பெரியவர் (திரு Hemalatha Balasubramaniam) இயற்கை எய்திய அன்று நான் புதுடெல்லியில் சுற்றுப் பயணத்தில் இருந்தேன். 2ம் தேதியிலிருந்து மேற்கொண்ட பயணம். 25 தான் முடிந்தது. அதன் பின் இரண்டு தினங்கள் கழித்துத்தான் சென்னை வந்தேன். சென்னையில் இருந்திருந்தாலும் வைகையில் புறப்பட்டு மதுரை வந்திருக்கலாம். மதுரையிலும் அந்த நேரத்தில் இருக்க வாய்ப்பில்லாமல் போயிற்று. பெரிய வருத்தமே...! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
என்னிடம் எப்போதும் ஒரு குணம். நெருங்கிப் பழகியவர்களைச் சடலமாய்ப் பார்க்க விரும்பாதது.அது இந்தப் பெரியவருக்கும் தற்செயலாய் அமைந்து போயிற்று. விபரம் அறிந்தாலும், அவர் இருக்கிறார் என்கிற உணர்வோடு, அவரோடு அளவளாவிய நாட்களை சுவையாக அசைபோடுவது எனக்குப் பிடிக்கும். நான் வாசலில் வந்து நிற்கிறேன் என்பது கண்டு படுக்கையில் இருந்து எழுந்து அமர முயலுவார். உள்ளே நுழைந்து, அப்டியே இருங்க...எதுக்கு எழுந்திருக்கிறீங்க...என்று அமர்த்துவேன். சிறு குழந்தையாய்ப் பேசுவார். அவரோடு நடந்து டவுன் உறாலில் வடை, காபி சாப்பிட்ட நிகழ்வு, என்.சி.பி.எச்.சில் புத்தகம் வாங்கியது...கூட்டத்திற்குச் சென்றது..என்று சில நிகழ்வுகள்... மனதுக்கு நெருக்கமாய் .அந்தப் பெரியவரின் ஆசீர்வாதம் எனக்கு எப்போதும் உண்டு.
அவர் மலர்ப் பாதங்களில் என் இதயபூர்வமான அஞ்சலி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக