20 ஜூலை 2013

“இந்த வார கலா ரசிகன்” – தினமணி நாளிதழ் – 14.7.2013 – ல் எனதுதனித்திருப்பவனின் அறை சிறுகதைத் தொகுதி மற்றும் எனதுஎழுத்து பற்றி தினமணி ஆசிரியரின் விமர்சனம்.

Picture 001




சாவி வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய காலத்திலிருந்து எனக்கு அறிமுகமான பெயர் உஷாதீபன். நேரில் சந்திக்கவில்லையே தவிர அவரது எழுத்துகளைத் தொடர்ந்து படித்து வருபவன்தான் நான். அது மட்டுமல்ல, "தினமணி கதிர்' சிறுகதை எழுத்தாளர்களில் உஷாதீபனும் ஒருவர் என்பதால், நான் சொல்லி "தினமணி' வாசகர்களுக்கு அவரை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

படிக்க வேண்டும் என்று எடுத்து அலமாரியில் நான் அடுக்கி வைத்திருக்கும் புத்தகங்கள் ஏராளம். படித்து முடித்து அடுக்கி வைத்திருப்பவை அதைவிட ஏராளம். இரண்டாவது பட்டியலில் ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுத வேண்டும் என்று எடுத்து வைத்திருக்கும் புத்தகம் உஷாதீபனின் "தனித்திருப்பவனின் அறை' என்கிற சிறுகதைத் தொகுப்பு.
"உணர்வுகளின் விளிம்பில்' கதையில் தொடங்கி, "பெண்ணே நீ' வரை 21 கதைகள். உஷாதீபனின் கதைகளில் தத்துவங்களோ, சர்ச்சைக்குரிய சமூகப் பிரச்னைகளோ இருக்காது. மிகவும் எளிமையான கதைகள். சிக்கலான உறவுகள், எதிர்மறைச் சிந்தனைகள் என்றெல்லாம் பார்க்கவே முடியாது. ஆனால், யதார்த்தம் இருக்கும். ஒரு சராசரி நடுத்தரவர்க்க சிந்தனை அவரது கதைகளின் அடித்தளம். அதை சுவாரஸ்யமாக சொல்லத் தெரிந்த கதைசொல்லி உஷாதீபன்.
21 சிறுகதைகளிலும் அவர் காட்டியுள்ள அத்தனை கதாபாத்திரங்களும், நாம் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கிறார்கள். சம்பவங்களும் சரி, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் நாம் எதிர்கொண்ட நிகழ்வாக இருக்கும். அதைத் தேவையில்லாத வார்த்தை ஜாலங்களில்லாமல் யதார்த்தமாகச் சொல்லும் லாகவம் அவருக்குக் கைவந்திருக்கிறது.
ஆமாம் உஷாதீபன், அந்தந்தச் சிறுகதைகளுடன், அது எந்த இதழில் எப்போது பிரசுரமானது என்பதை ஏன் குறிப்பிடாமல் விட்டுள்ளீர்கள்?






கருத்துகள் இல்லை:

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...