20 நவம்பர் 2014

சக்திஜோதியின் கவிதைத் தொகுப்பு “சொல் எனும் தானியம்”

2014-11-21 05.53.19 joithi-2

     

    படித்ததில் பிடித்தது என்ற வரிசையில் சக்தி ஜோதியின்”சொல் எனும் தானியம்“ கவிதைத் தொகுப்பு முக்கியமாகப் படுகிறது. இந்தத் தொகுதியின் கவிதைகளை ஆழப் புரிந்து அற்புதமாக ஒரு அணிந்துரை வழங்கியுள்ளவர் தமிழச்சி தங்கப்பாண்டியன் அவர்கள்.கவிதைகளைப் படிக்கும் முன்பும், படித்து முடித்த பின்பும் மீளவும் படித்து ரசிக்க வேண்டிய அணிந்துரை இது.
    தொகுப்பில் பல கவிதைகள் மனதை நெருடின என்பது நிஜம். இவர்கள் நன்றாகவே எழுதுகிறார்கள். அணிந்துரையின் அழகில் சொல்லப்படுவதுபோல், பாடுபொருளைக் கவிஞன் தீர்மானிக்கலாம். ஆனால் கவிஞனை மொழிதான் நிர்ணயிக்கின்றது என்பதும், ஒரு ரோஜாவைப் பாட வேண்டிய அவசியமில்லை, கவிதையில் ரோஜா மலர்ந்தால் போதும் என்பதும், ஒரு மரத்தின் இலைகள் இயற்கையாக அரும்புவதுபோல் கவிதை துளிர்க்க வேண்டும் என்றும் அணிந்துரை மாலையாகப் பிரவகிக்கின்றது. ஒரு கவிதை இன்னும் என்னைச் சங்கடத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

    எனக்கு முன்பாக உறங்காதிருந்த
    பெண்கள் பலரின்
    தசையிழைகளினாலும்
    நரம்புகளினாலும்
    என் உடல் கட்டப்பட்டுள்ளது
    பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட
    தானியங்களையே நாம் உண்ணுகிறோம்
    பெண் உறக்கம் சேமிக்கப்பட்ட நூல் கொண்டே நாம் உடுத்துகிறோம்
    அந்த மண் கொண்டே நாம் நட்டுகிறோம்
    கட்டப்பட்ட வீடு முழுக்க
    ஆணின் குறட்டை ஒலி நிறைந்திருக்கிறது்
    உண்மையில் நான் எனக்கென்று உறங்கவே விரும்புகின்றேன்
    இத்தனை காலம், இத்தனை பெண்கள்
    உறங்காதிருந்த அத்தனை உறக்கமும்
    நான் உறங்கவே விரும்புகின்றேன்
    சவம் போலொரு யுகாந்திர உறக்கம்

    என்னைத் தழுவட்டும்

18 நவம்பர் 2014

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது

 

 

download (1) vikatan2009-5

 

 

 

download (2)

download

 

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது பாராட்டுக் கேடயமும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கியது. அருமையான கவிஞர். வலியக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டவர் என்று சொல்ல வேண்டும். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. எழுத்து, அது என்ன சொல்கிறது என்பது மட்டும்தானே கணக்கு. இங்கே அப்படி அல்லாமல் பலவும் புகுந்து கொண்டன. அதுபற்றி அவருக்கு எந்த இழிவுமில்லை. அவர் கவிதைகள் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. “அன்று வேறு கிழமை” என்ற ஒரு கவிதைத் தொகுப்பு போதும் அவரது பெயர் சொல்ல...! ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். கவிஞருக்கு மனமார்ந்த, அன்பான. இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

சாம்பிளுக்கு ஒரு கவிதை
----------------------------------------------------------

அம்மாவின் பொய்கள்
----------------------------------------------------

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்

— with Ayyanpettai Dhanasekaran.


17 நவம்பர் 2014

“அறிந்ததினின்றும் விடுதலை” - Freedom from the known -ஜே..கிருஷ்ணமூர்த்தி. -

 

 

2014-11-18 07.33.04 download

 

 

 

smallimage

 

 

 

படியுங்கள் இந்தப் புத்தகத்தை. குழப்பமடைந்த உங்கள் மனதிற்கு நிச்சயம் விடுதலை. ஆனால் ஒன்று. கதை படிப்பதுபோலவோ, நாவல் படிப்பது போ லவோ விறுவிறுவென்று நகர்ந்து பலனில்லை. உங்களை நீங்கள் அறிவதற்கான ஆத்மநிலையில் முழுமையான சுயச் சார்போடு படித்து உள்வாங்க வேண்டும்.

பாலுறவை நான் எதிர்க்க வில்லை. ஆனால் அதில் என்ன சம்பந்தப்பட்டிருக்கிறது என்று காண வேண்டும். தன்னை இழந்த நிலையை ஒரு கணம் பாலுறவு அளிக்கிறது. மறுபடியும் மனம் பழைய கொந்தளிப்பு நிலைக்கே வந்துவிடும். அந்தக் கணத்தில் துயரம், பிரச்னை, “தான்“ என்ற இவை இல்லையாதலால் பாலுறவைத் திரும்பத் திரும்ப வேண்டுமென்கிறோம். உங்கள் மனைவியை அன்புடன் நேசிப்பதாகக் கூறுகிறீர்கள். அந்த அன்பில் பாலுறவு இன்பம், உங்கள் குழந்தைகளை அவள் பராமரித்தல், உங்களுக்குச் சமையல் செய்து உணவு பரிமாறுதல் போன்றவை எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கும்.நீங்கள் அவளைச் சார்ந்திருக்கிறீர்கள். அவள் தன்னுடைய உடலை உங்களுக்குத் தந்திருக்கிறாள். உங்களுடன் அவள் உணர்ச்சிகளை பங்கு கொண்டிருக்கிறாள். உங்கள் செய்கைகளுக்கு ஊக்கமளிக்கிறாள்.உங்கள் நலனுக்கும், பாதுகாப்புக்கும், தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறாள். என்றேனும் ஒரு நாள் அவளுக்குச் சலிப்பு ஏற்பட்டு உங்களை விட்டு விலகி விட்டால் உங்கள் மனம் தடுமாறுகிறது. உங்களுக்குப் பிடிக்காத அந்தத் தடுமாற்றம்தான் பொறாமை, மனவலி, கவலை, வெறுப்பு, வன்முறை இப்படிப் பலவும். அதாவது நீ எனக்கே சொந்தமானவளாக இருக்கும்வரை நான் உன்னை அன்புடன் நேசிப்பேன். என்னை விட்டு விலகினால் உன்னை நான் வெறுப்பேன் பாலுறவு மற்றும் என்னுடைய தேவைகளை நீ பூர்த்தி செய்யும்வரை நான் உன்னை நேசிப்பேன். இவைகளை நீ தராவிட்டால் உன்னை நான் வெறுப்பேன் என்று கூறியதாக ஆகும்.

இதைப் படிக்கும் நீங்கள் உங்களுக்குள் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் இப்படி இல்லை என்று யாரேனும் ஒருவர் சொல்ல முடியுமா?

அட போங்க சார்...படத்தப் பார்த்ததும் இந்தியன் தாத்தாதான் ஞாபகத்துக்கு வருது.....!! அதையும் நினையுங்கள். இதையும் படியுங்கள். எது ஜெயிக்கிறது என்று பாருங்கள்.


16 நவம்பர் 2014

க.நா.சு.வின் “விலங்குப்பண்ணை” –ஜார்ஜ் ஆர்வெல் நாவல் (மொழிபெயர்ப்பு நாவல்)

வாசிப்புப் பயணத்தில்
--------------------------------------------

13149 download

 

 

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.

ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.

1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.

2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.

3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.

4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.

5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.

6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.

7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.

12.11.2014 அன்று வைகையில் சென்னைக்குப் பயணித்தபோது ஆசையாய் எடுத்துப் படித்த மொழி பெயர்ப்பு நாவல். நாவலின் ஒட்டு மொத்த நோக்கத்தையும் மனதிற்குள் ஆழமாய் வாங்கி, வரிக்கு வரி அதன் தன்மை பிசகாது, ஒரு மொழி பெயர்ப்பைப் படிப்பது போன்ற உணர்வே இல்லாது, அழுத்தமாகக் கதை சொல்லிச் செல்லும் அழகு. ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒரு நடை படிவதுண்டு. ஆனால் மொழி பெயர்ப்புக்கு என்ன நடை? படைத்த ஆசிரியன் எந்த நடையில் கதைசொன்னானோ, அதே நடையில், அதே உணர்வின் ஆழத்தில் பயணித்து, , தடங்கலில்லாத தெளிந்த மொழியில், நெருடலின்றி, அந்தந்த மொழியாளர்கள் சுலபமாக உள்வாங்குவதுபோல் பக்கங்களை நகர்த்திய இந்த நாவலைப் படித்து முடித்த அனுபவம் நிறைவானது.

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...