13 ஜூன் 2020

வலி கவிதை


வலி                            
நம் வீட்டுச் சுவர்களில்
படிந்திருக்கும் அழுக்குகளில்
மறைந்திருக்கும்
கரும் புள்ளிகளில்
வாசம் செய்கின்றன
உன் வார்த்தைகள்
வண்ணம் பூசிப்
பிரவேசம் செய்த ஒரு
புதிய நாளில் உன்னை
மார் சுமந்து உள்
நுழைந்தேன் நான்
பார்க்கப் பார்க்க                                                               

 உருமாறி வளர்ந்த நீ
உளம் மாறியும் வளர்ந்திருக்கிறாய்
உன்னில் தெறித்தெழுந்த
சுடுசொற்களையெல்லாம்
என்னைச் சுமக்க வைத்தாய்
சுமப்பதே சுகம்தானே
தடம்
பிறழ வைத்த பெருமை
உனக்கே உண்டு
கையில் சுற்றிய பம்பரம்
ககனத்தில் விடப்பட்ட காலை
உலகம் உன்னைச்
சமன் செய்யும் - ஆயினும்
இந்தச் சுவா்களின்
ஈசான மூலைகளில்
எதிரொலிக்கின்றன உன்
நெருப்புச் சொற்கள்!
----------



கருத்துகள் இல்லை:

  “தபால் ரயில்“   – தஞ்சாவூர்க் கவிராயர் சிறுகதை   - விமர்சனம் – உஷாதீபன் – விருட்சம் கூட்டம் நாள் 12-04-2024.            அ ஞ்சலட்டை நம் வாழ...