25 செப்டம்பர் 2016

கவிதா பப்ளிகேஷன் 40ம் ஆண்டு விழா

Ushadeepan Sruthi Ramani added 4 new photos — with Sivaji Peravai and கவிஞர் செல்வராஜா.

2 hrs ·

13612299_10205061589578010_7617412377753321834_n20160925_08375320160925_08384620160925_08385720160925_08391713658929_10205061584697888_7221062273972302208_n

கவிதா பப்ளிகேஷனின் 40 ம் ஆண்டு விழா நேற்று (24.9.2016) கோடம்பாக்கம் அருகிலுள்ள மஉறாலிங்கபுரம் எம்.எல்.எம். கல்யாண மண்டபத்தில் சிறப்புற நடந்தேறியது. மிகப் பிரம்மாண்டமான விழாவாக இதை உணர்ந்தேன் நான். முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்ட மிகப் பெரிய உறால் நிரம்பி வழிந்தது. நிறைய எழுத்தாளர்கள்...கலைஞர்கள், வி.ஐ.பி.க்கள், வாசகர்கள் என மேடையில் அ மர்ந்திருக்கும் முக்கியஸ்தர்களின் பேச்சைக் கேட்க ஆவலாய்க் காத்திருந்தார்கள்..

வாயிலில் நுழையும்போதே மணக்க மணக்க டிகாக் ஷன் காபி சப்ளை செய்ததுதான் Hi லைட்....... சூடான அந்தக் காபி தொண்டைக் குழிக்குள் இறங்கியதும், வந்த அலுப்பெல்லாம் மறைந்து போனது.

இந்த விழாவின் சிறப்பம்சம் 105 புத்தகங்களைக் கவிதா வெளியிட்டதுதான். அதனை மேனாள் நிதியமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள் வெளியிட்டது சிறப்பு. இந்த 105 ல் என்னுடையதும் இரண்டு என்பது மகிழ்ச்சியளிக்கும் விஷயம். (1) நாவல் - லட்சியப் பறவைகள் (2) நின்று ஒளிரும் சுடர்கள் - கட்டுரைகள்
இத்தனை பிரம்மாண்டமான விழாவை நான் கண்டது இதுவே முதல் தடவை.....கவிதா பப்ளிகேஷன் நிறுவனத்தின் ஐயா சொக்கலிங்கம் அவர்களுக்கும் சகோதரி கவிதா அவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.


கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...