01 மார்ச் 2013

நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்)தொகுப்பு-யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு க்ளாசிக் வெளியீடு)

 

காலச்சுவடு க்ளாசிக் கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறது, காகிதம் போன்ற கவிதைகளைக் காணோம். இருப்பதற்கென்றுதான் வருகிறோம்,
இல்லாமலே போய் விடுகிறோம்.
ராமச்சந்திரனா என்று கேட்டேன்,
ராமச்சந்திரன் என்றார்.
எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவில்லை,
அவர் சொல்லவுமில்லை. இப்படிச் சில கவிதைகள் யோசிக்க வைத்தன. இவையெல்லாம் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், திரும்பத் திரும்பப் படிக்கையில் என்னவோ ஒன்று புதிதாக மனதுக்குள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. என்ன என்பதை உருவகப்படுத்த வேண்டும். அதில்தான் சிக்கல்..
இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?
என்று கேட்டார்
எப்பொழுதும் அங்குதான் இருப்பேன்
என்றேன். என்று ஒரு கவிதை. இந்தக் கவிதைகளை அச்சாகியிருப்பதுபோல் கொடுக்க வேண்டும். வரிகளை நகுலன் எப்படி எழுதியிருந்தாரோ அப்படி...! இல்லையென்றால் முழுப் பொருளும் வராமல் போகும் அபாயம் உண்டு. பொருள் பிசகும் வழியும் உண்டு. இதைத்தான் structuring the poem என்கிறார் அவர். யுவனின் ஒரு கவிதையின் ரெண்டு வரியை அவர் திருத்தியிருப்பதைப் பாருங்கள்.
எனக்கு யாருமில்லை
நான் கூட - இது யுவன் சந்திரசேகர் எழுதியது. நகுலன் பிரித்தது
எனக்கு யாருமில்லை
நான்
கூட
கூடுதலான வேறொரு பொருள் வருவதைக் கவனிக்கிறீர்களா? இதே போல் எழுத வேண்டும் என்று பலரும் முயன்று வெறுமே சொற்களை உடைத்துப் போட்டது பற்றியும் யுவன் தெரிவிக்கிறார். அம்மாதிரிக் கவிதைகள் இளிப்பதை உன்னிப்பாகப் படித்தால் புரிபடும்.-உஷாதீபன்

காலச்சுவடு க்ளாசிக்  கவிதை வரிசையில் நான் படித்தது நகுலன் (தேர்ந்தெடுத்த கவிதைகள்) யுவன் சந்திரசேகர் தொகுத்தது. காகிதத்தில் என்ன இருக்கிறது, காகிதம் போன்ற கவிதைகளைக் காணோம். இருப்பதற்கென்றுதான் வருகிறோம்,<br /> இல்லாமலே போய் விடுகிறோம்.<br /> ராமச்சந்திரனா என்று கேட்டேன்,<br /> ராமச்சந்திரன் என்றார்.<br /> எந்த ராமச்சந்திரன் என்று நான் கேட்கவில்லை, <br />அவர் சொல்லவுமில்லை.  இப்படிச் சில கவிதைகள் யோசிக்க வைத்தன. இவையெல்லாம் ஏற்கனவே படித்ததுதான் என்றாலும், திரும்பத் திரும்பப் படிக்கையில் என்னவோ ஒன்று புதிதாக மனதுக்குள் தோன்றிக் கொண்டுதான் இருக்கிறது. என்ன என்பதை உருவகப்படுத்த வேண்டும். அதில்தான் சிக்கல்..<br />இப்பொழுதும் அங்குதான் இருக்கிறீர்களா?<br />என்று கேட்டார்<br />எப்பொழுதும் அங்குதான் இருப்பேன் <br />என்றேன். என்று ஒரு கவிதை. இந்தக் கவிதைகளை அச்சாகியிருப்பதுபோல் கொடுக்க வேண்டும். வரிகளை நகுலன் எப்படி எழுதியிருந்தாரோ அப்படி...! இல்லையென்றால் முழுப் பொருளும் வராமல் போகும் அபாயம் உண்டு. பொருள் பிசகும் வழியும் உண்டு.  இதைத்தான் structuring the poem என்கிறார் அவர். யுவனின் ஒரு கவிதையின் ரெண்டு வரியை அவர் திருத்தியிருப்பதைப் பாருங்கள். <br />எனக்கு யாருமில்லை<br />நான் கூட            - இது யுவன் சந்திரசேகர் எழுதியது. நகுலன் பிரித்தது<br />எனக்கு யாருமில்லை<br />நான்<br />கூட <br />கூடுதலான வேறொரு பொருள் வருவதைக் கவனிக்கிறீர்களா?  இதே போல் எழுத வேண்டும் என்று பலரும் முயன்று வெறுமே சொற்களை உடைத்துப் போட்டது பற்றியும் யுவன் தெரிவிக்கிறார். அம்மாதிரிக் கவிதைகள் இளிப்பதை உன்னிப்பாகப் படித்தால் புரிபடும்.-உஷாதீபன்

கருத்துகள் இல்லை:

  'பிரகிருதி”  - சிறுகதை - வாசகசாலை 16.03.2024 இதழ்  பிரசுரம் எ ன் பெயரைக் கேட்டாலே வெறுக்கிறார் இவர். யாரேனும் ச்  உசரித்தால் கூட சட்டெ...