20 டிசம்பர் 2014

மனசுமிக்க எழுத்தாளர் கர்ணன்

 

 

 

 

2014-12-21 07.10.34 karnan 2014-12-21 07.10.45

 

 

 

 

மணிக்கொடிக் கால எழுத்தாளர்கள் இன்றும் நம்மிடையே உண்டு. அவர்களில் முக்கியமானவர் திரு கர்ணன். இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுதிகள், 4 நாவல்கள், ஐந்து கட்டுரைத் தொகுதிகள், இரண்டு கவிதைத் தொகுதிகள் என்று நிறைய எழுதியிருக்கிறார். இவரது சமீபத்திய கவிதைத் தொகுப்பு “நினைவின் திரைக்குள்ளே (க(ரு)விதைகள்)“ . கவிதா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. இவரது “அவர்கள் எங்கே போகிறார்கள்” என்ற கட்டுரைத் தொகுப்பு முக்கியமானது.தமிழக அரசு பரிசு பெற்றது.
பழம் பெரும் எழுத்தாளர்களைப் பற்றிய மற்றும் அவரறிந்த மேன்மைமிக்க மனிதர்கள்பற்றிய ஒரு புத்தகமும் எழுதியிருக்கிறார். இவரது புத்தகங்கள் அனைத்தையும் கவிதாவும், நர்மதா பதிப்பகங்களும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஐம்பதுகள், அறுபதுகளில் ஜெயகாந்தனுக்குப் போட்டியாக விகடனில், தாமரையில் என்று கதைகளைக் கொடுத்தவர் இவர். ஜெயகாந்தனின் பத்துக்கதைகள் பெஸ்ட் ஸ்டோரீஸ் என்றால் கர்ணனின் ஐந்து கதைகளாவது கண்டிப்பாய் அதற்குச் சமமாய், சவாலாய் நிற்கும்.
காலத்தால் அறியப்படாத எழுத்தாளர்கள் நம்மிடையே பலர். அறிந்தும் சொல்லப்படாதவர் என்று வேண்டுமானால் இவரைச் சொல்லலாம். எழுத்தாளர்களுக்கான குறுகிய மனப்பான்மையில் இது முதன்மை பெறுகிறது

கருத்துகள் இல்லை:

  நெஞ்சறுப்பு - நாவல் - இமையம் - எழுத்தாளர் சுகுமாரன் விமர்சனம் - மற்றும் கருத்து. இதில் ஏற்க முடியாதது...சுகுமாரன் சொல்லிய கருத்தில்...எந்த...