10 ஏப்ரல் 2012

கிசு…கிசு… சிறுகதை



 

கிர்ர்ர்…கிர்ர்ர்…கிர்ர்ர்… -அந்த நள்ளிரவில் சவமாகத் தூங்கிக் கொண்டிருந்த நடிகை மேகலா பதறியடித்து எழுந்தாள். பத்து மணிவரை ஷூட்டிங் முடித்துவிட்டு வந்து விழுந்திருந்ததால் உடம்பு கெஞ்சியது. வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் யார்? சற்றே உதறலெடுத்தது.

கிர்ர்ர்ர்ர்…..

“யாரது?“ கேட்டவாறே ஓடிப்போய் மாடிப்படி லைட்டைப் போட்டவள் இறங்கினாள்.

யாருன்னு சொல்றீங்களா? – மீண்டும் கேட்டுவிட்டுக் கதவை நெருங்கினாள்.

கதவைத் திற மேகலா…நான்தான்….

நீங்களா? நீங்க அவுட்டோர் ஷூட்டிங் போயிருக்கிறதால்ல சொன்னாங்க…? – குரல் நடுங்கியது அவளுக்கு.

போகலே…அந்த மாதிரி ஒரு புரளியைக் கிளப்பினேன்… - சொல்லியவாறே உள்ளே நுழைந்தான் பிரேம்குமார்.

உன்னைத் தீர்த்துக்கட்டுறதுக்காகத்தான் அப்படி ஒரு செட்அப் பண்ணினேன்… - உள்ளே நுழைந்தான்.

ஆமாண்டி…நாலு காசுக்கு ஓட்டலில் டான்ஸ் ஆடிட்டிருந்த உன்னைக் கொண்டுபோய் பெரிய ஸ்டார் ஆக்கினேன் பாரு…நீ எனக்குக் காண்பிச்ச நன்றி இருக்கே…அதுக்கு ஏதாச்சும் பரிசு தர வேண்டாமா? உன்னோட மார்க்கட் டல்லாயிடக் கூடாதுன்னு என் படத்திலெல்லாம் உன்னை சிபாரிசு பண்ணினேனே…அப்பல்லாம் உன்னைப்பத்திப் புரிஞ்சிக்கலடி…இப்போ என் மார்க்கெட் ஓய்ஞ்சு போற வேளைல எனக்குக் கிடைக்கிற ஒன்றிரண்டு சான்சையும் கெடுக்கிறியே…ஏன்? அன்னைக்கு என் கூட நடிக்கிறதுல ஒரு இன்பம் இருக்கு…த்ரில் இருக்கு…நல்ல எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்குது…அது இதுன்னல்லா பேட்டி கொடுத்த நீ…பிரேம்குமாரைப் போட்டா நடிக்க மாட்டேன்னு சொல்றியாமே? பிடிவாதம் பிடிச்சு எனக்கு வர்ற வாய்ப்புக்களையெல்லாம் கெடுக்க ஆரம்பிச்சிட்டியே…உன்னை சும்மா விடலாமா? அதுக்காகத்தான் இன்னைக்கு ஒரு முடிவோட வந்திருக்கேன்…

பிரேம்… வேண்டாம்…என்னை ஒண்ணும் செஞ்சிடாதே…அப்புறம் போலீஸ்ல மாட்டிக்குவே…

பயமுறுத்துறியா…உனக்கு வழி காண்பிச்ச எனக்கே புத்தி சொல்றியா…? அவுட்டோர் ஷூமட்டிங்குக்கு இன்னைக்குப் பெங்களுரு போயிருக்கிறதா யூனிட்டையே நம்ப வச்சிட்டுத்தான் வந்திருக்கேன்…சந்திராலயா யூனிட்டே எனக்காக சாட்சி சொல்லும்…பெங்களுர்ல ஓட்டல் டிரடிஷன் தெரியமா உனக்கு…இன்னிக்கு தேதிக்கு நான் அங்க இருக்கேன்…ஆனா இங்க உன்னைக் கொலை பண்றேன்…

பொற கலங்கிப் போய் பின் வாங்கினாள் மேகலா.

டைரக்டர் கோபிநாத் மேல் உத்தரத்தைப் பார்த்தவாறே மோவாயைச் சொறிந்தார். கூடவே அப்படி ஒண்ணும் மேகலாவுக்கு எதிரிகள் இருக்கிறதாத் தெரில இன்ஸ்பெக்டர்…என்றார்.

நேத்து முழுக்க உங்க படத்தோட ஷூட்டிங்லதான் மேகலா இருந்திருக்காங்க…அப்போ யார் கூடவாவது ஏதாச்சும் தகராறு இருந்திச்சா? தொடர்ந்து தோண்டினார் இன்ஸ்பெக்டர் ரஉறீம்.

நோ நோ இன்ஸ்பெக்டர்….அவுங்க ஆக்டிங்க டைம் தவிர மத்த நேரத்துல யார் கூடவும் எதுவும் பேச மாட்டாங்க….ஏதாச்சும் புத்தகமும் கையுமாத்தான் இருப்பாங்க…

ஐ…ஸீ…சமீப காலமா அவுங்க யார் கூட அதிகமாச் சேர்ந்து நடிக்கிறாங்கன்னு சொல்ல முடியுமா?

வருஷத்துக்கு மூணோ நாலோதான் பண்ணுவாங்க…அதுவும் பெரிய பட்ஜெட் கம்பெனிங்கதான்…பிரபலமான உறீரோக்களோடதான் இருக்கும்…

ஸாரி மிஸ்டர் கோபிநாத்…நா சினிமாவுல அதிகமா கவனம் செலுத்துறதில்லை…அந்தப் பிரபலமான உறீரோக்கள் யார் யாருன்னு சொல்ல முடியுமா?

சிக்கலான கேள்வி…ஸாரி இன்ஸ்பெக்டர்….இதுக்கு பதில் சொல்றது அவ்வளவு நல்லா இருக்காது…ஃபீல்டுல இப்பத்தான் காலூன்றியிருக்கேன் நா….என்னை வம்புல மாட்டி விட்டிடும் இதுக்கு பதில் சொன்னேன்னா…சினிமாக்காரங்களைப் பத்தி செய்தி போடாத பத்திரிகைகளே கிடையாது…நீங்களே படிச்சுத் தெரிஞ்சிக்க வேண்டிதானே… - கூறியவாறே அங்கிருந்த பத்திரிகைகளை எடுத்து டேபிள் மேல் போட்டார் கோபிநாத்.

சற்று நேரம் அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் ரஉறீமுக்கு ஒரு குறிப்பிட்ட செய்தி கவனத்தை ஈர்த்தது.

பெங்களுரு லால் பாக். கூட்டம் அலை மோதியது. பத்துப் பன்னிரண்டு ரவுடிகளோடு சண்டையிட்டுக் கொண்டிருந்தான் பிரேம்குமார். அவனின் பார்வை பளிச்சென்று அங்கே உதித்த இன்ஸ்பெக்டரின் பக்கம் விழ, லேசாக அதிர்ந்தான்.

ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் வர்மா நேராக மரத்தடியை நோக்கி வந்தார். உதவியாளரிடம் காட்சியைக் கவனிக்கச் சொல்லிவிட்டுத் திரும்பிய டைரக்டர் உறலோ சார்…என்றவாறே வரவேற்றார் வர்மாவை.

என்ன டைரக்டர் சார்…பந்தோபஸ்து ஏற்பாடெல்லாம் எப்டியிருக்கு? ஐ திங்க் யு ஆர் சாடிஸ்ஃபைட்…

யெஸ்…யெஸ்…ஐ ஆம் ஃபுல்லி சாடிஸ்ஃபைட்…வெளி மாநிலத்துல வேலை பார்த்தாலும் தமிழர் பண்பாடுங்கிறதை மறக்காம எங்களுக்கெல்லாம் இவ்வளவு ஆதரவா இருக்கீங்களே…அதுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும்…

நான் என்ன பெரிசா செய்திட்டேன்…மேலதிகாரி ஆர்டர்…அவ்வளவுதானே…இருந்தாலும் அதையும் இவ்வளவு சின்சியரா செய்யணுமே…

அது சரி டைரக்டர் சார்…நம்ம பிரேம்குமார் எப்ப வந்தாரு…

அவருதான் ட்யூட்டியில ரொம்ப ப்ராம்ப்ட் ஆச்சே…முந்தியே வந்திட்டாரே…

ஐ. ஸீ….

எதுக்குக் கேட்குறீங்க…?

நத்திங்…முன்னே இருந்த மார்க்கெட் இப்ப இல்லன்னு கேள்விப்பட்டேன்…இருந்தாலும் அவருடைய ட்யூட்டி கான்ஷியஸைப் பார்த்தீங்களா?

இதற்குள் காட்சி முடிந்து பிரேம் குமார் அங்கே வந்து சேர்ந்தான்.

உறலோ இன்ஸ்பெக்டர்…உறவ் ஆர் யூ…கேட்டவாறே வந்து கை குலுக்கினான்.

வெரி ஃபைன் மிஸ்டர் பிரேம்…உங்க சினிமா வாழ்க்கை எப்படி இருக்கு? ரொம்ப சீக்கிரமா பெங்களுரு வந்திட்டீங்களாமே?

ஆமா இன்ஸ்பெக்டர்…மெட்ராசிலே ஷூட்டிங் இல்லே…வேற வேலையும் இல்லே…சரி இங்கே வந்து ரெஸ்ட் எடுப்போமேன்னுதான் புறப்பட்டேன்…

ஐ..ஸீ…எங்கே தங்கியிருக்கீங்க..வழக்கம்போல் Nஉறாட்டல் டிரடிஷன்தானே…

யெஸ்…பெங்களுருவில் அதைவிட்டு வேறே எங்கேயும் நா போறதில்லே…

ஓகே. மிஸ்டர் பிரேம்…அப்போ நான் புறப்படுறேன்…

அச்சா…விடை கொடுத்தான் பிரேம்குமார்.

றுநாள் காலையே இன்ஸ்பெக்டர் வர்மா மீண்டும் தன்னைத் தேடி தன் அறைக்கே வருவார் என்று அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

உறலோ…விஷயம் தெரியுமா? சென்னைல நடிகை மேகலா கொலையாம்…

அப்படியா…? செயற்கையாய் அதிர்ந்தான் பிரேம்.

தெரியாதா? கேட்டவாறே தினசரியை நீட்டினார்.

பிரபல நடிகை மேகலா கொலை…சென்னையில் பயங்கரம்…முதல் நாள் மாலைப் பேப்பரின் அந்தத் தலைப்புச் செய்தியைப் படித்தபோது அவனை அறியாமல் கைகள் ஆட்டம் கண்டன. அடக்கிக் கொண்டான்.

அப்புறம் இன்ஸ்பெக்டர்…எப்படி நடந்திருக்க முடியும் இந்தக் கொலை…? ரொம்பக் கவலையோடு கேட்டான்.

உங்களை மாதிரித்தான் நானும்…யாருக்குத் தெரியும்..ஆமாம் மிஸ்டர் பிரேம்…உங்களோட சேர்ந்து சில படங்களில் நடிச்சவங்களாச்சே…அவங்க கேரக்டர் எப்படி?

என்ன இன்ஸ்பெக்டர் நான் அறிமுகப்படுத்திய பொண்ணு அவங்க…இப்டிக் கேட்கிறீங்களே?

சார்…சும்மா ஒரு பேச்சுக்குத்தான் கேட்டேன்…

ஷூட்டிங் டயத்துலயே அவுங்க யார் கூடவும் பேச மாட்டாங்க…அவங்ககிட்ட யாரும் தப்பாப் பேச முடியாது…அவ்வளவு நல்ல பொண்ணு…சில பேர் ராங்கிக்காரின்னு சொல்வாங்க…ஆனா எனக்குத் தெரிஞ்சு அப்படி இல்லே…

ஐ.ஸீ…

எனி ப்ராப்ளம் இன்ஸ்பெக்டர்?

நோ…நோ..ஃபார் இன்ஃபர்மேஷன் கேட்டேன்…ஆனா ஒண்ணு மிஸ்டர் பிரேம்…கொலையாளி ரொம்ப சாமர்த்தியசாலி…

ஏன் அப்டிச் சொல்றீங்க…? பிரேம் அடிவயிற்றில் புளியைக் கரைத்தது.

கைக்கு கிளவுஸ் மாட்டிக்கிட்டு, ஃபிங்கர் பிரின்ட்ஸ் கூடக் கிடைக்காம… ஆனா பூட் பிரின்ட்ஸ் கிடைக்க வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன்..

இசிட்…அது சரி…இதெல்லாம் உங்களுக்கு எப்டித் தெரியும்?

இன்னிக்கு மாரினிங் நியூஸை வச்சித்தான் சொல்றேன்…

பேப்பர் படிக்கக் கூட டைம் இல்ல இன்ஸ்பெக்டர்…ரொம்ப டைட்…

ஆல்ரைட் மிஸ்டர் பிரேம்…நா கிளம்பறேன்…

தூக்கம் வராமல் புரண்ட பிரேம்குமார் துள்ளி எழுந்து அமர்ந்தான்.

ஃபூட் பிரின்ட்ஸ்…ஃபூட் பிரின்ட்ஸ்…கொலை நடந்த இடத்தில் ஃபூட் பிரின்ட்ஸ்…வர்மாவின் வார்த்தைகள் அவனைப் பயமுறுத்த ஆரம்பித்தன. மனதிற்குள் யாரோடு பிளேடால் அறுப்பதுபோல் இருந்தது. பயம் பூதாகாரமாய் உருவெடுத்தது.

எப்படி சாத்தியம்? இருக்கலாம். நம் போதாத வேளைக்கு மாட்டிக் கொண்டாலும் போயிற்று. விபரீதம். எப்படியாவது அழித்துவிட வேண்டும். அதற்கு முன்னோடியாச சென்னை அறையில் வைத்திருக்கும் ஷூவை அகற்றியாக வேண்டும்.

முடிவு செய்தான். பயணத்தை ரத்து செய்த ஒரு வி.ஐ.பி.யின் இடத்தைப் பிடித்துப் பறந்து சென்னை வந்து சேர்ந்தான். பரபரப்பான கூட்டத்தின் நடுவே புகுந்து கடந்து அறையை அடைந்தபோது -

வாங்க மிஸ்டர் பிரேம்குமார்…என்ன இவ்வளவு அவசரமா புறப்பட்டு வந்திட்டீங்க? ஷூவை எடுத்து மறைக்கிறதுக்கா? மல்லேஸ்வரம் இன்ஸ்பெக்டர் வர்மா சொன்னதை நம்பிப் புறப்பட்டு வந்திட்டீங்களா? நாங்க சந்தேகப்பட்டது சரியாப் போச்சு…

என்ன சொல்றீங்க இன்ஸ்பெக்டர்…அவரைப் பார்த்துக் கத்தினான் பிரேம்.

ஒய் ஆர் யூ ஷவுட்டிங்? எவ்வளவோ கேர்ஃபுல்லாத்தான் இந்தக் கொலையைச் செய்திருக்கீங்க…இத்தனைக்ளவரா நடந்துக்கிட்ட நீங்க கொஞ்சம் இந்தக் காவல்துறையோட திறமையயும் நினைச்சுப் பார்த்திருக்க வேண்டாமா? அதென்ன எங்க மேலே அத்தனை அவநம்பிக்கை உங்களுக்கு?

சதுர வடிவமாக வைரத்துண்டு போல் பளபளத்தது ஒரு பட்டன்.

இது எப்படி எங்க கைக்குக் கிடைச்சதுன்னு நினைக்கிறீங்களா? போஸ்ட் மார்ட்டத்துலதான்…நீங்க கொலை செய்தபோது உங்களோட ஏற்பட்ட போராட்டத்துல மேகலா இதை விழுங்கியிருக்காங்க…சினிமா டெக்னிக் மாதிரி இல்ல? அப்படித்தான். ஆனா இது அவுங்க வயித்துக்குள்ள போனதுதான் உங்க துரதிருஷ்டம்…இன்னும் சந்தேகமாக? ஒரு பட்டனை வச்சு எப்படிடா இவன் நேரா நம்மளைத் தேடி வந்தான்னுதானே? ஒரு சந்தேகந்தான்…என்னடா ஆயிரத்தெட்டு நடிகைகள் இருக்கிற போது நேரா நம்ம ரூமுக்கு வந்து கதவைத் தட்டியிருக்கானேன்னுதானே யோசிக்கிறீங்க…காரணம் இல்லாமலா? இந்த பட்டனைக் கொண்டு வந்து திரும்பவும் உங்க சட்டைல வச்சுத் தைச்சாகணும்னு நான் எவ்வளவு அக்கறையா வந்திருக்கேன் பார்த்தீங்களா? ரியலி இடீஸ் பியூட்டி மிஸ்டர் பிரேம்…இத்தனை அழகான பட்டன்களோட இந்தச் சட்டையை எங்கே வாங்கினீங்க? என்ன விழிக்கிறீங்க? மேகா வாங்கிக் கொடுத்தாங்களா? அவங்களுக்கும் உங்களுக்கும்தான் சண்டையாச்சே? புரியல…? இதோ பாருங்க… - கூறியவாறே அந்தப் புத்தகத்தை நீட்டினார் இன்ஸ்பெக்டர்.

அமுதம் என்ற வாரப்பத்திரிகையில் இப்படி வெளியாகியிருந்தது அந்தச் செய்தி –

”பிரேம்மயான நடிகருக்கு இப்பொழுது மார்க்கெட் அவ்வளவு இல்லையென்று அவரோடு இனி சேர்ந்து நடிப்பதில்லையென முடிவு செய்து விட்டாராம் ஸ்கையையும் சட்டத்தையும் தன் பெயராகக் கொண்ட அந்தப் பிரபல நடிகை. அவரோடு சேர்ந்து வரும் வாய்ப்புக்களையெல்லாம் தட்டிக் கழிக்கிறாராம். ஒரு காலத்தில் அவரைப் பற்றி பிரேமையோடு உளறித் தள்ளிய இந்த நடிகை இப்பொழுது அவரை எதிரில் கண்டால் கூட கண்டு கொள்வ தில்லையாம். இதனால் பிரேமையான நடிகர் குமுறுகிறாராம். அது சரி…இவர்கள் சண்டையைக் கவனிக்கவா நமக்கு நேரம்…”

என்ன மிஸ்டர் பிரேம்…கிசு கிசு செய்தி கூட எவ்வளவு… உபயோகப்படுது பார்த்தீங்களா? உங்க சந்தேகமெல்லாம் தீர்ந்திருக்குமுன்னு நினைக்கிறேன்…லேட்டாச்சு போகலாமா? கேட்டவாறே எழுந்தார் இன்ஸ்பெகட்ர் ரஉறீம்

பிரேதமாய் பின் தொடர்ந்தான் பிரேம்குமார்.

---------------------- (உயிரோசை – இணைய வார  இதழ்- 9.4.2012)

கருத்துகள் இல்லை:

  'குற்றம் புரிந்தவன்'  - சிறுகதைத் தொகுப்பு - புஸ்தகா.கோ.இன்  - ல் வெளியிடப்பட்டுள்ளது.    (www.pustaka.co.in) --------------------...