31 ஜனவரி 2021

மறக்க முடியாத மனிதர்கள்-வண்ணநிலவன்-வாசிப்பனுபவம்-உஷாதீபன்

மறக்க முடியாத மனிதர்கள்-வண்ணநிலவன்-வாசிப்பனுபவம்-உஷாதீபன்             வெளியீடு:- காலச்சுவடு, நாகர்கோயில்.

 



 

      ழுத்தாளர்களின் படைப்புக்களை விரும்பிப் படிப்பதும், அந்த எழுத்து பற்றி நண்பர்களிடம், வாசகர்களிடம் சிலாகிப்பதும் வாசிப்பு ரசனையின்பாற்பட்ட, இலக்கிய ஆர்வம் சார்ந்த விஷயம். ஆனால் அந்தப் படைப்பாளியை நேரில் சென்று சந்திக்க வேண்டும் என்று ஆர்வம் கொள்வதும், அவரோடு உரையாட வேண்டும் என்று விரும்புவதும், அடிக்கடி போய்ப் பார்த்து நட்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுவும் எல்லாருக்கும் உகந்ததாகவும், சாத்தியமானதாகவும் என்றும் இருந்ததில்லை. அவரவர் விருப்பப்படி அது மாறுபடும் தன்மையுடையது.

      படைப்பு என்ன சொல்கிறது என்று மட்டுமே அறிந்து கொள்வதுவும், படைப்பாளியைப் போய்ப் பார்க்க வேண்டும் என்கிற அவசியமில்லை எனவும், பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம். இப்போதும் அப்படிச் சொல்லும், இருக்கும்  நடைமுறை இருந்துதான் வருகிறது.

      ஆனால் அறுபது எழுபதுகளில் வார இதழ், மாத இதழ், சிற்றிதழ்களில் வந்த படைப்புக்கள் படிக்கப்பட்ட காலத்தில் அந்தப் படைப்பாளியை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்றும் அவரோடு பேசி விட வேண்டும் எனவும், நட்பை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து கடிதப் போக்குவரத்து கொள்ள வேண்டும் என்றும் பலர் இருந்திருக்கின்றனர்.

      ஒரு வேளை அப்போது படைப்பாளிகள் என்பவர்கள் குறைவாக இருந்ததுவும், பத்திரிகைகளும், சிற்றிதழ்களும் எண்ணிக் குறிப்பிடும்படியாக சில என்று வந்து கொண்டிருந்ததுவும் காரணமாய் இருந்திருக்கலாம். அத்தோடு மேன்மையான சிந்தனைகளை உள்ளடக்கி மிகத் தரமான இலக்கியப் படைப்புக்கள் உருவாகிக் கொண்டிருந்த பொற்காலம் அது என்றும் அறுதியிட்டுச் சொல்லலாம். வாழ்க்கையே அதுதான் என்று பலர் இருந்த காலம் என்பதால் மிகுந்த ஊக்கத்தோடு,  அர்ப்பணிப்பும் ஆத்ம சுத்தியும், கொண்ட எழுத்துக்கள் உருவாயின என்று உறுதி செய்து கொள்ளலாம்.

      ப்படியான ஒரு கால கட்டத்தில், தான் சந்தித்த அதி முக்கியமான சில எழுத்தாளர்களையும், அவர்களோடு பழக நேர்ந்த அனுபவங்களையும், கடிதப் போக்குவரத்து கொண்ட காலங்களில் கிடைத்த மகிழ்ச்சியையும், மயக்கத்தையும், திருப்தியையும், அவர்கள் தன் வாழ்க்கைக்கு எந்தெந்த வகையிலெல்லாம் சமயங்களில் உதவி செய்திருக்கிறார்கள் என்கிற நன்றியோடு கூடிய நினைவு கூர்தலையும், விரும்பிப் படித்த பல அருமையான எழுத்தாளர்களின் படைப்புத் தன்மைபற்றியும், சிறந்த படைப்புக்கள் பற்றியும்  தன்னுடைய அனுபவங்களின், வாசிப்பின் அடையாளமாக, இந்தத் தொகுப்பில் விரிவாக முன் வைக்கிறார் எழுத்தாளர் திரு. வண்ணநிலவன் அவர்கள்.

      பல எழுத்தாளர்களின் கூடப் பிறந்தது வறுமை. வேலையில்லாத் திண்டாட்டம். இந்த மனச் சுமைகளோடு அல்லாடிய காலங்களில்தான் சிறந்த படைப்புக்கள் அவர்களிடமிருந்து உருவாகியிருக்கிறது. அதுவே அவர்களின் பசியைத் தணித்திருக்கிறது. அல்லது மனதை நிறைவடையச் செய்து, பசியை மறக்கச் செய்திருக்கிறது.

      வண்ணநிலவனுக்கும் இம்மாதிரியான அனுபவங்கள் கிட்டியிருக்கின்றன. வல்லிக்கண்ணன், வண்ணதாசன், விக்ரமாதித்யன், கலாப்ரியா, பா.செயப்பிரகாசம், கி.ராஜநாராயணன் என்று ஒவ்வொருவராக அவர் சந்திக்க ஆரம்பித்த பின்புதான் நிறையப் புத்தகங்களும் அவருக்குப் படிப்படியாக அறிமுகமாகி, வாசிப்புப் பழக்கம் அவரிடம் தீயாய்ப் பற்றிக் கொள்ள,  அவர்கள் அறிமுகப்படுத்திய ஏராளமான புத்தகங்களைப் படித்துத் தள்ளியதன் விளைவாக எழுதும் ஆர்வம் அதிகரிக்க, பிறகு எழுத ஆரம்பித்து, அவையும் ஒவ்வொன்றாகப் பிரசுரமாக ஆரம்பித்த வேளையில் அவரின் சந்தோஷத்திற்கும், திருப்திக்கும், இலக்கிய ஆர்வத்திற்கும் ஒரு எல்லையே இல்லாமல் விரிந்து, கடல்புரத்தில், ரெயினீஸ் ஐயர் தெரு, கம்பா நதி போன்ற சிறந்த நாவல்களும், பல அற்புதமான சிறுகதைகளும் அவரிடமிருந்து உதித்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

      இலக்கியச் சிந்தனை அமைப்பின் அத்தனை கதைகளும் மிகத் தரமானதாய் இருந்த கால கட்டம் அது. எழுபதுகளிலிருந்து அத் தொகுதிகளைக் கண்ணும் கருத்துமாய்ச் சேகரித்துப் படித்தவர்களுக்குத் தெரியும்...எப்படிப்பட்ட முத்து முத்தான கதைகளெல்லாம் அப்போது வந்திருக்கின்றன என்று. எழுத ஆரம்பித்த காலத்தில், தன்னுடைய சிறுகதை மாதத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மகிழ்ச்சி இன்னும் மேலே என்று தன்னை ஊக்கப்படுத்தியது எனக் கூறும் வண்ணநிலவன், தனக்குப் பிறகே இலக்கியச் சிந்தனையின் தேர்வு வண்ணதாசனுக்குக் கிடைத்தது என்றும், ஆனால் அடுத்தடுத்து ஆண்டின் சிறந்த சிறுகதைகளாக அவை தேர்ந்தெடுக்கப்பட்டன என்று கூறி, வண்ணதாசனின் எழுத்துக்களை அத்தனை ஆர்வத்தோடு விழுந்து விழுந்து படித்தவன் நான் என்றும் அவரின் மென்மையான எழுத்து நடையும் கதை சொல்லும் நயமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன என்றும் அவருடைய படைப்புக்களுக்கான ஆழமான ரசிகன் நான் என்றும் பெருமையோடு அவர் எடுத்துரைக்கும்போது, வண்ணநிலவனின் தன்னடக்கமான, ஆத்மார்த்தமான கருத்துக்களை எண்ணி நம் மனது பூரிப்படைகிறது.

      திடீரென்று நினைத்த போதெல்லாம் அவர் வீட்டுக்குச் சென்று விடுவேன். சட்டையில்லாமல் வெற்றுடம்புடனே வந்து அமர்ந்து “மெதுவாகப் பேசுவோம்” என்ற சைகையோடு முகம் சுளிக்காமல் பேசிக் கொண்டிருப்பார். அது தாமோதர ரெட்டி தெரு வீடு. என்று அசோகமித்திரனைச் சந்தித்ததை நினைவு கூர்கிறார்.

      அவரின் பெரும்பாலான படைப்புகளில் அடிநாதமாக ஒலிப்பது வாழ்வின் மாளாத சோகமே. பழைய கருப்பு-வெள்ளைப் புகைப்படங்களைப் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது அவரது கதைகளைப் படிக்கும்போது.... என்று ரசைனையோடு எடுத்துரைக்கிறார்.

      சென்னையில் கண்ணதாசனில் சேர்ந்த பிறகு, நாகர்கோயிலில் இருந்த சுந்தர ராமசாமி அவர்கள் தேர்ந்தெடுத்த இலக்கியச் சிந்தனை  சிறுகதையான சார்வாகனின் “கனவுக் கதை“.படித்து பிரமித்துப் போனேன். சு.ரா. அவர்களைப் பார்க்காமலேயே அவர் மீது ஒரு வாஞ்சை ஏற்பட்டது எனக்கு என்கிறார். அவருடைய படைப்புக்களைப் படித்த பிறகு தோன்றியது இது-அதாவது புதுமைப்பித்தனின் மிகப் பண்பட்ட, மெருகூட்டப்பட்ட  வாரிசு சுந்தரராமசாமி என்று விவரிக்கிறார்.

      தி.க.சி. அவர்கள் தாமரையின் ஆசிரியப் பொறுப்பில் இருந்தபோது பல நல்ல கதைகள் வந்திருக்கின்றன. பெரும்பாலான சிறுகதைகள் வறுமையையே சித்தரித்தன என்றாலும் அவை அந்தந்தப் படைப்பாளிகளுக்கே உரிய அழகுணர்ச்சிகளுடன்  சித்தரிக்கப்பட்டிருந்தன. பல சிறுகதைகள் கலாபூர்வமாகவும் வெற்றி பெற்ற யதார்த்தச் சிறுகதைகளாக இருந்தன என்று புகழ்ந்துரைக்கிறார்.

      அம்பையின் முதல் சிறுகதைத் தொகுதி “சிறகுகள் முறியும்” . பிறகு வீட்டின் மூலையில் ஒரு சமையலறை. பல்வேறு வடிவ உத்தி சோதனைகளில் ஈடுபட்டுள்ளார் அம்பை இயற்கை மீதான ஈர்ப்பு அம்பையிடம் மிகுதியாக உண்டு. எல்லாவற்றிலும் ஆண்களால் உறிம்சிக்கப்படும் பெண்கள் பற்றிய கதைகளால் அவரது தொகுதிகள் நிரம்பி வழிகிறது என்று தெரிவிக்கிறார்.

       1973 ல் முதன் முதலாக சென்னைக்கு வேலை தேடி வந்து, கண்ணதாசனில் சேர்ந்து பிறகு அது நின்றதும் 1976 ல் துக்ளக் பத்திரிகையில் வேலை கிடைத்தது. உடல் நலமின்மையினாலும், மனநலமின்றியும் துக்ளக்கை விட்டு விலகிய காலங்களில் என் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளாமல், வெறுமே வந்து போய்க் கொண்டிருங்கள் என்று கருணையோடு கூறி எனக்கு ஆதரவளித்தவர் திரு சோ. அவர்கள். மூன்று நான்கு முறை வேலையை விட்டு நிற்கவும் பிறகு சேரவும் என்று மாறி மாறிச் செய்து கொண்டிருந்தேன். எந்த முறையும் என்னை எதுவும் சொன்னவரில்லை அவர். திடீர் திடீரென்று வேலையை விட்டு நிற்பதும், பிறகு போய் நிற்கையில ஏற்றுக் கொள்வதும் என்று என்னை அன்பால் அரவணைத்த பெருந்தகை. அவர் ஒரு அறிவுஜீவி மட்டுமல்ல. அபூர்வமான மனிதரும் கூட....என்று நெக்குருக தன் துக்ளக் பணி அனுபவங்களை எடுத்துரைக்கிறார். கடைசியாக 2007 முதல் இன்றுவரை தொடர்ந்து பணியாற்றி வருவதைச் சொல்லி அது ஆத்மார்த்தமாய் எனக்கு ஏற்பட்ட பிணைப்பு என்று முடிக்கிறார்.

      ஒரு படைப்பின் சகல குணாம்சங்களையும் அலசிப் பார்ப்பதுதான் நுணுகி நுணுகிப் பார்ப்பதுதான் விமர்சனம். ஆனால் க.நா.சு.வின் பார்வை ரசனையின்பாற்பட்டதாகும். அவரது கட்டுரைகள் ரசனை அடிப்படையில் அமைந்தவை. விமர்சனங்களல்ல...என்று எல்லோரும் இலக்கிய விமர்சகர் என்று க.நா.சு.வை விளித்துரைக்கையில் அதை மறுதலிக்கிறார் வண்ணநிலவன்.

      வல்லிக்கண்ணனைத் தேடிச் சென்று சந்தித்தது, அவரோடு ஏற்பட்ட கடிதத் தொடர்புகள், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன், க.நா.சு., தி.ஜானகிராமன், கண்ணதாசனைச் சந்தித்தது, கவிஞர் வேலை கொடுத்தது,  எல்லாவற்றிற்கும் மேலாக துக்ளக் சோ அவர்கள்பற்றிய வண்ணநிலவனின் நினைவுகள் அவருக்கே உரிய உள்ளன்போடு கூடிய  நடையில், எளிமையான சொல்முறையில், மிகையின்றி யதார்த்தமாக வெளிப்படுகின்றன.

      மறக்க முடியாத மனிதர்கள் என்ற தலைப்பில் தொகுதி 2, 3 என்று இணையத்தில் மேலும் காணப்படுகின்றன. ஆனால் அவைகளின் அட்டைப் படங்களை நோக்குகையில் முதல் தொகுதியின் படைப்பாளிகள் படங்களே காணப்படுகின்றன. இன்னும் எந்தெந்த எழுத்தாளர்களின் நினைவுகள் பகிரப்பட்டிருக்கின்றன என்று உள்ளிருப்பதை அறிய முடியவில்லை.

      வண்ணநிலவனின் இந்த ஸ்வாரஸ்யமான அனுபவப் பகிர்வுகள் இன்னும் பல படைப்பாளிகளைப் பற்றிய தகவல்களையும், அவர்களுடனான அனுபவங்களையும் அறிய மிகந்த ஆவலை ஏற்படுத்துகின்றன என்பதே இந்த நூலுக்கான சிறப்பு.

                              --------------------------------------

 

     

 

     

     

     

     

 

28 ஜனவரி 2021

“என் இலக்கிய நண்பர்கள்“-எம்.வி.வெங்கட்ராம் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்

“என் இலக்கிய நண்பர்கள்“-எம்.வி.வெங்கட்ராம் - வாசிப்பனுபவம் - உஷாதீபன்          வெளியீடு:-சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர்.



       பெயருக்கேற்ப உண்மையான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆத்மார்த்தமாய் நேசித்திருக்கிறார்கள்.. படைப்பு வேறு. விமர்சனம் வேறு. நட்பு வேறு என்கிற பக்குவம் இருந்திருக்கிறது. விமர்சனங்களைக் கருத்தோடும் கண்ணியத்தோடும் எதிர்கொண்டு, அது காட்டமாக இருப்பினும், எதற்காக இப்படிச் சொல்கிறார் என்று சிந்தித்தும், உடன்பாடில்லையென்றால் அது அவர் கருத்து என்று மனதளவில் பக்குவப்பட்ட நிலையில் அடுத்துச் சந்திக்கும்போது பாசத்தோடும், நேசத்தோடும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அவரின் ஒப்புதலுக்கு என்றாவது ஆளாக மாட்டோமா என்று ஏங்கியிருக்கிறார்கள். ஒரே படைப்பை அடுத்தடுத்துப் படிக்கும்போது ஏற்பட்ட தெளிவில், முன்னம் தான் சொன்னதையே மறுத்து, சிறப்பாய்த்தான் இருக்கிறது என்று வெளிப்படையாய் மனமுவந்து பாராட்டியிருக்கிறார்கள். கருத்து மாறுபாடும், காலத்தால் ஏற்பட்ட பார்வை மாற்றமும், முதிர்ச்சியும் அவனவன் வளர்ச்சிக்கான அடையாளங்கள்தானே என்று வெளிப்படையாய்ச் சொல்லி, மனச் சமாதானம் பெற்று, பரஸ்பரம் கை கோர்த்து நட்பைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

      இலக்கியம் வேறு, வாழ்க்கை வேறு என்று பிரித்துப் பார்த்து, மனதளவில் கொண்ட அன்பை அது எவ்விதத்திலும் பாழ்படுத்தி விடக் கூடாது என்பதற்கடையாளமாய் அடிக்கடி சந்தித்துக் கொள்வதும், ஒருவரையொருவர் உபசரித்துக் கொள்வதிலும் அக்கறை காட்டி, கால நீட்சியில் பரஸ்பரம் எப்படிப் பலப்பட்டிருக்கிறோம் என்பதை மானசீகமாய் உணர்ந்து, இவர்களின் தொடர்பெல்லாம் கிடைத்தது பெருமையே....என்று எண்ணி எண்ணி இறுமாந்திருக்கிறார்கள்.

      இலக்கியப் பணியில் வறுமை ஒரு பொருட்டாகவே இருக்கவில்லை. அதைப் பொருட்படுத்தினால் நல்ல எழுத்து கை வராது என்று படைப்புகளின் மீதான பற்றில் பசியையும், பட்டினியையும் புறந்தள்ளி அறிவுக்கு விருந்தாகும் பணியில் ஆத்ம திருப்தி கொண்டிருக்கிறார்கள்.

      படைப்பாளியாகவும், ரசிகனாகவுமே என்னை நிலை நிறுத்திக் கொள்கிறேன் என்று மேற் சொன்ன கருத்துக்களுக்கு இணங்க தன் ஸ்திரமான இயங்கு தளத்தை முன் வைக்கிறார் எம்.வி.வி. விமர்சனங்கள் என்னை விருத்தி செய்கின்றன, மேம்படுத்துகின்றன என்பதில் திருப்தியுறுகிறேன். இலக்கியச் சங்கதிகளில் எனக்கென்று அபிப்பிராயங்கள் உண்டென்றாலும், என் எழுத்தின் தரத்தை நிர்ணயிக்கும் மாற்றுத் தரப்பின் கருத்துக்களையே நான் எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுவே என் தவறுகளைத் திருத்திக் கொள்ளவும், எதைச் செய்யக் கூடாது என்பதை நிர்ணயித்துக் கொள்ளவும், எப்படிச் செய்திருந்தால் இன்னும்  சிறப்பாய் உணரப்படக் கூடும் என்பதை உணர்ந்து கொள்ளவும், தொடர்ந்து ஊக்கமாய் பயணப்படவும் பேருதவி புரிகிறது என்பதை அறுதியிட்டுப் புரிந்து கொள்கிறேன்.

      இலக்கியச் சங்கதிகளில் எனக்கென்று தனிக் கருத்துகள் உண்டுதான். அவற்றிலிருந்து மாறுபடும் நண்பர்களோடு நான் கட்சியாடுகிறேன். அதுவே எங்கள் நட்பைப் பலப்படுத்துகிறது என்று பெருமையுறுகிறார். திரு.க.நா.சு. அவர்களோடு தனக்கேற்பட்ட நட்பும், பாசமும், காலத்தால் இவ்வாறுதான் பலப்பட்டு சகோதர வாஞ்சையோடு பயணப்பட வைத்தது என்று நெக்குறுகுகிறார்.

      இந்தக் கட்டுரைத் தொடர் என் சகாக்களின் படைப்புக்கள் பற்றிய ஆய்வோ, விமர்சனமோ அல்ல. எங்கள் நட்புப் பயணம் எவ்வாறிருந்தது என்பதை விளக்கமாய் முன் வைக்கும் இனிய அனுபவமே...! என்று எம்.வி.வி. உள்ளன்போடு எடுத்துரைக்கையில் இன்றைய நவீன இலக்கியச் சூழலை, குழுக்களாய்ப் பிரிந்து நிற்கும் அவலங்களை நம்மால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

      இந்தக் கட்டுரைகளில் நான் முன் வைக்கும் விஷயங்கள் சற்று முன் பின்னாக இருக்கலாமே தவிர எதுவும் உண்மைக்குப் புறம்பானதல்ல. என்னோடு பழகிய இலக்கியப் படைப்பாளிகளின் குடும்ப விஷயங்கள் எதையும் நான் இதில் சொல்ல முற்படவில்லை. அவர்களாகவே என்னிடம் சொன்னவைகளையும் நான் சேர்க்கவில்லை. அவைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டியவைகள் என்றே ஒதுக்கியிருக்கிறேன் என்று தெளிவான மனநிலையில்  எடுத்துரைக்கிறார் எம்.வி.வி.

      கவிஞர் ஞானக்கூத்தனின் கருத்துக்களோடு முரண்பட்டபோது, அது மனச் சங்கடத்தை ஏற்படுத்திய நிலையில், நீங்க பெரிய கவிஞர், பொயட்டிக்ஸ் பற்றியெல்லாம் எழுதற நல்ல கட்டுரையாளர், ஒரு ஞானஸ்த்தன் இப்படிப் பேசலாமாங்கிற ஆத்தாமைதான் என்று அவர் கைகளைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு, தன் அன்பைப் பொழிகிறார்..நட்பைப் பலப்படுத்துகிறார்.

      இலக்கியவாதிகள்ங்கிற பேர்ல சிலரை மட்டும் காலம் பூராவும்  ஓகோன்னு கொண்டாடுறது ஒரு பக்கம்னா,இன்னொரு பக்கம் வாழ்க்கை முழுக்க ஒருத்தன் என்னதான் எழுதியிருக்கான்னு கூடப் பார்க்காமக் கழிக்கிறது எவ்வளவு கொடுமை?  இதெல்லாம் எந்த வகைல சகிச்சிக்கக் கூடியதா இருக்கு? என்று தன் ஆதங்கத்தை ஆழமாய் வெளிப்படுத்துகிறார்.

      கும்பகோணம் காலேஜ் நூற்றாண்டு விழாவுக்கு சொற்பொழிவிற்காகச் சென்றிருந்ததும் அங்கே தன்னையும், தி.ஜா வையும் எந்த ஆசிரியர்கட்கும் (தமிழாசிரியர் உட்பட) தெரியாமல் இருந்ததையும், மௌனி, நகுலன்,கு.ப.ரா., பிச்சமூர்த்தி  என்று யாரையுமே அவர்கள் அறிந்திராமல் இருந்ததையும் கண்டபோது வியப்பும், வேதனையும்தான் மிஞ்சியது என்று கூறி குறைந்தபட்சம் அவர்களின் படங்களையாவது வைத்திருக்கக்கூடாதா என்று வெதும்புகிறார்.

       க.நா.சு உடல் நலமில்லாமல் உறார்ட் அட்டாக்கில் படுத்திருந்தபோது நேரத்துக்குப் பொருத்தமில்லாமல் ஜோக் அடிக்கிறோமே என்ற உறுத்தலோடேயே “மௌனிக்கு ஒரு மாடம் கட்டி...ஆறுகால பூஜைக்கு.என்று துவங்கும்போதே, ஏன் சிலையே வச்சிற வேண்டிதானே என்று க.நா.சு பொங்கிட, என்ன சார்...இந்த நேரத்துல போய் இப்படி என்று மகள் வந்து சொல்ல முடியாமல் தவிக்க....அத்தோடு அந்தப் பேச்சு நின்றது என்றும், நல்லவேளை அவரது திருமதி அப்போது அங்கே இல்லை என்று தெரிவித்து  அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் க.நா.சு இப்பூவுலகில் வாழ்ந்து கலகம் செய்தார் அன்பு பொங்கத் தெரிவிக்கிறார்.

      சந்திக்கும் பொழுதெல்லாம் வாதமும் விவாதமும்தான் இருந்திருக்கிறது அவர்களுக்குள். ஆனால் உள்ளார்ந்து அமிழ்ந்து கிடந்த அன்பும் பாசமும் அவர்களது நட்பை உயர்த்திப் பிடித்திருக்கிறது. என்ன சண்டை போட்டா என்னய்யா...நீதான் எல்லாத்தையும் ஒரு அருமையான காபியோட சரி பண்ணிடுவியே...என்பாராம் க.நா.சு. கையில் காசில்லாவிட்டாலும், ஒரு நல்ல காபிக்காக சில மைல் தூரம் கூடச் சென்று சேர அவர் அஞ்சமாட்டார் என்று அவரை ஆதரவாக நினைவுபடுத்திக் கொள்கிறார். அப்படியான எழுத்தாள நண்பர்கள் இப்போது உறிருதய சுத்தியாக இருக்கிறார்களா என்று நினைக்க வேண்டியிருக்கிறது நமக்கு.

      ஜாதி முத்து என்றொரு நாவலை க.நா.சு. துவக்கியிருந்ததையும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரி நூற்றாண்டு விழாவுக்கு வந்திருந்தபோது நான் தி.ஜா.வோடு பழைய மாணவர்கள் என்கிற உரிமையில் சுற்றித் திரிந்தபோது, எங்களோடு எதிர்பாரா நேரத்தில் வந்து சேர்ந்து கொண்டார் க.நா.சு. என்று கூறி ஒரு நாளைக்கு இருபது பக்கம் எழுதும் உங்கள் திட்டம் என்னவாயிற்று? என்று தி.ஜா.கேட்க...அது இருக்கு...ஆனா நாவல்தான் முடியலை...முடிக்கணும் என்று இவர் சொல்ல, தேனீ இதழில் வந்த அந்தத் தொடர்...இதழ் நின்று போக...அதுவும் நின்றதில், திருமணத்திற்கு வந்த கிழவிகளில் நாலில் ஒரு பங்குப்பேரைத்தானே சொல்லியிருக்கிறீர்கள், மீதி எத்தனை ஆயிரம் கிழவிகளும், கிழவர்களும் இன்னும் இருப்பார்கள்? குறைஞ்சது 5000 பக்கமாவது வேண்டாமா என்று தி.ஜா ஜோக்கடிக்க, க.நா.சு.வோடு நானும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தோம் என்று அந்த மகிழ்ச்சிகரமான நேரங்களை மறக்க முடியாமல் தவிக்கிறார். முடிக்காத கதையாகிப் போனது அது என்ற தகவல் கிடைக்கிறது நமக்கு.

      மௌனி பற்றிச் சொல்கையில் அவரிடம் பழகும்போதெல்லாம் என்னிடமிருந்த பயத்தை கடைசிவரை என்னால் விலக்கவே முடியவில்லை....நல்லா எழுதற....ஆனால் நான் நினைச்சதைவிட சின்னப் பையனா இருக்கே...என்றாராம் மௌனி. எழுதறதுக்காக குறிப்பு எடுத்து வச்சிருக்கேன் பார்த்தியா? என்று ஒரு நோட்டைக் காண்பித்திருக்கிறார். பி.எஸ்.ராமையாதான் மணிக்கொடியில் என் கதையைத் தேர்வு செய்து போட்டார் என்றும் ந.பி, கு.ப.ரா. மௌனி இவர்களோடு என் கதையும் வந்திருப்பது அப்போது எனக்கு அவ்வளவு பெருமையாயிருந்தது என்று மகிழ்கிறார்.

      சகட்டு மேனிக்கு புதுமைபித்தன், ந.பி., ராமையா, கு.ப.ரா., சிதம்பர சுப்ரணியன் இவர்களெல்லாம் என்ன எழுதுகிறார்கள், சரியான அப்ரோச்சே இல்லை எதிலும்  என்று சாடுவார் மௌனி. நான் வாயை மூடிக் கொண்டு பார்த்துக் கொண்டிருப்பேன் என்று பயத்தோடு தெரிவிக்கிறார்.   அத்தோடு மணிகொடி என்றொரு மாதப் பத்திரிகை மட்டும் தோன்றியிருக்காவிட்டால், தமிழ்மறுமலர்ச்சி என்பது இன்னும் பல ஆண்டுகள் பிற்பட்டிருக்கும் என்றும் புகழ்ந்துரைக்கிறார்.

      இப்படி முத்து முத்தாகக் கோர்க்கப்பட்ட பலவிதமான அனுபவத் தகவல்கள் அடங்கிய அரும்பெரும் பொக்கிஷமாக விளங்குகிறது இந்தப் புத்தகம். இதை இத்தனை காலம் கழித்து, கண்டுபிடித்து  வெளியிட்ட சிறுவாணி வாசகர் மையம், கோயம்புத்தூர் அமைப்பு மிகவும் நன்றிக்குரியதாகும். இல்லையெனில் மறுபதிப்பாக வராமல் இப்புத்தகம் காணாமலே போயிருக்கும் வாய்ப்பு நிறைய உண்டு.

      எம்.வி.வி.யின் காதுகள் நாவல் ஒப்புமை சொல்ல இயலாத தமிழில் முன்னெப்போதும் யாராலும் இதுபோல எழுதப்படாத தனித்துவமான நாவல் என்றும் அவரது பரிசோதனை முயற்சிகள், யாரோடும் ஒப்பிட முடியாத நடை, உள்ளடக்கத் தேர்வு, அதைக் கையாண்ட விதம், செய்து பார்த்த புதுப் புது உத்திகள் இவை எல்லாமும் தமிழ் இலக்கியம் எப்போதும் அவரை உயர்ந்த ஸ்தானத்திலேயே வைத்திருக்குமென்பது தி்ண்ணம் என்று திரு ரவி சுப்ரமணியம் சொல்லும் கணிப்பு அவரது படைப்புக்களைத் தேடிப்  படித்த தீவிர வாசகர்களுக்கு நிச்சயம் புரிபடும்.

      என் கதைகளில் நான் என்னையே தேடினேன். நான் அறிந்ததை, கேட்டதை, பேசியதை, அனுபவித்ததை, தொட்டதை, விட்டதை, சிந்தித்ததையே எழுதினேன் எழுதி எழுதித் தீர்த்தேன்...பாதி எனக்காகவும், பாதி பசிக்காகவும் என்று சொல்லிவிட்டு இறுதியாக அவர் ஒன்று சொல்லிச் சென்றதை நினைக்கும்போது அதில் அடங்கியிருக்கும் அவரது வாழ்வின் தீர்க்க முடியாத வேதனைகளின் பிரதிபலிப்பாக அதை நாம் உணர்கிறோம். அது -

      “தமிழ்நாட்டில் முழு நேர எழுத்தாளனாக வாழ்வது என்பது ஒரு மானங்கெட்ட பிழைப்பு...“

      எம்.வி.வி.அவர்களின் நூற்றாண்டு நெருங்கும் இந்த வேளையில் அவரது அத்தனை சிறுகதைகளையும் ஒன்று சேர்க்கும் அரிய பணி பேராசிரியர் திரு கல்யாணராமன் அவர்களால் செயலூக்கம் பெறப்பட்டுள்ளது என்பதும், காலச்சுவடு வெளியீடாக அது வரவிருக்கிறது என்பதும் இங்கு முக்கியமான கூடுதல் செய்தியாகிறது.

                              --------------------------------------------------------

 

 

 

 

பொய்கைக்கரைப்பட்டி : நேர்த்தியான கலை வடிவம்!- வாசிப்பனுபவம் - உஷாதீபன்

 


 

UL

 

பொய்கைக்கரைப்பட்டி : நேர்த்தியான கலை வடிவம்!

உஷாதீபன்-வாசிப்பனுபவம்

 



 


நாவல் என்பது ஒரு மிகப் பெரிய கலை உருவம். அது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் நிகழ்வுகளையும்மக்களின் வாழ்வியல் முறைமைகளையும்சமுதாய மாற்றங்களையும்பிரதி பலிக்கக்கூடியதாக அமைய வேண்டும். ஒரு நாவலைப் படைப்பது என்பதில் உள்ள சவால்கள் அநேகம். இன்றும் கூட வெறுமே கதை சொல்வதுதான் நாவல் என்பதாகக் கருதப்படு கிறது.அதையே சுருக்கிச் சொன்னால் அது விமர்சனமாகி முடிந்து போகிறது. ஒருகால கட்டத்தின் நிகழ்வுகளின் கண்ணாடியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்துவெறுமே கதைசொல்லி நகர்த்திக் கொண்டே சென்று எந்தவித அதிர்வுகளும் இன்றிபாதிப்புகளுமின்றிசலனமில்லா மல் வெறும் சம்பவங்களாக நகர்ந்துஒரு கட்டத்தில் அதுவாகவே நொண்டி அடித்து நின்று போய் நாவல் என்கிற பெயரோடு முடிந்து போன கதைகள் நிறைய உண்டு. 

வாசிப்பு அனுபவத்தினாலும்எழுதும் ஆர்வத்தினாலும்எழும் உந்துதலும் வேகமும்ஒரு மிகப் பெரிய தளத்திற்கான வழி வகைகளை ஆராயாமல்வெறும் சம்பிரதாயக் கதை சொல்ல லாக நகர்ந்துபடைப்புச் சீர்குலைவை உண்டாக்கி விடுகின்றன என்பதுதான் உண்மை. இந்த விபத்துக்கள் நிறைய நடந்துள்ளன.
ஆனால் இம்மாதிரிக் குறைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அத்யந்த முயற்சி களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இயன்றவரை இவற்றையெ ல்லாம் தவிர்த்துஒரு நல்ல முயற்சியாகஇதுவரை எவராலும் சொல்லப்படாத பொருளாகஇந்தச் சமுதாயத்திற்குச் சொல்லியே தீர வேண்டும் என்கிற முனைப்பாகதார்மீக நெறியோடுதீப்பொறி பறப்பதுபோல் சில முயற்சிகளும்திடீரென்று தோன்றி நம்மைக் கலங்கடித்து விடுகின்றன என்பதை இலக்கிய உலகிலான தொடர்ந்த அவதானிப்புகளும்வாசிப்பனுபவமும் உள்ள முதிர்ந்தவாசகர்களும் அறிய நேர்ந்து விடுகிறது. அப்படி வந்திருப்பதுதான் எஸ்.அர்ஷியா எழுதிய பொய்கைக்கரைப்பட்டி என்னும் நாவல். இந்த நாவல் என் பார்வைக்கு உடனே படிக்கக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படிச் சொல்வதிலும் ஒரு இலக் கியவாதியை மனம் திறந்து வெளிப்படையாகசத்தமாகப் பாராட்டுவதிலும்தான் மனம் திருப்தி யடைகிறது.

இந்த நாவலின் ஆசிரியர் எஸ்.அர்ஷியா தனது முதல் நாவலான ஏழரைப் பங்காளி வகையறாஎன்கிற படைப்பிற்கே தமிழக அரசின் முதல் பரிசைத் தட்டிச் சென்றவர். நிறையச் சிறுகதைகளும்கட்டுரைகளும் எழுதியபத்திரிகை அனுபவமும் கொண்ட படைப்பாளி. வெகு காலமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடிய பலதேர்ந்த படைப்பாளிகள் இன்னும் இங்கே நிறையப் பேசப்படாமல் இருக்கிறார்கள். நல்ல ருசியுள்ள உணவு கிடைக்கும்பொழுது நம்மை யறியாமல் அதன் சுவையில் மயங்கி சற்று வயிறு முட்டவே உண்டு களிப்பதைப் போலநல்ல எழுத்துக் கள் அடையாளம் காணப்படும்போது வாய் நிறையமனம் நிறையச் சத்தமாகச் சொல்லிப் பாராட்டலாமே!

நாவலின் களம் மதுரைக்கு அருகேயுள்ள புறநகர்பகுதியான அழகர்கோயில். அழகர் மலை அடிவாரத்தின் இயற்கை சார்ந்த இதமான பசுமையான சூழல்நம்முன் விரிக்கப்பட்டு,பொய்கைக்கரைப்பட்டியாகநாவலின் களமாகஎடுத்த எடுப்பிலேயே தீர்மானமாக முன் வைக் கப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியாகப் படம் இப்படித்தான் துவங்க வேண்டும் என்கிற முடிவில் கஜேந்திர குமாரின் இரு சக்கர வாகனம் (ஓட்டை ஸ்கூட்டர்தான்) அந்தப் பகுதியின் ஒரு டீக்கடைக்கருகே சென்று நிற்கும்போதுகண்முன்னே விரிந்த அடர்ந்து படர்ந்த அந்த வயதான வேப்பமரத்தோடு சேர்த்து காமிராவின் கோணங்களை மென்மையாக நகர்த்தி ஓடவிட்டால் அது `டுபு டுபு`வென்ற ஓசையோடு வந்து நிற்கும் அந்த வாகனத்தில்தான் போய் முடியும்.

கதையோடு சேர்த்து நம்மையும் கூடவே வழி நெடுக அழைத்துச் செல்ல ஆசிரியர் அங்கேயே முடிவு செய்து விட்டது புலனாகிறது. சொல்லப் போகும் விஷயம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பதாக மனத்தினில் நமக்கு உதிக்கும்போதே அதன் தப்புத் தாளங்களும்தகிடுதத் தங்களும் புகுந்து புறப்பட்டால்தானே இந்த நாவல் சிறக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பும்தவிப்பும் எழ, ‘அதைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப் படுறீங்கபேசாம என் கூட வாங்கஉங்கள எல்லா எடத்துக்கும் நானில்ல கூட்டிட்டுப் போறேன்’ என்று தைரியமாக நம்மை அழைத்துச் செல்கிறார் படைப்பாளி. அவருக்கு இருக்கும் தைரியம் படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக இருக்குமேயானால் இந்தச் சமுதாயக் கேடுகளுக்குகேள்வி கேட்கப்படாத அவலங் களுக்கு,சரியான சவுக்குய்யா இது” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்யத்தான் தோன்றும்.

சமுத்திரக்கனி என்கிற ஒரு கையாள் கஜேந்திர குமாருக்கு புரோக்கராக அமைவதும்அவர் மூலம் அவரின் வீட்டு மனை விற்பனைத் தொழில் வெகு சீக்கிரம் பெருகுவதும்பல இடங்களில் பலரும் இப்படித்தான் பெருகிக் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக் கும் முன்பே திடுமென சமுத்திரக்கனியை முதல் அத்தியாயத்திலேயே வெட்டிச் சாய்த்திடுகை யில் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே ஒருவனைக் கொன்று போடுவதற்குத் தீர்மானித்து விட்ட ஆசிரியரை நினைத்து நமக்கே சற்று பயமாகத்தான் இருக்கிறது.

இப்படியான வில்லங்கங்களெல்லாம் உள்ள ஒரு தொழிலுக்கு ஏன் மெனக்கெட வேண்டும் என்பதான ஒரு எண்ணமும் மெலிதாக நமக்குத் தலையெடுக்கிறது. ஆரம்பமே சிக்கலானாலும்ஒருவன் அசராமல் எப்படித் தன்னை மென்மேலும் காலூன்றி வளர்த்துக் கொள்கிறான் என்பதற்கு கஜேந்திரகுமார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு தொழில் நேர்த்தியான முன்னுதாரண மாகத் திகழ்கிறார்.


அவரின் எல்லைகள் விரிவதும்புதிதாக ஒருவர் அவருக்கு மீடியேட்டராக அமைவதும்லெவின்ஸ்கி கார்டன் என்கிற ஒரு மிகப் பெரிய திட்டம் அவரின் மனதில் உருவாகி வளர் வதும்அதனை முழுமையான ஒன்றாக உருவாக்க அவர் பழக்கம் கொள்ளும் பெரிய மனிதர் களும்முக்கியப் புள்ளிகளும்எல்லோருமாகச் சேர்ந்து அவரின் வாழ்வை வளமாக்கி நிற்பது மாக நாவல் படிப்படியாக நம் கண்முன்னே விரியும் போது நமக்குத் தெரியாதநம்மால் அறியப் படாத வெவ்வேறு தளங்கள் எப்படியெல்லாம் தன்னின் ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் பரந்து கொழித்து விஸ்வரூபமாக நிற்கிறது என்கிற உண்மை நம்மைப் பிரமிக்கத்தான் வைக் கிறது.

எடுத்துக் கொண்ட களம்சமுதாயத்திற்குச் சொல்லியாக வேண்டும் என்று நினைத்த முனைப்பான விஷயம்அதுபற்றி அவர் அறிந்து சேகரித்தவை அவற்றில் தவறு நேர்ந்து விடக்கூடாது என்று கருத்தாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுசொல்ல நினைத்தசொல்ல வேண்டிய நிகழ்வுகளை எந்தவித செயற்கைப் பின்னணியும் இல்லாமல் யதார்த்த தளத்தில் நிறுத்தி மக்களின் வாழ்வியலோடு பொருத்தி மிக லாவகமாகசெயல் இயல்பாக அமைய அந்தக் கதாபாத்திரங்களோடு தானும் கூடவே நகர்ந்து வாழ்ந்து கழித்ததுபோன்ற அனுபவப பகிர்வைத் தனக்கும் ஏற்படுத்திக் கொண்டு படிக்கின்ற வாசகர்களுக்கும் ஏற்படுத்தி ஒரு புதிய வாழ்வனுபவத்தை நமக்குப் புகட்டுகிறார் நாவலாசிரியர்.

முழு நாவலையும் சொல்வது என்பது ஒரு நீண்ட கதைச் சுருக்கத்தை முன்வைத்தது போலவே ஆகிவிடும் அபாயம் உண்டு. நாவல் என்பது கதை சொல்வது அல்லவே. கதையை லாவகமாகக் கையாண்டுஒரு நீண்ட வாழ்வியலின் படிப்படியான மாற்றங்களைசமுதாய நிகழ்வுகளை அதன் போக்கில் அறிந்துணரச் செய்வதுதானே! அப்பொழுதுதானே காலத்தால் ஒரு படைப்பு நிற்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போய்ச் சேரும் திறன் வேண்டுமே ஒரு படைப்பிற்கு. நாவல் என்பதன் உட் பொருள் அங்கேதானே முழுமை பெறுகிறது.

வேளாண்மையோடு காலம் காலமாய் ஒன்றிப்போய்விவசாயமே கதி என்று முன்னோர்கள் விட்டுப் போன கண்கூடான சொத்தான நிலங்களை அதுவே தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று வைத்துக் கொண்டு பிழைத்து வரும் அப்பாவி மக்களை அவர்களோடு கூடிக் குலவி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுறவான மனிதர்களையே காய்களாகப் பயன்படுத்திப் பறிக்க முயல்வதும்படியவில்லை என்றால் தொடர்ந்து முயன்று கொஞ்சங் கொஞ்சமாகக் கரைக்க முயல்வதும்,எதுவுமே ஆகவில்லையென்றால் தான்தோன்றித்தனமாக வளர்த்துக் கொண்ட அடாவடித்தனத்தைப் பயன்படுத்தி பயமுறுத்துவதும்உயிருக்கே உலைவைத்து விடும் அளவுக்கான தந்திரோபாயங்களை முன்னிறுத்துவதும்நம் கையைக் கொண்டு நம் கண்ணையே குத்தப் பார்க்கிறார்களே என்று எதற்கு வில்லங்கம் என நினைத்து காலத்தின் கட்டாயத்தில் அமிழ்ந்துபோய் ஒதுங்கி ஓடுவதுமாக ரியல் எஸ்டேட் என்கிற ஏகபோகத்தில் சாதாரண அப்பாவி மக்களின் வாழ்க்கை நசிந்து போவதையும்தொழில் செய்வோரைத் தாறுமாறாக உச்சத்திற்குக் கொண்டு நிறுத்துவதையும்அந்த எதிர்பாராத உச்சமே அவர்களுக்கு அச்சங்களை விளைவித்து நிம்மதியைக் கெடுப்பதையும்ஒரு அளவுக்கு மேல் பணம் நிலை தடுமாறி வந்து கொட்டிக் கிடக்கும்போது கூடவே அபாயமும் சேர்ந்துதான் வரும் என்கிற உண்மையும் கதையின் சம்பவங்களாய்படிப்படியாய் விரிந்து ஒரு தேர்ந்த எழுத்தனுபவமுள்ள முதிர்ச்சியான நாவலாய் நம் முன்னே படர்கிறது இந்தப் பொய்கைக்கரைப்பட்டி. 

இந்த வாழ்க்கையை மிக ஆழமாக அறிந்துணர்ந்துஅதனோடு சகஜமாக நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதுதான் நேசம் என்று கருதப்படுகிறது. இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த வாழ்க்கையைஇந்த மனிதர்களைஅவர்களின் அபிலாஷைகளைஅவர்களின் நெஞ்சின் ஈரத்தைஆழப் படிந்திருக்கும் நன்னெறிகளை நேசிப்பதாக இருக்க வேண்டியது இலக்கியத்திற்கான இலக்கணமாகக் கொள்ளலாம்.

மனிதர்கள் ரொம்பவும் யதார்த்தமாகவெகு சகஜ மனோபாவம் கொண்டவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். இலக்கியம் என்கிற புனைவின் ஊடாக வாழ்க்கையைப் பிரதிபலிக்க முனையும்போது நம்மையறியாமல் ஒரு இயல்பை மீறிய தன்மையும்தவிர்க்க முடியாத சிலதிரைகளும் விழுந்துவிடத்தான் செய்கின்றன. ஆனால் தவிர்க்க முடியாத அவற்றோடுதான் இலக்கியத்தை நாம் நேசித்தாக வேண்டியிருக்கிறது. யதார்த்த வாழ்க்கைக்கு இல்லாத ஒரு மேல் பூச்சை இலக்கியத்திற்குத் தந்து அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பதற்குச் சமமா கிறது. நல்லவைகளும்கெட்டவைகளும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன இங்கே. குணங் களும்குறைகளுமாகஉயர்வும் தாழ்வுமாக பிரிக்க முடியாத அங்கங்களாகக் காட்சியளிக் கின்றன. அதனால்தான் வாழ்க்கையை ஆழ அறிந்து அதனோடு நேசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது. அம்மாதிரியான நேச பாவங்களை மிகப் பெரிய வீச்சோடு முனைப்பாக முன்வைப்பதே இலக்கியம். அதை இந்தநாவல் மிகச் சரியாகவே செய் திருக்கிறது என்று சொல்லலாம். 

ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பில் எந்தப் பொருளை மையப்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகிறது. காலங் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களுடைய மரபு சார்ந்த நடைமுறைகள்அவர்களின் நம்பிக்கைகள்அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பழக்க வழக்கங்கள்அவர்கள் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள்இவற்றையெல்லாம் தழுவி ஒரு படைப்பு இருக்க வேண்டும் என்பதுதானே உண்மை.

மக்கள் பல்வேறு தளங்களில் ஏழ்மைப்பட்டுக் கிடக்கிறார்கள். பொருள் சார்ந்த ஏழ்மைகலாச்சாரம் சார்ந்த ஏழ்மைஇப்படிப் பலவும் அவர்களை வாட்டி எடுக்கின்றன. பணத்தை மையப்புள்ளியாகக் கொண்ட வாழ்வின் பொது வெளிகளில் ஒழுக்கம் என்பது தேட வேண்டிய ஒன்றாகிக் கிடக்கிறது.பணம் என்கிற ஒரு காரணி வாழ்க்கையின் சகலவிதமான நன்னிலை களையும் சாகடித்து விட்டது என்பதுதான் சத்தியம். ஓங்கிக் குரலெடுத்துப் பேசும் பேச்சுக் களிலும்வீரியக் கட்டோடு எழுதும் எழுத்துக்களிலும் தடையின்றி வெளிப்படும் மனித நேயம் யதார்த்த வாழ்க்கையில் தேடியடையும் ஒன்றாகவும்அபூர்வமானதாகவும்தானே காணக் கிடைக்கிறது.

இவையெல்லாம் நம் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாமாநம் சிந்தனைகளில் பெருத்த மாற்றங்கள் நிகழாத வரையிலும் சமூக மாற்றத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்சிந்தனைகள் கூர்மைப்பட்ட ஒரு சமூகத்தில்தான் ஒவ்வொருவரின் உணர்வுகளும் கூர்மையடைந்துபெருத்த விவாதங்களும் அதன் தொடர்ச்சியாக செயல்களும் நல்வடிவம் பெறுகின்றன. அப்படியான கூர்மைப்பட்ட ஒரு எழுத்தைத்தான் நாவலாக வடிவமைத்திருக்கிறார் அர்ஷியா. அது பொய்கைக்கரைப்பட்டி என்கிற கவிநயம்மிக்க பெயரோடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

நாவல் என்பது ஒரு சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வேண்டும். காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருக்கும் அது பயன்படக் கூடியதாக இருக்கும். இந்தச்சமூகத்தின் ஒருகுறிப்பிட்ட தளத்தில் பதுங்கிக் கிடக்கும் பொய்மை களைக் கட்டவிழ்த்து அம்பலப்படுத்துகிறது இந்த நாவல். மனிதர்களின் பொய்முகங்களைக் கிழித்தெறிவதோடுஒவ்வொரு மனிதருக்குமிடையேயான மாயத்திரைகளையும் அறுத்தெறி கிறது. மிருகங்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒன்றையொன்று அடித்துத் தின்று ஜீவிக்கின்றன. ஏறக்குறைய மனிதர்களும் அப்படித்தானோ என்று நினைக்க வைக்கிறது. உயர்ந்தவன் இளைத் தவனை வளைத்துப் போட முயல்கிறான். படியவில்லை என்றால் அதற்கான மறைமுக அஸ்திரங்களைப் பிரயோகிக்கிறான். அந்த அஸ்திரங்களும் பலனளிக்கவில்லை யென்றால் மேலே ஒருபடிசென்று மிரட்டிபயமுறுத்தி அடிபணிய வைக்கத் தேவையான வித்தைகளைக் கையாள்கிறான். அதனிலும் அகப்படாதவர்களை இல்லாமல் செய்துவிடுவது என்கிற அளவுக்கான உச்சநிலை அக்கிரமங்களும் ஒருவனால் கையாளப்படுகின்றன. தனி மனிதச் செயல்பாட்டின் முரணான நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக நின்று காப்பது பணம் என்கிற மோசமான வஸ்து. அந்தக்காரணி அது வந்தவழி சரியில்லையென்றால் அதனுடைய செயல் பாடுகளும் சரியில்லாத வழிமுறைகளுக்குத்தான் ஒருவனை இட்டுச்செல்ல முடியும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இந்தநாவல் அதன் யதார்த்த வழியில் சர்வ சகஜமாகச் சொல்லிச் செல்கிறது.

இன்று வெளிவரக்கூடிய நாவல்கள் தொட்டுப் பேசாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது இன்று பேசும் நாவல்கள். யதார்த்த வெளிதனில் தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகளையும்சாதிகள் சார்ந்த முரண்பாடுகளையும்படைப்பாளிகள் நாவலில் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியான பரந்த வெளியைத் துணிச்சலோடு பேசும் நாவல்தான் பொய்கைக்கரைப்பட்டி.

நாவல் விமர்சனம் என்பது முழுக்க முழுக்க அந்தக் கதையைப் பற்றிப் பேசுவது என்பதாகக் கொள்கிறார்கள் பலர். ஒரு நாவலை அதன் தத்துவார்த்த தளத்திலிருந்து அமைதி யாக உள்வாங்கி அது ஏற்படுத்தும் விகசிப்பைப் பூடகமாக வெளிப்படுத்துவதும்அதன் பயன் பாட்டை வெளிச்சமாக்குவதும்தான் ஒருநல்ல நூலுக்கு நாம்தரும் உண்மையான மரியாதை யாக இருக்கமுடியும். அந்த நோக்கில்தான் இந்த நாவல் விமர்சனம் இந்த வடிவில் இங்கே முன் வைக்கப்படுகிறது. ஒரு நல்ல நாவலை எழுத ஒரு படைப்பாளிக்கு உரிமை என்றால் அதற்கான ஒரு சிறந்தகண்ணியமான விமர்சனத்தையும்ஒரு தேர்ந்த வாசகனால் முன் கொணர முடியும்தானேஅப்படியான வெளிப்பாடுதான் பரந்த மனத்தோடு முன்வைக்கப்படு கிறது.

நல்ல எழுத்துக்களைக் கண்டு கொள்ளுங்கள். மனதாரப் பாராட்டுங்கள். எடுத்துக் கொண்ட பொருள்அதில் தென்படும் அனுபவம்அந்தப் படைப்பிற்காக படைப்பாளியின் உண்மையான முயற்சிஅதில் உரத்துப் பேசப்படும் உண்மைகள்அதன் தேவைகள்இவை எல்லாமும் உணரப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். மனம் திறந்து ஒப்புக் கொடுங்கள் உங்களை. நிறைய விவாதங்களை உள் வாங்கிக் கொள்வதாக இருக்கிறது இந்தப் பொய்கைக் கரைப்பட்டி. வெவ்வேறு விதமான பார்வைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. எல்லாவித மான விவாதங்களையும் விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டுஅவற்றின் ஜனநாயகப் பண்புகளைத் தன்னகத்தே ஏற்றுக் கொண்டு நிமிர்ந்து நிற்பது ஒருநல்ல நாவலின் லட்சணமாக இருக்க முடியும். அப்படியான ஒரு பரிபூர்ண ஆனந்தத்தைதிருப்தியை இந்த நாவல் நமக்கு அளிக்கிறது.

யதார்த்தம் என்கிற தளத்திலேயே விடாது இயங்கும் இந்த நாவல் முழுக்க முழுக்க நல்உருப்பெற்ற முழுமையான ஒரு கலைவடிவம் என்பது உறுதி. அனைவராலும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கியமான நாவல்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


 

UL

 

பொய்கைக்கரைப்பட்டி : நேர்த்தியான கலை வடிவம்!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgUOiwzNZMCFVmw_3z3n2VQkj5jU5GRcVZliCMT4c6brLl4Fylktq1XeqjxTE78W_Zh6kofzXpeEy5J58Fe4WsS1xv6OBlozcCsu0Phkl90YjZbMw5RVl8hVxHvjGogyj4P-OfYhYugRwM/s320/Poigaikarai+Jpeg.jpgஉஷாதீபன்-வாசிப்பனுபவம்


நாவல் என்பது ஒரு மிகப் பெரிய கலை உருவம். அது ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தின் நிகழ்வுகளையும்மக்களின் வாழ்வியல் முறைமைகளையும்சமுதாய மாற்றங்களையும்பிரதி பலிக்கக்கூடியதாக அமைய வேண்டும். ஒரு நாவலைப் படைப்பது என்பதில் உள்ள சவால்கள் அநேகம். இன்றும் கூட வெறுமே கதை சொல்வதுதான் நாவல் என்பதாகக் கருதப்படு கிறது.அதையே சுருக்கிச் சொன்னால் அது விமர்சனமாகி முடிந்து போகிறது. ஒருகால கட்டத்தின் நிகழ்வுகளின் கண்ணாடியாகப் பிரதிபலிக்க ஆரம்பித்துவெறுமே கதைசொல்லி நகர்த்திக் கொண்டே சென்று எந்தவித அதிர்வுகளும் இன்றிபாதிப்புகளுமின்றிசலனமில்லா மல் வெறும் சம்பவங்களாக நகர்ந்துஒரு கட்டத்தில் அதுவாகவே நொண்டி அடித்து நின்று போய் நாவல் என்கிற பெயரோடு முடிந்து போன கதைகள் நிறைய உண்டு. 

வாசிப்பு அனுபவத்தினாலும்எழுதும் ஆர்வத்தினாலும்எழும் உந்துதலும் வேகமும்ஒரு மிகப் பெரிய தளத்திற்கான வழி வகைகளை ஆராயாமல்வெறும் சம்பிரதாயக் கதை சொல்ல லாக நகர்ந்துபடைப்புச் சீர்குலைவை உண்டாக்கி விடுகின்றன என்பதுதான் உண்மை. இந்த விபத்துக்கள் நிறைய நடந்துள்ளன.
ஆனால் இம்மாதிரிக் குறைகளெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும் என்கிற அத்யந்த முயற்சி களும் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இயன்றவரை இவற்றையெ ல்லாம் தவிர்த்துஒரு நல்ல முயற்சியாகஇதுவரை எவராலும் சொல்லப்படாத பொருளாகஇந்தச் சமுதாயத்திற்குச் சொல்லியே தீர வேண்டும் என்கிற முனைப்பாகதார்மீக நெறியோடுதீப்பொறி பறப்பதுபோல் சில முயற்சிகளும்திடீரென்று தோன்றி நம்மைக் கலங்கடித்து விடுகின்றன என்பதை இலக்கிய உலகிலான தொடர்ந்த அவதானிப்புகளும்வாசிப்பனுபவமும் உள்ள முதிர்ந்தவாசகர்களும் அறிய நேர்ந்து விடுகிறது. அப்படி வந்திருப்பதுதான் எஸ்.அர்ஷியா எழுதிய பொய்கைக்கரைப்பட்டி என்னும் நாவல். இந்த நாவல் என் பார்வைக்கு உடனே படிக்கக் கிடைத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்படிச் சொல்வதிலும் ஒரு இலக் கியவாதியை மனம் திறந்து வெளிப்படையாகசத்தமாகப் பாராட்டுவதிலும்தான் மனம் திருப்தி யடைகிறது.

இந்த நாவலின் ஆசிரியர் எஸ்.அர்ஷியா தனது முதல் நாவலான ஏழரைப் பங்காளி வகையறாஎன்கிற படைப்பிற்கே தமிழக அரசின் முதல் பரிசைத் தட்டிச் சென்றவர். நிறையச் சிறுகதைகளும்கட்டுரைகளும் எழுதியபத்திரிகை அனுபவமும் கொண்ட படைப்பாளி. வெகு காலமாக எழுதிக் கொண்டிருக்கக் கூடிய பலதேர்ந்த படைப்பாளிகள் இன்னும் இங்கே நிறையப் பேசப்படாமல் இருக்கிறார்கள். நல்ல ருசியுள்ள உணவு கிடைக்கும்பொழுது நம்மை யறியாமல் அதன் சுவையில் மயங்கி சற்று வயிறு முட்டவே உண்டு களிப்பதைப் போலநல்ல எழுத்துக் கள் அடையாளம் காணப்படும்போது வாய் நிறையமனம் நிறையச் சத்தமாகச் சொல்லிப் பாராட்டலாமே!

நாவலின் களம் மதுரைக்கு அருகேயுள்ள புறநகர்பகுதியான அழகர்கோயில். அழகர் மலை அடிவாரத்தின் இயற்கை சார்ந்த இதமான பசுமையான சூழல்நம்முன் விரிக்கப்பட்டு,பொய்கைக்கரைப்பட்டியாகநாவலின் களமாகஎடுத்த எடுப்பிலேயே தீர்மானமாக முன் வைக் கப்படுகிறது. ஒரு திரைப்படத்தின் முதல் காட்சியாகப் படம் இப்படித்தான் துவங்க வேண்டும் என்கிற முடிவில் கஜேந்திர குமாரின் இரு சக்கர வாகனம் (ஓட்டை ஸ்கூட்டர்தான்) அந்தப் பகுதியின் ஒரு டீக்கடைக்கருகே சென்று நிற்கும்போதுகண்முன்னே விரிந்த அடர்ந்து படர்ந்த அந்த வயதான வேப்பமரத்தோடு சேர்த்து காமிராவின் கோணங்களை மென்மையாக நகர்த்தி ஓடவிட்டால் அது `டுபு டுபு`வென்ற ஓசையோடு வந்து நிற்கும் அந்த வாகனத்தில்தான் போய் முடியும்.

கதையோடு சேர்த்து நம்மையும் கூடவே வழி நெடுக அழைத்துச் செல்ல ஆசிரியர் அங்கேயே முடிவு செய்து விட்டது புலனாகிறது. சொல்லப் போகும் விஷயம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் என்பதாக மனத்தினில் நமக்கு உதிக்கும்போதே அதன் தப்புத் தாளங்களும்தகிடுதத் தங்களும் புகுந்து புறப்பட்டால்தானே இந்த நாவல் சிறக்கும் என்பதான ஒரு எதிர்பார்ப்பும்தவிப்பும் எழ, ‘அதைப் பற்றியெல்லாம் நீங்க ஏன் கவலைப் படுறீங்கபேசாம என் கூட வாங்கஉங்கள எல்லா எடத்துக்கும் நானில்ல கூட்டிட்டுப் போறேன்’ என்று தைரியமாக நம்மை அழைத்துச் செல்கிறார் படைப்பாளி. அவருக்கு இருக்கும் தைரியம் படிக்கும் வாசகனுக்கும் கண்டிப்பாக இருக்குமேயானால் இந்தச் சமுதாயக் கேடுகளுக்குகேள்வி கேட்கப்படாத அவலங் களுக்கு,சரியான சவுக்குய்யா இது” என்று சத்தமிட்டு ஆரவாரம் செய்யத்தான் தோன்றும்.

சமுத்திரக்கனி என்கிற ஒரு கையாள் கஜேந்திர குமாருக்கு புரோக்கராக அமைவதும்அவர் மூலம் அவரின் வீட்டு மனை விற்பனைத் தொழில் வெகு சீக்கிரம் பெருகுவதும்பல இடங்களில் பலரும் இப்படித்தான் பெருகிக் கொழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைக் கும் முன்பே திடுமென சமுத்திரக்கனியை முதல் அத்தியாயத்திலேயே வெட்டிச் சாய்த்திடுகை யில் நாவலின் முதல் அத்தியாயத்திலேயே ஒருவனைக் கொன்று போடுவதற்குத் தீர்மானித்து விட்ட ஆசிரியரை நினைத்து நமக்கே சற்று பயமாகத்தான் இருக்கிறது.

இப்படியான வில்லங்கங்களெல்லாம் உள்ள ஒரு தொழிலுக்கு ஏன் மெனக்கெட வேண்டும் என்பதான ஒரு எண்ணமும் மெலிதாக நமக்குத் தலையெடுக்கிறது. ஆரம்பமே சிக்கலானாலும்ஒருவன் அசராமல் எப்படித் தன்னை மென்மேலும் காலூன்றி வளர்த்துக் கொள்கிறான் என்பதற்கு கஜேந்திரகுமார் ரியல் எஸ்டேட் அதிபர் ஒரு தொழில் நேர்த்தியான முன்னுதாரண மாகத் திகழ்கிறார்.


அவரின் எல்லைகள் விரிவதும்புதிதாக ஒருவர் அவருக்கு மீடியேட்டராக அமைவதும்லெவின்ஸ்கி கார்டன் என்கிற ஒரு மிகப் பெரிய திட்டம் அவரின் மனதில் உருவாகி வளர் வதும்அதனை முழுமையான ஒன்றாக உருவாக்க அவர் பழக்கம் கொள்ளும் பெரிய மனிதர் களும்முக்கியப் புள்ளிகளும்எல்லோருமாகச் சேர்ந்து அவரின் வாழ்வை வளமாக்கி நிற்பது மாக நாவல் படிப்படியாக நம் கண்முன்னே விரியும் போது நமக்குத் தெரியாதநம்மால் அறியப் படாத வெவ்வேறு தளங்கள் எப்படியெல்லாம் தன்னின் ஆக்டோபஸ் கரங்களை விரித்துப் பரந்து கொழித்து விஸ்வரூபமாக நிற்கிறது என்கிற உண்மை நம்மைப் பிரமிக்கத்தான் வைக் கிறது.

எடுத்துக் கொண்ட களம்சமுதாயத்திற்குச் சொல்லியாக வேண்டும் என்று நினைத்த முனைப்பான விஷயம்அதுபற்றி அவர் அறிந்து சேகரித்தவை அவற்றில் தவறு நேர்ந்து விடக்கூடாது என்று கருத்தாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுசொல்ல நினைத்தசொல்ல வேண்டிய நிகழ்வுகளை எந்தவித செயற்கைப் பின்னணியும் இல்லாமல் யதார்த்த தளத்தில் நிறுத்தி மக்களின் வாழ்வியலோடு பொருத்தி மிக லாவகமாகசெயல் இயல்பாக அமைய அந்தக் கதாபாத்திரங்களோடு தானும் கூடவே நகர்ந்து வாழ்ந்து கழித்ததுபோன்ற அனுபவப பகிர்வைத் தனக்கும் ஏற்படுத்திக் கொண்டு படிக்கின்ற வாசகர்களுக்கும் ஏற்படுத்தி ஒரு புதிய வாழ்வனுபவத்தை நமக்குப் புகட்டுகிறார் நாவலாசிரியர்.

முழு நாவலையும் சொல்வது என்பது ஒரு நீண்ட கதைச் சுருக்கத்தை முன்வைத்தது போலவே ஆகிவிடும் அபாயம் உண்டு. நாவல் என்பது கதை சொல்வது அல்லவே. கதையை லாவகமாகக் கையாண்டுஒரு நீண்ட வாழ்வியலின் படிப்படியான மாற்றங்களைசமுதாய நிகழ்வுகளை அதன் போக்கில் அறிந்துணரச் செய்வதுதானே! அப்பொழுதுதானே காலத்தால் ஒரு படைப்பு நிற்கும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் போய்ச் சேரும் திறன் வேண்டுமே ஒரு படைப்பிற்கு. நாவல் என்பதன் உட் பொருள் அங்கேதானே முழுமை பெறுகிறது.

வேளாண்மையோடு காலம் காலமாய் ஒன்றிப்போய்விவசாயமே கதி என்று முன்னோர்கள் விட்டுப் போன கண்கூடான சொத்தான நிலங்களை அதுவே தங்கள் வாழ்வின் ஆதாரம் என்று வைத்துக் கொண்டு பிழைத்து வரும் அப்பாவி மக்களை அவர்களோடு கூடிக் குலவி வாழ்ந்து கொண்டிருக்கும் ஒட்டுறவான மனிதர்களையே காய்களாகப் பயன்படுத்திப் பறிக்க முயல்வதும்படியவில்லை என்றால் தொடர்ந்து முயன்று கொஞ்சங் கொஞ்சமாகக் கரைக்க முயல்வதும்,எதுவுமே ஆகவில்லையென்றால் தான்தோன்றித்தனமாக வளர்த்துக் கொண்ட அடாவடித்தனத்தைப் பயன்படுத்தி பயமுறுத்துவதும்உயிருக்கே உலைவைத்து விடும் அளவுக்கான தந்திரோபாயங்களை முன்னிறுத்துவதும்நம் கையைக் கொண்டு நம் கண்ணையே குத்தப் பார்க்கிறார்களே என்று எதற்கு வில்லங்கம் என நினைத்து காலத்தின் கட்டாயத்தில் அமிழ்ந்துபோய் ஒதுங்கி ஓடுவதுமாக ரியல் எஸ்டேட் என்கிற ஏகபோகத்தில் சாதாரண அப்பாவி மக்களின் வாழ்க்கை நசிந்து போவதையும்தொழில் செய்வோரைத் தாறுமாறாக உச்சத்திற்குக் கொண்டு நிறுத்துவதையும்அந்த எதிர்பாராத உச்சமே அவர்களுக்கு அச்சங்களை விளைவித்து நிம்மதியைக் கெடுப்பதையும்ஒரு அளவுக்கு மேல் பணம் நிலை தடுமாறி வந்து கொட்டிக் கிடக்கும்போது கூடவே அபாயமும் சேர்ந்துதான் வரும் என்கிற உண்மையும் கதையின் சம்பவங்களாய்படிப்படியாய் விரிந்து ஒரு தேர்ந்த எழுத்தனுபவமுள்ள முதிர்ச்சியான நாவலாய் நம் முன்னே படர்கிறது இந்தப் பொய்கைக்கரைப்பட்டி. 

இந்த வாழ்க்கையை மிக ஆழமாக அறிந்துணர்ந்துஅதனோடு சகஜமாக நெருங்கிய உறவு வைத்துக் கொள்வதுதான் நேசம் என்று கருதப்படுகிறது. இந்த நேசத்தை உருவாக்குவதே இலக்கியம். இந்த வாழ்க்கையைஇந்த மனிதர்களைஅவர்களின் அபிலாஷைகளைஅவர்களின் நெஞ்சின் ஈரத்தைஆழப் படிந்திருக்கும் நன்னெறிகளை நேசிப்பதாக இருக்க வேண்டியது இலக்கியத்திற்கான இலக்கணமாகக் கொள்ளலாம்.

மனிதர்கள் ரொம்பவும் யதார்த்தமாகவெகு சகஜ மனோபாவம் கொண்டவர்களாகக் காட்சியளிக்கிறார்கள். இலக்கியம் என்கிற புனைவின் ஊடாக வாழ்க்கையைப் பிரதிபலிக்க முனையும்போது நம்மையறியாமல் ஒரு இயல்பை மீறிய தன்மையும்தவிர்க்க முடியாத சிலதிரைகளும் விழுந்துவிடத்தான் செய்கின்றன. ஆனால் தவிர்க்க முடியாத அவற்றோடுதான் இலக்கியத்தை நாம் நேசித்தாக வேண்டியிருக்கிறது. யதார்த்த வாழ்க்கைக்கு இல்லாத ஒரு மேல் பூச்சை இலக்கியத்திற்குத் தந்து அதை நேசிப்பது வாழ்க்கையை நேசிப்பதற்குச் சமமா கிறது. நல்லவைகளும்கெட்டவைகளும் ஏராளமாக விரவிக் கிடக்கின்றன இங்கே. குணங் களும்குறைகளுமாகஉயர்வும் தாழ்வுமாக பிரிக்க முடியாத அங்கங்களாகக் காட்சியளிக் கின்றன. அதனால்தான் வாழ்க்கையை ஆழ அறிந்து அதனோடு நேசம் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது இன்றியமையாததாகிறது. அம்மாதிரியான நேச பாவங்களை மிகப் பெரிய வீச்சோடு முனைப்பாக முன்வைப்பதே இலக்கியம். அதை இந்தநாவல் மிகச் சரியாகவே செய் திருக்கிறது என்று சொல்லலாம். 

ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்பில் எந்தப் பொருளை மையப்படுத்த வேண்டும் என்பது முக்கியமாகிறது. காலங் காலமாக இந்த மண்ணில் வாழ்ந்து வரும் மக்களுடைய மரபு சார்ந்த நடைமுறைகள்அவர்களின் நம்பிக்கைகள்அன்றாட வாழ்க்கையில் அவர்களின் பழக்க வழக்கங்கள்அவர்கள் இந்த வாழ்க்கைப் போராட்டத்தில் எதிர் கொள்ளக்கூடிய பிரச்சினைகள்இவற்றையெல்லாம் தழுவி ஒரு படைப்பு இருக்க வேண்டும் என்பதுதானே உண்மை.

மக்கள் பல்வேறு தளங்களில் ஏழ்மைப்பட்டுக் கிடக்கிறார்கள். பொருள் சார்ந்த ஏழ்மைகலாச்சாரம் சார்ந்த ஏழ்மைஇப்படிப் பலவும் அவர்களை வாட்டி எடுக்கின்றன. பணத்தை மையப்புள்ளியாகக் கொண்ட வாழ்வின் பொது வெளிகளில் ஒழுக்கம் என்பது தேட வேண்டிய ஒன்றாகிக் கிடக்கிறது.பணம் என்கிற ஒரு காரணி வாழ்க்கையின் சகலவிதமான நன்னிலை களையும் சாகடித்து விட்டது என்பதுதான் சத்தியம். ஓங்கிக் குரலெடுத்துப் பேசும் பேச்சுக் களிலும்வீரியக் கட்டோடு எழுதும் எழுத்துக்களிலும் தடையின்றி வெளிப்படும் மனித நேயம் யதார்த்த வாழ்க்கையில் தேடியடையும் ஒன்றாகவும்அபூர்வமானதாகவும்தானே காணக் கிடைக்கிறது.

இவையெல்லாம் நம் சிந்தனையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டாமாநம் சிந்தனைகளில் பெருத்த மாற்றங்கள் நிகழாத வரையிலும் சமூக மாற்றத்தை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்சிந்தனைகள் கூர்மைப்பட்ட ஒரு சமூகத்தில்தான் ஒவ்வொருவரின் உணர்வுகளும் கூர்மையடைந்துபெருத்த விவாதங்களும் அதன் தொடர்ச்சியாக செயல்களும் நல்வடிவம் பெறுகின்றன. அப்படியான கூர்மைப்பட்ட ஒரு எழுத்தைத்தான் நாவலாக வடிவமைத்திருக்கிறார் அர்ஷியா. அது பொய்கைக்கரைப்பட்டி என்கிற கவிநயம்மிக்க பெயரோடு தலைநிமிர்ந்து நிற்கிறது.

நாவல் என்பது ஒரு சமூகச் செயல்பாடாகப் பரிணமிக்க வேண்டும். காலத்தைத் தாண்டி நிற்க வேண்டும். அப்பொழுதுதான் சமூகத்தின் பல்வேறு மட்டத்தினருக்கும் அது பயன்படக் கூடியதாக இருக்கும். இந்தச்சமூகத்தின் ஒருகுறிப்பிட்ட தளத்தில் பதுங்கிக் கிடக்கும் பொய்மை களைக் கட்டவிழ்த்து அம்பலப்படுத்துகிறது இந்த நாவல். மனிதர்களின் பொய்முகங்களைக் கிழித்தெறிவதோடுஒவ்வொரு மனிதருக்குமிடையேயான மாயத்திரைகளையும் அறுத்தெறி கிறது. மிருகங்கள் தாங்கள் வாழ்வதற்காக ஒன்றையொன்று அடித்துத் தின்று ஜீவிக்கின்றன. ஏறக்குறைய மனிதர்களும் அப்படித்தானோ என்று நினைக்க வைக்கிறது. உயர்ந்தவன் இளைத் தவனை வளைத்துப் போட முயல்கிறான். படியவில்லை என்றால் அதற்கான மறைமுக அஸ்திரங்களைப் பிரயோகிக்கிறான். அந்த அஸ்திரங்களும் பலனளிக்கவில்லை யென்றால் மேலே ஒருபடிசென்று மிரட்டிபயமுறுத்தி அடிபணிய வைக்கத் தேவையான வித்தைகளைக் கையாள்கிறான். அதனிலும் அகப்படாதவர்களை இல்லாமல் செய்துவிடுவது என்கிற அளவுக்கான உச்சநிலை அக்கிரமங்களும் ஒருவனால் கையாளப்படுகின்றன. தனி மனிதச் செயல்பாட்டின் முரணான நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக நின்று காப்பது பணம் என்கிற மோசமான வஸ்து. அந்தக்காரணி அது வந்தவழி சரியில்லையென்றால் அதனுடைய செயல் பாடுகளும் சரியில்லாத வழிமுறைகளுக்குத்தான் ஒருவனை இட்டுச்செல்ல முடியும் என்பது இங்கே நிரூபிக்கப்பட்ட உண்மைகள். இதை இந்தநாவல் அதன் யதார்த்த வழியில் சர்வ சகஜமாகச் சொல்லிச் செல்கிறது.

இன்று வெளிவரக்கூடிய நாவல்கள் தொட்டுப் பேசாத விஷயங்களே இல்லை என்று கூறலாம். முன்னைக்கு இப்போது எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது இன்று பேசும் நாவல்கள். யதார்த்த வெளிதனில் தமிழ்ச் சமூகத்தின் முரண்பாடுகளையும்சாதிகள் சார்ந்த முரண்பாடுகளையும்படைப்பாளிகள் நாவலில் கொண்டுவர ஆரம்பித்திருக்கிறார்கள். அப்படியான பரந்த வெளியைத் துணிச்சலோடு பேசும் நாவல்தான் பொய்கைக்கரைப்பட்டி.

நாவல் விமர்சனம் என்பது முழுக்க முழுக்க அந்தக் கதையைப் பற்றிப் பேசுவது என்பதாகக் கொள்கிறார்கள் பலர். ஒரு நாவலை அதன் தத்துவார்த்த தளத்திலிருந்து அமைதி யாக உள்வாங்கி அது ஏற்படுத்தும் விகசிப்பைப் பூடகமாக வெளிப்படுத்துவதும்அதன் பயன் பாட்டை வெளிச்சமாக்குவதும்தான் ஒருநல்ல நூலுக்கு நாம்தரும் உண்மையான மரியாதை யாக இருக்கமுடியும். அந்த நோக்கில்தான் இந்த நாவல் விமர்சனம் இந்த வடிவில் இங்கே முன் வைக்கப்படுகிறது. ஒரு நல்ல நாவலை எழுத ஒரு படைப்பாளிக்கு உரிமை என்றால் அதற்கான ஒரு சிறந்தகண்ணியமான விமர்சனத்தையும்ஒரு தேர்ந்த வாசகனால் முன் கொணர முடியும்தானேஅப்படியான வெளிப்பாடுதான் பரந்த மனத்தோடு முன்வைக்கப்படு கிறது.

நல்ல எழுத்துக்களைக் கண்டு கொள்ளுங்கள். மனதாரப் பாராட்டுங்கள். எடுத்துக் கொண்ட பொருள்அதில் தென்படும் அனுபவம்அந்தப் படைப்பிற்காக படைப்பாளியின் உண்மையான முயற்சிஅதில் உரத்துப் பேசப்படும் உண்மைகள்அதன் தேவைகள்இவை எல்லாமும் உணரப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள். மனம் திறந்து ஒப்புக் கொடுங்கள் உங்களை. நிறைய விவாதங்களை உள் வாங்கிக் கொள்வதாக இருக்கிறது இந்தப் பொய்கைக் கரைப்பட்டி. வெவ்வேறு விதமான பார்வைகளை ஏற்படுத்துவதாக அமைகிறது. எல்லாவித மான விவாதங்களையும் விமர்சனங்களையும் உள்வாங்கிக் கொண்டுஅவற்றின் ஜனநாயகப் பண்புகளைத் தன்னகத்தே ஏற்றுக் கொண்டு நிமிர்ந்து நிற்பது ஒருநல்ல நாவலின் லட்சணமாக இருக்க முடியும். அப்படியான ஒரு பரிபூர்ண ஆனந்தத்தைதிருப்தியை இந்த நாவல் நமக்கு அளிக்கிறது.

யதார்த்தம் என்கிற தளத்திலேயே விடாது இயங்கும் இந்த நாவல் முழுக்க முழுக்க நல்உருப்பெற்ற முழுமையான ஒரு கலைவடிவம் என்பது உறுதி. அனைவராலும் படித்து அனுபவிக்க வேண்டிய ஒரு முக்கியமான நாவல்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...