22 ஜூன் 2015

இமையம் எழுதிய “எங் கதெ…” நெடுங்கதை

 

 

 

 

download 2015-06-22 11.21.46

 

உண்மையிலேயே ஒரு பொண்ணோட இருந்து அனுபவிச்சிருந்தாத்தான் இப்டி எழுத முடியும்னு சொல்றமாதிரி அத்தனை தத்ரூபமா எழுதியிருக்காரு இமையம் இந்த நெடுங்கதையை. அவர நேர்ல பார்க்கைல கூடக் கேட்கலாம்....இந்த அனுபவம் உண்மைச் சம்பவமா?ன்னு... ...விநாயகம் கமலா மேல ஆசைப் பட்டு, அவகூடவே இருக்க ஆரம்பிச்சு, அவ எண்ணத்துலயே தன்னை இழந்து வாழ்நாள வீணாக்கி கடைசில அவளைக் கொல செய்ற அளவுக்குப் போயி, அதையும் தவிர்த்து விட்டு உதறிட்டுப் போறவரைக்குமான கதை சொல்லல்....அந்தக் கமலா எங்கங்க இருக்காங்க...? பார்த்தா தேவலையே...! ன்னு கேட்கணும்....

நெடுங்கதைல ஒரே ஒரு நெருடல்....கூடவே விநாயகம் இருக்கானே ஒழிய அவனை அவ நெருங்கவே விட்டதில்லன்னு ஆரம்பத்துலேர்ந்து முக்கால்வாசிக் கதைவரைக்கும் சொல்லப்படுது....கடைசிக் கொஞ்சப் பக்கங்கள்ல அவள அனுபவிச்ச நிலையை விநாயகம் நினைச்சு நினைச்சுப் பார்த்து வெறி கொள்ற மாதிரி கொண்டு போயிருக்கிறது..ஆழமாப் படிச்ச நம்மளைத் திகைக்க வைக்குது...தப்பாப் படிச்சிட்டமோ?..... இந்தச் சந்தேகத்தை இமையம்தான் தீர்த்து வைக்கணும்..

.“எங் கதெ” - நூறு பக்க அளவிலான அருமையான படைப்பு. ஆண் பெண் உறவின் ஒரு பரிமாணம் முழு ஆவேசத்துடன் பேச்சு மொழியில் பெருக்கெடுக்கிறது இந் நெடுங்கதையில் என்று சொல்லப்படுது....ஒரு பரிமாணம்னு சொல்கைலயே அது சில காரெக்டர்கள் சார்ந்த விஷயம்ங்கிறது தெரியுதில்லியா? எல்லா ஆண் பெண் உறவுகளுக்கும் பொதுவானதில்லையே? எல்லாவிதமான பரிமாணங்களும் எல்லார்ட்டயும் இருக்கிறதுக்கும் வாய்ப்பில்லையே...! யாரோ ஒருத்தர் ரெண்டு பேர் அப்படியிருந்திருக்கலாம்னுதான் நினைக்கணும்...அப்படித்தான் நினைக்க முடியும்....அந்த வகைல இது உணர்ச்சிகரமான, படு அழுத்தமான படைப்புதான்...!

கருத்துகள் இல்லை:

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...