28 பிப்ரவரி 2013

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓரிரவு ஒரு ரயிலில்...”

.

இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“. உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா? கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே.. வெடிச்சாலும் பாதிப்பில்லாம...சார்...சார்...அது என் பேக். இதத்தான் காணலன்னு இம்மாம் நேரம் தேடிட்டிருந்தேன்...உள்ள என்னய்யா டிக் டிக் சத்தம்? கடிகாரம் சார்....புதுசா வாங்கிட்டுப் போறேன்...என் மச்சினிக்குப் படிக்கிறதுக்கு சார்...பயங்கரமான ஸ்வாரஸ்யம்...அது சுஜாதாவால மட்டும்தான் கொடுக்க முடியும்...கடைசியில் உடன் பயணித்த கதாநாயகியே சாமியாருக்கு அருகில் இருந்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறாள். சாமியாரின் பொதுக் கூட்டமொன்றில் இவள் அண்ணன் கமல்நாத்தை கமால்கான் என்று புரிந்துகொண்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் உயிரோடு கொளுத்தி விடுகிறார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குகிறாள் இவள். மிகச் சரியான இடத்தில் முடிந்து போகிறது குறுநாவல். அதுதானே படைப்பாளிக்கு அழகு. ஒரு வரி நீண்டாலும் மதிப்புப் போய்விடுமய்யா...சுஜாதாவுக்குச் சொல்லியா தர வேண்டும். எம்.ஜ.ஆர். காலமாகி இருபத்தைந்தாண்டு கடந்தும் அவர் புகழ் நிலைத்து நிற்பதுபோல, சுஜாதாவின் எழுத்தும் இன்னும் பல்லாண்டிற்கு நிற்கும். -உஷாதிபன்

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-20. உயிர்மை வெளியீடு ”ஓரிரவு ஒரு ரயிலில்...” . இன்று படித்தது இது. கதையின் ஆரம்பத்திலேயே நாமும் ரயிலில் ஏறி விடுகிறோம். பயத்துடனேயே பயணிக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்துவிடுகிறது. காரணம் ரயிலில் உடன் வந்து கொண்டிருக்கும் பயணியான சாமியார். என்னை அவன் பார்த்துப்பான்...என்கிறார்“.  உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டியது எங்க கடமை என்கிறார் காவல் துறை அதிகாரி. சாமியாரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துதான் இந்தப் பாதுகாப்பு. போதாக்குறைக்கு நடுவழியில் வண்டி நிறுத்தப்படுகிறது. பயணிகள் இறக்கப்படுகிறார்கள். இதான்யா இவங்ககிட்ட...எதையுமே முதல்லவே பார்க்க மாட்டாங்க. வண்டில குண்டு இருக்காம்...உயிர் போனாப் பரவால்லயா... வாய் மூடிக் கொள்கிறது எல்லோருக்கும். ஒரே பரபரப்பு. தேடு தேடு என்று தேடுகிறார்கள். ஒரு பை அகப்படுகிறது. உள்ளே டிக் டிக் சத்தம் வேறு. எங்கேயாவது நீளக் கம்பு கிடைக்குமா?  கம்பால நுனில தூக்கித் தள்ளி வச்சிட்டு ஓடிப்போயிடலாமே.. வெடிச்சாலும் பாதிப்பில்லாம...சார்...சார்...அது என் பேக். இதத்தான் காணலன்னு இம்மாம் நேரம் தேடிட்டிருந்தேன்...உள்ள என்னய்யா டிக் டிக் சத்தம்? கடிகாரம் சார்....புதுசா வாங்கிட்டுப் போறேன்...என் மச்சினிக்குப் படிக்கிறதுக்கு சார்...பயங்கரமான ஸ்வாரஸ்யம்...அது சுஜாதாவால மட்டும்தான் கொடுக்க முடியும்...கடைசியில் உடன் பயணித்த கதாநாயகியே சாமியாருக்கு அருகில் இருந்து அவரைச் சுட்டு வீழ்த்துகிறாள். சாமியாரின் பொதுக் கூட்டமொன்றில் இவள் அண்ணன் கமல்நாத்தை கமால்கான் என்று புரிந்துகொண்டு சொல்லச் சொல்லக் கேட்காமல் உயிரோடு கொளுத்தி விடுகிறார்கள். அதற்குப் பழிக்குப் பழி வாங்குகிறாள் இவள். மிகச் சரியான இடத்தில் முடிந்து போகிறது குறுநாவல். அதுதானே படைப்பாளிக்கு அழகு. ஒரு வரி நீண்டாலும் மதிப்புப் போய்விடுமய்யா...சுஜாதாவுக்குச் சொல்லியா தர வேண்டும். எம்.ஜ.ஆர். காலமாகி இருபத்தைந்தாண்டு கடந்தும் அவர் புகழ் நிலைத்து நிற்பதுபோல, சுஜாதாவின் எழுத்தும் இன்னும் பல்லாண்டிற்கு நிற்கும். -உஷாதிபன்

27 பிப்ரவரி 2013

சுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்”. உயிர்மை வெளியீடு.

இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்
சுஜாதாவின் குறுநாவல் வரிசை-14.“ இப்படி ஒரு மாறுதல்”. இதுதான் நான் இப்போது படித்த புத்தகம். மிகச் சிறிய குறுநாவல்தான். ஆனாலும் எத்தனை துடிப்போடும், துள்ளலோடும். முடிவை மட்டும் முதலிலேயே தீர்மானித்துக் கொண்டால் போதும் அவருக்கு. உள்ளே நாவலை நீட்டிக்க, சம்பவங்களைக் கோர்க்க, சந்தேகங்களை வலுக்கச் செய்ய, அடுத்தடுத்துத் தாண்டிக் கொண்டே போக, கடைசியில் யாரும் எதிர்பாரா ஒரு முடிவைக் கொடுக்க, அது அவரால் மட்டுமே முடியும். உயிர்மையின் குறுநாவல் வரிசையில், எதைப் படிப்பது, எதை விடுவது என்று எதையும் விடமுடியாமல், வரிசையாகப் போய்க்கொண்டே இருக்கிறது. சுஜாதா ஒரு எழுத்துப் புயல். அதனால்தான் இன்னும் அவரது எழுத்து அழியாமல் விலை போய்க் கொண்டிருக்கிறது. - உஷாதீபன்

“தோற்றப் பிழை” (சிறுகதைத் தொகுதி) -------------------------------------------------------------------------கட்டுரை--- ( ”படைப்பிலக்கியத்தின் கச்சிதமான காட்சிப் பதிவுகள்

 

clip_image001clip_image002


எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, நியாயமாக, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக, வெறும் பொழுது போக்கிற்காக, இவர் எழுதி நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டவருக்கு தொகுதி அளிப்பதில் பதிப்பகங்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? NCBH நிறுவனம் இப்போது அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. நல்ல படைப்பாளிகளை அடையாளம் கண்டு கொள்வதுதானே ஒரு நல்ல, உயர்ந்த பதிப்பகத்தின் கடமையாக இருக்க முடியும்.

தோற்றப் பிழைஎன்பது ந்தச் சிறுகதைத் தொகுதியின் பெயர். ஒரு வயதான முதியவரின் படத்தைப் பொருத்தமான அட்டைப்படமாகப் போட்டு, கீழே தோற்றப்பிழை என்று புத்தகத்தின் பெயரையும் அச்சிட்டிருக்கிறார்கள். ஆனால் அது தோற்றப்பிழை அல்ல. தோற்றத்தில் மரியாதையையும், மதிப்பையும் தரும் களை. களை என்றால் களையாக, அழகாக, திருத்தமாக இருத்தல் என்று பொருள். அந்தப் பரிபூர்ண லட்சணம் இந்தத் தொகுதிக்கு உண்டு. தோற்றப்பிழை என்ற அந்தத் தலைப்பில்தான் முதல் கதையோடு இத்தொகுப்பு ஆரம்பிக்கிறது. முதுமை எத்தனை அழகு? அதன் முதிர்ச்சியும், பக்குவமும் பார்த்துப் பார்த்து பணிந்து, மரியாதை செய்யக் கூடியதல்லவா? அப்படியான முதியோர்களின் பிரச்னைகளை உள்ளடக்கிய பல சிறுகதைகளைக் கொண்டுள்ளது இத்தொகுதி. அதுவே இத்தொகுதியின் சிறப்பு என்று ஆரம்பத்திலேயே கூறிவிடலாம். ஏனென்றால் இப்பிரச்னை மூலமாக இந்தச் சமுதாயத்திற்குச் சொல்ல வேண்டிய செய்திகள் நிறைய விரவிக் கிடக்கின்றன என்பதுதான் சத்தியமான உண்மை.

13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பு இது. இதன் பல சிறுகதைகள் பரிசுகளை வென்ற கதைகள். பொதுவாக ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து கதைகள்தான் சிறப்பான படைப்புக்களாக இருப்பது வழக்கம். அப்படியானால்தான் இன்னொரு தொகுதிக்கும் சிறந்த நான்கைந்து கதைகளைக் கொடுத்து அந்தத் தொகுதியையும், சிறப்பிக்க முடியும் என்று மடியில் பொதிந்து வைத்திருப்பார்கள் எழுத்தாளர்கள். ஆனால் இவர் அப்படியில்லை. காரணம் கொஞ்சமாக எழுதுபவர் இவர்..ஆனால் நிறைவாகத் தன் படைப்புக்களைக் கொடுப்பவர். எழுதி எழுதித் தள்ளுபவர்களை விட எழுத்தைத் தவமாகக் கொள்பவர்களின் படைப்புக்கள் என்றும் சிறக்கத்தானே செய்யும்? அப்படித் தவமாக இயற்றி இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியிருக்கிறார் செய்யாறு தி.தா.நாராயணன்.

தோற்றப்பிழை நம் மனதைக் கனக்கச் செய்யும் அற்புதமான படைப்புக்களைக் கொண்டது. அதை ரசிப்பதும், சுவைப்பதும், அனுபவிப்பதும், கரைந்து சஞ்சரிப்பதும், காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதில்தான் இருக்கிறது. நல்ல ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அப்படியானால்தான் படைப்பாளி மேலும் மேலும் இந்தச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுத் தன்னைக் கரைத்துக் கொள்வான். என்னதான் ஆனாலும் அவனும் கைதட்டலுக்குக் காத்திருப்பவன்தான். அதுதானே யதார்த்தம்.

இந்த முன்னுரையோடுதான் இந்தத் தொகுதிகளின் கதைகள் பற்றி ஆரம்பிக்க வேண்டும் என்று இப்புத்தகத்தைப் படித்து முடித்தவுடனேயே முடிவு செய்து விட்டேன். வெறும் புகழ்ச்சியாக இவை சொல்லப்படவில்லை. உள்ளே விரிந்துள்ள படைப்புக்கள் அப்படிச் சொல்ல வைக்கின்றன. விழுமியங்கள் மறைந்து கொண்டிருக்கும் காலகட்டம் இது. அப்படியென்றால் கிலோ என்ன விலை? என்று கேட்கும் இளைய சமுதாயம் இம்மாதிரிப் புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும். புத்தகங்கள் மனிதர்களைச் செம்மைப் படுத்துகின்றன. வாழ்க்கையைக் கற்றுக் கொடுக்கின்றன. ஒருவனுக்கு இந்த வாழ்வில் எல்லாவிதமான அனுபவங்களும் கிடைத்து விடுவதில்லை. காரணம் வாழ்க்கையின் எல்கை மிகக் குறைவு. தினமும் சந்திக்கும் மனிதர்கள், நிகழும் செயல்கள் ரொம்பவும் சாதாரணமானவை. குறிப்பிட்ட தூரமும், வீடுமாய் இருக்கும் நம் அன்றாட வாழ்க்கையில் எத்தனை வித விதமான அனுபவங்களை நாம் பெற்று விட முடியும்? அப்படியானால் மனிதர்கள் மன முதிர்ச்சி அடைவது எப்படி? அனுபவங்களைப் பெறுவது எங்ஙனம்? பக்குவமடைவது எப்போது? வாழ்ந்து முதிர்ந்த, சலித்த பெரியோர்களின் அனுபவங்களைப் பெறுவதுதான், அறிவதுதான் இதற்கு ஒரே வழி. அவற்றை எது தரும்? சந்தேகமில்லாமல் புத்தகங்கள்தானே அவற்றைத் தர முடியும்? சுந்தர ராமசாமி சொல்லுவார் – புத்தகங்கள் மனிதனின் சளசளப்பைப் போக்கி அவனை அமைதி கொள்ளச் செய்கின்றன. அவனை விவேகமுள்ளவனாக ஆக்குகின்றன. வாசிப்புப் பழக்கத்தினால் ஒருவன் மிகுந்த விவேகமுள்ள பண்பாளனாக மாறுகிறான். வாசிப்பு என்பது வெறும் புத்தகங்களை மட்டும் வாசிப்பதல்ல. இந்த மனிதர்களை, மரம் செடி கொடிகளை, இயற்கையை, பிற ஜீவராசிகளை இப்படி எல்லாவற்றையும் வாசிக்கக் கற்றவன்தான் ஒரு சிறந்த வாசகனாக இருக்க முடியும்.

அப்படியான ஒரு பக்குவத்தை ஏற்படுத்தக் கூடிய படைப்புக்கள் அவ்வப்போது வந்து கொண்டுதான் இருக்கின்றன. மனித மனங்களை மேன்மைப்படுத்தும் புத்தகங்கள் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுகின்றன. தன்னைப் புடம் போட்டுக் கொள்ள அவை தூண்டிக் கொண்டேயிருக்கின்றன. அப்படி ஒரு புத்தகம்தான் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுப்பு.

தோற்றப்பிழை – புத்தகத்தின் தலைப்புக் கதை இது.

எல்லாச் சாதிக் கட்சிகளையும் ஒழிக்கணும்யா…

ஒழிக்கலாம்தான். ஆனால் சாதி பெயரில்லாமல், கட்சி வைத்து வளர்த்துக் கொண்டு, சாதியை மறைமுகமாக ஆதரித்து, வளர்த்து, ஓட்டு வங்கியை நிலைக்கப் பாடுபட்டு. மக்களிடையே வேற்றுமைகளை, பகைமையை அதிகரிக்கிறார்களே? அதை என்ன செய்வது?.

ஒண்டி ஆளாய் நின்று நாலு ஏக்கர் எழுபது சென்ட் எழுதிக் கேட்க முனைந்த பொழுதில், அங்கே அவனின் தைரியமும், திமிரும் பெருமையாகப் பேசப்பட்டு, தவறு பின்னுக்குப் போய்விடுகிறது. ஆனால் நம்ம சாதிக்காரன்டா, அதான் இத்தனை தில்லா நிக்கிறான் என்று தன்னை மறந்து அடிமனசில் ஊறிப்போய்க் கிடக்கும் சாதிப் பெருமை தளிர்விடத்தானே செய்கிறது. ஆயினும் எவனுடைய தோற்றத்தை வைத்தும் எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. ஏனெனில் உள்ளே ஊடுருவி நுழைந்து பார்க்கையில்தான் தெரியும் எல்லோர் மனதிலும் சாதி உண்டு என்கிற உண்மை. தலைவலியும், காய்ச்சலும் தனக்கு வந்தால்தான் தெரியும் என்ற எளிமையான பழகிய மொழியின் நூறு சத யதார்த்தம்தான் உண்மை. அப்படிப்பார்த்தால் தோற்றப்பிழை என்பது சரிதான். எல்லோரிடமும் சாதி உள்ளது என்பதை வலியுறுத்த வந்த கவனமான கதை இது. கொஞ்சம் அவசரம் தெரிகிறது படைப்பின் உருவாக்கத்தில். கதையாடலை இன்னும் கொஞ்சம் யதார்த்தப்படுத்தியிருந்தால், கருத்துக்காகவே கதை சொல்ல வந்த தன்மை தானாகவே மறைந்து போயிருக்கும் என்று தோன்றுகிறது.

முதல் கதை ஜாதிப் பிரச்னை என்றால் இது மதப் பிரச்னை. எழுத்தாளனின் பணி சமூக அவலங்களைத் தட்டிக் கேட்பதுதான் மறுப்பதற்கில்லை. இலக்கியம் சமுதாயத்திற்காக என்கிற கூற்று இங்கே நிஜப்படுகிறது. ஆனால் இலக்கியம் என்பது வெறும் கலை, இலக்கியம் இலக்கியத்திற்காக என்கிற கூற்றும் காலந்தோறும் கூடவே இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஜாதி மறுப்பு, மத மறுப்பு என்று புரட்சிகரமான எண்ணங்களைக் கொண்டு முற்போக்குச் சிந்தனைகளை விதைக்கலாம்தான். எழுத்து அப்பொழுதுதான் நிறைவடையும் ஒரு படைப்பாளிக்கு. ஆனால் இதைவிடவெல்லாம் இந்தப் புரட்சிகரச் சிந்தனைகளுக்காகக் களத்தில் இறங்கி உண்மையிலேயே பாடுபடுகிறானே,அவன் இந்த எல்லாரையும் விட உயர்ந்தவனல்லவா? மனம் இப்படி நினைக்கத்தான் செய்கிறது. ஆனாலும் எத்தனை வீடுகளில் வறுமையினாலும், வரதட்சணைக் கொடுமையினாலும் பெண்ணைக் கட்டிக் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள்? காதல் திருமணங்களும், வீட்டை மீறி ஓடிப் போய்த் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வுகளும் பெரும்பாலும் இதனால்தானே நடைபெறுகின்றன? பெற்றோர் சம்மதத்தோடும், சம்மதமின்றியும் காணத்தானே செய்கிறோம்? ஆனால் இந்தக் கதையின் சாந்தி தாயின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தேவதையாய் நிற்கிறாள். கதை லட்சுமணக் கோடு. சமுதாயம் கட்டிக் காக்கும் பண்பாட்டின், விழுமியங்களின் தேர்ந்த அடையாளமாய், வறுமையிற் செம்மையாய், தன் தாயின் உழைப்பின்மீது கொண்ட முழு மரியாதை நிமித்தம், தன்னை அவள் இட்ட கோட்டுக்கு உட்பட்டு நிறுத்திக் கொள்கிறாள். அதன் பலன்? இந்தக் கடைசிப் பத்தியைப் படியுங்கள். உங்கள் மனசு இளகி அழவில்லையானால், நீங்கள் மனிதரேயில்லை…!

என்னடீ அதிசயம்…? காலங்கார்த்தால குளிச்சிட்ட?

மறந்துட்டியா? என்னை ஆசீர்வாதம் பண்ணும்மா…! இன்னிக்கு என் பிறந்தநாள்மா…!

காலில் விழுந்தவளைத் தூக்கி நிறுத்தினாள். கண்கள் ததும்புகின்றன. முப்பத்திமூணு வயசு முடிஞ்சு போச்சி. அம்மாவே எல்லாமென்று போட்ட கோட்டைத் தாண்டமாட்டாமல், தன் உணர்வுகளைப் புதைத்து விட்டு நிற்கும் தன் குலக்கொழுந்தை தலை முதல் கால்வரை பார்க்கிறாள். துக்கம் அடைக்கிறது. இளமை கலைய ஆரம்பித்துவிட்டிருந்தது. முகத்தில் லேசாய் முற்றல் வந்துவிட்டது. காதோரங்களில் ஒன்றிரண்டு நரை முடிகள். ஐயோ கண்ணே…! என் செல்லமே…!! நீயாவது துணிஞ்சி அந்தப் பையனோட ஓடிப் போயிருக்கக் கூடாதா?

கதையின் உச்சம் இது. நம்மைப் பிழிந்தெடுக்கும் இடம். அதுவே இக்கதையின் வெற்றி.

கிருஷ்ணராஜசாகரின் வடிகாலாகத்தான் தமிழகத்திற்குக் காவிரி பயன்படுகிறது என்பதாக ஒரு கருத்து உண்டு. இது மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் பிரச்னை. இதுவே இரு கிராமங்களுக்குட்பட்ட பிரச்னையாக இருந்தால்? மொத்தமுள்ள 13 ஏரிகளுக்கும் பொதுவாக மக்கள் திரண்டால்? பலகை போட்டு மடை கட்டி ஒரு ஊர்க்காரர்களே பயன்படுத்த முடியுமா? எந்த மடையைக் கட்டி தண்ணீர் எங்களுக்கு நிரம்பியது போகத்தான் மீதி உங்களுக்கு என்றார்களோ, அதுவே வெள்ளம் வரும்போது? அப்போது மட்டும் மடையை எடுத்துவிடுவது எப்படி நியாயமாகும்? வெள்ளம் வரும்போது அதன் அழிவுகளை நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும் எனும்போது தீர்வு வருகிறது அங்கே. தண்ணீர் எல்லார்க்கும் பொது என்பதும், மக்களின் ஒற்றுமையும் வலியுறுத்தப்படும் கதை இது என்பதே இதன் சிறப்பு. கதையின் தலைப்பு மடை.. அடுத்ததாக புதிய ஏற்பாடு.

இன்றைய பெற்றோர்களின் நிலைமை, தந்தை மகனுக்கு எழுதும் கடித வடிவாக வரையப்பட்டு மனம் சோரும் அவருக்கு. வயதொத்த நண்பர் சூழ்நிலையின் யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு சந்தோஷமாக இருக்கப் பழகிக் கொள்ளத்தான் வேண்டும் என்று போதிக்கும் கதை. முதியோர் இல்லத்தில் சென்று இருத்தலும், சந்தோஷத்தையும், திருப்தியையும் வரவழைத்துக் கொள்ளுதலும்தான் புதிய ஏற்பாடு என்கிற கருத்தில் மனதை உருக வைக்கும் கதை. இம்மாதிரிக் கதைகளையே கூட அந்த வயதொத்த மனிதர்கள் படித்து உணருவதைப் போல, மன முருகுவதைப்போல், இன்றைய இளைஞர்கள். இளைய வாசகர்கள் உணருவார்களா என்பது சந்தேகம்தான். காலம் அப்படித்தான் அவர்களைப் பழக்கியிருக்கிறது. நீ பங்களா வாங்கியதை உன் மாமனார்தான் எனக்குச் சொன்னார். இந்தத் தற்குறி அப்பனுக்குச் சொல்வது முக்கியமில்லை என்று விட்டுவிட்டாய் போலும். ஒரு தந்தையின் நிலையில் இருந்து பார்த்தால்தான் இந்த வேதனை புரியும்.

பொதுவாகப் பையன்களுக்கு அப்பாவை விட அம்மாமேல்தான் இஷ்டம் அதிகம். அதற்கு வெவ்வேறு பாலினம் என்பது கூட ஒரு காரணமாயிருக்கலாம். வெளியூரிலிருந்து தொலைபேசியில் அவர்கள் அடிக்கடி அதிகமாய்ப் பேசுவது அப்பாவைவிட அம்மாவிடம்தான். அம்மாவே, இந்தா அப்பாட்டப் பேசு, என்று ரீசீவரைக் கொடுத்தால், போகிறது என்று தர்மத்திற்கு ரெண்டு வார்த்தை பேசுவார்கள். அப்படியென்ன அம்மா பிரியம்? அந்த அளவுக்கா இஷ்டமாய் அவனுக்கு அவள் உபதேசம் செய்கிறாள்? அட்வைஸ் என்பதுதான் இந்தக் காலத்துப் பசங்களுக்குப் பிடிக்காதே? இஷ்டமான அம்மாவே அட்வைஸ் என்று ஆரம்பித்தால் பட்டென்று ஃபோனைத் துண்டித்து விடுவார்களே? நறுக்கென்று மூஞ்சியிலடித்தாற்போல் மரியாதை கெடுமே அங்கே? அதுதானே யதார்த்தம். ஆனாலும் அம்மாவிடம் மட்டும்தான் பையன்களுக்குப் பேசப் பிடிக்கிறது. அப்படி என்ன ஒன்று கூட அப்பாவிடம் பேச இல்லாமல் போயிற்று? அது அந்தக் கடவுளுக்குத்தான் வெளிச்சம். மனைவியைப் பிரிந்து தனியாய் இருக்கும் அவர், தானே முதியோர் இல்லத்தைத் தேடிக் கொள்கிறார். இதையே யதார்த்தமாய், சந்தோஷமாய் ஏற்றுக் கொள்ளும் நண்பர் ஒருவர், “கோழை மாதிரி அழாதீருமய்யா…” என்கிறார். வாழ்க்கைல தேடித் தேடிக் குற்றங்களைக் கண்டுபிடிக்காதீரும்…சந்தோஷமாப் போயிரும்…என்று தேற்றி, சமனுக்குக் கொண்டு வர முயற்சிக்கிறார். ஆனாலும் வயதானவர்களுக்குக் கிடைப்பது தனிமைதான் என்று உணர்கிறார். யாரும் யாரையும் சார்ந்திருப்பதற்கில்லை. எல்லோரும் சுதந்திரமாய் இருங்கள் என்கிறார்கள் இளைஞர்கள். ஆரோக்யமான புதிய ஏற்பாடு இது. ஏற்றுக் கொள்ள முடிகிறதா? ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். காலத்தின் கட்டாயம் இது. விடுங்கள். அடுத்ததாய்ப் பரிணாமத்தைப் பார்ப்போம்.

மனித குலத்தின் அடுத்த பரிணாமமாகப் பிறக்கும் செயற்கைக் கருவூட்டலில் ஒரு வேற்றுக் கிரகவாசிக்குப் பிறந்த குழந்தைதான் அது. பிறந்தவுடனேயே கூடவே மதமும் பிறந்து விடுகிறது. என்பதுதான் விந்தை. குறிப்பிட்ட மதத்தைப் பின்பற்றும்போது அதன் தொடர்ச்சியாக வெறியும், போரும், அழிவும் தவிர்க்க முடியாதது என்பதாகச் சொல்லி முடிகிறது இக்கதை. ஆக எத்தனை விஞ்ஞான முன்னேற்றமானாலும், கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், ஒற்றுமை என்பது அழிந்துபடும் என்பதான கருத்து யோசிக்க வேண்டிய ஒன்றாகிறது. அறிவியல் புனைகதையாக இத்தொகுதியில் விரிந்திருக்கும் இரண்டில் ஒன்று.

துரைசாமி தன் பணியில் நேர்மையாக வாழ்ந்து முடித்தவர். ஆனால் முப்பத்திஎட்டு வருஷ நீண்ட சர்வீஸ், யாரைப்பிடித்து எவ்வளவு லஞ்சம் கொடுத்தாரோ அல்லது அந்தக் காலத்தில் வலிந்து கூப்பிட்டுக் கொடுத்தார்களோ, மொத்த சர்வீசும் இந்த ஒரே ஆபீசில், ஒரே ஊரில் கழிந்தாயிற்று. நேர்மையாக சர்வீஸ் போட்டவர் என்பதால் வலிந்து கூப்பிட்டு வேலை பெற்றவர் என்பதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. லஞ்சம் கொடுத்து சேர்ந்திருந்தால் சர்வீசில் நேர்மையாக இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால் நேர்மையாக சர்வீசுக்குள் நுழைந்தவர்கள் கூடக் , கண்டபடி சீரழிந்து விட்ட காலம் இது. லஞ்சமும், ஊழலும், மேலேயிருந்துதான் தலையெடுக்கின்றன. தலையைப் பார்த்துத்தான் இங்கே வால் ஆடுகிறது. அதுதான் யதார்த்தம். இணை இயக்குநர் வருகிறார். சொந்த ஊர் பார்க்க, அப்படியே முகாம் என்று காண்பிக்க, சம்பந்தப்பட்ட பதிவேடுகளில் இரண்டொரு கையெழுத்து என்கிற பதிவுடன் பாதுகாப்பாகப் பயணப்படி பெறும் ஊழல். காலம் காலமாய் நடக்கிற ஒன்று. இதெல்லாமா ஒரு ஊழல்? என்று கேட்கிற காலமிது. அன்றுமுதல் இன்றுவரை என்றும் சொல்லலாம்தான்.

இந்தக் கதையை அப்படியே விட்டிருந்தால்தான் அழகு. எப்படி? இப்பத்தான் ஆபீஸ் பார்ட்டியில் சாப்பிட்டோம், மறுபடியும் துரைசாமி வீட்டில் சாப்பிடணும் என்றால் வயிறு கொள்ளாதுன்னு அவாயிட் பண்ணியிருக்கலாம். சொன்னபதில் துரைசாமிக்கு திருப்தி தரவில்லை. எப்படித் திருப்தி தரும்? அது அவர் எதிர்பார்க்காத ஒன்றாயிற்றே? எதிர்பார்த்ததுதான் தவறா? மனப்பூர்வமாய் அழைத்தாயிற்றே? எவரும் வரவில்லையென்றால்? அவ்வளவுதான். வேறு என்ன செய்யமுடியும்? சட்டென்று மனதில் ஒரு விலகல் துரைசாமிக்கு. அது விலகலா? விரிசலா? அந்த வெறும் நால்வரை வரவேற்கத் தயாரானது அவரின் வீடு. இப்படித்தான் நானாயிருந்தால் முடித்திருப்பேன். நீ என்ன சாதிய்யா? என்கிற கடைசிக் கேள்வி ஏனோ வலியத் திணிக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது. இந்த முடிவுக்காகவே எழுதப்பட்ட கதையோ என்று ஒட்டாமல் நிற்கிறது. அதுவரை சொல்லப்பட்ட விஷயங்கள்தான் உண்மையான யதார்த்தம். பணியிலிருந்து ஓய்வு பெறுவோர் ரொம்பவும் முன்னதாகவே தங்களைப் பதப்படுத்திக் கொள்ள வேண்டும். இப்படியும் கூட நடக்கலாம் என்பதாகப் பல முடிவுகளுக்கு வந்திருக்க வேண்டும். அதுதான் முதிர்ச்சி. பாவம் துரைசாமி. ஆனாலும் அந்தக் கடைசிக் கேள்வி ரொம்பக் கொடுமை. நேரடியாக நெஞ்சில் இறக்கியதுபோல். விருந்துக்கு அழைக்கும் ஒருத்தருக்கு இறங்கும் இடி மனித சமுதாயத்தின் தலைகுனிவு.

ஏழாவதாக நிற்பது சிகிச்சை. அரசு மருத்துவ மனைகளின் அக்கறையற்ற கவனிப்பையும், ஏழை பாழைகளின் உயிர்த் தவிப்பையும், தனியார் மருத்துவ மனைகளின் பணம் பிடுங்கும் போக்கையும், தோலுரித்துக் காட்டும் கதை. குழந்தை இறந்துவிட்டதைப் பார்க்கும் தனியார் மருத்துவமனை டாக்டர் ரங்கசாமி சொல்கிறார் – கவர்ன்மென்ட் ஆஸ்பிடல்ல பார்த்துக்கிறேன்னு இந்த ஆள் சொல்லிட்டானாம். ஒரு உயிர் அநியாயமாப் போயிட்டது. ஜனங்க பணத்துக்குத் தர்ற முக்கியத்துவத்த உயிருக்குக் கொடுக்கிறதில்லை…ச்சு….நாம என்னா பண்ண முடியும்? நான்கு குழந்தையைப் பறிகொடுத்த அவர்கள், பாவாடைக்காரி தெய்வத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு, நிச்சயம் அவ நமக்கு இன்னொண்ணு தருவா என்று அடுத்ததற்குத் தயாராகிறார்கள்.

ஒவ்வொரு பத்திரிகைக்கும் எப்படிக் கதை சொல்ல வேண்டும் என்று இக்கதாசிரியருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. கல்கி தீபாவளி மலருக்கென்று இவர் சொன்ன கதைதான் நட்பு. ராமநாதன் தொலைந்து போகிறார். மற்றவர்களுக்கு அப்படித்தானே…? ஒரு மனிதன் தன்னைத்தானே தொலைத்துக் கொள்கிறான் என்றால் அதற்கு வலுவான காரணங்கள் நிறைய இருக்க வேண்டும் என்பதுதான் உண்மை. அதிலும் மனைவி இல்லாத ஒருவன், பிள்ளைகளிடம் மாட்டிக் கொண்டு தன்னந்தனியே காலந்தள்ளுவது எத்தனை கஷ்டம்? ஆளாளுக்கு ஒன்று பேசுகிறார்கள். மனிதர்கள் எத்தனை மலிவானவர்கள். சட்டென்று ஒன்றைப் பேசி விடுவதில்தான் எத்தனை அவசரம் அவர்களுக்கு? ஏன் தொலைந்து போக வேண்டும்? இதன் பின்னணி என்ன? அப்படியென்ன வந்தது இந்த மனுஷனுக்கு? யாராவது யோசித்தால்தானே…!

போதாக்குறைக்கு ஒருவர் அவரைப் பம்பாயில் ஒரு பெண்ணோடு பார்த்ததாக வேறு. அவர், தான் ராமநாதன் இல்லை, கோபால் ஷர்மா என்று உறிந்தியில் பகன்று நகர்ந்து விடுகிறார். எனக்கு நல்லாத் தெரியும், அவர்தான். அவரேதான். காலை சாய்ச்சி, சாய்ச்சி நடந்தாரே…அவர் ராமநாதனேதான்…

இந்த வயசுல இந்தாளுக்கு இது தேவையா? மனசு நினைத்து விடுகிறது இப்படி.. யோவ் ராமநாதா…ரெண்டு நாள் நாம சேர்ந்தாற்போல சந்திக்கலேன்னா என்னவோ மாதிரி ஆகிடுதய்யா…

என்னய்யா, சினிமா டயலாக்கா? நாம ரெண்டு பெரும் செல்லு போன பாண்டுகள்யா…விடலைங்க இல்ல. இந்த வயசுல தோழமைங்கிறது…மனப் புழுக்கங்களைக் கொட்டி ஆற்றத்தான்…பொழுதை ஓட்ட…அவ்வளவுதான்…பீ ப்ராக்டிகல் மேன்…மூணு நாள் தொடர்ச்சியா காபிக்கு நான் காசு கொடுத்தேன்னு வச்சிக்கோ…இல்ல நீ கொடுக்கிறே…அம்புட்டுதான் நம்ம நட்பு புட்டுக்கும்…நான் யதார்த்தவாதி…இதான் நிஜம்…

அந்த ராமநாதனைத்தான் காணவில்லை.

என்ன சின்ன புத்தி இந்தாளுக்கு? கர்மம்…கர்மம்…செக்ஸ் பற்றிய விஷயத்தில் மட்டும் எவனும் உண்மையே பேசுவதில்லையா? - யாரோ சொன்னதை வைத்து மனது என்னவெல்லாம் நினைத்து விடுகிறது சட்டென்று?

கடைசிப் பெண் மாயா, கடைசியாய்ச் சொல்கிறாள். இந்த சம்பவத்தால் நாம ராமநாதன் சாரைப் பத்தித் தெரிஞ்சிக்கிட்டமோ இல்லியோ…நம்ம ஒவ்வொருத்தர்பற்றியும்தெளிவாவெளிப்படுத்திட்டோம்…தெரிஞ்சிக்கிட்டோம்….பார்வைக் கோளாறு உள்ள சுந்தரசாமி பார்த்தது உண்மையிலேயே ராமநாதன்தானான்னு உறுதிப்படுத்திக்கணும்னு நாம யாருக்குமே தோணலியே? அவரே அப்படிக் கல்யாணம் பண்ணிட்டிருந்தாலும், அதுக்கு உயரிய நோக்கம் இருந்திருக்கணும்னு ஏன் மாமா உங்களால நினைக்க முடியல? அதுதானே நல்ல நட்புக்கு அடையாளம்? மனுஷாள்ட்டக் குறைகளைப் பார்க்கத் தலைப்பட்டா, ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டாங்க மாமா…

தலைகுனிகிறார் இவர். மானசீகமாய், ஓடிப்போன, தவறு தவறு தொலைந்து போன தன் நண்பனிடம் மன்னிப்பும் கோருகிறார் இவர். வெறும் இவர்தான். கடைசிவரை இவர் பெயரைத் தேடினேன். கிடைக்கவில்லை.எங்காவது ஓரிடத்தில் சொல்லியிருக்க வேண்டும்.. இவரையும், ராமநாதனையும் பற்றிய இந்தக் கதை இந்த சமூகத்தின் இன்றைய நிகழ்வுகளின் துல்லியமான படப்பிடிப்பு. அதனூடேதான் இந்த நட்பு.

மங்கா கிழவி பற்றியும் இதில் ஒரு கதை உண்டு. முதியோர் என்றால் இரு பாலினமும்தானே…! படுக்கையில் கிடக்கும் மங்கா கிழவிக்கு பீ, மூத்திரம் எடுத்து, எடுத்து நொந்து போன மருமகள் அவளுக்கு மூன்று எண்ணெய் கலக்கி குளிப்பாட்டி விடுகிறாள். கிராமங்களில் உள்ள இந்த வழக்கங்கள் நமக்கே இதைப் படித்த பின்னால்தான் தெரிகின்றது. இழுத்துப் பறித்து அவஸ்தையிலிருப்பவர்களுக்கு செய்வது வழக்கந்தான் என்று பக்கத்து வீட்டுக் கண்ணம்மா பேச்சைக் கேட்டு செய்து விடுகிறாள் லட்சுமி. ஆனாலும் மனது கிடந்து அடித்துக் கொள்கிறது. தவறு செய்து விட்டோமோ என்று பழி பாவத்திற்கு அஞ்சி பயப்படுகிறாள். ஆனால் இழுபறி உயிர்நிலையில் இதைப் புரிந்து கொண்ட கிழவி நீ செய்ததுதான் சரி என்ற கூறி என் குடிகாரப் பிள்ளையை வச்சி நீ என்னதான் செய்வே? ரெண்டு பெண்டுகளை எப்படிக் கரையேத்துவே என்று பதுக்கி வைத்திருக்கும் 12 பவுன் நகையின் இருப்பிட ரகசியம் கூறி மாய்கிறாள். காலத்திற்கும் என்னை ஓட ஓடவிரட்ன உன் நெஞ்சக் கூட்ல என்னைப் பத்தியும் எம்புள்ளைங்களைப் பத்தியுமான கவலைகளத்தான் வச்சிருந்தியா அத்தே? என்று தன் தவறை நினைத்து உருகுகிறாள், கதறுகிறாள் மருமகள் லட்சுமி. எனக்கு ஏதாவது இன்ஜெக் ஷனைப் போட்டு, என்னை முடிச்சிருங்க டாக்டர் என்று வேண்டிக் கொண்ட உறவினர்களை நம்மில் சிலரேனும் பார்த்திருக்கக் கூடும். ஆனால் அருகில் நின்று காப்பவர் எவரும் ரகசிய வழிகளை மேற்கொண்டதில்லை எனலாம். ஆனால் அப்படியும் சில உண்டுதான் என்பதாய் அறிய நேரும் இந்த மூணு எண்ணெய் கூட்டும் அதீத யதார்த்தம் இந்தக் கதையில் மனதைத் திடுக்கிட வைக்கும் நிகழ்வு. செய்தவர்கள் காலம் பூராவும் உயிரோடு சாக வேண்டுமே? அந்தப் பழியை எப்படித் தீர்ப்பது? தான் செத்துதான் தீர்க்க வேண்டும். மனசு ஏற்காத, நெஞ்சை உருக்கும் கதை.

கீதாச்செடி என்ற புதுமையான பெயரோடு ஒரு அற்புதமான கதை இந்தத் தொகுதியில் உள்ளது. மொத்தத் தொகுதியின் அத்தனை கதைகளிலும் எந்தக் கதையை மிகச் சிறந்த கதை என்று முதலிடத்திற்கு நிறுத்துவது என்கிற போட்டியில் இந்தக் கதை முந்துகிறது. மஞ்சுதான் கீதாச்செடி. அவள்தான் கீதாக்குட்டி, கீதாச்செடி என்று கடைசியில்தான் தெரிகிறது. ஏன்தான் இத்தனை சோகமோ? மனசு பொறுக்கவில்லை அய்யா. தாங்க முடியாத சோகத்தை ஏற்க மறுக்கிறது உடலும் உள்ளமும். பதறிப் போனது மனசு. கதை முடிந்த பிறகும் உடல் நடுக்கம் குறையவில்லை. அப்படியான நேரத்தில் சுணக்கம்தானே ஏற்படும். அதுதான் அடுத்த கதையாக இங்கே மலர்ந்திருக்கிறது. லஞ்சம் வாங்காமல் நேர்மையாய் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டு வேலையே சரியாய்ச் செய்யாமல் வாங்கும் சம்பளம் கூட ஒருவகையில் லஞ்சம்தான் என்ற மனசாட்சியுள்ள கருத்தை பலமாக நிறுவும் உண்மையான கதை இது. அவசியம் எல்லோரும் உணர வேண்டிய ஒன்று. நாத்திக ஆத்திக வாதம் பேசும் கதையாக அடுத்தது மலர்கிறது. கடவுள் இல்லை என்பதும், இருக்கு என்பதும் கவைக்கு உதவாத வெறும் பேச்சு. உண்டென்றால் அது உண்டு. இல்லையென்றால் அது இல்லை. இவை எல்லாவற்றையும் மீறியது லௌகீக விஷயங்கள். கடமையை, கர்மத்தை செவ்வனே ஆற்றிவிட்டுத்தானே அடுத்த படியாகக் கடவுளைத்தேட வேண்டும். லௌகீகத்தில் இருக்கையில் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ளலாம், தவறில்லை. தேடலே இல்லாதவர்கள்? மிகப்பெரிய நாத்திகவாதியாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் சிலர் தங்கள் வீட்டைப் பொறுத்தவரை எப்படி இருக்கிறார்கள்? என்பது நாமறிந்ததே…! தெருக்கோடி சாமிக்கு மறக்காமல் தினசரி பூஜை செய்யும் குடும்பத்தாரைப் பார்க்கத்தானே செய்கிறோம்? இந்தக் கதையில் பெற்றோருக்கான மரியாதையும், குடும்ப ஒற்றுமையும், பொது நலனும் வலியுறுத்தப்படுகிறது. அதுதான் யாத்திரை.

உலகம் அழியப்போகிறது என்ற சமீபத்திய பேச்சுகளுக்கு நடுவே பிரளய காலம் என்கிற சொற்றொடர் சமீப நாட்களாய் நம்மிடையே மூத்த குடிமக்களிடையே புழக்கத்தில் இருப்பதை அநேகர் கண்டிருக்கலாம். மின்னணு இயந்திரங்கள் கி.பி. 2030 லேயே புழக்கத்திற்கு வந்து விட்டன என்று சொல்கிறார். அப்படியானால் கதை அதைத் தாண்டிய காலம்தானே? அதில் இன்னொன்று. மக்கள் அப்பொழுது சுத்தமாய் தமிழே பேசவில்லை. வீட்டின் தேவைகளை உணர்த்தும் மின்னணு இயந்திரத்திற்கு சரியான தமிழ் வார்த்தையில் புரோக்ராம் பண்ணி வைத்து, அந்தக் குறிப்பிட்ட வார்த்தைகளைச் சொல்வதன் மூலமே (அதாவது சுத்தத் தமிழில்) அது தேவைகளைப் பூர்த்தி செய்யும் என்று சொல்லி அப்படியாவது மக்களிடம் தமிழைப் பரப்ப வேண்டும் என்னும் முயற்சி 2030க்குப் பிறகும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு ஆறுதல். அந்த மட்டுமாவது அதாவது மின்னணு இயந்திரத்தில் சுத்தத் தமிழை ஏற்றுமளவுக்காவது 2030 க்குப் பிறகும் தமிழ் அழியாமல் நீடிக்கிறதே என்று ஆறுதல் கொள்ள வேண்டியிருக்கிறது. 2040ல் பசுமைப் புரட்சி ஏற்பட்டு உலகை, மக்களைக் காப்பாற்றியதாகவும் கூறப்படுகிறது. கதை 2050 ல் நடக்கிறது. அப்போதும் சாதிக் கலவரம், மதக் கலவரம், இதைப் பயன்படுத்தும் ஆள்பவர்கள் மட்டும் மாறவேயில்லை.பெட்ரோல் முற்றிலும் தீர்ந்துவிட அதனால் உண்டாகும் பெரிய கலவரம். கடைசியில் மூலிகைப் பெட்ரோலில் வந்து முடிகிறது கதை. தகந 853 அதை ஏற்றுக் கொள்ளவில்லை. அறிவியல் புனைகதை எழுத ஆர்வம் இருந்தால் மட்டுமே சாத்தியம். அப்படியானால்தான் அதற்கான முயற்சியே எழும். இந்த வகை எழுத்தில் இந்தப் புத்தகத்தின் படைப்பாளிக்கு ஒரு தனி ருசி இருப்பது தெள்ளெனவே விளங்குகிறது. கதையைப் புனைந்திருக்கும் விதத்திலேயே அவரது ஆர்வமும், அதனால், தானே எழுந்த சொல்லாடலும், மொத்தக் கதையையும் ஸ்வாரஸ்யப்படுத்தியிருக்கிறது.

இந்தத் தொகுதியின் ஒவ்வொரு கதையும் வெவ்வேறுவிதமான தாக்கங்களை படிக்கும் வாசகர்களின் மனதில் நிச்சயம் ஏற்படுத்தும். வயதானவர்களைப் பற்றியும், முதியோர்களைப்பற்றியும் கருத்தார்ந்த அக்கறை கொண்டு வடித்தெடுக்கப்பட்ட உணர்வு பூர்வமான கதைகள் இத்தொகுதியில் அதிகமாய் விரவிக் கிடக்கின்றன. அதேபோல் எழுத்து இந்த சமூகத்திற்காக, குடும்பம் என்கிற அமைப்பிலே இந்த சமூகத்திற்கு சொல்லப்படவேண்டிய செய்திகள் ஏராளமாய் உள்ளன என்பதைத் தெள்ளத் தெளிவாய் நிரூபித்திருக்கும் தலை சிறந்த கதைத் தொகுதியாய் விளங்குகிறது தி.தா.நாராயணன் அவர்களின் இந்தத் தோற்றப்பிழை சிறுகதைத் தொகுதி. ஆசிரியரே சொல்கிறார். சாதிகளாலும், மதங்களாலும் நாம் வெகு காலமாய்ப் பிரித்து வைக்கப்பட்டிருக்கிறோம். சுதந்திரமடைந்து அறுபது வருஷங்களுக்கு மேலாகியும், அந்தப் பிரிவினைகளைக் களைய போராடித் தோற்றிருக்கிறோம். யார் காரணம்? சாதிகளின், மதங்களின் பெயரால் நாம் வெறியூட்டப்படுகிறோமே, அதுதான் பிரச்னை. உசுப்பி விடுவதும், அவை நீர்த்துப் போகாமல் பார்த்துக் கொள்வதும் யார்? அரசியல்வாதிகள்தானே…? அவர்கள் பிழைக்க நாம் சிலுவையைச் சுமக்கிறோம். அதுதானே உண்மை. ஆசிரியரின் இந்தக் கேள்விகளை நிரூபிக்கும், உள் மன ஓட்டங்களை உசுப்பி எடுக்கும் ஆழமான படைப்புக்களை ஏந்தி இந்தத் தொகுதி தலை நிமிர்ந்து நிற்கிறது. இலக்கிய வாசகர்கள், நடுநிலை வாசகர்கள், வாசிப்பு ஆர்வம் உள்ள படைப்பாளிகள் அனைவரும் கட்டாயம் வாங்கிப் படிக்க வேண்டிய புத்தகம் இது என்று சொல்வதில் எந்த மிகையுமில்லை. NCBH நிறுவனம் இத்தொகுதியை மிகச் சிறப்பான வடிவமைப்பில் வெளியிட்டிருக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற மூத்த எழுத்தாளர் அய்யா பொன்னீலன் அவர்களும், சமூக ஆர்வலர், பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களும், தமுஎகச் தலைவர் திரு ச. தமிழ்ச்செல்வன் அவர்களும் மிகுந்த கவனத்தோடும், கருத்தோடும், மகிழ்வோடும், இந்தத் தொகுதிக்குத் தங்கள் அணிந்துரையை வழங்கி சிறப்பித்திருக்கிறார்கள். தமிழ் வாசகர்கள் மனதில் இந்தச் சிறுகதைதொகுதி வெகு காலத்திற்கு நின்று நிலைக்கும்.

-----------------------------------------

21 பிப்ரவரி 2013

“தோற்றப்பிழை”–சிறுகதைத் தொகுதி–தி.தா.நாராயணன்

எழுத்தாளர் தி.தா.நாராயணன் அவர்களைத் தமிழ் எழுத்துலகு அறியும். சிறந்த சிறுகதைகளைத் தொடர்ந்து தந்து கொண்டிருப்பவர் அவர். எந்தப் பரிசுத் திட்டம் அறிவித்திருந்தாலும், அதற்கு இவர் தன் கதையை அனுப்பியிருந்தார் என்றால், நிச்சயம் ஒரு பரிசு அவருக்கு உண்டு. இப்படிப் பல முதற் பரிசுகளைத் தன் கதைகளுக்காகப் பெற்றவர் அவர். மனித நேயம் மிக்க கதைகள், சமுதாயப் பிரச்னைகளை எடுத்துக் கொண்டு, அவற்றை அலசி ஆராய்ந்து, உருக்கமாகத் தன் படைப்பின் வழி வைக்கும் திறன் கொண்டவர். எந்தவொரு கதையும் ஒதுக்கப்படத்தக்கதாக இவர் எழுதி நான் பார்த்ததேயில்லை. அப்படிப்பட்டவருக்கு தொகுதி அளிப்பதில் பதிப்பகங்களுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்? அதனால்தான் முந்திக் கொண்டு NCBH நிறுவனம் இப்போது அவரது சிறுகதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. ”தோற்றப் பிழை” என்பது அந்தச் சிறுகதைத் தொகுதியின் பெயர். ஒரு வயதான முதியவரின் படத்தைப் பொருத்தமான அட்டைப்படமாகப் போட்டு, கீழே தோற்றப்பிழை என்று புத்தகத்தின் பெயரையும் அச்சிட்டிருக்கிறார்கள். முதுமை எத்தனை அழகு? அதன் முதிர்ச்சி பார்த்துப் பார்த்து மரியாதை செய்யக் கூடியதல்லவா? 13 சிறுகதைகளைக் கொண்ட தொகுப்பாக இது இருக்கிறது. இதன் பல சிறுகதைகள் பரிசுகளை வென்ற கதைகள். பொதுவாக ஒரு தொகுதிக்கு நான்கு அல்லது ஐந்து கதைகள்தான் சிறப்பான படைப்புக்களாக இருப்பது வழக்கம். அப்படியானால்தான் இன்னொரு தொகுதிக்கும் சிறந்த நான்கைந்து கதைகளைக் கொடுத்து அந்தத் தொகுதியையும், சிறப்பிக்க முடியும் என்று மடியில் பொதிந்து வைத்திருப்பார்கள் எழுத்தாளர்கள். ஆனால் இவர் அப்படியில்லை. காரணம் இவர் கொஞ்சமாக எழுதுபவர்.ஆனால் நிறைவாகத் தன் படைப்புக்களைக் கொடுப்பவர். எழுதி எழுதித் தள்ளுபவர்களை விட எழுத்தைத் தவமாகக் கொள்பவர்களின் படைப்புக்கள் என்றும் சிறக்கத்தானே செய்யும்? அப்படித் தவமாக இயற்றி இந்தத் தொகுதியை நமக்கு வழங்கியிருக்கிறார் திரு தி.தா.நாராயணன் அவர்கள். தோற்றப்பிழை நம் மனதைக் கனக்கச் செய்யும் அற்புதமான படைப்புக்களைக் கொண்டது. அதை ரசிப்பதும், சுவைப்பதும், அனுபவிப்பதும், கரைந்து சஞ்சரிப்பதும், காசு கொடுத்து அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிப்பதில்தான் இருக்கிறது. நல்ல ஆக்கங்களை ஊக்கப்படுத்துங்கள். அப்படியானால்தான் படைப்பாளி மேலும் மேலும் இந்தச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட்டுத் தன்னைக் கரைத்துக் கொள்வான். என்னதான் ஆனாலும் அவனும் கைதட்டலுக்குக் காத்திருப்பவன்தான். - உஷாதீபன்

clip_image001

18 பிப்ரவரி 2013

சுஜாதாவின் கலைந்த பொய்கள் - குறுநாவல்

2013-02-18 14.58.19

எழுதுவதைவிட வாசிப்பதிலே சுகம் அதிகம். அதிலும் பல்வேறு எழுத்தாளர்களின் வித்தியாசமான எழுத்துக்களை அடையாளம் கண்டு ரசிப்பது அதனிலும் படுசுகம். சுஜாதாவை ஊர் அறியும். உலகறியும். அவரின் கலைந்த பொய்கள் குறுநாவல் நான் இப்பொழுது படித்த குறுநாவல் வரிசை-9. உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. கையடக்கமான பிரதி. மாத நாவல் சைஸில். ஆனால் மாத நாவல்போல் வலியப் பின்னியது இல்லை. சரளமாக, சர்வ சகஜமாக, அதுவே விரிந்து பரந்த வெள்ளம். ஒரு முடிச்சை ஆரம்பத்திலேயே போட்டுவிட்டு, வாசகனைக் கடைசி வரை விடாமல் இழுத்துச் செல்லும் பாங்கு. அங்கங்கே அவருக்கே உரிய கேலி, கிண்டல், நையாண்டி, நகைச்சுவை. படித்தவன் தப்பு செய்ய மாட்டானா? பாமரன் மட்டும்தான் பாவமாய்ச் செய்வானா? தவறுகள் மெத்தப் படித்தவர்களிடமும் உண்டு. எல்லோருக்கும் அடிப்படை ஆசை. நியாயமற்ற ஆசைகள். அதனால் செய்யத்தூண்டும் தவறுகள். எப்படியும் அடைந்து விட வேண்டும் என்கின்ற வெறியில் ஒரு தவறுக்கு மாற்றாகப் படிப்படியாகச் செய்துகொண்டே செல்லல். இது படு அநாயாசமாய் விரிந்து செல்லும் காட்சி. கடைசியில் அந்த முடிச்சை எப்படி அவிழ்க்கிறார்? நீயோ நானோ கற்பனையே பண்ண முடியாது. அப்படி ஒரு சாமர்த்தியம். படித்தவனும், மேல் தட்டு வர்க்கத்தினனும், எத்தனை மட்டமாக நடந்து கொள்கிறார்கள்? வாசகன் கொஞ்சங்கூடக் கற்பனை செய்ய முடியாத ஒரு நிகழ்வின் மூலம் முடிச்சு தானே அவிழ்ந்து போகிறது. சே...!இவ்வளவு மட்டமாவா? கதாபாத்திரம் அப்படி...உலகத்தில் எல்லாவிதமான மனிதர்களும் இருந்துகொண்டுதானே இருக்கிறார்கள்? படித்துப் பார்த்துத்தான் சுவைக்க வேண்டும். அவரின் எழுத்தே எழுத்து.

13 பிப்ரவரி 2013

அன்புள்ள அய்யனார்–சு.ரா. வின் 200 கடிதங்கள் புத்தகம்

2013-02-13 08.35.11பெரியவர் சுந்தரராமசாமி அவர்களின் 200 கடிதங்களை உள்ளடக்கிய புத்தகம் “அன்புள்ள அய்யனார்” . அவர் அய்யனாருக்கு எழுதிய கடிதங்களின் தொகுப்பு. மனதில் கல்மிஷமில்லாமல் அன்போடும், ஆழ்ந்த நட்புணர்வோடும் ஒரு பெரிய படைப்பாளி, விடாமல், தொடர்ந்து ஒரு வாசகருக்கு, எழுத்தாளருக்கு, பேட்டியாளருக்கு, முனைப்பாக எழுதிய கடிதங்கள். அய்யானாரை விடாமல் ஊக்கப்படுத்தியும், அவரது தனிப்பட்ட, இலக்கியம் சார்ந்த செயல்களைப் பாராட்டியும், வாழ்க்கையில் நம்பிக்கை ஊட்டக் கூடிய விதமாய், போலியான வார்த்தைகளோ, புகழுரையோ, புத்திமதிகளோ இல்லாமல், ஆத்மார்த்தமாய், அழுத்தமாய், ஒருவரின் முன்னேற்றத்தில் உளமார்ந்த அக்கறை கொண்டு, ஒருவர் தொடர்ந்து செயல்பட முடியுமானால் அதற்கு சு.ரா. அவர்கள் அய்யனாருக்கு எழுதிய கடிதங்கள் அத்தனையும் இங்கே சான்றாக நிற்கிறது. இப்படி ஒருவருடன் நமக்குத் தொடர்பு இல்லாமல் போயிற்றே என்கிற ஏக்கம் ஒரு நல்ல வாசகனுக்குக் கண்டிப்பாக ஏற்படும். அவரது குடும்ப விஷயங்கள், இவரது குடும்ப நடப்புகள், நலன்கள், இவரது அடுத்தடுத்த முயற்சிகள், இலக்கிய நிகழ்வுகள், எல்லாவற்றையும் ஒவ்வொரு கடிதத்திலும் அக்கறையோடு விசாரித்து, அளவாக, அழகாக அவருக்கு அதுபற்றியதான தேவையை எடுத்துச் சொல்லி, எங்ஙனமேனும் அய்யானார் வாழ்க்கையின் உச்சத்திற்குப் போய்விட்டதைத் தான் கண்ணாரக் கண்டாக வேண்டும் என்கிற நம்பிக்கையோடும், பாசத்தோடும் சுரா அவர்கள் எழுதியுள்ள கடிதங்கள் ஒவ்வொன்றும் நாமும் நம் வாழ்க்கையில் கருத்தாக எடுத்துக் கொள்ளத் தூண்டும் கருத்துரைகள். பரந்த உள்ளமும், நல்ல எண்ணங்களும், செயல்களும், நல்லொழுக்கமும், நேர்மையும், இருந்தால் மட்டுமே இப்படியான ஒரு நம்பிக்கை மிகுந்த அக்கறையை மற்றவர்பால் செலுத்த முடியும். அவரின் இழப்பு பல சிறிய, பெரிய இலக்கியவாதிகளுக்குப் பெரும் நஷ்டம்தான். ஆனால் அதை வாய்விட்டுச் சொல்லத் தயங்கும் நிலை காண முடிகிறது. ஏன் என்றுதான் புரியவில்லை. விகல்பமின்றி உணருபவர்கள் நல்லதை நன்னோக்கில் புரிந்து கொள்வார்கள். நல்ல சிந்தனையையும், நல்ல எண்ணங்களையும், நல்ல செயல்களையும், ஆத்மார்த்தமாய் விரும்புபவர்கள் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம் இது . மீனாள் பப்ளிஷிங் உறவுஸ் இதை வெளியிட்டுள்ளது.

12 ஜனவரி 2013

சுரேஷ்குமார இந்திரஜித் புதிய சிறுகதைத் தொகுப்பு “ நானும் ஒருவன்” - (ஒரு ஆழ்ந்த வாசிப்பனுபவம்)



(காலச்சுவடு ஜனவரி 2013 வெளியீடு)

2013-01-09 05.39.332013-01-09 05.39.50

sureshkumar

சிறுகதைத் தொகுதிகள் எவ்வளவோ வந்தாயிற்று. படித்தாயிற்று. தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கின்றன. வரத்தான் செய்யும். படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். வாசிப்பை உழைப்பாய்க் கருதிப் பழக்கப்பட்டதனால் வந்த வினை இது. அப்படியிருப்பதனால்தான் இன்னொரு வசதியும். கொஞ்சம் படிக்க ஆரம்பிக்கும்போதே இது இப்படித்தான், இவ்வளவுதான் என்று புரிந்துகொள்வதும், ஒதுக்கி விடுவதும், குறிப்பிட்ட சிலதாய்ப் படிப்பதும்.
இன்னொன்று, பலவற்றிலும் இருக்கும் ஒரு ஒற்றுமை. ஒரு தொகுதியின் மொத்தக் கதைகளில் நான்கு அல்லது ஐந்து மட்டுமே சிறந்த கதைகளாய்த் தென்படுவது. மற்றவை இவரின் இன்னொரு தொகுப்பில் இதேபோல் ஒன்று கண்டோமே…படித்திருக்கிறோமே என்று தவிர்க்கமுடியாமல் நெருடுவது. இப்படியாகத்தான் வதவதவென்று வந்து குவிகின்றன பலதும். போட்டுத் தள்ளுகிறார்கள் எல்லாவற்றையும். எனக்கும் புத்தகம் வந்து விட்டது, நானும் புத்தகம் வெளியிட்டிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். அவனவன் மனதுக்குத்தான் தெரியும் உண்மை.
ஒரு நல்ல இலக்கிய வாசகன், படைப்பாளி, தன் மனதுக்கு நேர்மையாக இருந்தானானால் இதை உணர முடியும். எத்தனை பேர் இருப்பார்கள் என்பது கேள்வி. எத்தனை பேர் உணர்ந்தாலும் வெளியில் சொல்லிக் கொள்வார்கள் என்பதும் கேள்வியே. தன்னையும் தன் படைப்பையும் வலிய உயர்த்திப் பேசிக் கொள்வதில் ஒரு அபத்தப் பெருமை. மற்றவரைப் பேச வைப்பதில் ஒரு பொய்யான மகிழ்ச்சி. திருப்தி. மனதுக்கு நேர்மையா? என்ன சொல்ற நீ? அதெல்லாம் அந்தக்காலம்யா. என்ற குரல்கள் காதில் விழுகின்றன. ஆனாலும் இப்படிச் சொல்வதுதான் உண்மை.
இந்த உண்மைகளுக்கு எதிர் சாட்சியாய் அனைவராலும் பேசப்படுவதுபோல், பேச வேண்டியதுபோல் அவ்வப்போது சில நல்ல புத்தகங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அவை அவர்களின் பெயர் சொல்லக் காத்திருக்கின்றன. காலத்தால் நிற்பதற்குத் தயாராய் இருக்கின்றன. தானே நின்று விடும் தகுதியையும் பெற்றிருக்கின்றன. எவனும் தூக்கி நிறுத்தவும் வேண்டியதில்லை என்று தலை நிமிர்ந்து பார்க்கின்றன.
வெளியிட்ட நான்கு தொகுதிகளிலும் ஒன்றிலிருந்து இன்னொன்று முற்றிலுமாய் மாறுபட்டு, வெவ்வேறு ரூபத்தில் பரிணமிப்பது என்பது துர்லபம். ஒரு கதைக்களம், அல்லது கரு இன்னொரு கதைக்குப் பாய்ந்து விடாமல், ஒவ்வொன்றும் விதவிதமாய், மாறுபட்ட விஷயங்களைத் தாங்கி, இதுவரை யாராலும் சொல்லப்படாத நடையில், உத்தியில், தனக்கேயுரிய தனித்துவத்தோடு (இந்தத் தனித்துவத்தை எப்படிக் கொண்டுவந்தார் என்பதுதான் ஆற்றாமை) சிறுகதைகளை வழங்கியிருக்கும் பெருமையும், தலை நிமிர்வும் இவருக்கு நிச்சயம் உண்டு. அவர் திரு சுரேஷ்குமார இந்திரஜித்.
இவரது அலையும் சிறகுகள், மறைந்து திரியும் கிழவன், (இரண்டும் சேர்ந்து மாபெரும் சூதாட்டம் என்ற தலைப்பில் காலச்சுவடு தொகுப்பாக வந்துள்ளது காண்க) அவரவர் வழி ஆகிய மூன்று சிறுகதைத் தொகுப்பிலிருந்து ஒரு அடையாளம் கூட இல்லாமல், ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான கதைக்கருவையும், களனையும் உள்ளடக்கி முற்றிலும் வேறுவிதத்தில் கச்சிதமான, புதுமையான சிறுகதைகளாய் ”நானும் ஒருவன்” என்ற தலைப்பில் தற்போது ஒரு தொகுதி வந்துள்ளது. காலச்சுவடு வெளியீடாக.
குறைவாக எழுதியிருப்பவர்தான் இவர். ஆனால் நிறைவாக எழுதியிருப்பவர். எண்ணிக்கையில் நிறையப் புத்தகங்களை அடுக்கி என்ன பயன்? எத்தனை மனதில், நினைவில் பதிந்திருக்கிறது, காலத்தால் நிற்கிறது, நிலைக்கிறது என்பதுதானே முக்கியம்.
மொத்தமே 24 சிறுகதைகள்தான் எழுதியிருப்பவர் மௌனி. அவை இன்றும் பேசப்படுவதும், தொடர்ந்து வாசிக்கப்படுவதும், புரிந்து கொள்ள முயலப்படுவதும், திரும்பத் திரும்ப வாசிப்பிலான வேளையில் வெவ்வேறு அர்த்தங்களை, புரிதல்களை உணர்த்துவதும் யாரால் மறுக்க முடியும்?
தொடர்ந்த வாசிப்புப் பழக்கம் உள்ள ஒரு இலக்கிய வாசகன் அவனுக்கான எழுத்துப் பயிற்சியில் ஒரு குறிப்பிட்ட வகையான எழுத்து முறைமைக்கு ஆளாகியிருக்கக் கூடும். வாசிப்பைக் கடுமையான உழைப்பாய்ச் செய்து பழகியவர்களுக்கு இது சாத்தியம். அப்படியான ஒருவகை எழுத்து கைகூடி வந்த பிறகு, அந்த இடத்தில் ஒரு படைப்பாளி தன்னை இனம் காண வேண்டும். அது முக்கியம். தனக்கென்று ஒரு தனிப்பாணியை வகுத்துக் கொள்வது அவசியம். (இந்த “பாணி“ என்ற வார்த்தை சி.சு.செ. அவர்களுக்குச் சொந்தமானது) அப்படித்தான் சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்கள் என்னால் அடையாளம் காணப்படுகிறார். தனக்கென ஒரு தனி பாணியை உருவாக்கிக் கொண்டு கோலோச்சுகிறார். அதனால்தான் இலக்கியப் பத்திரிகைகளும், பதிப்பகங்களும் இவரின் படைப்புக்களுக்காகக் காத்திருக்கின்றன.
இவர் படைப்பில் அலங்காரமான நடை கிடையாது. அதீதமான பெரும் கற்பனைகள், பகட்டான சொற்கள், வலிந்த வார்த்தைகள், என்று எதுவும் இல்லை. ஆனாலும் எடுத்த எடுப்பிலேயே என்னவோ புதிய விஷயம் சொல்லப் போகிறார் போலிருக்கிறதே என்று, வாசகன் படித்துக் கொண்டே நகர்ந்து செல்லத்தான் வேண்டியிருக்கிறது. இதுவரை படிக்காத ஒன்றைச் சொல்லப் போகிறார் என்கிற எதிர்பார்ப்பு ஆரம்பத்திலேயே தவிர்க்க முடியாமல் நமக்கு வந்து விடுகிறது. அவரும் வாசகனை ஏமாற்றுவதில்லை. அங்கங்கே அவ்வப்போது மனிதர்களுக்கிடையே வெளிப்பட்டு மறையும் போக்குகள்தான் எனினும், அம்மாதிரியான வெவ்வேறுவகையினர் சந்திக்க முற்படும்போது ஏற்படும் விபரீதங்கள், அதனால் உண்டாகும் விளைவுகள் நம்மை அதிரச் செய்கின்றன. ஒருவகையில் பார்த்தால் இம்மாதிரியானவற்றிலிருந்தெல்லாம் நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஜாக்கிரதை உணர்வினை இவை ஏற்படுத்துகின்றன என்று கூடச் சொல்லலாம். எந்தவகையான சூழலிலும், இவ்வகைப்பட்ட ஜீவன்களிடம் நாம் சிக்கிக் கொண்டு விடக் கூடாது என்ற தற்காப்பு நிலையையும் நாம் பலப்படுத்திக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
வாழ்க்கை முரண்களின் அடையாளங்களாய் இருக்கும் கதாபாத்திரங்கள் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவிர்க்க முடியாமல் சிக்கல்களில் மாட்டிக் கொள்வதும், இக்கட்டுகளில் வலியத் திணித்துக் கொண்டு விடுபடமுடியாமல் மேலும் மேலும் தவறுகளைச் செய்துகொண்டே நகர்ந்து செல்வதும், எதிர்பாராமுடிவுகளைக் கண்டடைவதும், ஏன் இப்படியும் இருத்தல் ஆகாது என அங்கொன்றும் இங்கொன்றுமாக இவ்வாறும் சில சாட்சிகள் இருந்துகொண்டுதானே இருக்கின்றன என்று நிறுவுவதும், இவ்வகையான சிந்தனைகள் இவருக்கு எழுத எழுதத் தோன்றினவா, அல்லது முன் முடிவுகளில்தான் இந்த எல்கைகளைக் கண்டடைந்தாரா என்பதான வியப்போடே அடுத்தடுத்த படைப்புக்களை நாம் எதிர் நோக்கி நிற்கிறோம்.
மனிதர்கள் அவர்களின் வாழ்நிலைகளுக்கு ஏற்றாற்போல் வெவ்வேறு குணாதிசயங்கள் கொண்டவர்களாக மாறுகிறார்கள். அடிப்படையான பிறவிக்குணங்கள் என்பவையும் முரணாக நின்றால் அங்கே தவறுகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் அமைகின்றன.
இந்த சமூகத்தில் எத்தனையோவிதமான மனிதர்களை நாம் பார்க்கிறோம். மாறுபட்ட மனநிலைகளைக் கொண்ட மனிதர்களுக்கிடையே எண்ண முரண்கள் ஏற்பட்டு, விலகல் உண்டாகி, மனதுக்குள் அது பகையாகி, அதனால் ஏற்படும் விளைவுகள் பயங்கரமாகி, வெவ்வேறுவிதமான சிதைவுகளை எதிர்நோக்குகிறார்கள். இவையெல்லாவற்றிற்கும் அடிப்படையான மனநிலை அவர்களை பயங்கரமான செயல்களுக்கு ஆட்படுத்துகின்றன.
சத்வ, ரஜோ, தமோ குணமுள்ள மனிதர்கள் அவரவர் குணங்களுக்கு ஏற்றாற்போல் நடந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு மனிதனிடத்திலும் ஒவ்வொருவிதமான குணங்கள் இருக்கின்றன. சத்வ குணமுள்ள மனிதனிடத்தில் அவ்வப்போது ரஜோ குணமும், தமோ குணமும் தலையெடுக்கின்றன. ரஜோ குணமுள்ள மனிதனிடத்தில் அவ்வப்போது சத்வ குணமும், தமோ குணமும் தலையெடுக்கின்றன. தமோ குணமுள்ள மனிதனிடத்தில் சத்வ, ரஜோ குணங்களும் தலையெடுக்கின்றன.
ஒருவன் சத்வ குணத்துக்கு ஆட்பட்ட மனிதனாக இருந்தால் அவனிடம் சுயநலச் சிந்தனைகளும், காம இச்சைகளும் தோன்றாது விலகிவிடும். அவன் ஞான வேட்கை உள்ளவனாக இருப்பான்.
தவறான ஆசைகள், பொருள்களை அடைய வேண்டும் என்ற முடிவற்ற வேட்கை, அடைந்து விட்ட பொருள்களின் மேல் அளவில்லாப் பற்று, இவற்றினால் முடிவற்ற செயல்களில் ஈடுபாடு - இவ்வாறு முழுமையாய் இவ்வுலகச் செயல்பாடுகளில் உழல வைக்கும் மனம் ஆகியவையே ரஜோ குணத்தின் வெளிப்பாடுகள்.
அறிவு வேட்கை அற்றவர்களாக, தெளிவில்லா குணத்துடன், அசட்டை, சோம்பல், உறக்கம் இவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் தமோ குணமுள்ளவர்களாகக் கருதப்படுகின்றனர்.
இவ்வாறாக சுயநலச் சிந்தனை அற்று, தன் கடமை ஆற்றும் பரிசுத்த மனமுடையவர், சுயநல சிந்தனையுடன், ஆசையே வடிவெடுத்து செயலாற்றும் மனமுடையவர், செயலற்றவராக குழப்பத்துடன் உறங்கிக் கிடக்கும் சோம்பேறி என மூன்றுவிதமாக மனித இனத்தைக் கணித்திருக்கிறார்கள் வேதகால மகரிஷிகள்.
இந்த மூன்று வகையான குணங்களின் கலவை ஒவ்வொருவரிடமும் உண்டு என்பதுதான் உண்மை. இதன் அடிப்படையிலான மனிதர்களே இவரின் கதாபாத்திரங்களாக உலவுகிறார்கள்.
அடுத்தவர்களோடு சண்டை போடுவதையே தன் குணமாகக் கொண்டிருக்கும் ஒருவன், சண்டைக்கான வாய்ப்பு எங்கு, எப்பொழுது கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருப்பவனாய் ஒரு பாத்திரத்தைப் படைத்து உலவவிட்டு, அவனின் வாழ்க்கைப் போக்கு எப்படியெல்லாம் அவனைக் கொண்டு செல்கிறது, சிக்கல்களைச் சந்திக்க வைக்கிறது, அதனால் எத்தகைய ஆபத்தை அவன் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது என்பதுவுமாயும், அம்மாதிரியான குணம் கொண்டவன் தான் எதிர்கொள்ளும் விபரீதங்களை குண முரண்பாட்டுப் பழக்கங்களால் எதிர்கொண்டு மேலும் மேலும் சிக்கல்களை உருவாக்கிக் கொள்வதும், ஒரு சிலர் எல்லாவற்றிலிருந்தும் விடுபட்டவர்களாய் எப்படி தப்பிப் போகிறார்கள் என்கிறவிதமாயும் இருவேறு முடிவுகளை ஒரு கதைக்குத் தந்து, இப்படியும் ஒன்றிரண்டு இருக்கத்தானே செய்கிறது என்பதாகத் தன் கதைக்கு முடிவாய் ஒரு யதார்த்தத்தை பலமாய் நிறுவுகிறார். புத்தகத்தின் தலைப்புக் கதையாய் அமைந்துள்ள நானும் ஒருவன் என்கிற சிறுகதை இதை நமக்கு உணர்த்துகிறது.
இங்கே ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்லித்தான் ஆக வேண்டும். சற்றும் இலக்கிய வாசிப்புக்குப், பரிச்சயமில்லாத ஒரு சாதாரண சராசரி வாசகன் இதைப் புரிந்து கொள்வது கடினம். கதையின் முடிவிற்கான வித்தியாசத்தை உணர முடியாமல், முடிவைத் தவறாக இரண்டு முறை அச்சேற்றிவிட்டார்களோ என்று குழம்புவதற்கு வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் இம்மாதிரியெல்லாமும் கதைகளைச் சொல்லலாம் என்ற முறைமையை, எழுந்திருக்கும் நவீனத்துவத்தின் புதிய நடைமுறையை, படைப்பாளி தோற்றுவித்திருப்பதை ஒரு வாசகன் உணரப்புகுந்தால் மட்டுமே இது சாத்தியம். இந்த முறையை ஏற்படுத்திய பெருமை திரு சுரேஷ்குமார் அவர்களையே சாரும்.
மனிதர்கள் இந்த உலகத்தை, எவ்வெவ்வகையிலோ ஏமாற்றுகிறார்கள். குறிப்பாக ஆன்மீக வேஷம் இதற்கு நன்றாகப் பொருந்துகிறது. மக்களின் உண்மையான இறை நம்பிக்கையைப் பயன்படுத்திக் கொண்டு, இந்த வேஷம்தான் இங்கு பலிக்கும் என்று போலிச் சாமியார்கள் பலர் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆன்மீகத்தின் அடையாளமாகத் தங்களைப் பலமாக ஊன்றிக் கொண்டு, மக்களைச் சதும்ப ஏமாற்றி அதன் மூலம் செல்வச் செழிப்புள்ளவர்களாக மாறி போலி இன்பங்களில் திளைக்கிறார்கள். அம்மாதிரியான ஒரு கதாபாத்திரத்தைப் படைத்து, மெல்ல மெல்ல மக்களின் பக்திச் சிந்தனைகளுக்கேற்ப தன்னை சாமர்த்தியமாய் மெருகேற்றிக் கொண்டு எப்படி உச்சிக்குச் சென்று வசதியாய் உட்கார்ந்து கொள்கிறார் என்பதான ஒரு மெல்லிய பின் நவீனத்துவ பாணியிலான கதையை படு சாமர்த்தியமாய் புனைவாய்ச் சுருட்டி நம்முன்னே விரித்து விடுகிறார். திரும்பத் திரும்ப ரசித்துப் படிக்கத் தூண்டும் ஒரு கதை மட்டாஞ்சேரி ஸ்ரீதரமேனன்.
என் நண்பர் ஒருவரிடம் ஒரு பழக்கமிருந்தது. அவர் ஒரு அலுவலகத்தில் பணிபுரிபவர். அவரது மனைவி தொலைபேசி இலாகாவில் பணிபுரிகிறார்கள். இவர் அலுவலகம் முடித்து மாலை ஆறு ஏழுமணிவாக்கில் வழக்கமாய் வீடு வந்துவிடுவார். மாலை நாலு மணிக்கு மேலான ஷிப்ட்டுக்குச் சென்றிருக்கும் அவரது துணைவியார் இரவு பதினோரு மணிக்கு மேலும், சமயங்களில் பன்னிரெண்டு, ஒரு மணிக்கு மேலும் பணி முடித்து வெளியேறுவார்கள். அலுவலகத்தின் ரெஸ்ட் ரூமில் உடன் பணியாற்றும் பெண்மணிகளோடு படுத்து உறங்கிவிட்டு காலையில் வரலாம்தான். ஆனால் என் நண்பருக்கு வீட்டில் தனியே இருக்க மனமில்லை. எனவே பதினோரு மணிக்கு மேல் போய், அவரது துணைவியாரைக் கூட்டி வருவார். அப்படி வீடு திரும்புகையில் கடந்து வரும் வழி அத்தனை பாதுகாப்பில்லை என்பார். இதற்காக தற்காப்புக்கு என்று இடுப்பிலே ஒரு கத்தி செருகியிருப்பார். இது அவர் துணைவியாருக்குக் கூடத் தெரியாது.
என்னடா, அந்தளவுக்கு நீ தைரியசாலியா? கேட்டேன் நான். அசட்டுத் தனமாய் அதை எடுத்துக் கையில் பிடிக்க, அந்த நேரம் வேறுவிதமான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பிருக்கிறது என்று நினைத்தேன். அவருக்கு அது பொருந்தாது என்பது என் எண்ணம். அவர் சொன்னார். அது என்னிடம் இருப்பது என் மனதுக்கு ஒரு தைரியத்தைக் கொடுக்கிறது. நான் தைரியமாக இருட்டில் வழிகளைக் கடந்து வருவதற்கும், பாதுகாப்பாக வீட்டை அடைவதற்கும் எனக்குப் பேருதவியாக இருப்பது அதுதான் என்றார். நான் சொன்னேன். இது சரியல்ல. பேசாமல் ஆபீசிலேயே படுத்திருந்துவிட்டு காலையில் புறப்பட்டு வரச்சொல். அதுதான் சரி என்று. வாராவாரம் ஷிப்ட் மாறத்தானே போகிறது. ஏதேனும் ஒரு வாரம் அல்லது இருவாரம்தானே இம்மாதிரி. என் சரியான முடிவை அவர் கேட்கவில்லை என்பது வேறுவிஷயம். அதை விடுங்கள். இன்றுவரை அந்த விஷயம் என் மனதை உருத்திக் கொண்டிருக்குகிறது. இதே போன்ற ஒரு மனநிலை உள்ள ஒரு கதாபாத்திரத்தை இத்தொகுதியில் உள்ள ஒரு கதையில் உருவாக்கியிருக்கிறார் கதாசிரியர். கதைக்குப் பெயர் உறையிட்ட கத்தி. தன் மகனைக் கொன்றவர்களுக்கு நல்ல சாவு கிடையாது , விபத்திலேதான் செத்துப் போவார்கள் என்று மனதார நம்புகிறார் அந்தப் பெரியவர். அவர் எப்போதும் கையிலே கத்தி வைத்திருப்பவர். மனைவி இறந்து போய்விட்டாள். மகன் கொலை செய்யப்படுகிறான். மகள் தற்கொலை செய்து கொள்கிறாள். மிஞ்சியிருப்பது மருமகள் மட்டும்தான். மகனைக் கொன்றவர்களுக்கு நல்ல சாவு கிடையாது என்று நினைத்திருந்தவருக்கு எதிர்மறையான விளைவுதான் எதிரே வந்து நிற்கிறது. அவரது மருமகள்தான் விபத்திலே மாட்டி மரிக்கிறாள். கத்தியை என்னிடமிருந்து பிடுங்கிவிட்டால் நான் தைரியமிழந்து இறந்து விடுவேன் அல்லது பைத்தியமாகிவிடுவேன் என்று நினைத்துக் கொள்கிறார். ரொம்பவும் வித்தியாசமான ஒரு கதாபாத்திரம் இந்தக் கதையில் உலா வருகிறது. இப்டியெல்லாமா கதை எழுதறாங்க என்று உடனே வாங்கிப் படிக்கத் தோன்றுகிறதல்லவா? இலக்கிய ஆர்வலர்கள் உடனே படிக்கத் துடிப்பார்கள்
மூன்று பெண்கள் என்று ஒரு கதை. ஒரு பிராமணக் குடும்பம். அதில் உருப்படாத அப்பா. பையனும் அப்படி வீணாய்ப் போய் விடக்கூடாதே என்ற பயத்தில் கவனமாய் வளர்க்கும் அம்மா.
வாழ்க்கையற்றுப்போய், சாபக்கேடுக்கு ஆட்பட்ட குடும்பமும், அது வளர்ச்சியற்றுப்போன கதையும் ஊடாடுகிறது இதில்.
வாழ்க்கையிழந்த இரு பெண்கள், அதற்கான காரணநிகழ்வுகளை நம்பும் மூத்த தலைமுறை, இவை அப்படியல்ல, எல்லாமும் தற்செயல் நிகழ்வுகளே என்று சொல்லி, அப்படியான ஒரு குடும்பத்தில் துணிந்து பெண் எடுத்து, இப்பிரபஞ்சமே புதிர், சமயங்களில் வாழ்க்கையும் அப்படித்தான் என்று ஒரு குழந்தையைத் தத்தெடுக்கத் துணியும் அவன். வீட்டில் ஆண்மகனின் துணையின்றி அல்லல்பட்டு பையனை நன்கு வளர்த்தெடுத்த தாய். ஆக மூன்று பெண்களின் கதை கச்சித வடிவம். சொல்ல வந்தது வாசிப்போர் மனதில் பச்சென்று உட்கார்ந்து கொள்கிறது. சொல்ல வந்த விஷயத்தை நறுக்கென்ற பேசி அநாயாசமாய் நகர்ந்து முடிந்து விடும் கதை.
ரெட்டைக் கொலை என்று ஒரு கதை. ஒரு சூழலை எப்படி வர்ணிப்பது என்பதற்கு இவர் மெனக்கெடுவதேயில்லை. ஏற்கனவே படித்ததுபோலவோ, இப்படித்தான் சொல்ல வேண்டும் என்று வகுத்துக் கொண்டது போலவோ இவர் சொல்வதில்லை. கண் முன் காணுவதை படு சாதாரணமாய், ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், எழுத்தாளனுக்கான எந்தப் பவிசும் இல்லாமல் சொல்லிச் செல்வது பளிச்சென்று பதிந்து போகிறது மனதில். உதாரணத்திற்கு ஒன்று பாருங்கள்.
வக்கீல் அலுவலகத்திற்கு முன் ஒரு பெரிய அரசமரம் இருப்பது அந்த அலுவலகத்திற்கு ஒரு தோற்றத்தையும், நிறைய வாடிக்கையாளர்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்று மந்தை வீரன் நினைத்துக் கொண்டான். அங்கு இருந்த கூட்டத்தைப் பார்த்ததும், ஜெயித்துவிடலாம் என்று தோன்றியது. பணம் நிறைய செலவாகுமோ என்ற எண்ணமும் ஏற்பட்டது. கருப்புக்கண்ணாடி அறைக்குள் வக்கீல் இருந்தார். வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றில் மந்தை வீரன் அமர்ந்திருந்தார். வரவேற்பில் இருந்த பெண் அடிக்கடி வரும் தொலைபேசி அழைப்புகளுடன் பேசிக்கொண்டே வருகிறவர்கள் பெயர்களைப் பதிவேட்டில் குறிப்பதையும், சுறுசுறுப்பாகச் செய்து கொண்டிருந்தாள். அவள் இடது புருவத்திற்கு மேல் ஒரு மரு இருந்தது..
வரிகளைக் கடந்து செல்லச் செல்ல ஸ்வாரஸ்யம் தானாகவே வந்து விடுகிறது. ஏனென்றால் சும்மா சும்மா அம்மா, அப்பா, தங்கை, அண்ணன், தம்பி, என்று ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள்ளேயே உப்புச் சப்பில்லாத பிரச்னைளை வைத்து திரும்பத் திரும்பச் சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கும் கதைகளைவிட, எழுதியதையே எழுதிக் கொண்டிக்கும் படைப்பாளிகளை விட, புதிய களம், புதிய கரு, புதிய கதை சொல்லல் என்று காண முற்படும்போது, ஒரு இலக்கிய வாசகனின் தேடலில் இனம் புரியாத உற்சாகமும், உத்வேகமும், வந்து சேருகிறது. படைப்பாளியை அவன் படைப்பை வைத்து மதிப்பிடுதலில் தீர்மானங்கள் தோன்றுகின்றன. கசடுகளை உடனுக்குடன் புரிந்து கொண்டு ஒதுக்கித் தள்ளும் மனோபாவம் பழக்கப்படுத்தப் படுகிறது. இப்படித்தான் இந்தத் தொகுதியில் உள்ள அனைத்துக் கதைகளும் நம்மைத் திரும்பத் திரும்பப் படிக்க வைக்கின்றன.
ஒரு திருமணம் என்கின்ற சிறுகதையில் ஆண்டாள் கோதை நாச்சியாரின் அரங்கனுடனான திருமணம் பற்றி ஒரு யதார்த்தத்தோடு அணுகி எப்படி சாத்தியம் என்பதாக ஒரு கேள்வியை வாசகர்கள் முன் வைத்து, எப்படி சாத்தியப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்கின்ற வகையிலான ஒரு புனைவை முன்னிறுத்தியிருக்கிறார்.
டைம்ஸ் இன்று இதழில் வெளிவந்த அப்பத்தா என்கிற சிறுகதை நம் மனதை மிகவும் நெருடச் செய்யும் படைப்பு. மனித வாழ்க்கையில் மன மாற்றங்கள், செயல் மாற்றங்கள் பலருக்கும் ஏதோவொரு எதிர்பாராப் புள்ளியில்தான் நிகழ்கின்றன. அதற்கு மிகச் சாதாரணமான ஒரு விஷயம் கூடக் காரணமாக அமைந்து விடக் கூடும். நம் நடைமுறை வாழ்க்கையில் நம் அம்மாவைப் போலவோ தந்தையைப் போலவோ இருப்பவர்களிடம் நாம் நம்மையறியாமல் மரியாதை கொள்வதுவும், நம் சகோதரியின் சாயல்களில் இருப்பவர்களிடம் நம்மை மீறிய அன்பினைப் பகிர்ந்து கொள்வதுவும் தவிர்க்க முடியாமல் பலரின் வாழ்விலும் நிகழக் கூடிய ஒன்று. அப்படியான ஒரு நடிகையின் மீதான அதீதப் ப்ரீதி காலம் கடந்த பொழுதின் ஒரு நிகழ்வின் நேர்பார்வையில் மனமாற்றத்தை ஏற்படுத்துகிறது ரத்னகுமாருக்கு. வாழ்க்கையின் ஓட்டத்தில் இம்மாதிரியான ஒரு புள்ளியில் ஏற்படும் மாற்றங்களைப் பலரும் குறிப்பாய் உணருவதில்லை. அம்மாதிரி ஒன்றைக் கண்டுணர்ந்து அதை அந்த நுணுக்கம் குன்றாமல் படைத்தளிப்பதுதானே படைப்பாளியின் வேலை.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் பின் நவீனத்துவம் என்பது பலரும் புரிந்தும் புரியாமலும் உபயோகப்படுத்தும் சொல்லாட்சியாக உள்ளது. அவரவர் அவரவரின் மனப்போக்கிற்கேற்றாற்போல் வாசிப்பு அனுபவத்திற்கேற்றாற்போல், புரிதலுக்கேற்றாற்போல் இதுபற்றி சிலாகித்துச் செல்கிறார்கள். சென்றிருக்கிறார்கள். அப்படிப் புரிந்து கொண்டதாகக் கருதிக் கொள்பவர்கள், அல்லது உண்மையிலேயே புரிந்து கொண்டவர்கள் வெளியே சொல்லத் தயங்கும் விஷயங்களையும், இதுதான் பின் நவீனத்துவம் என்று அறுதியிட்டு நிலைநிறுத்த முயலுவதுமாகிய செயல்கள் நிறைய நடைபெறுகின்றன. இந்தப் பின் நவீனத்துவம் ஒருவகையான எரிச்சலில் எதற்கு இந்தப் போலித்தனம் என்பதுபோல் இங்கே பகடியாக்கப் படுகிறது. அப்படித்தான் பின் நவீனத்துவ்வாதியின் மனைவி என்ற ஒரு சிறுகதையைப் புரிந்து கொள்ள முடிகிறது. இக்கதையைப் படித்துவிட்டும் ஏற்றுக் கொண்டும், ஏற்றுக் கொள்ளாமலும் பலரும் முரண்பட்டுச் செல்ல வாய்ப்பிருக்கிறது. அப்படியேதான் பின்நவீனத்துவமும் இன்றுவரை இருந்து கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
அடுத்ததாகக் கணியன் பூங்குன்றனார். அற்புதமான கதை. இக்கதையைச் சொல்வதற்கு முதலில் படைப்பாளிக்கு ஒரு துணிச்சல் வேண்டும். எழுத்து என்பதன் உண்மையான அர்த்தம் இங்கே பரிபூரணத்துவம் பெறுகிறது. கதையின் ஊடாக ஊன்றி நிற்கும் ஒரு கருத்து எப்படி எதிர்மறையான பகுதியில் இருந்து தவிர்க்க முடியாமல் வெளிப்படுகிறதோ அப்படியே படைப்பாளியின் கருத்தும் ஊன்றி நிலைத்து நின்றிருந்தால்தான் இக்கதையை எழுதி நிரூபிக்கத் தோன்றியிருக்கும்.
யாதும் ஊரே யாவரும் கேளீர். இது கணியன் பூங்குன்றனாரின் வாக்கு. ஏழ்மை நிலையில் வாழ்க்கைப் போராட்டத்தில் இருப்போர் எல்லோருமே ஓர் ஜாதிதான். அதில் ஏற்றத்தாழ்வு காண்பதற்கில்லை என்கிறார் ஆசிரியர் இப்படைப்பில். இக்கருத்தை ஓர் திராவிடக் கட்சியைச் சேர்ந்த அல்லது திராவிடக் கொள்கைகளில் பற்றுள்ள ஒரு அரசியல்வாதியின் மூலமாகச் சொல்லிவிடுவதில் படைப்பாளிக்கு ஏற்பட்ட உண்மையான முனைப்புதான் இக்கதையின் சாரம். திராவிட இயக்கக் கோட்பாடுகளில் ஆழ்ந்தவன் மனித நேயம் மிக்கவனாக இருக்கக் கூடாதா?
மனித நேயம் என்பது மனித சமுதாயத்திற்குப் பொதுவானதுதானே? இருக்கலாம்தான். ஆனால் அதை வெளிப்படுத்தக் கூடாது என்பதுதான் கோட்பாடு. நம்முள்ளேயே இன்னும் அப்படிப் பலரும் இருக்கும்போது, செய்யும் உதவியை அவர்களுக்குச் செய்வதுதானே நியாயம். அதை உயர்ந்த ஜாதியைச் சார்ந்த ஒருவனுக்கு (அவன் ஏழ்மை நிலையில் இருந்தாலும் கூட) ஏன் செய்ய வேண்டும்? என்கிற கேள்வியும் கதையின் முடிவாக வீசப்பட, கோட்பாட்டைத் தாங்கி நிற்கும் உங்களிடம் இல்லாத முரணா? என்று பதில் கேள்வியும் கேட்கப்பட்டு இறுதியில் மனித நேயமே உயர்ந்தது என்கின்ற கருத்து நிறுவப்படுகிறது.
பேனாவின் முனை கூர்மையானது என்பது உண்மையாக இக்கதையில் வெளிப்பட்டிருக்கிறது.
நாம் நம் வாழ்க்கையில் பிறர் மேல் இரக்கப்பட்டு உதவி செய்து அதனாலும் கூட எதிர்பாரா சங்கடங்களை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அப்படியான ஒரு சிறு சம்பவத்தின் தாக்கமாகத்தான் மினுங்கும் கண்கள் என்ற தலைப்பிலான சிறுகதை இத்தொகுப்பில் நம்மை மிகவும் நெருக்கமாக வாசிக்க வைத்து பயமுறுத்துகிறது. உதவிகள் செய்வதைக் கூட, ஒருவர் மேல் இரக்கம் கொண்டு ஆதரிப்பதைக் கூட இடம், பொருள், ஏவல் பார்த்துப் பாதுகாப்பாகச் செய்ய வேண்டிய காலம் இது என்பதைக் கழுத்தில் கத்தியை வைத்து மார்பில் அமர்ந்து மிரட்டும் அந்தச் சிறுவனின் மினுங்கும் கண்கள் மூலம் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு சிறு சம்பவம்தான். ஆனால் அதைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் தோரணமாய் கதை விரியும்போது, புனைவுகள் நிகழ்வுகளோடு யதார்த்தமாய்ப் பொருந்தி நகர்ந்து எப்படி இலக்கிய விசாரமாய் வடிவம் கொள்கிறது என்று அருமையாக உணர்த்துகிறது இக்கதை. கதையின் கடைசிப் பத்தி இது.
அந்தோணிராஜூக்கு அந்தச் சிறுவன் வேண்டுமென்றே கத்தியைத் தொண்டையில் அழுத்தி வெட்டாமல், லேசாகக் கீறியிருப்பதாகத் தோன்றியது. சாப்பாடு போட்ட நன்றிக்காக, லேசாகக் கீறியிருக்கிறான் என்று நினைத்துக் கொண்டார். ஆனால் அவர் சந்தித்த அந்தச் சிறுவனின் மினுங்கும் கண்கள் அவரை அச்சப்படுத்திக் கொண்டிருந்தன. அச்சம் அவருக்கு மட்டுமல்ல. நமக்கும்தான்.
மனைவிகள் என்பது ஒரு கதையின் தலைப்பு. குடும்பங்களில் மனைவிகள் பல தரப்பட்டவர்களாயிருக்கிறார்கள். தன் குணத்திற்குக் கணவன் இணங்கி வர வேண்டும் என்பதாயும், கணவனின் குணத்திற்குத் தன்னை சமன் செய்து கொள்ளும் போக்காகவும், அவனின் பலவீனங்களை அணைத்துச் செல்லும்விதமாகவும், தவறுகளைப் பொறுத்துக் கொள்ளும் வகையிலும், ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்க்கையின் விதியே என்றும், குடும்ப அமைப்பின் கட்டுக்களை அறுக்க இயலாதபடியும், சமூகத்திற்கு பயந்தும் என்று பலவகைப்பட்ட மனைவிகளை நாம் காண்கிறோம். இப்படியான பலவற்றில் ஒன்றிரண்டைக் குறிப்பாகக் கவனித்து நேர்த்தியான சம்பவங்களோடு சேர்த்து மாலையாகக் கோர்க்கப்படும்பொழுது அது தேர்ந்த ஒரு படைப்பாக உருவாகிப் பரிணமிக்கிறது. அப்படியொரு அவசியமான படைப்புதான் மனைவிகள்.
சுமாரான தோற்றத்திலிருக்கும் பெண்ணைக் கூர்ந்து கவனித்தால் அழகையும், கவர்ச்சியையும் கண்டுபிடிக்க முடியும் என்று ரயிலில் மனைவி கூடவே பயணம் செய்கையில் பிறிதொரு பெண்ணை ரசிக்கும் கணவன். அது அவர் பழக்கம், அதுக்கென்ன செய்றது என்று அதை சகஜமாக எடுத்துக் கொள்ளும் மனைவி! எப்படி இந்த சகஜம் வெளிப்படுகிறது. வண்டியில் செல்கையில் ரோட்டைக் கவனிச்சு ஓட்டுங்க…என்கிறாள் அவள்.
சிறுநீர் பாதையில் ஏற்பட்ட பிரச்னைக்கு மருத்துவமனையில் இருக்கும்போதும் நர்சுகளை ரசிக்கிறான் கணவன். அறுவை சிகிச்சையின்போது வலி தெரியாமல், உணராமல் நர்சுகளைப் பார்த்தே பொழுதைக் கழித்துவிட்டு அதை மனைவியிடம் சொல்லவும் செய்கிறான். ஆப்பரேசனுக்கெல்லாம் பொம்பளை நர்சுகளையா வைக்கிறாங்க? என்கிறாள் அவள்.
nஉறரிடிட்டரி என்கிறோம். ஜீன்ஸ் என்கிறோம். அது எப்படி சரியில்லாமல் போகும். பையன் இப்படியிருந்தால் தந்தை? தந்தையைவைத்துத்தான் பையன் என்பதை இங்கே மாற்றிப் பாருங்கள். கதை அப்படித்தானே வருகிறது.
அவர் இறந்தபோது “அவள்“ வருகிறாள். பிணத்தைப் பார்க்கக் கூடாது என்று மாமன் சொல்ல, அந்தத் தேவடியாள் வந்து பார்த்துவிட்டுப் போகட்டும் என்கிறாள் அம்மா. அங்கேயும் ஒரு பெண்ணின் அதாவது மனைவியின் தன்மை வித்தியாசப்படுகிறது. கணவனுக்கு சமன் செய்து கொண்டு சென்ற போக்கு வெளிப்படுகிறது.
பார்த்துவிட்டுத்தான் போகட்டுமே…! என்று பையன் நினைக்கிறான். அது அப்பாவின் குணமாய் அடையாளம் சொல்கிறது. அப்பன் வைப்பு வைத்திருந்தால் பையன் திருமணத்திற்குப் பின்பும் பிற மாதர்களை ரசிக்கும் பழக்கமுடையவனாய், பலவீனனாய் இருப்பது என்பது விட்டகுறை தொட்டகுறைதானே? ஏதேனும் ஒரு அடையாளம் வேண்டாமா?
கணவனும் மனைவியும் சாவுக்குப் போன இடத்தில் துக்கமின்றி நிற்கிறாள் அந்த மனைவி. கணவன் இறந்த வருத்தத்தின் அடையாளம் தேடவேண்டியிருக்கிறது. ஆனாலும் சமூகத்தின் முன்னால் துக்கத்தில் இருப்பவள் போல் நடிக்கக் கூட இல்லையே…? இப்படி ஒரு மனைவியா? என்று நாமும் கேட்டுக் கொள்கிறோம். மனைவிகள் பலதரப்பட்டவர்கள்தான். ஆனால் கணவன்களும் அப்படித்தான் என்பதுவும் உள்ளே பொதிந்திருக்கிற உண்மைதான். இது மனைவிகளைப் பற்றி மட்டுமான நல்ல கதை.
கொலை செய்யும் கூலிப்படை மனிதர்களைப்பற்றிய கதைதான் அந்த மனிதர்கள். இன்ன இடத்தில் இந்தத் தேதியில், இந்த நேரத்தில் இவனைத் தீர்த்து விடு என்று திட்டமிட்டால் அதை அப்படியே மூர்க்கமாக ஏற்று, நிறைவேற்றிவிடுபவர்கள்தான் அவர்கள். மூளையையும், மனதையும், மழுங்கடிக்கச் செய்யும் போதையின் உச்ச நிலையில் குறி வைத்தவனின் வேதனைகள் மதியில் தோன்றாமல் கொடூரங்களைச் செய்பவர்கள்.
ஆனாலும் ஏதேனும் ஒரு கணத்தில் இந்தப் பாபச் செயலை உணராமலா இருப்பார்கள்? இதற்கு மன்னிப்பே கிடையாது என்பதை நினையாமலா போவார்கள்? மனித மனம் என்பது அவர்களுக்குள்ளும் இருக்கிறதுதானே?
அப்படி ஒரு கொலைக்குத் திட்டமிட்டுக் கிளம்பும் ஒரு கும்பலில் குறிப்பிட்ட இடத்திற்குப் போய்ச் சேரும்முன் வழியில் விபத்தில் மாட்டிய ஒருவனுக்கு உதவி செய்ய முனைகிறான் ஒருவன். கொலை செய்பவனே ஆனாலும் அவனுக்கும் மனிதாபிமானம் என்பது உண்டுதான் என்று சொல்ல முனைந்திருக்கும் கதை. எடுத்துக்கொண்ட கருவும், சொல்லும் முறையினாலும் இக்கதை சுவாரஸ்யப்படுகிறது.
இப்படியான மாறுபட்ட படைப்புக்களைத் தாங்கி நிற்கும் இத்தொகுதி கவனிக்கப்படவேண்டியது. நிச்சயம் கவனிக்கப்படும். இலக்கிய ஆர்வலர்கள் அவசியம் இந்தப் புதுமையான கதை சொல்லியைப் பாராட்ட வேண்டும். மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகளைத் தன்னகத்தே கொண்டு ஜம் ஜம்மென்று பயணிக்கிறது இத்தொகுதி. ஒரு படைப்பாளியைத் தலைநிமிர்ந்து நிற்க வைக்கும் தொகுதியாகப் பரிணமிக்கிறது.
புதிதாக எழுத முனைபவர்களும், ஏற்கனவே எழுதிக் கொண்டிருப்பவர்களும், பார்த்துப் படித்து, பிரமித்து, இம்மாதிரியான ஒரு உத்தியில் நாம் இதுவரை எழுத முனையவில்லையே என்று வியப்படையக் கூடும். நாமும் இப்படிப் புதுமைகளை எழுத்தில் கொண்டுவர வேண்டும் என்று முனையக்கூடும். அப்படிப்பட்டதொரு மனநிறைவளிக்கும், மாறுபட்ட, புதுமையான, விறுவிறுப்பான, நவீனத் தமிழிலக்கியத்தின் சிறுகதைப் பரப்பின் முன்னோடிகளின் சாயலில்லாத, எல்கைகளை விரிவுபடுத்திய, தனித்துவம் வாய்ந்த சிறுகதைத் தொகுதிதான் காலச்சுவடு வெளியீடாக ஜனவரி 2013 ல் வெளிவந்துள்ள திரு சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களின் நானும் ஒருவன்.

------------------------------------------------------------------------



















































28 டிசம்பர் 2012

உஷாதீபனின் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் குறுநாவல் தொகுப்புகள்.

vojnmmnesamntppapvsntatvUntitled-1Uvvnp
1) உள்ளே வெளியே (முதல் சிறுகதைத் தொகுதி)  மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி தெரு, மதுரை-625 001. வெளியீடு.
2) பார்வைகள் (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பகம், தி.நகர், சென்னை-17
3) நேசம் (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பம், தி.நகர், சென்னை17.
4) வாழ்க்கை ஒரு ஜீவநதி(சிறுகதைத் தொகுதி) என்.சி.பி.எச்.சென்னை-98.
(திருப்பூர் தமிழ்ச்சங்கம், மற்றும் கலை இலக்கியப் பெருமன்றம், திருப்பூர்இணைந்து நடத்திய அமரர் ஜீவா, பி.இராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் பரிசு பெற்றது மற்றும் மதுரை லேடி பெருமாட்டி கல்லூரியில் பாடமாக வைக்கப்பெற்றது.)
5) நினைவுத் தடங்கள் (சிறுகதைத் தொகுதி)  என்.சி.பி.எச்,சென்னை-98. தமிழ்நாடு கலை இலக்கியப்பெருமன்றத்தின் 2011 ம் ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதி பரிசு பெற்றது.
6) புயலுக்குப் பின்னே அமைதி(குறுநாவல்)வானதிபதிப்பகம்,சென்னை-17
7) சில நெருடல்கள் (சிறுகதைத் தொகுதி) நிவேதிதா பதிப்பகம், சென்னை-17.
8)மழைக்கால மேகங்கள்(குறுநாவல்கள்) நிவேதிதாபதிப்பகம்,சென்னை17.
9) தனித்திருப்பவனின் அறை (சிறுகதைத் தொகுதி)நிவேதிதாபதிப்பகம், ,சென்னை17.
10) திரைவிலகல் (சிறுகதைத் தொகுதி) உதயக்கண்ணன், பெரம்பூர், சென்னை வெளியீடு. (திரு எஸ்.ஷா. அவர்களால் தொகுக்கப்பட்டது)
11) வெள்ளை நிறத்தொரு பூனை (சிறுகதைத் தொகுதி) ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை-17.
12) கதை அரங்கம்-6 (சிறந்த பல படைப்பாளிகளின் சிறுகதைத் தொகுப்பு) மீனாட்சி புத்தக நிலையம், தானப்ப முதலி- தெரு, மதுரை 625 001.

குறிப்பு -


www.nilacharal.com சென்று இப்புத்தகங்களை E.Book ஆகவும் பெற்றுக்கொள்ளலாம். 

25 டிசம்பர் 2012

”அம்மாவின் கடைசிநாட்கள்…” சிறுகதை

கணையாழி இலக்கிய மாத இதழ் அக்டோபர் 2012 ல் வெளிவந்தது
ங்கு இருந்த நாட்களில் அம்மா சந்தோஷமாய்த்தான் இருந்தாள். மன நிறைவோடு என்று சொல்ல வேண்டும். இப்படிப் படுக்கையில் விழுந்து விட்டோமே என்கிற ஆதங்கம் பிடுங்கித் தின்றது. முகத்தில் நிரந்தரமாய்ப் படிந்துவிட்ட சோகம். அதே சமயம், மனம் கோணாமல், சுடு சொல் பேசாமல், முகம் சுளிக்காமல், செய்வதற்குத்தான் இவன் இருக்கிறானே என்கிற திருப்தி. நிறைவு.
அடுத்தவா மனசு சங்கடப்படுற மாதிரிதான் நீ என்னைக்கும் பேச மாட்டியே…யாரையும் எப்பவும் நீ அப்டிப் பேசினதில்லை…அதுதான் எனக்கு உங்கிட்டப் பிடிச்சது….அந்த நல்ல குணத்தை எத்தனை பேர் நினைச்சுப் பார்த்துப் புரிஞ்சிக்குவா…அதனால உங்கிட்ட இருக்கிறதுல எனக்கு எந்த மனக் குறையும் இல்லை…..
ஒவ்வொரு முறையும் அம்மா அழைக்கும்போதும், இதைச் செய், அதைச் செய் என்று சொல்லும்போதும், இவன் முகம் சுருங்குகிறதா என்று கவனிக்கிறாளோ என்று தோன்றியது. அம்மாவை வலது பக்கமாயும், பின் சற்று நேரம் கழித்து இடது பக்கமாயும் புரட்டி விடும்போதும், அவள் பார்வை இவன் முகத்தைப் பார்த்தே இருந்தது. ஏன் இந்தச் சந்தேகம் வந்தது என்று இவனுக்குத் தோன்றியது. எழுப்பி அமர வைக்க இவன்தான் வரவேண்டியிருந்தது. உட்கார்ந்ததும் சற்றுப் பொறுத்துத்தான் கைப்பிடியை விட வேண்டியிருந்தது. முதுகைத் தாங்கிக் கொஞ்ச நேரம் பிடித்துக் கொண்டிருந்தான். மூச்சு வாங்கியது அம்மாவுக்கு. வாயைத் திறந்து கொண்டு உற்உறா…உற்உறா….என்று திணறினாள். நெஞ்சு அடித்துக் கொண்டது. தலை நிற்க மாட்டாமல் ஆடியது. நிதானத்துக்கு வர சற்று நேரம் பிடித்தது.
ஆதரவுக்கு ஆள் இருக்கிறது எனும்போது ஆசுவாசத்தை, உடல் நோவை சற்று அதிகமாகவே வெளிப்படுத்தும் மனச் சமாதானம். அந்த வேதனையைப் பார்த்து இன்னும் இரண்டு வார்த்தை ஆறுதலாகக் கிடைத்தால் அதில் ஒரு நிறைவு.
இவ்வளவு பாடு தேவையா? கடவுள் என்னைக் கொண்டு போகப்படாதா? என்றாள்.
அது நம்ம கைலயா இருக்கு…அவராக் கூப்டும்போதுதானே போக முடியும்…நாம கூப்டா வருவாரா? அவர் எப்ப நினைச்சிருக்காரோ அப்பத்தான் கூப்டுவார்…
ஆனாலும் பகவானுக்கு எம்மேல கொஞ்சங்கூடக் கருணை இல்லை. எம்புட்டு ஸ்லோகம் படிச்சிருப்பேன். எத்தனை கோயில் போயிருப்பேன். எவ்வளவு வேண்டின்டிருப்பேன்…சதாசர்வகாலமும் அவன் நாமம்தான். ஜபம்தான்..எனக்கு இது வேணுமா? இன்னும் அவனுக்கு இரக்கம் வரலை போலிருக்கு…? எல்லாம் பட்டுத்தானே கழியணும்…மிச்சம் வைக்காமப் போகணுமே…அது என்னோட போறதா? உங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தறது …என்னால எல்லார்க்கும் கஷ்டம்…
அப்பா இவ்வாறு படுக்கையில் விழுந்தபோது அவரைக் கொண்டு உடனடியாக ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்ததும், அதன் தொடர்ச்சியான பராமரிப்பையும் கவனிப்பும், கண்கூடாகப் பார்த்தவள்தானே! அதே அக்கறை தன்னிடம் இருக்காது என்பதாக நினைக்கிறாளோ? இருக்குமா என்கிற சந்தேகத்தில்தான் நோக்குகிறாளோ? எதற்காக இப்படியெல்லாம் நினைப்பு வர வேண்டும்? ஏன் இந்தத் தடுமாற்றம்? தன் வயிற்றில் பிறந்த பிள்ளையிடமே ஏன் இப்படிக் கேள்விகள் முளைக்கின்றன?
வயதான காலத்தில் இப்படிச் சிரமங்களைக் கொடுக்கிறோமே என்கிற மனத் தாங்கலா? அந்த வருத்தமா? அதனால் உண்டான நோவில் வரும் வார்த்தைகளா?
கடவுள் என்னைக் கொண்டு போக மாட்டேங்கிறாரே, இப்டிப் படுக்கைல வீழ்த்துவார்னு நினைக்கவேயில்லை. நா ரொம்பப் பாவம் பண்ணியிருக்கேன்…அது உங்களையும் சேர்த்துக் கஷ்டப்படுத்தறது….அனுபவிங்கோ….என் வயித்துல பிறந்தவாதானே நீங்க…அனுபவிக்கத்தான் வேணும்….
அப்டியெல்லாம் ஒண்ணுமில்லை…நீயா ஏதாவது நினைச்சிக்காதே…எதையாவது கற்பனை பண்ணின்டே மனசைப் போட்டு உழட்டிக்காதே…கண்ணை மூடிண்டு ராம ராமா சொல்லு…அப்டியே தூங்கப் பாரு….
எங்க தூங்கறது…? அதான் ஒடம்பு ரணமா வலிக்கிறதே…நா வெறுமே படுத்திண்டிருக்கேன்னு நீ நினைக்கிறே…இந்த ரணத்தோட கொடுமையை அனுபவிச்சிண்டே கண்ணை மூடிக் கெடக்கேன். எவ்வளவுதான் பொறுத்துக்க முடியும்…எதுக்காக இத்தனை உடல் வேதனை? அதான் தாங்க முடியாத போது புலம்பறேன்…யார்ட்டப் புலம்புவேன் சொல்லு…உன்னண்டதான் முடியும்….
சொல்லு…சொல்லு…தாராளமாச் சொல்லு…அதை ஏன் புலம்பறதாச் சொல்றே…உன் பிள்ளைட்டச் சொல்லாம வேறே யார்ட்டச் சொல்லுவே…எங்க பிடிச்சி விடணும்னு சொல்லு…பிடிச்சி விடறேன்… என்று கொண்டே அம்மாவின் இடுப்பு எலும்புப் பகுதியில் அமுத்தி விட்டான் இவன்.
மெதுவா…மெதுவா….என்று அலறினாள் அம்மா. அந்த இடத்தில்தான் அடி பட்டிருக்கிறது என்றார் டாக்டர். வயது தொண்ணூற்றி மூன்று. எப்படிச் சேரும்? முயற்சி செய்து பார்ப்போம்…இந்த மருந்தை உறிஞ்சச் சொல்லுங்க…பதினாறு நாளைக்கு உறிஞ்சணும்…கால்சியம் டெஃபிஷியன்சி…சரியாகறதுக்குக் கொஞ்ச நாளாகும். வீட்டு அளவுல நடக்கிறமாதிரிப் பண்ணலாம். கூடவே இந்த மாத்திரைகளையும் சாப்பிடட்டும்.
நம்பிக்கையாகத்தான் சொல்லி விட்டுப் போனார். அவரைக் கூட்டிக் கொண்டு வந்து காண்பித்ததில் அத்தனை திருப்தி அம்மாவுக்கு.
என் பிள்ளையாட்டம் இருக்கேள். சித்த நன்னாப் பார்த்து, என்னை எழுப்பி உட்கார்த்திடுங்கோ…புண்ணியமாப் போகும்…. – டாக்டர் சிரித்துக் கொண்டார்.
இந்தக் காலத்துல வீட்டுக்கு யார் வருவா? கூட்டிக் கொண்டு போய்க் காண்பிக்கலாம்னாலும் முடியாதே…இப்டிப் படுத்த படுக்கையாயிட்டனே?
இதையெல்லாம் நினைச்சு நீ ஏன் கஷ்டப்படுறே….நானில்ல கூட்டிட்டு வர்றேன்… அந்த நம்பிக்கை வார்த்தைகளில் அம்மாவின் முகத்தில் அத்தனை திருப்தி. மனிதர்கள் வார்த்தைகளுக்காக எவ்வளவு ஏங்கிப் போகிறார்கள்? முதுமை பெருங் கொடுமை. அதில் அவர்களுக்கு ஆதரவாக நிற்பது இந்த ஆறுதலான வார்த்தைகள்தான். நாள் முழுதும் அருகிலேயே அமர்ந்திருப்பதும், அவர்கள் புலம்புவதைப் பொறுமையாகக் கேட்டு அதற்கு சமாதானமாக அரவணைத்துப் பேசுவதும் எவ்வளவு கவனமாய்ச் செய்ய வேண்டிய பணிகள்? வெறுமே வேளா வேளைக்குக் கொண்டு வந்து யந்திரம் போல் வைத்தல் ஆகுமா? ஒரு விடுதிக்கும் சொந்த வீட்டுக்கும் வித்தியாசம் வேண்டாமா?
எத்தனை பேர் இதைச் செவ்வனே நிறைவேற்றுகிறார்கள். பெற்ற பிள்ளைகளே வாயில் வந்ததைப் பேசி விடுகிறார்களே?
பேசாமக் கிடக்க மாட்டியா? மனசு அமைதியாவே இல்லையே உனக்கு? இந்த வயசுக்கு எவ்வளவு விலகல் இருக்கணும்? இருக்கா உனக்கு? இந்த வீடும் வாசலும்,உற்றாளும் மற்றாளும் எல்லாமும் வெறுத்துப் போயிருக்கணுமே? ஏன் இல்லை? இப்டிப் படுக்கைல கிடக்கிற போதும், பொண்ணையும், பிள்ளையையும்பத்தி நினைச்சிண்டு, கண்ணீர் விட்டிண்டு, என்ன பக்குவம் வந்திருக்கு உனக்கு? எல்லாரும் உன் கண் முன்னாடியே எப்பவும் நிற்க முடியுமா? வீடியோ கேமராதான் வைக்கணும்…எல்லாருக்கும் கல்யாணம் ஆகி, குழந்தை குட்டிகள்னு பெத்து, குடும்பமா இருக்கால்லியா? அதோட விடுவியா, இன்னும் அவாளைப்பத்தி நினைச்சிண்டிருக்கியே? இப்போ நீ படுக்கைல கிடக்கே…எல்லாராலேயும் வந்து பார்க்க முடிஞ்சிதா? ஆளுக்கு நாலு நாள், வேண்டாம் ரெண்டு நாள், அதுவும் வேண்டாம் ஒரு நாள், வந்து இருக்கலாம் இல்லியா? வந்தாளா? வரமுடியாது…அவாவாளுக்கு ஆயிரம் வேலை…உன்னையே நினைச்சிண்டிருக்க முடியுமா? அதான் ஃபோன்லயே விசாரிச்சிக்கிறா…! இப்போ நாந்தான் இருக்கேன் சதா உன்னைப் பத்தியே நினைச்சு உருகிண்டிருக்க முடியுமா? அதுதான் எல்லாம் பார்த்தாச்சே…இன்னும் எதுக்குத் தவதாயப்படறே…? பிள்ளைகளுக்குக் கல்யாணம் ஆகி, பெண்டுகளுக்கெல்லாம் கல்யாணமாகி, பேரன், பேத்திகளைப் பார்த்து, அதுகளுக்குக் கல்யாணமாகி அவாளோட குழந்தைகளைப் பார்த்து, இப்டியே போச்சுன்னா உன் பிள்ளைகளோட, பொண்களோட சாவையே நீ பார்க்க வேண்டி வந்துரும்…அத்தனை தலைமுறை தாண்டிடும் போலிருக்கு…நெடுங்காலம் உயிரோட இருக்கிறதோட கொடுமை இதுதான் பார்த்துக்கோ…
அப்பாடா, என்ன பேச்சு, என்ன பேச்சு…? எல்லாந்தான் தோணும்னாலும் அதை இப்டி வாய்விட்டுச் சொல்லணுமா? நல்லதாப் பேசப் படாதா? சுற்றிலும் துஷ்ட தேவதைகள் இருப்பா வீட்ல…? காதில கேட்டுண்டே இருக்குமாம்….நாம சொல்றதை திரும்பத் திரும்பச் சொல்லுமாம்…அப்டிச் சொன்னா அதுதான் நடக்கும்பா…ஆகையினால நல்லதே பேசுங்கோ….
அம்மாவின் புலம்பல்….
ஆமா, இதுலதான் வந்தது. பாரு, இந்த வயசுலயும் ஆசையை? யதார்த்தத்தைப் பார்ப்பியா…? என்னமோ துஷ்ட தேவதை அது இதுன்னுட்டு…? காலா காலத்துல போய்ச் சேர்ந்தோம்னா நிம்மதின்னு நினைக்கப் பாரு…அதுக்கு வேணா பிரார்த்தனை பண்ணு….யாருக்குத் தெம்பு இருக்கு இந்தக் காலத்துல? புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் சேர்ந்து உழைக்கிற காலம் இது…ஆபீசிலயும், வீட்டுலயும்…எவனால முடியுது? உங்க காலத்துல நல்ல சாப்பாடு சாப்டேள்….தொண்ணூறு நூறுன்னு இருக்கேள்…இப்போ? எல்லாம் கலப்படம்? அறுபது தொட்டாலே இழுத்துக்கோ, பறிச்சிக்கோன்னு கிடக்கோம் நாங்க…எல்லாரும் வேலைக்குப் போறவா வேறே…எம்புட்டு வந்தாலும் பத்த மாட்டேங்கிறது….எல்லாத்துக்கும் ஆள் வச்சிக்க வேண்டிர்க்கு…அவாளுக்கு ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுக்க வேண்டிர்க்கு…அப்பிடியும் கிராக்கியா இருக்கு…யாருக்குத் தெம்பு இருக்கு உடம்புல…ஒடிஞ்சி விழுந்துடுவா போலிருக்கு…இதுல ராத்திரி முழிப்பு, பகல் முழிப்புன்னு வித்தியாசமில்லாம யாரால கிடக்க முடியும்? விடாம யாரால செய்ய முடியும்? ஆஸ்பத்திரில கூட நர்சுன்னு ஒருத்தி இருந்தா டே ஷிப்ட, நைட் ஷிப்ட்னு மாத்தி மாத்திப் பார்க்கிறா….ஒரே ஆள் தொடர்ந்து இருந்தா அப்புறம் அவாளும் படுக்கைல விழுந்தா யார் பார்க்கிறது? இதைச் சொன்னா குத்தம்…தான் பார்த்திண்டா எது நியாயமோ அதுவே மத்தவாளுக்கு ஆகாது…மத்தவாளுக்கும் வயசாகும், ஒவ்வொருத்தரோட உடம்பு ஸ்திதி வெவ்வேற மாதிரியிருக்கும்ங்கிற பக்குவமெல்லாம் கிடையாது…- பிள்ளைகளின் பேச்சில் எல்லாமும் ஒரே விகிதமாகவா இருக்கும். சற்று மாறுபடத்தானே செய்யும்…இன்றைய தலைமுறையின் யதார்த்த, நிதர்சனப் போக்கு மூத்த தலைமுறைக்குப் புரியுமா?
எல்லாவற்றையும் காது கொடுத்துக் கேட்டுக் கொண்டே படுக்கையில் சவமாய்க் கிடந்தாள் அம்மா. கண்களில் விடாமல் வழிந்து ஓடிக் கொண்டிருக்கும் நீர். கடந்து வந்த காலங்களின் அதீத நினைப்புகள்…சொல்லொணாத் துயரங்கள்…
அழாதே…உடம்பு அவாளுக்கும் முடியாதபோது, அலுத்துச் சலிச்சு வருமில்லியா…அப்போ ரெண்டு வார்த்தை வரத்தான் செய்யும்…உனக்குத் தெரியாதா, அதெல்லாம் பெரிசா எடுத்துக்காதே…நீ பார்க்காததா? பாட்டிக்கும், அப்பாவுக்கும் எவ்வளவு பார்த்திருக்கே…? உன் மனசு கஷ்டப்படக்கூடாதுதான்…நீ நொந்து ஏதாச்சும் நினைச்சுண்டா அது பலிச்சிடும்தான்…ஆனாலும் நீ அப்டி நினைக்க மாட்டே…உன் ஜனனமில்லையா எல்லாமும்,…எல்லாரையும் மன்னிச்சிடு…ஆசீர்வதி…அவ்வளவுதான்…
ஆனாலும் வார்த்தை பேசாதது நீதாண்டா….நான் நன்னாச் சொல்லுவேன்…அடுத்தவா மனசு புண்படுமேங்கிற எண்ணம் உனக்கு மட்டும்தான் உண்டு. அவாள்லாம் அப்டியில்லை…வாயில வந்ததைப் பேசிடுறா…எல்லாருக்கும் தோணறதுதான்…ஆனா இதையிதைப் பேசணும்னு ஒண்ணு இருக்கில்லியா…? மனசுல தோணறதையெல்லாம் அப்டிப் பேசிட முடியுமா? என்ன மனுஷா? எவ்வளவோ படிக்கிறா…அடுத்தவாளுக்கு உபதேசிக்கிறா…தனக்குங்கிறபோது மட்டும் இப்டி நடந்துக்கறா…எல்லாமும் ஏட்டுச் சுரைக்காய்…லோக அனுபவமங்கிறதே வேறே…இந்த உலகத்து மனுஷாளோட கலந்த அனுபவம் இருக்கே அதோட மகிமையே தனி…அப்பத்தான் பக்குவப்படும்…மனுஷாளுக்கு விவேகம்னு ஒண்ணு வேண்டாமா? பஞ்சு மனசுன்னு ஒண்ணு உண்டே… அந்த மென்மை உனக்கு மட்டும்தான் உண்டு. நீ வாய் திறந்து எதையும் சட்னு பேசிடமாட்டாய். அதுதான் சாட்சி…! ஏன்னா நீ என்னோட முழு ஆதங்கத்துல பிறந்தவன்…உங்கப்பா சின்னாளபட்டில கடை வச்சிருந்த போது ரெண்டு வருஷம் என்னைப் பிரிஞ்சிருந்தார். அங்க கடையை ஒரேயடியா இழுத்து மூடிட்டு உள்ளுரோட வந்து சேர்ந்தாரோல்லியோ அப்போதான் நீ பொறந்தே…ஆதங்கப்பட்டு, ஆதங்கப்பட்டு, என் மனசுல தேக்கி வச்சிருந்தனே நிறைய, துக்கத்தையும், கருணையையும், வேதனையையும்…அதோட மொத்த உரு நீதான்…எத்தனை பொறுமையும், நிதானமும் காத்திருப்பேன் தெரியுமா? அது பெரிய கதைடாப்பா…அதை இன்னைக்கு நினைச்சாலும் என் உடம்பு நடுங்குறது…அப்டி ஒரு மனுஷனை நான் இந்த ஜன்மத்துல பார்க்கலை…எவ்வளவு பெரிய மனசு அவுருக்கு….தெய்வமா வந்தார் நம்ம வீட்டுக்கு…
நீ என்னம்மா சொல்றே…? –
அம்மாவின் முகத்தில் புதிய ஒளி. பழைய நினைவோட்டங்களின் ஆதர்ஸம். கண்களில் சட்டென்று பெருக்கெடுக்கும் கண்ணீர்.
ஊரம்புட்டும் கடனாயிடுத்து…உங்கப்பாவால தீர்க்க முடியலை…என்னவோ பேருக்கு வியாபாரம் நடந்திண்டிருக்கு…கடையும் ஓடிண்டிருக்கு…ஆனா கடன் பெருகிண்டிருக்கு…உங்கப்பாவுக்கு என்ன செய்றதுன்னே தெரிலை…முழிச்சிண்டிருக்கார்…இந்தச் சமயத்துலதான் நா போய் அங்க உட்கார்ந்தேன்…
உன்னை யாரு இங்க வரச்சொன்னா…? யாரக் கேட்டு இங்க வந்தே?ன்னு சத்தம் போட்டார். சத்தம்னா அப்டியொரு பழி சத்தம்….உங்க பாட்டியானா முழிக்கிறா…அவாகிட்டே அழுது புரண்டுதான் என்னைக் கூட்டிண்டு போய் உங்கப்பா முன்னாடி நிப்பாட்டினா…ஏண்டா குழந்தே….உங்கப்பாவப் பாட்டி அப்டித்தான் கூப்பிடுவா…இப்டியா திரும்பிப் பார்க்காம இருப்பே..ஒரு பொம்மனாட்டி என்னதாண்டா பண்ணுவா…தனக்கு வாழ்வு இருக்குன்னு நினைப்பாளா, இல்லைன்னு அழுவாளா? நீ இல்லாம அவ படற துன்பம் என்னால சகிக்க முடிலப்பா…அதான் கொண்டாந்து விட்டுட்டேன்…இனிமே உன் பாடு அவ பாடு….
நாலுங்கெடக்க நடுவுல இப்டிக் கூட்டிக் கொண்டாந்து நிப்பாட்டினா நானும் என்னதான் செய்றது? நா என்ன செத்தா போயிட்டேன். இங்கதானே இருக்கேன்…
இங்கதான் இருக்கேங்கிறதே இங்க வந்தபின்னாடிதானே தெரியறது…மாசத்துக்கு ஒருதரமாவது ஊருக்கு எட்டிப் பார்க்க மாட்டியா? யார்ட்டச் சொல்லி எப்டித் தெரிஞ்சிக்கிறது? குடும்பம்னு ஒண்ணு இருக்குங்கிறதை நினைக்க மாட்டியா? இப்டியா குழந்தைகளை விட்டிட்டு கண்காணாம வந்து கிடக்கிறது? நாங்க என்ன நினைக்கிறது அப்புறம்?
படிக்கிற குழந்தைகளை இப்டி இழுத்திண்டு வந்து நின்னா என்ன அர்த்தம்…நாளைக்குப் பொழுது விடிஞ்சிதின்னா அதுகள் ஸ்கூலுக்குப் போக வேண்டாமா? இது நன்னாயிருக்கா?
ரெண்டு நாளைக்குப் போகாட்டா ஒண்ணும் குடி முழுகாது…நீ அங்க இருந்தாத்தான் எல்லாம் சரிப்படும்…இப்ப எங்களோட புறப்படு….போதும் நீ வியாபாரம் பார்த்ததெல்லாம்…
என்னது புறப்படறதா? நல்ல கதையா இருக்கே…இங்க கடன்காரால்லாம் கழுத்த நெரிச்சிண்டிருக்கா…அவாளையெல்லாம் விட்டிட்டு நா எப்டி வர்றது? என்னமாவது பண்ணி அத்தனையையும் செட்டில் பண்ணிட்டுதான் ஊர்ல காலடி வைப்பேன்….
அப்போ அதுவரை நாங்களும் இங்கதான் இருப்போம்….என்ன பண்ணனுமோ பண்ணிக்கோ…இப்போ என் நாட்டுப்பொண்ணுக்கு ஒரு பதிலைச் சொல்லு….அவ அழுகையையும் கதறலையும் என்னால கண்கொண்டு பார்க்க முடியலை….இல்லைன்னா சா தற்கொலை பண்ணின்டு சாக வேண்டிதான்…
ப்பா தர்ம சங்கடத்தில் ஆழ்ந்தார். தாயாரின் வார்த்தைகள் அவரை ஆட்டியெடுத்து விட்டன. துக்கத்தில் சிலையாய் அமர்ந்து கிடந்தார். வாசலிலானால் கடன்காரர்கள் வந்தமணியமாய் இருக்கிறார்கள். ஆளுக்கொரு லிஸ்டைக் கையில் வைத்துக் கொண்டு உட்கார்ந்து கிடக்கிறார்கள். கடனைத் தீர்த்தால்தான் இடத்தை விட்டு நகருவோம் என்கிறார்கள். ஒரு குந்துமணித் தங்கமில்லை அம்மாவிடமும். கழுத்தில் மஞ்சளை முடிந்து கட்டியிருக்கும் தாலி. பொழுதோ இருட்டி விட்டது. வந்தவர்கள் நகரவில்லை. மேற்கொண்டுதான் ஆட்கள் வருகிறார்கள். ஆளாளுக்குக் கையில் கிடைத்ததைத் தூக்கிக் கொண்டு கிளம்பினாலும் பத்தாது..தேறாது…
அன்று அந்தத் தேவரய்யா மட்டும் இல்லையானால் என்னவாகியிருக்கும்? கையெடுத்துக் கும்பிட்டுக் குலதெய்வமாய் வைத்த தெய்வம் அவர்.
அம்மணீ…நீ ஒண்ணும் அழாண்டாம்….கண்ணத் துடைச்சிக்கோ….எல்லாம் நா பார்த்துக்கிறேன்….ஏ புள்ளே….அவுகள்லாம் பசியாக் கிடக்காக பாரு….முதல்ல அவுக வவுத்த நிரப்புற வழியப்பாரு….போங்க..போங்க…வீட்டுக் குள்ளாற போங்க…எல்லாம் நல்லபடியா நடக்கும்….பசியாறுங்க முதல்ல…..
அன்று அது நடக்கவில்லையானால் குடும்பமேயல்லவா தற்கொலை செய்து கொண்டு மாய்ந்திருக்கும்…!
என்னாய்யா…எல்லாரும் ஓரெயடியா வந்து கழுத்தப் பிடிக்கிறீங்க…அவரென்ன தர மாட்டேன்னா சொன்னாரு….அவரத்தான் இத்தன்நாளாப் பார்க்கிறீங்கள்ல…உங்க முன்னாடிதான இருக்காரு…ஓடியா போயிட்டாரு…கொஞ்சங் கொஞ்சமாத் தர்றேன்னுதானே சொல்றாரு…ஒரு மனுஷன ஒரே சமயத்துல எல்லாரும் நெருக்கினீங்கன்னா அவன் என்னதான்யா பண்ணுவான்.….நா சொல்றேன்…யாரும் அவர்ட்ட இனிமே பேசப்படாது…என்னைத் தாண்டி யாரும் அவர்ட்ட நெருங்கப்படாது…தெரிஞ்சிதா…அவுங்கவுங்களுக்கு எவ்வளவு எவ்வளவுன்னு சொல்லுங்க…நா செட்டில் பண்றேன்……என் பொறுப்பு…..
தேவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டது அந்தக் கூட்டம். , சமாதானமாகி தங்கள் கணக்கைத் தீர்த்துக் கொண்டது. அந்த இரவு….மறக்க முடியாத இரவு அம்மாவுக்கு…..
ஒரு வில்வண்டியைப் பூட்டி, கையில் கொஞ்சம் பணத்தையும் செலவுக்குக் கொடுத்து, அம்மா, பாட்டி, அப்பா மூவரையும் இரவோடு இரவாக இரண்டு ஆட்களைப் பாதுகாப்புக்குச் சேர்த்து ஊருக்கு அனுப்பி வைத்தார் தேவர்…அந்த மகானை மறக்க இயலுமா…தினமும் முதல் கவளம் கையில் எடுக்கையில் அவரையல்லவா நினைத்து வணங்கியது அந்தக் குடும்பம்.
உங்கப்பா வச்சிருந்த அந்த சோத்துக் கடைல என்ன பண்ட பாத்திரம் இருந்ததுன்னு நினைக்கிறே? அது அத்தனையையும் வித்திருந்தாலும் அவர் பட்ட கடனை அடச்சிருக்க முடியுமா? நிச்சயம் முடியாதுதான்…திவாலாத்தானே நின்னார்…? ஆனா தெய்வமா வந்த அந்த மனுஷன் அன்னைக்கு எங்களப் பாதுகாத்தார். எந்தக் கடவுள் அனுப்பி வச்சாரோ தெரியாது. அன்னைக்கும் இன்னைக்கும் அவர்தான் நமக்குக் கடவுள்…இன்னைக்கு நீங்களெல்லாம் இப்டி நிக்கறேள்னா அதுக்கு அவர்தான் காரணமாக்கும்….
ஏம்மா, இப்போ அவரை உன்னால அடையாளம் காட்ட முடியுமா? அவரில்லாட்டாலும், வாரிசுகள் இருப்பால்லியா….அந்த அம்மணியோட வயித்துல ஜனிச்ச பிள்ளைகள் இருப்பா இல்லியா…அவாளைப் பார்த்தாலே புண்ணியமுண்டே….
கண்ணா நீ சொன்னதே போரும் எனக்கு….ஏதோ ஒரு ஜன்மத்துல அவுருக்கு நா பொண்ணாப் பொறந்திருக்கணும்…அதுனாலதான் அவரை என் அழுகை அன்னைக்கு அப்டி ஆட்டித்து….அந்தம்மா மடில படுத்துண்டு நா அழுத அழுகை என்னைப் பெத்த தாயார்ட்டக் கூட எனக்கு அந்த ஆறுதல் கிடைக்கலைன்னுதான் சொல்லுவேன்…..எல்லாத்துக்கும் உங்கப்பாவோட நேர்மையும், ஒழுக்கமும்தான் காரணம்…அய்யர்சாமி, அய்யர்சாமின்னு உசிரை விடுவார் அந்த மனுஷன்…பின்னாடி வீடுள்ள அவர், உங்கப்பா கடைலதான் கிடையாக் கிடப்பார்…ஒரு வார்த்தை சொல்ல மாட்டார் உங்கப்பா….அத்தனை மரியாதையான மனுஷன்…பெரிய ஆகிருதி ….காவல் தெய்வம் மாதிரி உட்கார்ந்திருப்பார்….அதுபோலவே நம்ம குடும்பத்துக்கும் தெய்வமா நின்னார்…..
எல்லாம் உன்னோட தாலி பாக்கியம் அம்மணீ…கவலப்படாமப் போன்னார்…அவர்தான் உங்கப்பாவை மீட்டுக் கொடுத்தார். சத்தியமான வாக்கு அது… அப்டிப்பட்டவாளயெல்லாம் இன்னைக்கும் நினைக்கலேன்னா நாமள்ளாம் என்ன மனுஷா…? எல்லாம் நீ கேட்கிறயேன்னு சொல்றேன்….எவ்வளவோ கடந்து வந்தாச்சுடா கண்ணா….இந்த நெஞ்சு தாங்கினது எம்புட்டோ துக்கம்…அத்தனையும் சொல்லி மாளாது….இந்த ஊரோட ஊரா உங்கப்பா வந்த பின்னாடிதான் நீ பொறந்தே…உங்கப்பாவை உள்ளுரோட கொண்டுவந்து நிறுத்தின பெருமை உன்னைத்தான் சேருமாக்கும்….நீ வயித்துல இருக்கிறதுலேர்ந்து உங்கப்பா எங்கயும் நகரலை…அப்டியே உள்ளுரோட இருக்க ஆரம்பிச்சிட்டார்….இங்கயே வேலைக்குப் போக ஆரம்பிச்சிட்டார்…உன்னை நினைச்சிண்டேதான் சடையுடையார் கடைலர்ந்து ஓடி ஓடி வருவார்…வத்தலக்குண்டிலயே நாம நிலைச்சது உன்னாலதான்….
நான் அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தேன். வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் எத்தனையெத்தனை சோதனைகளையும், கஷ்டங்களையும், வேதனைகளையும் கடந்து வந்த அனுபவசாலி அவள்…? அவளின் அனுபவ சாரத்தின் முன் நாமெல்லாம் எம்மாத்திரம்? வெறும் துரும்பாயிற்றே…? சிலிர்த்துப்போய் அமர்ந்திருக்கிறேன் நான்.
தொலைபேசி எடுக்க ஆளின்றித் தொடர்ந்து அலறுகிறது. என்னாச்சு? யாராச்சும் கேட்க வேண்டிதானே…? சொல்லிக் கொண்டே போய் எடுக்கிறேன். அம்மாவுக்கான அந்தச் செய்தியைத் தாங்கி வருகிறது அது.
நாந்தான் சொன்னனே அவனுக்கு மனசாகாதுன்னு…என்னவோ நீ கூட்டிண்டு போன்னு உங்கிட்ட சொல்லிட்டானேயொழிய அவனால நா இல்லாம இருக்க முடியாதாக்கும்….அவன் மனசு கேட்காது….எனக்குத் தெரியாதா எம்பிள்ளையோட அடி மனசு….என்னை நீயும் அவளும் நன்னாப் பார்த்துண்டேள்…எனக்கு ரொம்பத் திருப்தி. நிறைஞ்ச சந்தோஷம்…நீங்க நன்னா இருப்பேள்…நல்லதாப் போச்சு, பேசாம என்னை அங்க கொண்டு விட்ரு…அங்க இருந்தாத்தான் எனக்கும் சரி வரும். ஆயிரந்தான் ஆனாலும் மூத்தவன்ட்ட இருக்கிற திருப்தி வருமா? அங்க பிராணன் போறதைத்தான் எல்லாரும் விரும்புவா…அதுதான் உலக நியதி…..வண்டிக்கு ஏற்பாடு பண்ணிட்டான்லயோ? படுத்துண்டமேனிக்குப் போறதுதானே…நிம்மதியாப் போச்சு…நாம்பாட்டுக்குத் தூங்கிண்டே வர்றேன்…பொழுது விடிஞ்சா மெட்ராஸ் ஆச்சு….
அம்மாவின் முகத்தில் எத்தனை உற்சாகம். அதுவரை இருந்த சோர்வும், களைப்பும், வலியும், வேதனையும் எங்கே போயிற்று? விட்டால், தானே எழுந்து நடந்து விடுவாள் போலிருக்கிறதே…?
பொறு…பொறு…ராத்திரி எட்டுக்குத்தான் ஆம்புலன்ஸ் வருதாக்கும்…எல்லா ஃபெசிலிட்டீசோட அரேஞ்ஜ் பண்ணியிருக்கான்….ஏ.ஸியோட….கூடவே ஒரு நர்சும் வர்றாங்க…ராத்திரிப் பூராம் உன்னைப் பார்த்துக்க….எதுக்கும் பயப்பட வேண்டாம்….ஆனாலும் உனக்குக் கவனிப்பு ஜாஸ்திதான்…நாளைக்கு எங்க பாடெல்லாம் எப்டியோ..? நாங்கள்லாம் எப்டி சீரழியப் போறோமோ?
எதுக்கு அப்டிச் சொல்லிக்கணும்…எல்லாம் நன்னா இருப்பேள். என்னோட பேரன் பேத்திகளெல்லாம் உங்களைக் கூடவே இருந்து கண்ணும் கருத்துமாக் கவனிச்சிக்குவா…என் வாக்கு பலிக்கும்போதாவது என்னை நினைச்சிக்க மாட்டேளா..
எத்தனை பரந்த மனசு அம்மாவுக்கு. எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே…..
அம்மாவின் முகத்தில்தான் என்னவொரு பெருமிதம்? தகவல் வந்ததும், என்னையே மறந்து விட்டாளே…?எப்படித் துள்ளுகிறாள்? எவ்வளவு மகிழ்ச்சி? என்னதான் ஆனாலும் மூத்தவன் இருக்க இளையவனுக்கு ஏது பெருமை? காலம் அப்படித்தானே கட்டமைக்கப்பட்டிருக்கிறது?
ஆனாலும் அம்மாவுடனான இந்த நாட்கள்…? அவை பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை…! அம்மா இங்கே, என்னிடம் இருந்த அந்த சில நாட்களை என்னால் மறக்க முடியுமா? அவளின் ஆசிகள் இந்த வீடு பூராவும் பரவிக் கிடக்கிறது. மூலைக்கு மூலை நின்று ஒலிக்கிறது. அசரீரியாய் கனிந்த குரலோடு எங்களை வாழ்த்திக் கொண்டே இருக்கிறது. அடக்கவொண்ணாமல் கண்ணீர் துளிர்க்கிறது எனக்கு.

-----------------------------------------------------------------------
























































23 டிசம்பர் 2012

உஷாதீபனின் 'திரை விலகல்' - எழுத்தாளர் எம்.ஏ.சுசீலா அவர்களின் விமர்சனம்


 உஷாதீபனின் “திரைவிலகல்” சிறுகதைத் தொகுப்பு - எழுத்தாளர் திருமதி எம்.ஏ.சுசீலா அவர்களின் விமர்சனம்
சமகால சிறுகதைப்போக்கில் மேலை இலக்கியக் கோட்பாடுகளின் தாக்கத்தால் , பல புதிய மாற்றங்களும் , பல புதிய 'இஸ'ங்களின் பாதிப்பும் நேர்ந்திருந்தபோதும் - நவீனத்துவம் ,பின் நவீனத்துவம் ,மாய யதார்த்தவாதம் ஆகியவற்றின் அடிப்படையில் சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தபோதும் - யதார்த்தவாதச் சிறுகதைகளுக்கான இடம் எப்போதும் போலவே மதிப்பிழக்காமல் இருந்துகொண்டுதான் இருக்கிறது . இதை மெய்ப்பிக்கும் வகையில் வெற்றிகரமான சிறுகதைகளின் தொகுப்பாக அண்மையில் வெளி வந்திருக்கிறது, எழுத்தாளர்திரு உஷாதீபன் அவர்களின் 'திரை விலகல்' என்னும் சிறுகதைத் தொகுப்பு.
திரு உஷாதீபன் , பல்லாண்டுக் காலமாகத் தமிழ்ச் சிறுகதைக் களத்தில் நின்று நிலை பெற்றிருக்கும் ஒரு குறிப்பிடத்தக்க எழுத்தாளர்.தமிழக அரசின் வேளாண் பொறியியல் துறையில் கண்காணிப்பு மேலாளராக மதுரையில் பணியாற்றும் இவர் , 'தீபம்' நா.பார்த்தசாரதியால் இலக்கியத் துறைக்கு ஈர்க்கப்பட்டவர்.கி.வெங்கடரமணி என்ற தன் இயற்பெயரை , மனைவியின் பெயரை முன் ஒட்டாக்கி , அத்துடன் தீபத்தையும் இணைத்து உஷா தீபன் எனப் புனைபெயராக்கிக் கொண்டவர்.உள்ளே வெளியே, பார்வைகள், நேசம் ,வாழ்க்கை ஒரு ஜீவ நதி , நினைவுத்தடங்கள்,,சில நெருடல்கள், தனித்திருப்பவனின் அறைஆகிய ஏழு சிறுகதைத் தொகுப்புக்களும் புயலுக்குப் பின்னே அமைதி , மழைக்கால மேகங்கள் முதலிய குறு நாவல் தொகுதிகளும் இவரது இலக்கியப் பங்களிப்புக்கள். இலக்கியச் சிந்தனை , திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்றம் முதலிய பல அமைப்புக்களிடமிருந்து தமது படைப்புக்களுக்கான அங்கீகாரத்தையும் ,பரிசுகளையும் பெற்றிருப்பவர்.
clip_image001
18 சிறுகதைகளைஉள்ளடக்கியுள்ள இவரது புதிய தொகுப்பு 'திரை விலகல்' .பொதுவாக இவ்வாறான தொகுப்புக்களின் வழக்கமான தலைப்பிடும் போக்குக்கு முற்றிலும் மாறாகத் திரை விலகல் என்று ஒரு சிறுகதை இத் தொகுப்பில் எங்குமே இல்லை.நூல் முழுவதையும் வாசித்து முடித்தபிறகுதான் இப் பொதுத் தலைப்பு நூலின் எல்லாக் கதைகளுக்குமே பொருத்தமாக இருப்பதையும்,வாழ்வின் அற்பக் கணங்கள் தொடங்கி.......அபூர்வமான கணங்கள் வரை எல்லாத் தருணங்களிலுமே - ஏதோ ஒரு வகையில் மனிதர்கள் தங்களை மறைத்துக் கொண்டிருக்கும் மாயத் திரை விலகி வாழ்வியல் தரிசனங்களைப் பெறுவதை இத் தலைப்பு பூடகமாகச் சுட்டுகிறது என்பதையும் நம்மால் உள் வாங்கிக் கொள்ள முடிகிறது.
clip_image002
பாத்திரங்களைச் சிறப்பாக வார்க்கும் கலையில் இப் படைப்பாளி , கைதேர்ந்தவராக இருப்பதைப் பெரும்பான்மையான கதைகள் மிகச் சிறப்பாகப் புலப்படுத்துகின்றன. மிகப்பெரிய கிழியில் ஓவியம் தீட்டாமல் , நுணுக்கமான ஒரு சிறிய தந்தத் துணுக்கினுள் சிற்பம் வடிப்பதைப் போன்ற சிறுகதை ஊடகத்தில் சாதிப்பதற்கு அரியதான இவ்வியல்பு இவருக்கு எளிதாக வசப்பட்டிருப்பதை....
'திருட்டுமணி'யின் படிநிலை வளர்ச்சி கூறும் 'கல்லாமல் பாகம் படும்',
சுதந்திர ஜீவியாக வாழ்வை அமைத்துக்கொள்ள விரும்பும் வெங்கடாசலத்தின் மனநிலைப் படப் பிடிப்பான 'வெளி தேடும் பறவை',
தவணைக்கு அடிமையாகும் பலவீன மனிதரின் சித்திரமான 'திருவாளர் சாம்பமூர்த்தி',
வளையல்காரர் ஒருவரை அப்பட்டமாக மனக்கண் முன் கொண்டு வந்து நிறுத்தும் 'நிலைதிரும்பும் தேர்' ,
மனித உணர்ச்சிகளை மரக்கடித்துக் கொண்டு இயந்திரமாகிவிட்ட மனிதனைச் சித்திரிக்கும்'பூக்காமல் ஒரு மரம்'
ஆகிய படைப்புக்கள் அற்புதமாக முன் வைக்கின்றன.
மனிதம் - மனித நேயம் இவரது கதைகள் பலவற்றின் அடிநாதமாக உறைந்திருக்கிறது.
''உழைத்து , உருகி , செத்துச் சுண்ணாம்பாகி வீடு திரும்பிப் பிறகு உலை வைத்து அதற்குப்பின் உயிரை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டியிரு''க்கும் அடி மட்டத் தொழிலாளிகளுக்காக இவரது பல படைப்புக்கள் உருகி ஓலமிடுகின்றன.
தெருவில் உப்பு விற்றுக் கொண்டு போகிறவனை வீட்டின் தேவை தெரியாமல் அழைத்து விடுகிறான் ஒரு கணவன். மனைவி அதை மறுதலித்து விடுவாளோ...,கடும் வெயிலில் உப்பு மூட்டைகளை சைக்கிளில் கட்டி எடுத்து வந்த அந்தத் தொழிலாளியின் பாடு வீணாய்ப் போய் விடுமோ என அவன் உள்ளம் படும் பாடு 'கடல் மல்லிகை' என்ற நல்ல சிறுகதையாக உருவெடுத்திருக்கிறது. அந்தக் கணவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் - அப்போதைக்கு உடனடித் தேவை இல்லாவிட்டாலும் கூட அவனிடம் உப்பு வாங்குவதன் வழி , ஆர்ப்பாட்டமின்றி ,மிக யதார்த்தமாகத் தன் இரக்க உணர்வை வெளிப்படுத்தி விடுகிறாள் அவன் மனைவி.
'நா' என்ற தலைப்பிலமையும் சிறுகதையிலும் கூடச் சலவைத் தொழிலாளியிடம் சீறிப் பாயும் மனிதமற்ற கணவனுக்கு மாற்றாகத் துணி கொண்டு வரும் சிறுவனை அன்போடு அரவணைப்பவளாக இருப்பது அவனது மனைவியே.செயற்கையான போலித்தனங்கள் அற்ற - இயல்பான அன்பும் ,நேயமும் பெண்களிடம் பொதிந்திருப்பதைப் போகிற போக்கில் இவரது கதைகள் படம் பிடித்துக் கொண்டு போவதைக் காண முடிகிறது.
முதுமை என்பது , நிராகரிப்புக்கும் ,நிர்த்தாட்சண்யமான விலக்கத்திற்கும் உரியதல்ல என்னும் அழுத்தமான இவரது சிந்தனை 'வெளி தேடும் பறவை', 'அப்பாவின் நினைவு தினம்' என இரு கதைகளில் அழுத்தமாகப் பதிவாகி இருக்கிறது. பாவண்ணன் எழுதிய 'முதுமையின் கோரிக்கை' என்ற கட்டுரையையும், நீல பத்மநாபனின் 'இலை உதிர் கால'த்தையும் இப் படைப்புக்கள் ஒரு கணம் மனக் கண்ணில் கொண்டுவந்து நிறுத்தி விடுகின்றன.
சிறுகதைக்கே சிறப்பான உத்தியாகச் சொல்லப்படும் 'இறுதிக் கட்டத் திருப்பம்' இவரது சில கதைகளில் - துருத்திக் கொண்டு நிற்காமல் , கதையின் போக்கிற்கேற்றபடி, அதன் அழகியல் குலையாமல் வெளிப்பட்டிருப்பதைக் காண முடிகிறது. 'சரஸ்வதியின் குழந்தைகள்' அதற்குச் சரியான ஒரு உதாரணம்.
நூலகத்திலும் , புத்தகக்கடையிலும் மதிக்கப்படுபவனாக இருக்கும் ஒருவன் புத்தகத் திருடனாக இருக்கக் கூடும் என்ற முடிச்சு சற்றும் எதிர் பாராதது. ஆனாலும் அவன் படிக்கும் புத்தகமே அவனுள் மன மாற்றத்தைச் சாதித்துத் திருடிய புத்தகத்தத் திருப்பி வைக்குமாறு அவனைத் தூண்டி விடுவது கதைப் போக்கோடு ஒத்த திருப்பமாகவே அமைந்திருக்கிறது.
'ஆகி வந்த வீடு' கதையிலும் இதே வகையான உத்தியைக் காண முடிகிறது.
நவீன உலகம் , கணத்துக்குக் கணம் பல மாற்றங்களுக்கு உள்ளாகிக்கொண்டே இருப்பது. அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாதவன் தேங்கிப் போய் விடுகிறான். ஊடகங்களின் பெருக்கம் அரசியல் மேடைப் பேச்சாளனை, அவன் தொழிலை..புகழைப் பாதிக்கிறது( 'தொண்டன்').
உலகமயமாதலால் பெருகும் பன்னாட்டு வணிகம் - அது சார்ந்த குளிரூட்டப்பட்ட கவர்ச்சியான அங்காடிகள், நடைபாதைத் தள்ளு வண்டியில் பழம் விற்கும் சராசரிச் சில்லறை வியாபாரியின் பிழைப்பில் மண்ணை அள்ளிப் போடுகின்றன.('மாற்றம்').இவை குறித்த சமூக விமரிசனங்களாகவும் இவரது கதைகள் உருப் பெற்றிருக்கின்றன.
உள்ளடக்கச் சிறப்பும், வடிவச் செம்மையும் வாய்க்கப் பெற்றுள்ள இந்தச் சிறுகதைகளுக்குப் படைப்பாளியின் மொழி ஆளுமை மேலும் வலுவும்,பொலிவும் சேர்க்கிறது. பெரும்பாலான கதைகள் பாத்திர நினைவோட்டமாக - எண்ணங்களின் அடுத்தடுத்த அடுக்குகளாக அமைந்திருப்பதை இவரது தனித்தன்மையாகக் குறிப்பிட முடிகிறது.
'யுகமாயினி', செம்மலர்', 'வார்த்தை'. 'உயிரெழுத்து','வடக்குவாசல்',உயிரோசை,திண்ணை(இணைய இதழ்கள்)ஆகியவற்றில் பிரசுரிக்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ள இத் தொகுப்பை முழுமையாகப் படிப்பது நிறைவு தரும் ஒரு அனுபவம்.
''வீட்டுக்கு வீடு...அறைக்கு அறை எவ்வளவு திரைகள்?கணவன் ,மனைவி ,பிள்ளை என்று ஒவ்வொருவருக்கிடையிலும் எத்தனை திரைகள்?வாழ்க்கையே திரை மூடிய பூடகமாக அல்லவா இருக்கிறது?விலக்க முடியாத திரைகள் ! அவிழ்க்க முடியாத திரைகள் !''என்று தனது சிறுகதை ஒன்றில் உஷாதீபனே குறிப்பிட்டிருப்பதைப்போல,
அந்தத் திரைகளைச் சற்றே விலக்கி உண்மைகளைக் காணவும் காட்டவும் முயல்வதே அவரது நோக்கம் ; அதில் அவர் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
'திரை விலகல்'- சிறுகதைத் தொகுப்பு,
உஷா தீபன்,
வெளியீடு; உதயகண்ணன்,10, கல்யாணசுந்தரம் தெரு, பெரம்பூர்,சென்னை600011,
டிச.'08 - முதல் பதிப்பு,
பக்;168,
விலை; ரூ.60
bookudaya@rediffmail.com