16 ஆகஸ்ட் 2015

முதுபெரும் எழுத்தாளர் கர்ணன்,இவரைக் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள் –

 

------------------------------------------------------------------------------------

உஷாதீபன், மதுரை-14.

20150815_225926 20150815_225949

 

20150815_225904 20150815_230017

 

 

ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பற்றிச் சொல்ல மாட்டார்கள். எங்கே அவர் புகழடைந்து, அவர் புத்தகங்கள் விற்பனை கூடி, தன் புத்தகங்கள் நின்றுவிடுமோ என்கிற எண்ணம். தானே ஒரு படைப்பாளியைப் புகழ்ந்து சொல்வதன் மூலம், தன்னையறியாமல் தானே தன்னைப் பின்னுக்குத் தள்ளிக் கொள்கிறோமோ என்கிற பயம். இப்படி இன்னும் பலவாக தமிழ் எழுத்துச் சூழல் உள்ளது. குழு குழுவாக இயங்குதல், அவர்கள் புத்தகங்களை அவர்களைச் சார்ந்தவர்களே புகழ்ந்து கொள்ளுதல், அவர்களுக்குள்ளேயே பத்திரிகை நடத்திக் கொண்டு அவர்கள் எழுத்தை அவர்களே கொண்டுசெல்லுதல், மேடை போட்டு முழங்கி (எத்தனை பேர் கேட்கிறார்கள் என்பது வேறு) விற்பனை செய்து கொள்ளுதல்…இம்மாதிரி பலவும் இன்றைய தமிழ் எழுத்துச் சூழலாகப் பரவி நிற்கின்றன.

இத்தனைக்கும் நடுவில்தான் “கர்ணன்“ என்கிற மாபெரும் எழுத்தாளர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார். தானுண்டு தன் எழுத்துண்டு என்று வறுமையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு….அவ்வப்போது அவரைத் தேடி வருபவர்களை மதித்து, செல்லும் இடங்களில் கருத்தான சொற்பொழிவாற்றி திருப்தி காண்கிறார்.

மணிக்கொடிக் காலத்து எழுத்தாளர்களிலிருந்து இன்றைய எஸ்.ரா.,ஜெயமோகன் வரை அறிவார். எந்தப் பொருளில் எப்பொழுது பேசச் சொன்னாலும் சொல்லுவதற்கு நிறைய விஷயம் இருக்கும் இவரிடம். வாய் ஓயாது நாள் முழுதும் பேசச் சொன்னாலும் எதைப்பற்றியும் இவரால் வானளாவப் முடியும். அவ்வளவு பொக்கிஷம் இவரிடம் அடைந்து கிடக்கிறது.

பிரபலமான எழுத்தாளர்களின் கூட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு கௌரவம் பார்க்காமல் போய் அமர்ந்து விடுவார். அவர்களும் இவரை மதித்து ஒரு புத்தகத்தை வழங்கி இவரைப் போற்றி அனுப்பி விடுவார்கள். ஆனால் யாரும் பின்னர் அவரைப்பற்றி எங்கும் எப்போதும் சொன்னதில்லை. அது ஏன்? அது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.

ஏன் இப்படி இருக்கிறார்கள் இவர்கள்?

இந்தத் தலைப்பில் எழுதச் சொன்னால் கூட இவரால் ஒரு புத்தகம் உடனே எழுதிவிட முடியும். இவரைத் தெரிந்து கொள்வதும், ஆதரிப்பதும் நம் கடமை.

மதிக்கத்தக்க சிறந்த படைப்பாளி திரு “கர்ணன்“ அவர்களின் புத்தகங்களை அறிவோமா?

நாவல்

1) உள்ளங்கள் 1980 (2) காந்தத் தூண்டிலில் சிக்கிய கனவுகள் 1978 (3) மயங்காத மனசுகள் 2003 (4) ஊமை இரவு 2009 (5) பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள் 2008 (6) மறுபடியும் விடியும் 2008 (7) திவ்யதாரிணி 2011.

சிறுகதைகள் –

(1) கனவுப்பறவை 1964 (2) கல்மனம் 1965 (3) மோகமுக்தி 1967 (4) மறுபடியும் விடியும் 1968 (5) புலரும் முன்… 1974 (6) வசந்தகால வைகறை 1977 (7) பட்டமரத்தில் வடிந்த பால் 1994 (8) இந்த மண்ணின் உருவம் 1999 (9) மாறும் காலங்களில் இதுஒரு மதன காலம் 2002 (10) இசைக்க மறந்த பாடல் 2004 (11) முகமற்ற மனிதர்கள் 2004 (12) நெருப்பில் விளைந்த நிலவுப்பூ 2009 (13) பொழுது புலர்ந்தது 2013 (14) வாழ்ந்ததின் மிச்சம் 2015

கட்டுரைகள்

(1) கி.வா.ஜ. முதல் கண்ணதாசன்வரை 2011 (2) அகம் பொதிந்தவர்கள் 2012 (3) வாழ்விக்கும் மனிதர்கள் 2014 (4) வெளிச்சத்தின் பிம்பங்கள் 2015

வரலாறு

(1) அவர்கள் எங்கே போனார்கள் 2005 (2) சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு 2011 (3) இன்று இவர்கள் 2013 (4) இந்தியாவின் எரிமலை 1979 (5) விடிவை நோக்கி 1980 (6) ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள் 1981 (7) சிட்டகாங் புரட்சி வீரர்கள் 1981

ஆன்மீகம்

ஆத்ம நிவேதனம் 2008

கவிதை

நினைவின் திரைக்குள்ளே 2014

முகவரி

திரு கர்ணன்,

37, சுயராஜ்யபுரம் 4 வது தெரு,

செல்லூர்,

மதுரை – 2 .

செல் – 9487950844.

----------------------------------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...