக்கமின்றி அழுகிறாள். இப்டியிருக்காதே...அது உனக்கு நல்லதில்லை...பின்னால் நீ அனுபவிப்பாய்...என் மனசைப் புண்படுத்தினயானா நீ வௌங்க மாட்டாய்...எங்களை நோகப் பண்ணினயானா நல்லாயிருக்க மாட்டாய்...! நானும் உங்கப்பாவும் வயசான காலத்துல உன்னண்ட மாட்டிண்டு தவிக்கிறோம். எங்களுக்கு விடுதலை இல்லை... உங்களப் படிக்க வைக்கிறதுக்கும், ஆளாக்கிறதுக்கும் அவ்வளவு கஷ்டப் பட்டிருக்கோம்...எத்தனையோ நாள் பட்டினி கிடந்திருக்கோம்...ஊரம்புட்டும் கடன் வாங்கி, திருப்பிக் கொடுக்க முடியாமே திட்டும், வசவும் வாங்கியிருக்கோம். கேவலப்பட்டிருக்கோம்.

ஓடி ஓடி உழைச்சிருக்கார் உங்கப்பா...நெருப்புல கிடந்து வெந்திருக்கார்...நாலாணாவுக்கும் எட்டணாவுக்கும் நாயாப் பேயா அலைஞ்சிருக்கார்....வட்டிக் கடைக்காரன்ட்டக் கடன் வாங்கி...திருப்பிக் கொடுக்க ராப்பகலா தூக்கமில்லாம உழைச்சிருக்கார்...தன் உடம்பையே இந்தக் குடும்பத்துக்காக  செருப்பாத் தெச்சுப் போட்டிருக்கார் தீயில உருகியிருக்கார்...அவரை நிந்தனை பண்ணினயானா தெய்வத்தை நிந்திச்சதுக்கு சமானம்...அதை ஞாபகம் வச்சிக்கோ...பின்னாடி நீயும் உன் குடும்பமும் நன்னாயிருக்கணும்...நோய் நொடி இல்லாம வாழணும்....அதுக்கு எங்க ஆசீர்வாதம் வேணும்...மனுசாளோட ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டாக்கும்...நல்லது செய்தா நல்லது கிடைக்கும்...கெட்டது செய்தியானா பதிலுக்கு நீ அனுபவிச்சித்தான் ஆகணும்...அது நடவாமப் போகாது...ஞாபகமிருக்கட்டும்.....! உன்னோட ஒவ்வொரு வார்த்தைக்கும், செயலுக்கும் நீ பதில் சொல்லியே ஆகணும்....வினை விதைச்சா வினையைத்தான் அறுக்கணும்...நீ அறுப்பே....நான் பார்க்கிறேனோ இல்லையோ...நீ அனுபவிப்பே...! இது சத்தியம்....!!

அம்மாவின் வார்த்தைகள் அனல்  துண்டங்களாய் வந்து மோதிக்கொண்டேயிருக்கின்றன. அவைகளுக்கான பிற்பகல் வினைகளையெல்லாம் அனுபவித்து விட்டேனா? இல்லை இனிமேல்தானா?

ங்களை மெட்ராசுக்குக் கூட்டிண்டு போயிடு....நாங்க உன்னோட வந்து இருந்துக்கிறோம்...-சொல்லிக் கிளம்பி விட்டார்களே? மூத்தவனோட இருக்கிறதுதான் நியாயம்...இத்தனை நாள் சின்னவனோட இருந்தது எங்களோட தப்பு....என்னானாலும் அவன் சின்னவன்தான்ங்கிறதைக் காண்பிச்சிட்டான் பார்....- அப்பா வருந்திச் சொன்ன கடுமையான வார்த்தைகள் இவைதான். அதற்கு மேல் அவருக்குத் திட்டத் தெரியாது. பழி சொல்லத் தெரியாது. சாபமிடத் தெரியாது. ஆனால் அந்தத் தூய இதயம் சிதைக்கப்பட்டால், மனம் கசிந்து வருந்தினால், அழுதால் அது சும்மா விடுமா தன்னை? எனக்கு நிச்சயம் நரகம்தான். என் பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது...!

தனித்து விடப்பட்ட பின்புதானே புத்தி வந்தது? முடியைக் கோர்த்து ஆணியில் சுற்றி மரத்தில் அடித்து பிசாசை நிறுத்தியது போல...! இது நாள் வரை நான் எங்கிருந்தேன்...எப்படியிருந்தேன். ஏன் அப்படியானேன்? எது மாய்மாலம் செய்தது என்னை? எந்த வினை பேயாட்டம் போட வைத்தது? எப்படி மாறினேன் நான்? வாலு போச்சு கத்தி வந்தது...டும்...டும்...டும்...! கத்தி போச்சு புத்தி வந்தது டும்...டும்...டும்...! குமார் மாறி விட்டான். ஆளே மாறிவிட்டான். பேதலித்த புத்தி திருந்தி விட்டது. இவனை விட்டு விலகி விட்டது அந்த மாயாவி. கனவிலிருந்து விழித்தவன் போல் ஆள் தலைகீழாக இப்போது....

அந்த நல்ல புத்திதான் மூன்று தங்கைகளுக்கும் அவனிருக்கும் நகரிலேயே திருமணம் நடத்தி முடிக்க இறங்கி வேலை செய்ய யத்தனித்தது? நான் இருக்கேன்...எதுக்கும் கவலைப்படாதே...எல்லாத்தையும் நானே பார்த்துக்கிறேன். நீ அப்பப்போ என்ன செய்யணும்ங்கிறதை மட்டும் சொல்லு..அது போதும்....அத்தனை பணியையும் அவன் ஒருவனே தன் தலையில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஏதோ வெறி வந்தவனைப் போல  ஓடி ஓடிச் செய்தான்? சென்னையிலிருந்து அடுத்து, அடுத்து என்று ஒவ்வொரு வேலையாய் அண்ணா வரையறுத்துச் சொல்லச் சொல்ல, படிப்படியாய் இங்கு ஏற்பாடுகளைத் தீவிரமாக்கினான்? எந்தப் பாவத்தைக் கரைத்துக் கொள்ள? எந்தத் தவறுதலுக்கு மன்னிப்புப் பெற? எந்த கங்கையில் மூழ்கிப் புனிதம் பெற? அவன் புத்திக்கெட்டிய எல்லாத் தவறுகளும் அவனிடம் மன்னிப்புக் கேட்டு மண்டியிட்டன. எங்களை மன்னித்து விடுங்கள். உங்கள் கிரஉற நிலை மாறிவிட்டது. நாங்கள் விடை பெற்றுக் கொள்கிறோம்....

நான் அந்தக் குமார் இல்லையப்பா...! மறந்து விடுங்கள்  அந்தக் கொடுங்கோலனை...! ...அவன் என்றோ செத்து விட்டான். மண்ணோடு மண்ணாகி விட்டான். அது எனக்கான கேடு காலம். ஏதோவோர் தீய சக்தி என்னை ஆட்டுவித்து உங்களுக்கும் அம்மாவுக்கும், சகோதரிகளுக்குமே எனத்  தீராத துன்பத்தைத்  தந்து விட்டது. என்னையே அறியாமல் அந்தப் பாதகத்தைச் செய்து விட்டேன். மன்னித்து விடுங்கள்.  அந்தப் பாவத்தைக் கரைக்கத்தான் இப்போது என் கடமையில் அதி தீவிரமாய் இறங்கியிருக்கிறேன். முழுப் பாவத்தையும் கரைத்து விட முடியுமா தெரியவில்லை. மீதியை மண்டியிட்டுக் கண்ணீரால் கரைக்க முயல்கிறேன். நான் அந்தப் பழைய பாவி குமார் இல்லை...என்னை நம்புங்கள்....! இப்போது நான் நல்லவன். உங்களுக்கு அடங்கிய அந்தப் பள்ளி செல்லும் காலத்து நல்ல பிள்ளை. சின்னஞ் சிறுவன் குமார். இனி அவனை அந்த பிசாசு அண்டாது. அது அவனை விட்டு என்றோ விலகி விட்டது. இப்போது அவன் புதியவன். முதியவன்...முதிர்ச்சியடைந்தவன்.

இதோ திருமணம் ஆகி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப் புறப்பட்டிருக்கிறான் குமார். அவனை ஆசீர்வதியுங்கள். மனமார வாழ்த்துங்கள்.

அதே பழைய,  புதிய, திருந்திய இளைஞன் குமார். உள்ளத்தில் அசூயையும், ஆங்காரமும் இல்லாத குமார். மூன்று தங்கைகளுக்கும் திருமணம் செய்து விட்டுத்தான் நான் பண்ணிக் கொள்வேன் என்று திடமாய் நின்ற குமார். ஓடி ஓடி அவர்களுக்கான வரன்களைத் தேடிய குமார்.  இருபத்தைந்து வயதில் கல்யாணம் செய்தால் ஓரிரு ஆண்டுகளில் குழந்தை பிறந்து தனக்கு ஐம்பது தாண்டும்போதும், பணி ஓய்வு பெறுவதற்குள்ளும் மகனுக்கு ஒரு திருமணம் செய்வித்து, கடமைகளை முடித்து விட்டு அமர்ந்து விடலாம் என்று சுயநலமாய் மனக்கணக்குப் போடாத குமார். என் நலன் என்னை வளர்த்து ஆளாக்கியவர்கள் கையில். அவர்களுக்குத் தெரியாததா? என்று இருந்துவிட்ட குமார். குடும்பத்தின் சுபிட்ச நிலைக்காகத் தன் சுகத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்த குமார். உடன் பிறந்த தங்கைகளின் திருமணம்தான் முக்கியம். அதை முடிப்பதுதான் முதல் வேலை. பெற்றோரின் மனபாரம் அப்போதுதான் தீரும் என்று தன்னை மாற்றி நிறுவிக் கொண்ட குமார்.  வாழ்க்கையில் திட்டமிடல் வேண்டும் என்று வீர வசனம் பேசாத குமார். எல்லாம் அவன் செயல்.  எது நம் கையில் இருக்கிறது? சூட்சுமக் கயிறு எல்லாம் வல்ல இறைவனிடம். அவன் ஆட்டுவிக்கிறான். நாம் ஆடுகிறோம்.

நாம் ஒன்று நினைக்கிறோம்...இறைவன் ஒன்று நினைக்கிறான். காலமும் நிகழ்வுகளும் நம் கையிலா இருக்கிறது? வாழ்க்கையும் வாரிசுகளும் நம் திட்டத்திலா உருப்பெருகின்றன? எதுவும் நம் கையிலில்லை....எதுவோ ஒன்று நம்மை இயக்கிக் கொண்டிருக்கிறது. நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம்....இங்கே எதற்காக ஒவ்வொன்றுக்கும் அவசரப்பட வேண்டும்? நான்தான் புத்திசாலி என்பதாய் இயங்குவதில் எல்லா மனிதனின் திட்டங்களும் வெற்றி பெற்று விடுகின்றனவா? எல்லா மனிதர்களும் தங்கள் வாழ்க்கையில் வெற்றி அடைந்தவர்களாதானா? முயலுதல்...முடிந்தவரை முயலுதல்...வெற்றி அவன் கையில்...!  

கிணற்றுத் தண்ணீரை வெள்ளமா கொண்டு போகப் போகிறது? ஒரு பழைய முதுமொழி. அவன் ஞாபகத்திற்கு வருகிறது. அருகிலே அகிலா ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறாள். அநாவசியத்திற்கு அவளை ஏன் தொந்தரவு செய்ய வேண்டும்? இதோ ரெண்டு நாளில் ஊருக்கு சென்று விடப் போகிறோம். பணிபுரியும் இடத்தை நோக்கி. அதற்குள்ளும் கருக்கழிந்து விடவா போகிறாள்? கிடைப்பது கிடைக்காமல் போகாது. கிடைக்காதது என்றுமே கிடைக்காது. நம்பிக்கைதான் வாழ்க்கை.

அவரவர், அவரவர் இடத்தில் இருந்தால்தான் என்றைக்கும் மதிப்பு. அதைத்தான் இந்தப் பெண்களும் விரும்புகிறார்கள். பெண்மையும் விரும்புகிறது. கட்டு மீறாதவனுக்கு காலம் அவன் காலடிக்குள்...! அவள் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தவாறிருந்தாள்.

கதவு இடுக்கு வழியே இருள் கவிந்திருந்தது. விடியல் நெருங்கிக் கொண்டிருந்தது.

                              ---------------------------------------

     

                                    உஷாதீபன்,   (ushaadeepan@gmail.com)                                                                      எஸ்.2இரண்டாவது தளம், (ப்ளாட் எண்.171,172)                                                      மேத்தாஸ் அக்சயம் (மெஜஸ்டிக் Nஉறாம்ஸ்),                                                      ராம் நகர் (தெற்கு)12-வது பிரதான சாலை,                                                          மடிப்பாக்கம்,   சென்னை – 600 091. (செல்-94426 84188sள

 

      

      

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...