28 ஜூலை 2013

இறகுகளின் வண்ணங்கள்

Photo

Photo

தற்செயலாக வீட்டின் வாசலுக்கு வந்தபோதுதான் தெரிந்தது அது. கிரில் மீது உட்கார்ந்திருந்தது. வெளியே வந்து அதன் முதுகுப் பகுதியை உற்று நோக்கினேன். ப்ரௌன் கலரில் அழகான டிசைனில் அதன் இறகுப் பகுதி. பூச்சியா, வண்டா, பறவையா என்று தெரியவில்லை. அடிக்கப் போக கொட்டி வைத்தால் என்ன செய்வது என்ற அச்சம். வெறுமே விரட்டி விடுவோமே என்று எதையேனும் வைத்துத் துரத்தினாலும் சட்டென்று வந்து கண்ணில் பாய்ந்து விடுமோ என்கிற சந்தேகம். ஓங்கி ஒரு போடு போட்டு சாகடிக்க வும் மனமில்லை. எதற்காக அதைச் செய்ய வேண்டும். அப்படி செத்துப் போகவா இங்கே வந்து உட்கார்ந்தது? அல்ல. அல்ல. நான் ரசிக்க. இப்படி ஒருத்தன் இங்கேயிருக்கிறான் என்று மானசீகமாய் உணர்ந்து அடைக்கலாம் போல் உட்கார்ந்திருக்கிறது. வெகு நேரம் அந்த அழகை ரசித்தேன். நன்றாகப் பார்த்துக் கொள். பிறகு கிடைக்காது. உனக்காகத்தான் வந்தேன். பட்டுப்பூச்சியைப் போல் தொட்டு, கையில் விட்டுக் கொள்ள ஆசைதான். அந்த இறகின் வண்ணம் அழிந்துவிட்டால்? அதை விரட்ட மனம் வருமா? அப்படியெல்லாம் எதுவும் செய்ய மனமில்லை. காரணம் அதன் அழகு. அந்த வண்ண இறகு முதுகுப் பகுதி. சரி. வெகு நேரத்திற்கு அப்படியே அசையாமல் இருந்தால் எப்படி? உயிரோடு இருக்கிறதா அல்லது செத்து ஒட்டிக்கொண்டு கிடக்கிறதா? சந்தேகம் வந்தது. ஒரு பேப்பரை எடுத்து லேசாகத் தொட்டேன். என்ன அதிசயம் பாருங்கள். இறகை விரித்துப் படபடவென்ற அது, தரையிலிருந்து மெல்ல மெல்ல நீள வாக்கில் மேலே போய் அப்படியே பறந்து மறைந்து விட்டது. இன்று என் மனதை, என் பொழுதுகளை இனிமையாக்கிய அந்தப் பூச்சியை, பறவையை, வண்டினை (?) யாரேனும் அறிவீர்களா? முன்புறமும், பின்புறமுமாக அந்தப் படத்தைப் பாருங்களேன். யாரேனும் தெரிந்தால் சொல்லுங்களேன்.

 

 

1 கருத்து:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

குச்சிப்பூச்சி ...!

இலைப்பூச்சி ..!!??

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...