18 நவம்பர் 2014

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014விருது

 

 

download (1) vikatan2009-5

 

 

 

download (2)

download

 

கவிஞர் ஞானக்கூத்தன் அவர்களுக்கு விஷ்ணுபுரம் 2014 விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியான செய்தி. இந்த விருது பாராட்டுக் கேடயமும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப்பரிசும் அடங்கியது. அருமையான கவிஞர். வலியக் கண்டுகொள்ளப்படாமல் ஒதுக்கப்பட்டவர் என்று சொல்ல வேண்டும். எனக்கு இப்படித்தான் தோன்றுகிறது. எழுத்து, அது என்ன சொல்கிறது என்பது மட்டும்தானே கணக்கு. இங்கே அப்படி அல்லாமல் பலவும் புகுந்து கொண்டன. அதுபற்றி அவருக்கு எந்த இழிவுமில்லை. அவர் கவிதைகள் என்றும் தலை நிமிர்ந்து நிற்கின்றன. “அன்று வேறு கிழமை” என்ற ஒரு கவிதைத் தொகுப்பு போதும் அவரது பெயர் சொல்ல...! ஜெயமோகனுக்குத்தான் நன்றி சொல்லியாக வேண்டும். கவிஞருக்கு மனமார்ந்த, அன்பான. இதயம் கனிந்த வாழ்த்துக்கள்...

சாம்பிளுக்கு ஒரு கவிதை
----------------------------------------------------------

அம்மாவின் பொய்கள்
----------------------------------------------------

பெண்ணுடன் சினேகம் கொண்டால்
காதறுந்து போகும் என்றாய்
தவறுகள் செய்தால் சாமி
கண்களைக் குத்தும் என்றாய்
தின்பதற் கேதும் கேட்டால்
வயிற்றுக்குக் கெடுதல் என்றாய்
ஒருமுறை தவிட்டுக்காக
வாங்கினேன் உன்னை என்றாய்
எத்தனைப் பொய்கள் முன்பு
என்னிடம் சொன்னாய் அம்மா
அத்தனைப் பொய்கள் முன்பு
சொன்ன நீ எதனாலின்று
பொய்களை நிறுத்திக் கொண்டாய்
தவறு மேல் தவறு செய்யும்
ஆற்றல் போய் விட்டதென்றா?
எனக்கினி பொய்கள் தேவை
இல்லையென் றெண்ணினாயா?
அல்லது வயதானோர்க்குத்
தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்
பொறுப்பினி அரசாங்கத்தைச்
சார்ந்ததாய்க் கருதினாயா?
தாய்ப்பாலை நிறுத்தல் போலத்
தாய்ப் பொய்யை நிறுத்தலாமா
உன்பிள்ளை உன்னை விட்டால்
வேறெங்கு பெறுவான் பொய்கள்

— with Ayyanpettai Dhanasekaran.


கருத்துகள் இல்லை:

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...